திங்கள், 17 டிசம்பர், 2012

Saranagati Deepikai

 

Ashampoo_Snap_2012.12.17_06h48m25s_001

Sri Natteri Rajagopalacharyar swami has started his tele-upanyasam on “Saranagati Deepikai” from today.

It may be listened to here directly

Bhagavath dhyana sobhanam

நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி சென்னையில் சாதித்து வரும் ‘பகவத் த்யான சோபானம்’ உபந்யாஸத்தின் இரண்டாவது பகுதி. இது நேற்று (16-12-2012) அன்று பதிவு  ஸ்ரீ ஆர். தேவநாதன் ஸ்வாமியால் செய்யப்பட்டு,  பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நகலிறக்க

http://www.mediafire.com/?n8iaf0aud33te63

நேரடியாகக் கேட்டு மகிழ

திங்கள், 10 டிசம்பர், 2012

மங்களம் ! சுப மங்களம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த “குரு பரம்பரை வைபவ” உபந்யாஸம் இன்றைய உபந்யாஸத்துடன் நிறைவு பெற்றது.  இன்றைய உபந்யாஸத்தில் இதுவரை நடந்த உபந்யாஸங்களின் ஸாரத்தைப் பிழிந்து, இந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்காதவர்கள் இன்றைய ஒரு உபந்யாஸத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே இதுவரை நடந்த 113 உபந்யாஸங்களில் தெரிவிக்கப் பட்டது என்ன என்பதை எளிதில் உணரும் வண்ணமும், கேட்ட மாத்திரத்தில் கேட்காத உபந்யாஸங்கள் அனைத்தையும் சேகரித்துக் கேட்கும் வண்ணமும் அருமையாக ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இந்த இரண்டு ஆண்டுகளாக விடாமல் இந்த உபந்யாஸங்களைப் பதிவு செய்து இங்கு பகிர்ந்து கொண்டது ஆசார்ய வள்ளல் ஸ்ரீமத் ஆண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தால் அடியேனுக்குக் கிடைத்த பெரும் பாக்யம்.  ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி,எழுத்திலே உணர்த்த முடியாத பல விஷயங்களை இங்கு சொல்லி நம்மை நெகிழ வைத்தார், இந்த ஆச்ரம சிஷ்யனாய் இருப்பதற்கு என்ன தவம் செய்தனம் என்று பெருமிதப் படவும்  வைத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வகையிலே இந்த உபந்யாஸங்கள் அமைந்தன. அவருக்கு எப்படி க்ருதஜ்ஞைகளைத் தெரிவிக்கப் போகிறோம்!
இந்த உபந்யாஸங்கள் அமெரிக்கா வாழ் ஆச்ரம சிஷ்யர்களின் ஏற்பாடு. ஆனால் வாராவாரம் இதைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ள அவர்கள் அடியேனுக்கு அளித்த ஆதரவு அடியேனது இன்னொரு பாக்யம். குறிப்பாக, ஸ்ரீ வெங்கட், ஸ்ரீராம், இவ்விருவரது திருத்தகப்பனார் பூண்டி இராமாநுஜம் ஸ்வாமி அவர்களுக்கெல்லாம் அடியேன் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்!
இன்றைய உபந்யாஸத்தை வழக்கம்போல்  நகலிறக்க
http://www.mediafire.com/?tihi659edvw06d9

நேரடியாகக் கேட்டு மகிழ

 


எல்லா உபந்யாஸங்களையும் தரவிறக்க
http://sdrv.ms/SO842G 
இன்னொரு முக்கியமான சேதி!
அடுத்த வாரத்திலிருந்து "சரணாகதி தீபிகை" உபந்யாஸம் தொடர்கிறது. அநுபவிக்கத் தயாராவோம்! 

சனி, 8 டிசம்பர், 2012

ரெடியா இருங்க!

கணிணியோ, மொபைலோ அதில் தட்டச்சிடுவது பலருக்கு ஒரு கஷ்டமான காரியமாகவே இருந்து வருகிறது. இந்திய மொழிகளில் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் தமிழ் என்றால், இன்னும் பலருக்கு ஒரே குழப்பம்தான். நேற்று குடுகுடுப்பைக்காரர் வந்து சொன்னார். எல்லாக் குழப்பமும் இன்னும் சில நாள்களில் போய்விடுமாம். 1,2,3 தெரிந்தால் மட்டும் போதுமாம். இந்திய மொழிகள் எதில் வேண்டுமானாலும், (கணிணியோ, மொபைலோ,) தட்டச்சிடலாமாம். சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். inscript keyboard என்று ஒன்று. அது பழகியிருந்தால் (அனேகமா ரொம்பப் பேர் பழகாதது) எந்த இந்திய மொழியிலும் சர்வ சாதாரணமாக தட்டச்சிடமுடியும். எல்லாவற்றுக்கும் விசைகள் ஒரே மாதிரி இருக்கும். அதேபோலவே வரப்போற புதிய முயற்சியிலும் 1 என்று அடித்தால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரே எழுத்து வருகிற மாதிரி பண்ணியிருக்கிறார்களாம். சோதனைகளெல்லாம் முடிஞ்சு வெற்றியாம். காப்புரிமைக்காகக் காத்திருக்கிறார்களாம்! 2013 மார்ச்சுக்குள் வந்துவிடுமாம்.  செய்தியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் !
     இப்போ நாம எல்லாரும் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! (அதென்னங்க! பெருமிதமா இருந்தா காலரைத் தூக்கிவிட்டுக்கறது! ) இப்படி ஒரு அருமையான மென் பொருளைத் தயாரித்திருப்பது நம்ம தமிழ்நாட்டுக்காரர். தென்மாவட்டங்கள் ஒன்றில் இருக்கிறார். இவர் கம்ப்யூட்டர் துறையில் எந்தப் பட்டமும் வாங்காதவர். படித்ததோ வேறு பாடம்!

புதன், 5 டிசம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

                            ……………..காரிகையார்
சொற்பாங்கியர் தமக்கும் சொற்றிடேன்
கற்பாங் கியல்தரும்என் காமவிடாய் தீராத
சொற்பாங் கியர்தமக்கும் சொற்றிடேன் – நற்பாங்கின்          .45.

பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன்
ஆங்குயிர்க்கும் அன்னைதனக்(கு) அல்லாற்பின் தாய்க்குதவாப்
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன் – தேங்குயற்சீர்ப்           .46.

என்னெஞ்சுக்கு இன்னல் எடுத்துரைப்பேன்
பொன்னெஞ் சுவக்கும் புயல்பாற் பொஒருந்தியுற
என்னெஞ்சுக்(கு) இன்னல் எடுத்துரைப்பேன் – துன்னும்சீர்         .47.

மாலிலியாய் நின்று வருந்துவேன்
மாலிலியாய்நின்று வருந்துவன் மன்மதன் தேர்க்
காலிலியாய் நிற்போற்கென் கட்டுரைப்பேன் –  வேலைஎன        .48.

கள்ளருந்து வார்க்கு என் கழறுகேன்
விள்ளருந்துன் புற்று மெலிகுவேன் வேரிமலர்க்
கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – தெள்ளறநீர்             .49.

ஓடும் கயல்மீன் உறாதனவேல்
ஓடுங் கயல்மீன் உறாதனவேற் உள்ளமிக
வாடுங் குருகினுக்கெவ் வாறுரைப்பேன் – பீடுபெறும்      .50.

45. காரிகையார் – பெண்களின்; கற்பாங்கியல் தரும் –கல்லைப் போன்ற கடினத்தன்மை கொண்ட; என் காமவிடாய் – என் விரகதாபம், தீராத – தீர்க்காத, சொற்பாங்கியர் தமக்கும் –இன் சொற்றோழியரிடமும், சொற்றிடேன் – கூறவில்லை, நற்பாங்கின் – நல்ல இணக்கம் உடைய.

46. ஆங்குயிர்க்கும் – அங்கே என் நிலை கண்டு பெருமூச்செறியும், அன்னைதனக்கு –தாய்க்கும், அல்லால் பின் – அல்லாது, தாய்க்குதவா – தன்னை முட்டை இட்ட தாய்க்கு உதவாமல் காகக்கூட்டில் பிறக்கும், பூங்குயிற்கும் – அழகிய கோகிலத்துக்கும், ஆசை – என் ஆவலை, புகன்றிடேன் – கூறவில்லை, தேங்குழற்சீர் – இனிய கூந்தல் சிறப்புடைய.

47. பொன் – திருமகள், நெஞ்சுவக்கும் – மனம் மகிழும், புயல்பால் – மேக வண்ணனிடம், பொருந்தியுற – சேர்ந்தடைய, என் நெஞ்சுக்கு – என் மனத்துக்கு ஏற்பட்ட, இன்னல் – தாபம், எடுத்துரைப்பேன் –எடுத்துக் கூறுவேன், துன்னும் சீர் – சிறப்பமைந்த.

48. மாலிலியாய் நின்று – மயக்கமுடையவளாயிருந்து, வருந்துவேன் – துன்புறுவேன், மன்மதன் தேர் –மன்மதன் இரதமாம், காலிலியாய் – காலற்ற தென்றற் காற்றாக, நிற்போற்கென் கட்டுரைப்பேன் – நிற்பவருக்கு (வருந்தும் தலைவருக்கு) என்ன கூறுவேன், வேலை என – கடல் போல.

49. விள்ளரும் – கூற அரிய, துன்புற்று – இடரடைந்து, மெலிகுவேன் – வாடுவேன், வேரி மலர்க் கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – பூந்தேன் நுகரும் வண்டுகளுக்கு என்ன கூறுவேன், தெள்ளற நீர் – தெளிவற்ற நீரில்

50. ஓடும் கயல் மீன் – விரைந்து செல்லும் மீன், உறாதனவேல் –கிடைக்காவிடில், உள்ளம் மிகவாடும் குருகினுக்கு – மனம் மிகுதியாக வாட்டமுறும் கொக்கினுக்கு, எவ்வாறு உரைப்பேன் – எவ்விதம் கூறுவேன் – எவ்விதம் கூறுவேன், பீடு பெறும் – புகழ் பெறும்.