ஞாயிறு, 23 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 23

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

விடை.- தர்மபுத்திரர்‌ சொன்ன விடைகளைக்கேட்டு யக்ஷன்‌ மகிழ்ந்து, இறந்த தம்பிகளுள்‌ யாராவது ஒருவனை எழுப்பிக்கொண்டு போகும்படி தர்மபுத்திரருக்கு உத்தரவு கொடுத்தான்‌.

வினா 134.- தர்மபுத்திரர்‌ யாரை எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌? என்‌? அவர்‌ எப்படித்‌ தமது உறுதியைக்‌ காட்டினார்‌?

விடை. நகுலனை அவர்‌ எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌. இப்படி நகுலனைத்தேடி எடுத்ததற்குக்‌ காரணம்‌ என்னவென்று யக்ஷன்‌ கேட்க, தர்மபுத்திரர்‌ “என்‌ தகப்பனாருக்கு இரண்டு பெண்சாதிகள்‌. அவர்களுள்‌ நான்‌ ஒருத்திக்கு மூத்தபிள்ளை, நகுலன்‌ மற்றைப்‌ பெண்‌ சாதிக்கு மூத்தபிள்ளை. ஆகையால்‌ நகுலனை நான்‌ தர்மப்படி எழுப்பிக்கொள்ள வேண்டியது" என, யக்ஷன்‌, "பீமனையாவது அர்ஜுனனை யாவது எழுப்பிக்கொள்ளும்‌, அவர்கள்‌ உமக்கு நேரான தம்பிகள்‌, நகுலன்‌ சிற்றம்மையின்‌ பிள்ளை: என்று எவ்வளவோ சொல்லியும்‌, தர்மபுத்திரர்‌ தர்மத்திலிருந்து விலகாது நகுலனையே எழுப்பி விடவேண்டும்‌ என்று உறுதியாய்‌ இருந்தார்‌.

வினா 135.- இப்படி தர்மபுத்திரர்‌ உறுதியாய்‌ இருக்க என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- இவரது உறுதிக்கு யக்ஷன்‌ மெச்சி, அவர்‌ தம்பிமார்‌ நால்வர்களையும்‌ எழுந்து வரும்படி செய்தான்‌. இதன்‌ பின்பு யக்ஷன்‌ தனது உண்மை ரூபமாகிய யமதர்ம ரூபத்தைக்‌ காட்டிப்‌ பாண்டவர்களை ஆசீர்வதித்து அவர்களது வனவாஸம்‌ 12 வருஷங்களும்‌ முடிந்தன என்று சொல்லி, அவர்களுக்கு அக்ஞாதவாஸம்‌ (மறைந்தவாஸம்‌) செய்யத்‌ தகுந்த இடம்‌ விராடபட்டணம்‌ என்று தெரிவித்து, அவர்கள்‌ எப்படிப்பட்ட வேஷம்‌ தரித்தாலும்‌ ஸரி, அவர்களை (இனி ஒரு வருஷம்‌ வரையில்‌ ஒருவராலும்‌ கண்டுபிடிக்க முடியாமலிருக்கட்டும்‌ என்று அனுக்கிரஹி த்து விட்டு யமதர்மன்‌ மறைந்தான்‌.

ஆரண்ய பர்வம் நிறைவுற்றது.

தொடரப்போவது விராட பர்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக