புதன், 18 ஜனவரி, 2012

Guru Paramparai Vaibhavam dated 16-01-2012

சென்ற வாரம் ஸாக்ஷாத் ஸ்வாமியைப் பற்றி விவரித்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி இன்றைய (16-01-2012) தனது "குரு பரம்பரை வைபவ" டெலி உபந்யாஸத்தில் ஸாக்ஷாத் ஸ்வாமியின் ப்ரதான சீடராக விளங்கிய திருக்குடந்தை தேசிகன் அவதாரத்தை விரித்துரைக்கிறார்.

ஆன்லைனில் கேட்க





To download from Mediafire

http://www.mediafire.com/?gds2ivaa3ka6yz9



திங்கள், 9 ஜனவரி, 2012

Natteri swamy’s Guru Paramparai Vaibham tele-upanyasam dated 09-01-2012

                 நாட்டேரி ஸ்வாமி இன்றைய “குரு பரம்பரை வைபவ” உபந்யாஸத்தில் ஞான அனுஷ்டான வைராக்ய ஸேவதி ஸ்ரீமத் ஸாக்ஷாத் ஸ்வாமியைப் பற்றி விவரிக்கிறார். மேல்கோட்டை திவ்ய தேசமாகக் கருதப்படாமல் போனது ஏன்? ஆனாலும் மறைமுகமாகவாக வேனும் ஆழ்வார்கள் இத்தலத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் களா? ஸ்ரீபாஷ்யகாரரின் கருத்து என்ன?  என்பது பற்றிச் சொல்லி ஸாக்ஷாத் ஸ்வாமி அவதாரம் தொடங்கி அவரது மகத்தான சரித்திரத்தைச் சொல்லும் இன்றைய உபந்யாஸத்தை ஆன்லைனில் கேட்க


நகலிறக்க

 http://www.mediafire.com/?8oqj1rg7v75udcu

சனி, 7 ஜனவரி, 2012

தங்கமோ தங்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பர் இன்று வந்தார். வந்தவர் ஒரு காலண்டரையும் அன்பளித்து விட்டுச் சென்றார். அவர் போன பிறகு அதைப் பிரித்துப் பார்த்தேன்.

பழைய நூல்களைப் படிக்கும்போதும், அந்தக் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களைப் பற்றி வாசிக்கும்போதும் '”அடடா! 1920களில் பிறக்காமல் போனோமே! பிறந்திருந்தால் அந்த நூல்களையும், அம்மஹான்களையும் அனுபவித்திருக்கலாமே!” என்று தோன்றும்!(இப்போது மட்டும் என்ன படித்து, தெரிந்து அனுபவித்து விட்டாய்! அன்றும் நீ இன்றுபோலத் தான் எதையும் தெரிந்து கொள்ளாமல் வீண் போது போக்கியிருப்பாய்! என்று மனச்சாட்சி கேலி செய்கிறது!) இந்த காலண்டரைப் பார்த்தவுடனேயும் அப்படித்தான் தோன்றியது.

சென்னை உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடைக்காரர்கள்  வெளியிட்டுள்ள அந்த காலண்டரில்  1940லிருந்து இன்று வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அன்று பிறந்திருந்தால் தங்கமோ தங்கம் என்று வாங்கிக் குவித்திருக்கலாம் இல்லயா?

(இதைப் பார்த்தால் ,படித்தால் அடியேன் யஜமானி அம்மா 1978லிருந்து வாங்கியிருந்தாலும் போதுமே! ஒரு சமர்த்துக் கிடையாத உங்களுக்கு வாக்கப்பட்டு…. என்று ஒரு பிடி பிடித்தாலும் பிடிக்கலாம்!)

(மீண்டும் மனச்சாட்சி! “ஆனால் அன்று இணையம் என்று ஒன்று கிடையாதே! இப்போது அந்த இணையத்தின் வாயிலாகத்தானே கோவை என்ன! சென்னை என்ன! அமெரிக்கா என்ன என்று தங்கத்துக்கும் மேல் பல மடங்கு உயர்ந்த ஸுஹ்ருதயர்களைப் பெற்றிருக்கிறாய்! அதனால் அன்றைக் காட்டிலும் இன்றே மேல் !”)

அந்த நாளில் எம்.ஜி.ஆர் “நான் உயர உயரப் போகிறேன்! நீயும் வா” என்று பாடியதுபோல தங்கம் வெள்ளியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விலை உயர்ந்ததைப் பாருங்களேன்.

PTDC0242