சனி, 9 பிப்ரவரி, 2008

வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகை கீர்த்தனை

இராகம் - கேதாரகவுளம் -தாளம் - சம்பை

கண்ணிகள்

1. சருவதந்திரசுவதந்திரர்திரு - வரங்கமதிற்றரிசனமே
         தழைக்கவளர்நாளதனி   னேரே
    உரிமைகொண்டுமிவர்தந் திருவடியில்விசேஷக்கியரெல்லா
        முண்மையாகவந்தாசிரயித்தாரே.

2. அவர்களிற்பேரருளாள --ரெனுமொருவர்குணசீல
        ரதிகமேதாவியதினாலே
    குவலயதிற்கீர்த்திபெறு - மெதிராசார்க்கந்தரங்கர்
        கூரத்தாழ்வானவரைப்போலே

3. பரிந்திவர்க்குமந்தரங்கர் -- பேரருளாளருமாகிப்
      பஞ்சசமுஸ்காரமுதல்  வாய்ந்த
    விரிந்துபயவேதாந்த - சகலசாஸ்திரங்களையு
        மிகவுமதிகரித்ததில்வேதாந்த

4.  பூர்ணராயிருக்கையினால் -- பிரமதந்திரசுதந்திரரென்று
        புகழ்ந்துதிருப்பேருங்  கொடுத்தாரே
     காரணப்பேர்கொண்டவர்நல் -- விரத்தியாற்சன்னியசித்துக்
        கார்த்திருக்கவந்து         தொடுத்தாரே

5.  பிரமதந்திரசுவதந்திரசீயர் -- பிரபாகரசீயரெனும்
         பிரபலராம்வெண்ணெய்க்கூத்த   சீயர்
     தரணிதனிலெங்கும்புகழ் -- வீசும்பூரிராமாநு
         சாசாரியராகிவந்த      தூயர்

6. ஒப்பிதஞ்செய்திவர்கண்முத -- லானோர்க்கும்ஸ்ரீபாஷ்ய
        முடையவர்பிரபந்தங்களி   னீதி
    அப்புள்ளார்தமக்குமுன்சொல் -- திருக்குருகைப்பிரான்புள்ளா
        னாராயிரப்படியு     மோதி

7. மற்றுமின்னஞ்சாரார்த்த -- சதுஷ்டயமும்ரகசியார்த்த
         வரிசைகளெல்லாமருளிச்   செய்தே
    தத்துவடீகைமுதலான -- சமஸ்கிருதங்களும்ரகஸ்ய
         சாலங்கள்செய்ததுமப்  போதே

8. தானிதெல்லாமிங்கிவர்க -- ளானசிஷியர்களுக்கேபிர
         சாதித்திருக்கிறநாளி  லங்கே
    ஞானபத்தியுடனேவை -- ராக்கியசம்பத்தையுமாசா
          ரவிருத்திகளையுங்கண்டு   மிங்கே

9.  நடக்குமிவர்பாஷ்யகார -- ரவதாரமென்றிவர்சன்
        னிதிகண்டேபத்திகொண்ட    வாயர்
     வடக்குத்திருவீதிப்பிள்ளை -- யென்னுமவர்தந்திருகு
          மாரராம்பிள்ளைலோகா      சார்யர்

10. உண்மையாம்ஸ்ரீபாஷ்யந் -- தேசிகனையாசிரயித்து
         உபதேசமாகவுங்     கொண்டாரே
      வண்மையாமெதிராசர் -- பிரபந்தமேகாலக்ஷேப
          மாயிருக்கயாவருங்      கண்டாரே

11. பிரபலமாய்முப்பத்தொரு -- பாஷ்யம்வேதாந்தகுரு
         பிரசாத்திதருளின    வராமே
     வருதிரும்சத் துவாரஞ்சிரா -- விதசாரீகபாஷ்யவகையை
           யருளினவரிவர்    தாமே.   

தரிசனத்தார்  அசூயை கொள்ளல்.

கட்டளைக்கலித்துறை

கவிவாதிசிங்கமென  வேதிருவரங்கத்திலிருந்
துவியாக்கியானம்பயில்கின்றநாளிலசூயையினாற்
செவையாகமுன்வந்தழைத்தார்கள்வாதிற்றெரிசனத்தா
ரிவர்தாம்பொறுமையிற்பூமியென்றேசொல்லுமெங்கணுமே.

தரு -இராகம் - மாஞ்சி - தாளம் -- சாப்பு

பல்லவி

பொறுமைக்குள்நிகமாந்ததேசிகனே-- இந்தப்
பூமண்டலத்திலெங்கும் --பூசிகனே.

அனுபல்லவி

வறுமைதவிர்க்குங்கச்சிவரதரேகுலதெய்வ
முறுதியென்றுபணிந்து உலகம்புகழவந்தார்.

சரணங்கள்

வாதத்துக்கழைத்தார்கள்  தரிசனத்தர் -- பாக
   வதபசாரமிதென்றே  தெரிமனத்தர்
ஆதலால்வாராதுகண்டசாமர்த்யரிவரென்று
பாதரக்ஷைவாசற்படிமுன்கட்டக்கண்டாரே.        (பொ)

ஞானத்தைப்பிடிப்பார்கள் சிலபேர்கள் - கர்ம
    நடத்தைகைப்பிடிப்பார்கள் சிலபேர்கள்
ஆனத்தினாலேநாங்களரிதாசர்பாதுகையைத்
தானத்தைச்சிரமேல்வைத்தானந்தம்பெற்றோமென்றார்   (பொ)

அவர்களெல்லாருமிவர்   மகிமைகண்டார் - வந்து
     அபசாரக்ஷாபணங்கள்செய்துகொண்டார்
அவதாரபுருஷர்வேதாந்தாசாரியரென்று
இவரேவைராக்கியநிதியிவரேகலியாணகுணர்        (பொ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக