செவ்வாய், 16 மார்ச், 2010

தினமணி

மிழ்நாட்டில் "தினமணி" என்று ஒரு பத்திரிகை. 75 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறதாம். என்ன பிரயோஜனம்? இத்தனை ஆண்டுகள் பத்திரிகை நடத்தியும் இன்னும் மக்கள் ரசனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் செய்திகளைப் போட்டால் எப்படி பத்திரிகை விற்கும்? தமிழ் செய்தித் தாள்கள் விற்பனையில் 4வது இடமாம். பாருங்களேன்! இன்றைய தலைப்புச் செய்தி " அணு விபத்து நஷ்ட ஈடு மசோதா இன்று தாக்கல்" ! இது தேவையா மக்களுக்கு? பிரியாணி விருந்தில் ஒரு அதிகாரி நடனமாடியதைப் படத்துடன் வெளியிட்டதா? அல்லது நடிகை இராமேஸ்வரத்தில் "பயபக்தியுடன்" சாமி கும்பிடுவதையாவது பிரதானமாகப் போட்டு மக்களுக்கு அறிவு வளர்க்கும் காரியம் செய்கிறதா?(அதென்னமோ தெரியவில்லை. நடிக, நடிகைகள் பயபக்தியுடன் கும்பிடுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்கிறார்களா என்ன?) இதையெல்லாம் விட்டு விட்டு நாட்டையே பாதிக்கப் போகிற செய்திகளை வெளியிட்டால் யார் சார் படிப்பார்கள்? எந்த ஊரிலோ இருக்கும் அணு உலைக்கு ஆபத்து வந்து அந்தப் பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப் படும்போது கவர்ச்சி+பரபரப்பு செய்தித் தாள்கள் படங்களுடன் செய்தி வெளியிடும்போது படித்து ஐயோ பாவம் என்று அனுதாபப் பட்டால் போதாதா? அம்மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க எச்சரிக்கை செய்திகள், தலையங்கங்கள் எழுதினால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? குறைந்த பட்சம் தமிழகத் தலைவர்கள் யாராவது கருத்துச் சொல்லியிருக்கிறார்களா? எதற்காக இவ்வளவு பெரிய செய்தி வெளியிட வேண்டும்? என்றெல்லாம் எழுதத் தோன்றினாலும், இந்த ஒரு செய்தித் தாளாவது நாட்டைப் பற்றிக் கவலைப்பட்டு, மக்களை உண்மை நடப்புகளைப் பற்றி அறியவைத்து விழிப்புணர்வுள்ளவர்களாக மாற்ற முயல்கிறதே என்ற பெருமிதத்தோடு அந்த செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். படியுங்கள். ஏற்கனவே பலர் வேண்டாம் இந்த விபரீதம் என்று பிரதமருக்கு மனுக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலையைப் படிப்பவர்களும் அனுப்பலாம். (இநை எழுதிக் கொண்டிருக்கும்போதே மசோதா ஒத்தி வைக்கப் படுகிறது என்று செய்தி ஓடுகிறது)
அணு ​விபத்து நஷ்ட ஈடு மசோதா இன்று தாக்கல்: 
தீவிரமாக எதிர்க்க பாஜக,​​ இடதுசாரிகள் முடிவு


புதுதில்லி,மார்ச் 14: இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் விபத்து நேரிட்டால்,​​ அந்த நிலையத்துடன் இணைந்து செயல்படும் அயல்நாட்டு நிறுவனம் அதிகபட்சம் 300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்ட ஈடு தர வேண்டியது இல்லை என்று நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கலாகிறது.​ விபத்து எப்படி நடந்தாலும்,​​ அதற்கு யார் காரணமாக இருந்தாலும் இந்தியர்களுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டு அளவை 300 கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டாம் என்று அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அப்பட்டமாகச் சாதகமாகவும் இந்தியர்களின் நலன்களுக்குப் பாதகமாகவும் இவ்வளவு பகிரங்கமாகக் கொண்டுவரப்படும் ஒரு மசோதாவை இதே வடிவில் அனுமதிக்கவே முடியாது என்று பாரதிய ஜனதா,​​ இடதுசாரி கட்சிகள் ஆகியவை அறிவித்துள்ளன.​ ​ திங்கள்கிழமை மசோதா தாக்கல் ஆன உடனேயே இதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.​ ​​ இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில்,​​ மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியுடன் இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் நேரிலேயே சந்தித்துப் பேசினார்.​ ஆனால் இந்த மசோதா குறித்தும் அதன் நோக்கம் குறித்தும்,​​ பாதிப்பு ஏற்பட்டால் இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய நஷ்ட ஈடு குறித்தும் அருண் ஜேட்லி அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.​ அந்தக் கேள்விகளுக்கு விடை தந்த பிறகே மேற்கொண்டு பேசலாம் என்றும் தெரிவித்தார்.​ ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை அருண் ஜேட்லியின் எந்தக் கேள்விக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.​ அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலகர்த்தா என்று கூறப்படும் அணுவிசை கமிஷன் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் இந்த 300 கோடி ரூபாய் வரம்பு நியாயமான அளவுதான் என்று கூறுகிறார்.​ இந்தியர்களின் நலன்களுக்கு எதிரானது,​​ வெளிநாட்டு அணுவிசை நிறுவனங்களுக்குச் சாதகமானது என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்ளக்கூடிய இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவிலேயே நிறைவேற்றிவிட வேண்டும் என்று அரசுத்தரப்பில் நினைக்கின்றனர்.​ 300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்தது ஏன் என்று கேட்டதற்கு,​​ இதைவிடக் குறைந்த அளவை வெளிநாட்டு நிறுவனங்கள் தந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த அளவை நிர்ணயித்ததாக ககோட்கர் கூறினார்.​ இது குறைந்தபட்ச அளவு இல்லையே அதிகபட்ச அளவாயிற்றே,​​ இதற்கும் மேல் அவர்கள் தர வேண்டாம் என்று கூறுவது எப்படி இந்தியர்களின் நலனுக்கானது என்று கேட்டபோது அவரிடம் பதில் இல்லை.​ நஷ்டம் எந்த அளவுக்கு இருக்கும் என்று தெரியாமலே நஷ்ட ஈட்டை அரசு நிர்ணயிப்பது ஏன் என்று புரியவில்லை.​ இப்படி நிர்ணயித்தால்தான் அணுசக்தி தயாரிப்பில் ஈடுபட முடியும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் நிபந்தனை விதித்தனவா என்றும் புரியவில்லை.​ இந்த மசோதா நிறைவேறினால் அணு நிலைய விபத்துகளால் ஏற்படும் இழப்புகளை விசாரித்து நஷ்ட ஈட்டை நிர்ணயிக்க தனி ஆணையர் நியமிக்கப்படுவார்.​ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் நஷ்ட ஈட்டு கோரிக்கைகளை விசாரித்து உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட ஒன்றுக்கும் மேற்பட்ட வழங்கு ஆணையர்களை நியமிக்கவும் மசோதாவில் தனிப்பிரிவுகள் உள்ளன.​ அணுசக்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு பெற இதுவரை தனி அமைப்பு ஏதும் இல்லை என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்றும் இப்போதுள்ள இன்சூரன்ஸ் சட்டத்தில் அதற்கு வழி இல்லை என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.​ அவசரம் ஏன்:​ பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.​ அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கவிருக்கிறார்.​ அப்போது,​​ இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து இந்தியா எடுத்திருக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஒபாமா கேள்விகள் கேட்பார்.​ அப்போது பதில் சொல்வதற்காகத்தான் இந்த மசோதா என்று கூறப்படுகிறது.​ விபத்து நடந்த தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மனுச் செய்தால்தான் நஷ்ட ஈடு பெற முடியும் என்று மசோதாவின் ஒரு பிரிவு கூறுகிறது.​ அணு கதிரியக்கப் பொருள் திருடப்பட்டோ,யாருக்கும் தெரியாமல் தூக்கி வீசப்பட்டோ,​​ கவனக்குறைவாக கைவிடப்பட்டோ சேதம் ஏற்பட்டால்,​​ அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் தேதியிலிருந்து அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்குள் நஷ்ட ஈடு கோரலாம் என்று மற்றொரு பிரிவு கூறுகிறது.​ நஷ்ட ஈட்டு அளவைக் கூட்டவும் குறைக்கவும் அரசுக்கு அதிகாரம் தருகிறது மசோதாவின் மற்றொரு பிரிவு.​ அணுசக்தி தயாரிப்பு நிலையத்தில் விபத்து நேரிட்டு அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு இவ்வளவுதான் நஷ்ட ஈடு என்று நிர்ணயிப்பது அடிப்படை மனித உரிமைகளையே மீறும் செயல் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்.​ இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே வரம்பு கட்டுவதாக இருக்கிறது இந்தப் பிரிவு,​​ எனவே இது செல்லாது என்கிறார் சட்ட மேதை சோலி சோரப்ஜி.​ புயல்,​​ வெள்ளம்,​​ நில நடுக்கம்,​​ ஆழிப்பேரலை ​(சுனாமி),காட்டுத் தீ போன்ற இயற்கைக் காரணங்களால் அணுசக்தி உற்பத்தி நிலையத்தில் விபத்து நேரிட்டாலோ,எதிரி நாட்டுடன் நடக்கும்போரின்போது தாக்கப்பட்டாலோ,பயங்கரவாதிகளின் தாக்குதலால் விபத்து நேரிட்டாலோ,​​ அணுசக்தி நிலையத்தில் பணிபுரிகிறவரின் கவனக்குறைவான நடத்தையாலோ விபத்து நேரிட்டால் இந்த நிலையத்துடன் இணைந்து பணிபுரியும் வெளிநாட்டு நிறுவனம் நஷ்ட ஈடே தரத் தேவையில்லை என்று ஒரு பிரிவு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் "தினமணி" எழுதிய தலையங்கம் படிக்க

திங்கள், 15 மார்ச், 2010

He is not a Hindu

ன்று MSNல் படித்த செய்தி இது. எல்லா மதங்களிலும் போலிச் சாமியார்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இந்த செய்தி எந்த நாளிதழ்களிலும், குறிப்பாகத் தமிழ் செய்தித் தாள்களிலோ அல்லது தொலைக் காட்சிச் சானல்களிலோ இதுவரை வரவில்லை. ஆமாம்! அவரென்ன ஹிந்து மதச் சாமியாரா என்ன? பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் போட்டு அவமானப் படுத்துவதற்கு? அவர் மரியாதைக்குரிய மதத்தைச் சேர்ந்தவராயிற்றே! அவரைப் பற்றி செய்தி வெளியிட்டால் மதச் சார்பின்மை கொள்கைகளுக்கு விரோதமாகி விடுமே!
MSN செய்தி இங்கே!

Church head in a fix over affair with cook

Bangalore: It is not just the summer that is getting unusually hot in Bangalore, the behind-the-doors sex scandals too are getting steamier and hotter. Close on the heels of the sordid Swami Nityananda, a priest in Bangalore has found himself in a spot for ordering sex from a cook - something like what Tiger Woods did when he ordered a `plate-full' of hot and spicy sex from a waitress in the US.

The priest, Arokya Das, heads the St Peter and Paul Church in a posh locality of Bangalore. Reports said that the priest had been having a sexual relationship with the cook in the church. While this has been going on for quite some time, church-goers warned the priest to focus on the work of God and not that of the cook. But Das obviously had his own preferences and continued the relationship with the cook.

When things started to spill out into the open, three youngsters thought of teaching the father a lesson. According to the police, soon after the Sunday mass, the three youngsters, identified as Johnson,Anto and Jaikodi, tried to assault the father in full public view.

A shaken father managed to escape and dialled the police. But the three youths prevented the police from entering the church saying that they wanted to give the father a lesson or two in morality. The police had to call in for additional help as things started slipping out of control. Later, the three were arrested.

The police had a word with Father Das and asked him to send the cook away in order to prevent further violence.

Soon after the arrest, hundreds of church-goers surrounded the church and wanted to know why the three youngsters were arrested and not Father Das. The police had to summon the president of the Karnataka Tamil Catholic People's Voice, John Kennedy.

Kennedy admitted that Father Das had been having an affair with the cook and despite warnings, he had continued to maintain a clandestine relationship.

Later in the evening, Vicar General Father S Jayanathan visited the church and held a meeting. He assured the agitated crowd that action would be taken.

There was no word from Father Das or the cook.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

Tamil NHM Keyboard - Extended - மின்தமிழ் | Google Groups

adiyen dasasya vignaapanam. In windows 7 and Vista the character ஶ (unicode) is supported. (not in windows XP) On my request, Sri Vinodhrajan has modified NHM writer key board so that the character can be typed by key strokes without going to character map, copying and pasting etc. Please go through the following link. You must use NHM Writer which is a freeware and which can be downloaded and installed from www.nhm.in/software
adiyen,
dasan,
T.Raguveeradayal

Tamil NHM Keyboard - Extended -
மின்தமிழ் |
Google Groups

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற! - மின்தமிழ் | Google Groups

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற! -
மின்தமிழ் |
Google Groups

மின்தமிழில் ரசித்தேன்

மின்தமிழில் அடியேன் படித்து ரசித்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எழுதியவர் திரு.தேவ்

ஸ்ரீமத் இராமாயணமும் அருளிச்செயலும்

பக்தி இலக்கியம் என்று ஒருசேர வகைப்படுத்த முடிந்தாலும் வேறுபட்ட
மொழிகளில் அமைந்த இவ்விரண்டையும் எப்படி ஒப்பீடு செய்ய இயலும் எனும் ஐயம்
எழலாம். 
முதற்காரணம் இரண்டுமே செவ்விசைச் சார்புள்ளவை
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமகுமாரர்கள் இருவருக்கும் இராம காதை பாடப்
பயிற்றுவித்தார் - ‘காயதம் மதுரம் கேயம் தந்த்ரீலய ஸமந்விதம்’
’ஸுச்ராவ தத்தாள லய உபபந்நம் ஸர்காந்விதம் ஸுஸ்வர சப்த யுக்தம் |
தந்த்ரீ லய வ்யஞ்ஜந யோக யுக்தம்....’ (உத்தர காண்டம் 94 – 32)
(குச லவர்கள் தாளத்தோடு ஸுஸ்வரமாகப் பாடினர்)
ரங்கநாத முனிகளும் நாலாயிரத்தைத் தம் மருமக்கள் இருவருக்கும் இசையோடு
பயிற்றுவித்தார் -
’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்’
இவை இரண்டும் பாடப்பட்ட முறை தற்போது மறைந்து விட்டது; மாந்தரைப் போலவே
மரபும் காலகதிக்கு உட்படுவதுதானே.
திவ்ய தம்பதிகளுக்கான மங்களாசாஸனத்தோடு தொடங்குவது ராமாயணம்; நாலாயிரத்
தொடக்கமான திருப்பல்லாண்டும் அது போன்றதே. இலங்கை பாழாளாகப் படை
பொருதவனுக்குப் பல்லாண்டு பாடியவாறே தொடங்குவது நாலாயிரம்.
கானகத்தில் கிழங்கு கெல்லி எடுப்பதற்கான கூடை போன்றவற்றோடு கூலியாள்போல்
நிற்கும் இளையாழ்வாரை வால்மீகி பகவான்  ‘லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:’
என்றும், இங்கையிலிருந்து உறவுகளைத் துறந்து வெளியேறி வானில் அந்தரத்தில்
நிற்கும் விபீஷணரை ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ என்றும் சீமான்களாக
வர்ணிப்பார்; கைங்கர்யம் மட்டுமே செல்வம்  என்பது உட்கருத்து.
‘ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம் |
அயோத்யாம் அடவீம் வித்தி ...........................................||’
”இராமனைப் பறவை ஏறும் பரமபுருடனாக அறிந்துகொள்; ஜானகியை மா-லக்ஷ்மி என
அறிவாய்; கானகத்தைப் பரமபதமாகக் கருது” –  இளைய பெருமாளை மேலும்
கைங்கர்யத்தில்  ஊக்குவிக்கிறாள் ஸுமித்ரை.
’கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே’,  ‘புள் கவ்வக்
கிடக்கின்றீரே’ என்றெல்லாம் கடிந்துரைத்துக் கைங்கர்யத்தில் மூட்டுவது
அரங்கனுக்கே அற்றுத்தீர்ந்த ஓர் ஆழ்வார் பின்பற்றும் வழி.
கூழாட்பட்டு நிற்காமல் தொண்டு பூண்டு அமுதம் உண்ணும் வாழ்வையே
வாழ்க்கையாக ஒப்புவர் ஆழ்வார்கள்; இக்குடியில் வந்ததால் ’ஏழாட்காலும்
பழிப்பிலோம்’ என்னும் ஸாத்விக அஹங்காரமும் பொலிகிறது அவர்தம்
பனுவல்களில்.
மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்த நிகழ்ச்சியில் நாலாயிரம் காட்டும்
பாதுகா ப்ரபாவம் ஸ்ரீ ராமாயணத்தையும் விஞ்சுவதாகிறது.
ஸ்ரீ ராமாயணத்தை ’சரணாகதி சாஸ்த்ரம்’ என்றே வழங்குவது மரபு , பால
காண்டத்தில் தேவ சரணாகதி, கைங்கர்யம் குலையாமைக்காக லக்ஷ்மண சரணாகதி,
அயோத்யா காண்டத்தில் பாரதந்த்ர்யம் குலையாமைக்காக பரத சரணாகதி, ஆரண்ய
காண்டத்தில் தபோதந சரணாகதி, ஜயந்த சரணாகதி, விபீஷண சரணாகதி என்று
அமைந்துள்ளதால்.
”ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேலென்றருள் கொடுப்பேன்,”
என அபயம்  தரும் ஐயனின் உதார குணத்தில் யார்தான் மனம் நெகிழாதிருப்பர் ?
இதையே அடியொற்றி அடிக்கீழமர்ந்து புகுவார் பராங்குசரும்; குலசேகரரின்
‘தருதுயரந் தடாயேல்’ கையறு நிலையில் உள்ள ஸம்ஸாரிகள் அனைவ ருக்குமானது.
சிறார்களுக்கு உச்சரிப்புப் பதிவதற்காக ‘ராமோதந்தம்’ பயிற்றுவிப்பர்
முற்காலத்தில்; குலசேகரரின் திருச்சித்திரகூடப் பாசுரங்கள் தமிழின்
”ராமோதந்தம”  என்று நினைத்துக் கொள்வேன். திருக்கண்ணபுரத்தின் சௌரி
ராஜனையும் இராமபிரானாகப் பாடியவர் ராம பக்தரான குலசேகரர்; நல்ல வேளையாக
திவ்யதேசப் பெயரை ’ராமபுரம்’ என்று மாற்றவில்லை என்பார் பரனூர்ப்
பெரியவர்; ராஜரிகத்தில் இருந்தபோது ஸ்ரீராமாயணம் கேட்ட ஸம்ஸ்காரமாகலாம்.
உத்தர காண்டம் பிற்சேர்க்கை என்பர்; யாரால், எப்போது, எதற்காக என்றால்
விடை கிடைக்காது. கோப்ரதாரத்தில் சராசரமுற்றவும் நற்பாலுக்குய்த்ததை
நாலாயிரம் தெளிவு படுத்துகிறது.
நாலாயிரச் சொற்களை மட்டுமே கொண்டு புனையப்பட்டது பெரியவாச்சான்
பிள்ளையின் பாசுரப்படி ராமாயணம்.
தள்ளத் துணியினும் தாய்போல் இரங்கும் தனித் தகவால் நம் உள்ளத் துறைகின்ற
அவ்வுத்தமன், தனக்கே பாரமாகத் தானே யெண்ணி  வான்தந்து, மலரடியும் தந்து,
வானோர் வாழ்ச்சிதர மன்னருளால் நம்மை வரிக்கும் நிலை ஒன்று உள்ளது;
இந்நிலைக்குப் பெயர் அவனருளை  எதிர்பார்த்து நிற்கும் ’பரகத ஸ்வீகார
நிஷ்டை’ எனப்படும் ப்ரபந்ந பரிபக்வம். இவ்விரு இலக்கியங்களுமே மறைமுகமாக
அதைச் சுட்டுகின்றன.
இவற்றை மனத்தில் கொண்டே சோழன் ‘ ஸ்ரீராமாயணமும், அருளிச் செயல்களும்
வைணவத்தின்  பேரரண்கள்’ என்று கூறியிருக்க வேண்டும்.
உலவிய பெருமாளும் (விபவத்தில்) , உறங்கும் பெருமாளும் (அர்ச்சையில்) :
இராமபிரான் ஆராதித்த அர்ச்சா விக்ரஹமே பதின்மர் பரவிய பரமன்  – ’ஸஹ
பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்’ என்று வால்மீகி தெளிவாகவே
சொல்கிறார்.
தேவர்களும் முனிவர்களும் அறிய ‘பவாந் நாராயணோ தேவ:’ என்று நான்முகன்
துதிக்கையில் பரத்வத்தை மறைத்துக்கொண்டு ‘இல்லை; நான் ஒரு அரசகுமாரன்
மட்டுமே. தயரதன் மகன்’ என்று நீர்மை பொலியக்கூறும் பான்மையை எங்கு
காணமுடியும் ?  (தற்போது அவனவன் தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்வது
வேறு விஷயம்)
கலியின் கொடுமை பெருகிய நிலையிலும் பரத்வம் காட்டாமல் அர்ச்சாஸமாதி
நியமம் குலையாத நீர்மையை அரங்கனிடமும் காண்கிறோம்.
தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாதமாக, சீர ஜடாதரனாக வனத்தில் த்வரை யுடன்
உலவியபோது ‘ஸுவேஷ:’  என்று கொண்டாடும்படி முனிவர்களின் கண்களுக்கு
விருந்தானான்.
திவ்ய ஸூரிகளாம் ஆழ்வாரின் கண்களுக்கு இலக்காக ‘காட்டவே கண்ட பாத கமலம்,
நல்லாடை, உந்தி, தேட்டரும் உதர பந்தம், திரு மார்பு, கண்டம், செவ்வாய்,
வாட்டமில் கண்கள்’ என்று நிதானமாக நின்று ஸேவிக்கலாம்படி அரங்கம்
அமைத்துக்கொண்டு அர்ச்சா ஸமாதியில்.
உயிர் பிரியும் தருணத்திலிருக்கும் ஜடாயுவைக் கட்டிக்கொண்டு கையாலாகாத
மனிதனைப்போல் புலம்புவது ஒருபுறம்; அடுத்ததாகப்  பக்ஷியின் வாட்டம்
நீக்கி ‘அநுத்தமாந் லோகாந் கச்ச’ என்று பரமபதம் அருளும்போது விபவ நியமம்
ஒதுங்கிக்கொண்டு பரத்வம் ஒளிர்வதையும் கண்டு வியக்க முடிகிறது ஸ்ரீ
ராமாயணத்தில்.
அரங்கனும் மெய்யடியார்கள் விஷயத்தில் நியமத்தை ஒதுக்கிவிட்டு உரையாடி
மகிழ்வான்.
திருவணையின்  தர்ப சயனத்தில் விபவ மஹிமையையையும், திருவரங்கத்தின்  யோக
சயனத்தில் அர்ச்சா வைபவத்தையும் காண முடிகிறது.
ஸ்ரீராமனும், ஸ்ரீராமானுஜரும்
ஸ்ரீராமனுக்குத் தொண்டு செய்ய ஒரு லக்ஷ்மணன்; ஸ்ரீரங்கநாதனுக்கு ஒரு
லக்ஷ்மண முநி.
உடையவர் ஸ்ரீ ராமாயணத்தைத் திருமலையிலும், அருளிச் செயலை அரங்கத்திலும்
பாடம் கேட்டார்.
விபீஷண சரணாகதியில் அரக்கன் என்பதால் எழுந்த விசாரம் பற்றி உடையவர் கூறி
வரும்போது, உறங்காவில்லி தாஸர் தாழ்மையுணர்ச்சி மேலிட, கோஷ்டி யிலிருந்து
விலக எண்ணி எழுந்தாராம்; உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட உடையவர் ‘
தாஸரே, இது ராமாநுஜ கோஷ்டி ! ராம கோஷ்டியன்று, விசாரணை கிடையாது;
நிர்விசாரமாக அமரும்’ என்று உரக்க ஆணை யிட்டாராம்.
ஸ்ரீரங்க கத்யத்தில் உடையவர் அரங்கனோடு கருணா காகுத்தனையும் சேர்த்தே
வணங்குவார்  –  ‘ஆபத்ஸக, காகுத்ஸ்த*, ஸ்ரீமந், நாராயண,புருஷோத்தம,
ஸ்ரீரங்கநாத, மம நாத நமோஸ்து தே’