ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் பகுதி 7

ஸ்ரீ வி.கே. ராமாநுஜாச்சாரியாரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் நூலின் 7வது பகுதிக்கான லிங்க் கீழே உள்ளது.
ஒரு விஞ்ஞாபனம்.
வழக்கமாக ஸ்கானர் கொண்டு ஸ்கான் செய்து அதை பிடிஎப் ஆக்கி இங்கு இணைத்து வருகிறேன். ஆனால் இந்த 7வது பகுதி அடியேனின் காமிரா மற்றும் ஒரு மென்பொருள் உதவியுடன் பிடிஎப் ஆக மாற்றப்பட்டு இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதனால் சற்று தரம் குறைந்து இருக்கிறது. சில பக்கங்களில் வரிகளெல்லாம் நெளிந்துள்ளன. இக்குறைகளுடனே நான் இதை இணைத்துள்ளேன். இது படிப்பதற்கு அல்லது சிலர் அச்சிட்டுக் கொள்வதற்கு சரியாக இருக்கிறதா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். பதிவின் கீழேயே உள்ள comment boxல் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். அல்லது தனி மெயிலாக அனுப்பினாலும் சரி.
எதற்காக இந்த முயற்சி? ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரம் முடிந்த பிறகு அடியேன் சென்னையில் பல நாட்கள் இருக்க வேண்டியுள்ளது. அங்கு ஸ்கானர் கிடையாது. மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் முடிக்க சென்னையில் இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்களை அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம், நேற்று பகுதி 6ல், ஒரு வார்த்தை அடியேனுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை மிகச் சரியாக ஊகித்து தொலைபேசியில் முதலாவதாகச் சொன்ன ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கு அடியேனது க்ருதஜ்ஞைகளும், பாராட்டுகளும்.
பகுதி 7 இங்கிருக்கிறது
http://www.mediafire.com/file/7fagogh35o9b7gv/VKRRTS%207.pdf 

1 கருத்து: