ஞாயிறு, 16 நவம்பர், 2008

தரு இராகம் சௌராஷ்ட்ரம் தாளம் சாப்பு
கண்ணிகள்
1. அப்புள்ளார்தந்தவிரகாரம்வேதாந்த சாரியார்போலினி யாரய்யா இப்புவிமேல்வைராக்கியநிதியென்பதிவரென்றேசொலுவா ரய்யா
2.ஆரெங்கும்போற்றியஸ்ரீரங்கமாநகரதிலேசீஷர்க்குப் பாடமே பேரெங்குஞ்சொல்லப்பிரசாதித்திருந்தாரே பெரியவியாக்கியான கூடமே
3.கொண்டவரங்குமேமுஞ்சவிர்த்திசெய்துகோண்டுசொன்னாரடி மீதிலே தொண்டுசெய்யும்சீஷரெல்லாரும்வந்துதொடுத்துவணங்கியப் போதிலே
4.பாடசமயமுந்தாமதமாயதுபண்புடனேயடி யோங்களே தேடியாளுக்கொருநாளுபாதானத்தைச்செய்துசமர்ப்பிப்ப நாங்களே
5.ஆகுமெனச்சொல்லப்பிள்ளை கருத்துடனப்படிப்பாடமுஞ் சாற்றினார்
சேகரமாகிய சீஷருபாதானஞ்செய்து சமர்ப்பித்து மேற்றினார்
6.காசுபணங்களை யங்கீகரியாதுகண்டுசிலபேர்கள் கூடவே தேசுபெறவே யமுதுபடியுடன்சேர்த்துப்பணங்களைப் போடவே
7. இட்டவுபாதானக் கூடையோடேயுள்ளேஇங்கிந்தத்தேசிகர் மேவியே கொட்டவுங்கண்முன்னே கண்டவுடன்பார்த்துக்கூறுவரேயவர் தேவியே
8. மின்னுமின்னுபூச்சி போலேயிருக்கிறவேடிக்கையென்னென்று பேசுவார் தன்னையறிந்துகடாக்ஷித்துக்குச்சியாற்றள்ளிப்புழுவென்று வீசுவார்
9.சாதித்துச்சோதித்துக்காசுபணங்களைத்தள்ளியிருந்து வைராக்கியர்
போதித்துசீஷர்க் கருள்செய்யவேவந்தபுண்ணியஸ்வரூப சிலாக்யர்
10.நேர்ந்தவக்காலத்தி லாசாரியபதநிருவகிக்கவும் வருவரே
வாய்ந்தவழகிய மணவாளப்பெருமாள்நயினாரு மொருவரே
11. சகலசாஸ்திர வல்லவராகவுஞ் சாஹித்யத்திலே சதுரராய்
சுகமுனெழுந்தருளி யிருந்தார் சுகுணச்சொல்லிலு மதுரராய்
12. மேதாவியாகிய வங்கவர்சீஷர்விரைந்துதிருவோலக்க மதிலே
வேதாந்தாசாரியர்தங்கவி வாதிசிங்கவிருதைக்கண்டு ரோஷம் மதிலே
13. திருவோலக்கத்தி லிரண்டுபேரையுஞ்சேர்த்தழைத்தருள் பாடென்று
இருவர்களேகேளு மின்றிராத்திரியெம்பெருமாள் விஷய மொன்று
14. ஆயிரமென்னுஞ் சுலோகப்பிரபந்தத்தை யார் விண்ணப்பஞ்செய்வார் சமர்த்தரே
மாயிருஞாலத்தில் வேதாந்தாசாரியர் வளமைமிக்க நியமத்தரே
15. இப்படியேயின்றிராத்திரிக்குள்ளே இயம்புவீரென்றா ராயிரம்
அப்படியே திருவடிவிஷயமதாகச் சொல்வேனென்றா ராயிரம்
16. வாதுநாட்டியங்கே அழகியமணவாளருரைத்ததும் கண்டிட்டார்
பாதுகாசகஸ்ரம் வேதாந்ததேசிகர் பண்ணுவேனென்றுரை கொண்டிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக