நேற்றைய தொடர்ச்சி
"பகவந்நாராயணாபிமதாநுரூப ஸ்வரூபரூப குணவிபவைச்வர்ய, சீலாத்யநவதிகாதிசயாஸங்யேயகல்யாணகுணகணாம் பத்மவநாலயாம் பகவதீம், ஸ்ரீயம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம், அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரண:சரணமஹம் ப்ரபத்யே"
[பகவானான நாராயணனுக்கு இஷ்டமாகவும், தகுந்ததாகவும் உள்ள ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி, ஐச்வர்யம், சீலம் முதலான எல்லையற்ற மேன்மையையுடையவையும், கணக்கற்றவையுமான கல்யாண குணகணங்கள், இவற்றை உடையவளும், பத்மவனத்தை இருப்பிடமாக உடையவளும், பூஜிக்கத்தக்கவளும், எப்போதும் எம்பெருமானைவிட்டு அகலகில்லாதவளும், தோஷமற்றவளும், தேவதேவனான எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியும், எல்லாவுலகிற்கும் தாயாயிருப்பவளும், விசேஷமாக அடியேனுக்கு அன்னையாயிருப்பவளும்,கதியற்றவர்களுக்குக் கதியாயிருப்பவளுமான ஸ்ரீதேவியை, வேறொரு கதியற்ற அடியேன் சரணம் அடைகிறேன்.] என்பது சரணாகதி கத்யம் (1)
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் உள்ள சில பங்க்திகள் பின்வருமாறு:---
"62. த்ரிககுப்தாமா -- மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்ட ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களுக்கும் இடமாயிருப்பவர். இந்த ஆறு குணங்களிலும் இரண்டிரண்டு ஒவ்வொரு கூறாக வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றியே, 'த்ரியுகர் -- மூன்று இரட்டையுள்ளவர்' என்று திருநாமம். அல்து 'த்ரிககுத் + தாமர்' என்று இரண்டு நாமமுமாம். த்ரிககுத் -- மூன்று கொண்டைகளோடு கூடிய வராஹாவதாரத்தைச் செய்தவர். தாமா -- ஒளி உருவமானவர்."
"123. மஹாதபா:-- சிறந்த ஜ்ஞானமுள்ளவர். ஆறு குணங்களில் , ஞானம், பலம், என்னும் இரண்டு குணங்கள் ஸங்கர்ஷணன் கூறுகளாக வகுக்கப் பட்டுள்ளன. அவற்றில், ஞானமாவது -- ஜனனமரணங்களாகிய ஸம்ஸாரமார்க்கத்தில் அநாதிகாலமாக நடந்துகொண்டு வருந்தும் ஜீவராசிகளுக்கு ச்ரமபரிஹாரம் செய்வதற்காக அந்த அந்தக் கார்ய காரணங்களை அறிந்து கார்ய வர்க்கங்களைத் தம்தம் காரணங்களில் அடக்குவதற்குரிய ஸர்வஜ்ஞத்வம்.
"124. ஸர்வக:-- ஸம்ஹரிக்கப் பட்டனவற்றையெல்லாம் தாம் அடைந்து வஹிப்பவர்; இதனால் பலம் என்னும் இரண்டாம் குணம் குறிப்பிக்கப் பட்டது. பலமாவது -- அப்படி ஸம்ஹரிக்கப் பட்டவற்றையெல்லாம் தம்மிடத்தில் வைத்துத் தாங்குதற்குரிய வன்மை. இது மேற்சொல்லிய ஜ்ஞானத்திற்கு முக்யமான அங்கம்.
"125.ஸர்வவித்:-- ஸம்ஹரிக்கப் பட்டவற்றை யெல்லாம் திரும்பவும் படைத்துக் கார்யங்களான ப்ரபஞ்சங்கள் அனைத்தையும் அடைகிறவர். இங்கு ப்ரத்யும்நன் என்னும் வ்யூஹம் குறிப்பிக்கப்படுகிறது. ஐச்வர்யம் வீர்யம் என்னும் இரண்டு குணங்கள் ப்ரத்யும்ந வ்யூஹத்தின் கூறுகளாக வகுக்கப் படுகின்றன. அவற்றுள், ஐச்வர்யமென்பது -- விசித்ரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை வெளிப்படுவது. அதனை இந்த நாமம் தெரிவிக்கிறது.
"126. பானு:-- எல்லாவற்றையும் படைத்தும் தாம் விகாரமில்லாமல் விளங்குபவர். இது வீர்யம். வீர்யமாவது -- ஒரு விகாரமும் தன்னிடத்தில் சேராமலிருக்கும் ஸாமர்த்தியம்.
"127.விஷ்வக்ஸேந:-- எங்குமுள்ள ஜனங்கள் தம்மை ரக்ஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி செய்பவர். இது ரக்ஷிப்பதைத் தொழிலாகவுடைய அநிருத்த வ்யூஹம். சக்தி, தேஷஸ் என்னும் இரண்டு குணங்கள் அநிருத்த வ்யூஹத்திற்குச் சிறந்தவைகளாக வகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் சக்தியாவது -- எதையும் காப்பாற்றும் ஸாமர்த்தியம். அதனை இந்த நாமம் குறிப்பிக்கிறது.
"128. ஜனார்த்தன:-- தமது ரக்ஷணத்திற்கு விரோதம் செய்யும் சத்ருஜனங்களை உதவிதேடாமல் அழிப்பவர். இங்கு இரண்டாவது குணமாகிய தேஜஸ் குறிப்பிக்கப்படுகிறது. தேஜஸ் என்பது -- தனக்கு ஓர் உதவியைத் தேடாது கார்யத்தை முடிக்கும் திறமை.
பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் ப்ரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப் பட்டிருந்தாலும் அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்துரைத்தது.
"பரஸ்வரூபம் அகில ஹேயப்ரத்யநீகத்வத்தாலும் கல்யாணைகதாநத்வத்தாலும் ஸ்வேதரஸமஸ்த வஸ்துவிலக்ஷணமாய், விபுத்வாத்தேசத: பரிச்சேதரஹிதமாய் நித்யத்வாத் காலத:பரிச்சேதரஹிதமாய் ஸர்வமும் தனக்கு ப்ரகாரமாகத்தான் ப்ரகாரியாய்த் தனக்கு ஒரு ப்ரகார்யாந்தர மில்லாமையாலே வஸ்துபரிச்சேத ரஹிதமுமாய் ஜ்ஞாநாநந்தமயமாய் ஜ்ஞாநபலைச்வர்ய சீலாத்யநந்த கல்யாணகுண கண மஹோததியாய் ஸ்ரீய:பதியாய் ஸ்வேதரஸமஸ்தத்தையும் வ்யாபிக்குமிடத்தில் அப்ராக்ருதமாய் சுத்த ஸத்வமயமாய் ஸ்வாஸாதாரணமாய் புஷ்பஹாஸ ஸுகுமாரமாய் புண்யகந்த வாஸிதாநந்ததிகந்தராளமாய் ஸர்வாபாச்ரயமாயிருந்துள்ள திவ்யவிக்ரஹம்போலே வ்யாபித்து தரித்து நியமித்து இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகமாய்க்கொண்டு சேஷியாயிருக்கும்" [ஈடு. முதல் ஸ்ரீய:பதி]
சனி, 25 ஜூலை, 2009
வெள்ளி, 24 ஜூலை, 2009
சரணாகதிமாலை
6ம் பாடல் விளக்கம் தொடர்கிறது.
ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:-- மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான பரவாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள் அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)
பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ; பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்; ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர் சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்; தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)
திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும், மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக வ்யூஹசதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)
ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும் பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள் இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும், "ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச, பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;" என்ற சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.
(i) ஜ்ஞாநமாவது -- எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது -- ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது-- ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது -- ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது -- தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.
(vi) தேஜஸ்ஸாவது -- வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.
(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி
நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு:
ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும், தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஜ்ஞாநமாவது -- எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]
(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ
யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும். சக்தியாவது -- ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் -- சேராதவற்றைச் சேர்ப்பது]
(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது -- எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]
(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய
ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம்
குணதத்வார்த்த சிந்தகை:
[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது, குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது. ஐச்வர்யமாவது -- எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]
(5) தஸ்யோபாதாந பாவேபி
விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம்
அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது. இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும். அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும். வீர்யமாவது -- ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை -- விகாரமில்லாதிருத்தல்.]
(6) தேஜஸ்ஸாவது -- ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்
"செழுங்குணங்க ளிருமூன்று முடையார்" என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.
ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:-- மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான பரவாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள் அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)
பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ; பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்; ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர் சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்; தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)
திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும், மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக வ்யூஹசதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)
ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும் பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள் இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும், "ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச, பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;" என்ற சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.
(i) ஜ்ஞாநமாவது -- எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது -- ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது-- ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது -- ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது -- தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.
(vi) தேஜஸ்ஸாவது -- வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.
(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி
நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு:
ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும், தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஜ்ஞாநமாவது -- எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]
(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ
யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும். சக்தியாவது -- ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் -- சேராதவற்றைச் சேர்ப்பது]
(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது -- எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]
(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய
ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம்
குணதத்வார்த்த சிந்தகை:
[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது, குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது. ஐச்வர்யமாவது -- எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]
(5) தஸ்யோபாதாந பாவேபி
விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம்
அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது. இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும். அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும். வீர்யமாவது -- ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை -- விகாரமில்லாதிருத்தல்.]
(6) தேஜஸ்ஸாவது -- ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்
"செழுங்குணங்க ளிருமூன்று முடையார்" என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.
லேபிள்கள்:
சரணாகதிமாலை
வியாழன், 23 ஜூலை, 2009
ஸ்ரீவேதாந்த தேசிக கத்யம்
ஏற்கனவே சென்ற ஆண்டில் ஸ்ரீவேதாந்த தேசிக கத்யத்தை ஒலி வடிவில் கொடுத்திருந்தேன். அதைப் பாடிய சென்னை நங்கநல்லூர் ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி மாமி இங்கு ஆடி அமாவாசைக்கு வந்திருந்தார். அவரிடம் மீண்டும் அதை ஒளிப் பதிந்து இங்கு இட்டுள்ளேன். ஓரிரு நாட்களில் வரிவடிவமாகவும் இங்கு இடுவேன். 70 வயதில் மாமி குரலில் உள்ள கம்பீரத்தை இனி ரசியுங்கள்.
செவ்வாய், 21 ஜூலை, 2009
Choose a font to print
ஆடி அமாவாசை
இன்று ஆடி அமாவாசை. சென்ற பல வருடங்களாக ஒவ்வொரு ஆடி, தை அமாவாசை தினங்களிலும், சென்னையிலிருந்து சாமான்கள், கைங்கர்யபராள் எல்லாரையும் அழைத்துவந்து இங்கு வருகின்ற அத்தனை ஸேவார்த்திகளுக்கும் ததீயாராதனம் செய்துவைத்து மனமுகக்கும் திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தினர் இந்த ஆண்டும் வந்து சிறப்பாக ததீயாராதன கைங்கர்யம் செய்தனர். ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் கட்டப் பட்ட பிறகு அங்கே நடக்கின்றது. ஆசீர்வாதக் காட்சி இங்கே வீடியோவாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
