சனி, 19 மார்ச், 2011

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவம் 7ம் நாள்

 

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் 7ம் நாள் மாலையில் மஞ்சள் நீராட்டப் புறப்பாட்டிற்குப் பின் உபயநாச்சியாருடன் பெருமாள் திருமஞ்சனம் செய்துகொண்ட காட்சிகள் இங்கு வீடியோவாக!

ஏனோ தெரியவில்லை! அடியேனது கோடக் Zi6 இன்று அடியேனை அடிக்கடி கைவிட்டுவிட, இடையிடையே நண்பர் ஒருவர் கேமராவில் வீடியோ பதிவிட வேண்டியிருந்தது. எனவே, வீடியோவின் தரம் நன்றாக இல்லை. மன்னிக்க வேண்டும்.

இன்று (19/3/2011) எட்டாம் திருநாள். மாலையில் பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கே!  ஆச்ரமத்தில் வேலைகள் இருந்ததால் நண்பரிடம் வீடியோ எடுக்கும் பொறுப்பைக் கொடுத்தால், அவர் பெருமாளைக் காண்பிப்பதைக் காட்டிலும் எங்களூர் சாலை அழகையே நிறைய எடுத்திருக்கிறார். அவ்வப்போது தெரியும் பெருமாளைப் பார்த்து ரசியுங்கள்.

திருமங்கை மன்னனைக் கட்டுப் படுத்தி ஆட்கொள இதோ பெருமாள் குதிரை வாகனத்தில் கிளம்பி விட்டார் . ஆழ்வாரை திருத்தித் தன் பணியில் ஈடுபடுத்தி, பின் தேர் கடாக்ஷம் ஆகி ஆஸ்தானம் அடைந்து அதிகாலையில் திருத்தேருக்கு ஏளப் போகிறார். அவரைப் பின்தொடர வேணும். நாளை தேர், 22/3 அன்று தீர்த்தவாரி முடிந்து மீண்டும் சந்திப்போம்.

DSC02539

DSC02541

DSC02544

DSC02542

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக