செவ்வாய், 7 டிசம்பர், 2010

பாச மலர்

ஜப்பானியர் ஒருவர், அவருக்குப் பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து 10 வயது ஆகும் வரை தினமும் அந்தக் குழந்தையை விதம் விதமாக போட்டோ எடுத்து அதை ஒரு வீடியோவாக மாற்றி அந்தக் குழந்தைக்கு பரிசாக அளித்திருக்கிறார். நம்மைப் பெற்றவர்கள் பல நேரங்களில் நீ சிறு வயதில் அப்படி விஷமம் பண்ணினாய் என்று வர்ணிக்கும்போது கற்பனை செய்து பார்ப்பதே கஷ்டமாயிருக்கிறது. எங்களூரில் ஒரு பெரியவர் அடியேனைப் பாரத்து அடிக்கடி நீ குழந்தையாய் இருக்கும்போது எவ்வளவு அழகாயிருப்பாய் தெரியுமோ என்பார். இப்போதுள்ள அடியேனின் சொரூபத்தை கிண்டல் பண்ணுகிறாரா அல்லது நிஜமாகவே அழகாய் இருந்தேனா? இப்படி ஒரு போட்டோ என்னையும் எடுத்திருக்கலாம்!தெரிந்திருக்குமே! என்று எண்ண வைக்கும் அந்த வீடியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக