செவ்வாய், 3 ஜூன், 2014

“திருமடல்” டெலி-உபந்யாஸம் (02-06-2014)

சென்ற வாரம் 26-05-2014 துவக்கிய தனது “பெரிய திருமடல்” டெலி-உபந்யாஸத்தின் இரண்டாவது   (ஜூன் 2ல் நிகழ்த்திய) உபந்யாஸத்தில் முந்தைய உபந்யாஸத்தின் தொடர்ச்சியாக இன்றும் “மடலுக்கு” அறிமுகம் செய்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி. இந்த உபந்யாஸத்தில் , அடியேனைப் போல சமஸ்க்ருதம் தெரியாமல், சந்தை கற்க வழி இல்லாமல், (மனப்பாடமாகத் தெரிந்திருந்தாலும் அர்த்தம் தெரியாமல் சொல்வதால் அனுபவித்துச் சொல்ல முடியாததால்) “தாயாரைக் குறித்து ஒன்றும் சொல்ல முடியவில்லையே! தாயாரை மகிழ்வித்தல் பெருமாள் கருணைக்கு எளிய வழியாகும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே என்ன செய்வது?” என்று தவிப்பவர்களுக்கு நாட்டேரி ஸ்வாமி , கலியன் ஒரு நல்ல வழி காட்டியிருப்பதாகக் கூறுகிறார்.  இந்த உபந்யாஸம் முழுவதும் கேட்டால் அந்த எளிய வழி தெரியும்.

http://www.mediafire.com/listen/0dibj3km15gvmva/002_Madal_(02-06-2014).mp3

26-05-2014 அன்று நடந்த முதல் உபந்யாஸத்தைக் கேட்காதவர்கள் இந்த லிங்கில் அனுபவிக்கலாம்

http://www.mediafire.com/listen/n9vlefu4zdxu4v6/001_Madal_(26-05-2014)_00_04_12-01_18_30.mp3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக