ஞாயிறு, 28 டிசம்பர், 2008
சனி, 27 டிசம்பர், 2008
Man's obedience -- willing submission
வியாழன், 25 டிசம்பர், 2008
திருவருட்சதகம்
அநுசரசக்த்யாதி குணாமக்ரேஸர போத விரசிதாலோகாம்
ஸ்வாதீ நவ்ருஷகிரிசாம் ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமிதயாம்.
பின்னடைச் சத்தி யாதிப் பண்புநின் பாங்கு தாங்க
முன்னடைப் போத வெள்ளச் சுடருனக் கொளிதெ ளிக்க
நின்னயத் திருவ னென்றே நடைத்திரு விடப வெற்பன்
தன்மையொன்றுணர்த்து மாட்சித்தயையுனைத் தெரியக்கண்டேன்.
[சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேசு என்னும் குணங்களைத் தனக்குப்பின் தொடரும் ஊழியக்காரர்களாகவும்,ஜ்ஞாநம் என்னும் குணம் தனக்கு முன்கையில் விளக்கை வைத்துக் கொண்டு வழிகாட்டிக் கொண்டு போகும் வெளிச்சத்தை உடையவளாயும்,வேங்கட வெற்பனைத் தனக்கு ஸ்வாதீநமாக உடையவளாயும், தானே பிரபுவாயும், தானே ஆவிர்பவிப்பாளாயும் உள்ள தயாதேவியே கதியென்று அவளைச் சரணம் புகுகின்றேன்.]
அபிநிகில லோகஸுசரித முஷ்டிந்தய துரிதமூர்ச்ச்நாஜுஷ்டம்
ஸஞ்ஜீவயது தயேமாமஞ்ஜ நகிரிநாத ரஞ்ஜநீபவதி. .12.
உள்ளுநல் லுலகு வாழக் கொள்ளுநல் லொழுக்க முற்றும்
கள்ளுமோர் சிறங்கை யாகக் குடித்தகம் தடித்த யர்ந்தே
உள்ளவோர் விரகி லாத வென்னுயிர் தயையு னக்காய்த்
தெள்ளருட் டேவ னாவித் தேவிநீ தெளிவிப் பாயே.
[அகில புவநங்களும் செய்த புண்ணியம் அனைத்தையும் ஒரு கையால் எடுத்து உறிஞ்சி விடக்கூடிய பாவங்களைப் புரிந்து அந்தப் பாப விஷமூர்ச்சை மிதமிஞ்சி ஏறியிருக்கும் என்னையும், அஞ்சநகிரிக்கு அதிபதியான அலர்மேல் மங்கை உறை மார்பனை ரஞ்சிப்பிக்கும் அவனது ஆவித்தேவியாகிய நீ என்னை உயர்த்தி எனது ஆத்மாவை உனதாகச் செய்யவேணும்.]
புதன், 24 டிசம்பர், 2008
Paduka Sahasram Intro
God’s will; Soul’s will ; Intuition.
#[It is pratyagatmadarsana, and sadadarsana. God’s command (sastras, chodana agna in Karmabhaga becomes transformed into the will (sankalpa) of the liberated soul in Brahmabhaga. That will is the soul’s will to serve God. It is the fulfilment of God’s will in the will of His liberated servants. Karma is the ‘earlier’ part (purvabhaga) and gnana is the ‘ later ‘ part (uttara bhaga or uparitanabhaga) of one and the same science of Mimamsa. Karma and gnana are neither exclusive nor contradictory. To adopt the language of the present author in Adhikaranasaravali, verse 10, karma is no more gnana in truncation than gnana is karma in decapitation. According to Vyasa {Cf: Devadadhikarana} ‘sruti’ is perception (pratyaksha) and ‘smruti’ is inference(anumana) The soul sees with the eye of God and wills with the will of God. That is the soul’s satyasankalpa (true volition) and that satya is the satya of the soul’s serving percipience and experience. Intuition , which, as its etymology implies, roughly corresponds to pratiyagatmadarsana, is the realisation in eternal immediacy of the truth of that “perception” in the soul’s sadadarsana, and upasarpana. That is vedantic truth as would appear from the various sutras of Vyasa and particularly those in Kartradhikarana. Avrttiyadhikarana, Ikshatyadhikarana, Ikshatikarmadhikarana, Dyubhavadyadhikarana,Sankalpadhikarana, and Jagatvyaparavarjadhikarana. The synthetical gist of the relevant sutras in the adhikarana is that the command (sastra) in Karmadhikarana, by dint of the soul’s undaunted endeavour in faith and love in Avrttiyadhikarana, is transformed into the soul’s will(sankalpa) in Sankalpadhikarana and the eternal percipience (sadadarsana) in Ikshatikarmadhikarana, and service (upasarpana) in Dyubhavadyadhikarana, and non-reverter in Jagadvyaparavarjadhi karana. That serving percipience has its beginning in avrtti and its fulfilment in anvrtti. Similarly according to Vyasa, whose articulation is Vedanta, God is gneya (to be known), soul is gna (knower) and matter is heya (to be cast off) Cf: Anumanikadhikarana, Gnadhikarana, andIkshdyadhikarana, where God, soul, and Matter are declared to be Gneya, Gna and Heya respectively . The Gneya(to be known) of Anumanikadhikarana is the Muktopasrpya (to be served by the liberated) of Dyubhavadyadhikarana. Vyasa Sutra may be equated thus : Matter: Soul: God: Hey (to be cast off): Gna (knower): Gneya (to be known): and uktopasrpya (to be served by the liberated).]
செவ்வாய், 23 டிசம்பர், 2008
திருவருட்சதகமாலை
ஆத்தூர் சந்தானம் ஸ்வாமியின் பாதுகா சகஸ்ர மொழிபெயர்ப்பு மேலே உள்ளது.
திருவருட்சதகமாலை.
கமப்யநவதிம் வந்தே கருணா வருணாலயம்
வ்ருஷசைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம் .9.
செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
விடைக்கிரி தடத்தம ரடைக்கல மவர்க்கே
கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன். .9.
{ கருணை யென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கடமாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வருணிக்கக் கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகின்றேன்.}
அகிஞ்ச நநிதிம் ஸுதிமப வர்கத்ரிவர்கயோ :
அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.
கைம்முதலி லர்க்கொருக ரத்துறுநி திப்போல்
இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன். 10.
( கைம் முதலில்லாத பேதைகளும் வேறு கதியற்றவர்களுமான சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும் , திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்ஜநம் என்கிற மாசு அடியோடு அல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன். )