வெள்ளி, 21 அக்டோபர், 2022

ஶ்ரீமஹாபாரதம் வினா விடை 22

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ படித்தவனாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- வேதங்களைப்‌ படித்தலால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ மேன்மையை அடைகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- ஸந்நியாஸத்தால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ புத்திமானாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- பெரியோருக்குப்‌ பணிவிடை செய்தலால்‌.

யக்ஷன்‌:- பிராமணர்களுக்கு என்ன கெட்டகுணம்‌ இருக்கும்‌?

தர்மபுத்திரர்‌:- பரநிந்தை.

யக்ஷன்‌:- வாயுவைவிட வேகமானது எது?

தர்மபுத்திரர்‌:- மனஸ்‌. ‌

யக்ஷன்‌:- இறப்பவர்களுக்குத்‌ தகுந்த ஸ்நேகிதர்‌ யார்‌?

தர்மபுத்திரர்‌:- அவர்கள்‌ செய்த தர்மமே.

யக்ஷன்‌:- மதங்களின்‌ முடிவான பயன்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனோ விசாலம்‌.

யக்ஷன்‌:- கீர்த்தியைத்‌ தாங்கி நிற்பவை எவை?

தர்மபுத்திரர்‌:- தானமும்‌ தர்மமும்‌.

யக்ஷன்‌:- ஸுகம்‌ எதனால்‌ உண்டாகும்‌?

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கையால்‌.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான தனம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- அறிவு.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான ஸுகம்‌ யாது ?

தர்மபுத்திரர்‌:- கிடைத்தவரையில்‌ திருப்தி அடைவதே.

யக்ஷன்‌:- சிறந்த தர்மம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- அஹிம்ஸை.

யக்ஷன்‌:- ஸுகம்‌ கொடுக்கும்‌ நிரோதம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- மனோ நிரோதம்‌.

யக்ஷன்‌:- ஒருநாளும்‌ நீங்காத ஸங்கம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- ஸத்ஸங்கம்‌.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ நம்மை எல்லாரும்‌ விரும்புவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- கர்வத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ துக்க நிவர்த்தி? ‌

தர்மபுத்திரர்‌:- கோபத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஒருவன்‌ தனவானாவான்‌?

தர்மபுத்திரர்‌:- ஆசையை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஸுகமுண்டு?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையை.

யக்ஷன்‌:- எதனால்‌ ஸ்நேகிதர்கள்‌ விரோதிகளாவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையால்‌.

யக்ஷன்‌:- ஒருவன்‌ எதன்படி நடக்கவேண்டும்‌?

தர்மபுத்திரர்‌:- சிஷ்டாசாரப்படி.

யக்ஷன்‌:- ஸந்யாஸத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- ஸ்வதர்மாசரணம்‌.

யக்ஷன்‌:- மனோநிரோதத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அகக்கரண புரக்கரணத்‌ தண்டம்‌.

யக்ஷன்‌:- தித்க்ஷையின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- விரோதிகளிடத்திலும்‌ துவேஷமின்மை.

யக்ஷன்‌:- வெட்கத்தின்‌ லக்ஷணமென்ன?

தர்மபுத்திரர்‌:- கெட்டகாரியத்தை மறுபடியும்‌ செய்யாமை.

யக்ஷன்‌:- அறிவு என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பரம்பொருளை அறிதல்‌.

யக்ஷன்‌:- சாந்தம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சித்த ஸமாதானம்‌.

யக்ஷன்‌:- தயை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பிராணிகளுக்கு நன்மை செய்ய எண்ணுதல்‌.

யக்ஷன்‌:- கபடமற்றதென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனம்‌ சலியாதிருத்தல்‌.

யக்ஷன்‌:- ஜயிக்க முடியாத விரோதி யார்‌?

தர்மபுத்திரர்‌:- கோபம்‌.

யக்ஷன்‌:- ஸ்திரமான வியாதி எது

தர்மபுத்திரர்‌:- பிறர்‌ பொருளை விரும்பல்‌.

யக்ஷன்‌:- யார்‌ நேர்மையானவர்கள்‌? யார்‌ திருடர்கள்‌!

தர்மபுத்திரர்‌:- முறையே, பூத தயை உடையோர்‌; பிராணிகளை வருத்துவோர்‌.

யக்ஷன்‌:- அஞ்ஞானமென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திர ஞானமின்மை.

யக்ஷன்‌:- சோம்பல்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திரவிஷயத்தில்‌ மனம்‌ செல்லாமை.

யக்ஷன்‌:- துக்கம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அஞ்ஞானம்‌.

யக்ஷன்‌:- பொறுமை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- காமக்ரோதாதிகளை அடக்கல்‌.

யக்ஷன்‌:- உண்மையான கர்மானுஷ்டானம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- சித்தசுத்தி,

யக்ஷன்‌:- பிறப்பு, படிப்பு, நன்னடக்கை, வேதாத்தியயனம்‌ இவைகளுள்‌ எது பிராம்மணனுக்கு முக்கியமானது? ‌

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கை.

யக்ஷன்‌:- எது ஆச்சரியகரமானது?

தர்மபுத்திரர்‌:- உலகில்‌ ஒவ்வொருநாளும்‌ ஜனங்கள்‌ இறந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்‌. உயிரோடிருக்கிறவர்‌ இதைப்பார்த்துக்‌ கொண்டிருந்தும்‌ தாம்‌ மாத்திரம்‌ இறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணுகிறார்கள்‌. இதுதான்‌ மிகவும்‌ ஆச்சரியமானது.

யக்ஷன்‌:- எது மோக்ஷத்திற்கு வழி?

தர்மபுத்திரர்‌:- வேதங்கள்‌ பலவாறாய்‌ இருக்கின்றன. தர்க்கத்தால்‌ பயனில்லை. ரிஷிகளது அபிப்பிராயங்கள்‌ பேதப்பட்டிருக்கின்றன. மதவிஷய உண்மைகளோ இரகஸியமாக இருக்கின்றன. ஆகையால்‌ சிஷ்டாசாரமே மோக்ஷமார்க்கம்‌.

யக்ஷன்‌:- எது விசேஷமான சங்கதி?

தர்மபுத்திரர்‌:- அக்ஞானாந்தகாரம்‌ நிறைந்த உலகமாகிய கொப்பரையில்‌, ஸூர்யன்‌ என்கிற நெருப்பை இராப்பகலாகிய விறகுகளால்‌ மூட்டி, மாஸங்கள்‌, ருதுக்களாம்‌ கரண்டிகளால்‌, காலன்‌ என்ற சமயற்காரன்‌ பிராணிகளைச்‌ சமைத்துக்கொண்டே இருக்கிறான்‌. இதுதான்‌ விசேஷமான ஸங்கதி.

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌.கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக