சனி, 16 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 6

ஸ்ரீஎன்.வி.எஸ்  ஸ்வாமி மூல பாடத்தை அப்படியே தராமல் அவரது நடையில் நூலின் சாராம்சத்தை விவரிக்கிறார். அதை அப்படியே இங்கு இடுகிறேன். நூலை அதன் ஆசிரியர் எழுதியவாறே படித்து ரசிக்க விரும்புபவர்களுக்காக இந்நூலை ஸ்கான் செய்து வலை ஏற்றி தகவல் அளிப்பேன்.

ஆக, இங்கு நீங்கள் இனி படிக்கப் போவது ஸ்ரீ என்.வி.எஸ் அளிக்கும் எளிய நடையில் சுப மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம்! 60 வருடத்திற்கு முந்திய தமிழை இன்றுள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள சிரமப்படும் ஸ்ரீ என்.வி.எஸ். ஸ்வாமியின் கைங்கர்யத்துக்கு அடியேனின் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

பும்ஸவந ப்ரகரணம்


    எந்த கர்மாவால் கர்ப்பிணி புருஷ ப்ரஜையைப் பெறுவாளோ அந்த வைதிக கர்மத்திற்கு ‘பும்ஸவநம்" என்று பெயர். கர்ப்பம் நிச்சயம் என்று தெரிந்தவுடன் மூன்று அல்லது நான்காம் மாதத்தில் இதைச் செய்துவிடவேண்டும்.

    கிழக்கு அல்லது வடக்கு நோக்கிச் செல்லும் ஆலமரத்தின் கிளையிலிருந்து இரு பழங்களுடன் கூடிய, மொட்டு போன்றிருக்கும் (துளிர்க்கும் இலையின்) கொழுந்தைக் கொண்டுவந்து, (ஸீமந்தோந்நயனத்தில் கூறப்பட்ட அதே) எட்டு ஹோமங்களைச் செய்து, ருதுவாகாத கந்யைக் கொண்டு (பூப்பெய்தாத இளம் பெண்ணுக்கு மட்டுமே கந்யை என்ற பெயர் பொருந்தும். பூப்பெய்தி மணமாகாத பெண்ணிற்று ‘ப்ரௌடை" என்று பெயர்.) அம்மியில் வைத்து நசுக்கச் செய்து, அதன் ரஸத்தை வஸ்த்ரத்தால் வடிகட்டி எடுத்துக்கொண்டு, அக்நிக்கு மேற்கே கர்பிணியை, மேற்கு நோக்கி அமர்ந்து, தலை மட்டும் கிழக்கு நோக்கி திரும்பும்படியாக நன்றாக அண்ணார்ந்து உட்காரச் செய்து, ‘(ஓ ஆலந்துளிரின் ரஸமே நீ) புருஷ ப்ரஜையை ப்ரஸவிக்கும்படி செய்பவனாக இருக்கிறாய்" என்று பொருள்படும் (புகுஸுவநமஸி என்ற) வேத வாக்யத்தைக் கூறி, மூக்கின் வலது துவாரம் வழியாக, அந்த ரஸத்தைப் பிழிந்து, கர்பப்பையைச் சென்றடையும்படியாக விடவேண்டும் என்று (ஆபஸ்தம்ப) ரிஷி ஸூத்திரத்தில் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால் புத்ர உத்பத்தி உண்டாகும்.

அநாயாஸ(சிரமமற்ற, சுக) ப்ரஸவ உபாயம்
    ப்ரஸவ காலம் வந்ததும் ஒரு புதிய மண் பாத்திரத்தில் நதியின் ஜலத்தை எடுத்து வந்து, ‘து}ர்யந்தி" என்னும் மூலிகைச் செடியைக் கொண்டுவந்து, கர்பிணியின் இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி, ப்ரஸவ வேதனையால் வருந்தும் கர்பிணியை, பின் வரும் ரிக்கால் (மந்திரத்தால்) இரு கைகளாலும் தொட்டு, பிறகு வரும் மூன்று மந்திரங்களை ஜபித்து, ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் ஒரு முறை ப்ரோக்ஷிக்கவேண்டும். (மூன்று மந்திரங்களும் முடிந்த பிறகு ஒரு முறை ப்ரோக்ஷித்தாலும் போதுமானது).

    நான் உன்னை என் கைகளின் பத்து விரல்களால், பத்து மாத கர்பத்தை சீக்கிரம் ப்ரஸவிக்கும்படியாக சுற்றிலும் தடவுகிறேன்.

    ஆபிஷ்ட்வாஹம்
    1. யாகத்தில் ஸோமரஸம் எப்படி எளிதாய் பிழியப்பட்டு, துணி வழியாகக் கசிகிறதோ, கடல் எப்படிக் காற்றால் அசைகிறதோ, அப்படி உன் கர்பமும் (ப்ரோக்ஷிப்பதால்) அசையட்டும். பிறகு, கர்பத்தைச் சுற்றியிருக்கும் ஜராயு (பனிக்குடம் என்பர்) என்ற ஓர் மெல்லிய தோலுடன் ஸுக ப்ரஸவமாகி, ஆயுள், ப்ரஹ்மவர்சஸ் (ப்ராஹ்மண களை), கீர்த்தி (புகழ்), வீர்யம் (சக்தி), அந்ந ஸம்ருத்தி (மிகுதியான அந்நம்) இவைகளுடன் கூடியிருக்கட்டும். யதைவ ஸோம:

    2. இந்த கர்பம், ப்ரஹ்மாவின் ஸங்கல்பப்படி, பத்து மாதங்கள் உன் உதிரத்தில் (கர்பத்தில்) இருந்தது. இனி உனக்கும் அதற்கும் (சிசுவிற்கும்), ப்ராண (உயிர்) ஆபத்தின்றி வெளிவரட்டும். தசமாஸாம்.

    3. ஸரஸ்வதீ நதீ முதலியவற்றுள் உள்ளிருக்கும், அப்பு(தீர்த்த) தேவதைகளே! சக்தியுடைய நீங்கள் இக்கர்பத்தை வெளிப்படுத்துங்கள். நல்லபடி தாயும், சேயும் க்ஷேமமாக இருக்கட்டும். ஆயமநீர்மயத.

ஜராயு என்கிற நஞ்சு விழ மந்த்ரம்
    ஜராயுவுக்கு திலதா என்றும் ஒரு பெயர் உண்டு. அது தலைகீழாக விழட்டும். நீ குடலிலுள்ள எந்தப் பொருளாலும் பாதிக்கப்படாமல் வெளியே வா! நீ மிகவும் ஸ்வல்பம் (சிறிய பகுதி). நீ வெளியில் வந்ததும் உன்னை நாய் உண்ணட்டும். திலதேவ பத்யஸ்வ.

அடுத்து ஜாதகர்ம ப்ரகரணம்

செவ்வாய், 12 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 5

ஸீமந்தோந்நயநம்
பும்ஸவநம் என்றால் புருஷ ப்ரஜை ஜநிக்க (பிறக்க) வேண்டும் என்பது. கர்ப்பம் தரித்த 4ம் மாதத்தில் இதைச் செய்யவேண்டும் என்று ரிஷி விதித்திருக்கிறார். கர்ப்ப பிண்டத்திற்கு லிங்கம் உண்டாவதற்கு முன் இதைச் செய்தால்தான் புருஷ ப்ரஜையை எதிர்பார்க்க முடியும். (கர்பத்தில் உருவாகியுள்ள சிசு ஆண்பாலா பெண்பாலா என்பதை தீர்மானிக்கும் விஷயங்கள் (லிங்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது) உருவாவதற்கு முன் பும்ஸவனத்தைச் செய்தால்தான் ஆண் சிசுவை எதிர்பார்க்க முடியும்.) பகவனால் லிங்கம் ஏற்பட்ட பின்னர் இதைச் செய்தால் அது பலிக்காது.
    ஸீமந்தோந்நயனம் என்றால் வகுடு பிரித்தல் உள்ள கர்மாவாகும். இது 6 அல்லது 8ம் மாதத்திற்குள் செய்யவேண்டியது. இப்போது இவ்விரு கர்மாக்களும் சேர்த்தேதான் அநுஷ்டிக்கப்படுகிறது. இவை சிசுவுக்கும் கர்ப்பிணிக்கும் சேர்ந்து உத்தேசமானது. இதை ப்ரதி( ஒவ்வொரு) கர்ப்பத்திற்கும் அநுஷ்டித்தல் நலம் என்பது பல ரிஷிகளின் அபிப்ராயம். ஏனெனில் முன் மந்த்ரப்படி, கணவன் – ப்ரதி (ஒவ்வொரு)  கர்ப்பத்திலும் உனக்கு புருஷ ப்ரஜையே ஜநிக்க வேண்டும் என்று ப்ரார்தித்துக்கொண்டிருக்கிறான்.


மந்த்ரார்த்தம் 2ம் ப்ரச்னம் 11-ம் கண்டம்
ஸீமந்தோந்நயந ப்ரகரணம்


    இங்கு மந்த்ர ஆரம்பம் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. நாமிங்கு முழுவதையும் எழுதுவோம். இது தைத்ரீய யஜூர் ஸம்ஹிதை காண்டம் 3, ப்ரச்நம் 3, அநுவாகம் 11ல் வருகிறது.
    1. லோகத்திற்கு (உலகத்திற்கு) ரக்ஷகனும், ச்ருஷ்டி, ஸம்ஹாரங்களைச் செய்ய வல்லவனுமான ப்ரஹ்மதேவன் நமக்கு தனத்தைத் தரட்டும். அவர் எங்களது மநோரதத்தை பூர்த்தி பண்ணி வைக்கட்டும் ---அவரது அனுக்ரஹமிருக்கட்டும் என்பதாம்.
    2. ப்ரஹ்ம தேவன்தான் தனத்திற்கும், ப்ரஜைகளுக்கும் அதிபதி. அவர்தான் இந்த உலகத்தை ச்ருஷ்டி செய்தவர். அவர் இந்த ஸீமந்த ஹோமம் செய்கிற யஜமானனுக்கு புத்ரனைக் கொடுக்கிறவர். அந்த ப்ரஹ்ம தேவனுக்கு நெய் நிறைந்த ஹவிஸ்ஸைக் கொடுக்கிறேன்.  ஹோமம் செய்கிறேன்.
    3. ப்ரஹ்ம தேவன்தான் குறைவற்ற தனத்தை பரம்பரை பரம்பரையாய் போதுமளவுக்கு கொடுத்து வருகிறார். அவர் ஸத்யஸங்கல்பர் (எண்ணியது எண்ணியாங்கு எய்தப்பெறுபவர்). அவர் நிச்சயமாய் அநுக்ரஹிப்பார் என்பதை த்யானம் செய்கிறோம்.
    4. புத்ர காமனும் (பிள்ளைச் செல்வத்தை விரும்புகிறவனும்), கர்ப்பாதானம் செய்திருப்பவனும்,  தற்போது (இந்த ஸீமந்த ஹோமத்தில்) ஹவிஸ்ஸை (தேவ ஆஹாரம்) வழங்குகிறவனுமான எனக்கு ப்ரஹ்ம தேவன் ஸந்தாந ஸம்பத்தை (ஸந்தானம் என்றால் குழந்தை, ஸம்பத் என்பது சொத்து அல்லது பாக்யம் என்று பொருள்படும்) அநுக்ரஹிக்கட்டும். மேலும், மரணமில்லாதவர்களான விச்வே தேவர்கள் (எந்த தேவருக்கும் மரணம் கிடையாது, அதனால் அவர்களுக்கு அமரர்கள் என்று பெயர்)  மற்ற தேவர்களைப்போல் என்னிடம் ப்ரியமாய் இருக்கும் 'மதிதி' தேவியும் எனக்கு ஸத்புத்ரனை உண்டு பண்ணட்டும்.
    "தாத்ர இதம் நமம" என்று ஒவ்வொரு ஹோம முடிவிலும் சொல்லப்படும் "தாத்ரு ஹோம மந்த்ரார்த்தம்" முடிவடைந்தது.
    இனி வரப்போகும் ரிக்குகள் (மந்த்ரங்கள்) முதல் காண்டம், 4ம் ப்ரச்நம், 46ம் அநுவாகம்.
    1. ஓ! அக்நிதேவனே! நான் என்றைக்காவது மரிக்கக் கூடியவன், நீரோ மரணமற்றவர். ரக்ஷணார்த்தம் (காப்பதற்காக) உம்மை அழைக்கிறேன். ஓய் ஜாதவேதஸே (பிறந்த யாவற்றையும்  அறிபவர்)! எனக்குக் கீர்த்தியைக் கொடும். ஸந்ததிகளை அடையும் பாக்யத்தை அளித்து என்னை(யும்) மரணமற்றவன் ஆகச்செய்யும். (‘ஆத்மாவை புத்ர நாமாஸி" என்னும் மந்த்ரம், ஒருவன் தானே மகன் ரூபத்தில் பிறக்கிறான் என்று கூறுகிறது. எனவே ஒரு மகனைப் பெறுவதன் மூலம் அவன் மரணத்திற்குப் பின்னும் மகன் உருவில் வாழ்வதால் மரித்தும் மரியாதவனே ஆகிறான்).
    2. உம்மை உபாஸிப்பவருக்கு இஹத்தில் (இவ்வுலகில்) ஸந்ததி, ஸம்பத் (சொத்துக்கள்), பசுக்கள், தாஸபூதர்கள் (வேலையாட்கள்) ஆகியவையும், பரத்தில் (மரித்தபின் செல்லும் உலகில்) ஸுகமும் உமது கடாக்ஷத்தால் (அருளால்) ஏற்படும்.
    3. பலம் மிக்கவனான ‘சவஸ்" என்ற தேவனின் மைந்தனான அதிக பலமுள்ள ஓ இந்த்ர தேவனே! உம்மிடம் போக்ய வஸ்துக்கள் (இன்பத்தை அளிப்பவை) ஸம்ருத்தியாக (தேவைக்கும் மிகுதியாக) இருக்கின்றன. ஆகையால், (இன்பத்தை விரும்பும்) யாவரும் உம்மையே உபாஸிக்கின்றனர். உம்மைவிட மேலான ஒருவரும் இன்மையால் (தக்காரும் மிக்காரும் இல்லாததால்) எனக்கு பலமான (வலிமையுள்ள) புத்ரனை ஸங்கல்பியும் (ஆசீர்வதியும்).
    4. ஒருவன் பெற்ற பிள்ளைகளுக்குள்  சண்டை ஏற்பட்டால், அவர்கள் தம் தந்தையிடம் முறையிட்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வது போல, மற்ற தேவர்களுக்குள் வழக்கு (பிரச்சினை) ஏற்படும்போது, அவர்கள் உம்மை (பிதாவாக எண்ணி) நாடி, நீதி கிடைக்கப் பெறுகின்றனர். ஒவ்வொரு ஹோமமும் உம்மையே வந்தடையட்டும்.

3ம் காண்டம், 3ம் ப்ரச்னம், 11ம் அநுவாகம்
    பூ லோகம், புவர்லோகம், ஸுவர்லோகங்களும் (மூவுலகும்) ப்ரணவ ப்ரதிபாத்யனான (ப்ரணவ மந்திரத்தின் பொருளானவனான) ஸ்ரீமந் நாராயணனால் நியமநம் செய்து வரப்படுகிறது. ஆகையால் அவரே வகுடு பிரிக்கும் இச்சுப காரியத்திலும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்.
    (வகுடு பிரிக்கும்போது சொல்லப்படும் இரு மந்த்ரங்களுக்கான அர்த்தம்)
    1. ராகா என்னும் பௌர்ணமாஸி தேவதையை இந்த சுபமான ஸ்துதியால் அழைக்கிறேன். அவள் என் ப்ரார்த்தனைக்குச் செவிசாய்க்கட்டும். அவள் இந்தக் கர்மாவை நியூநம் - அதிரேகம் (குறைவுபட்டது - மிகைப்படுத்தப்பட்டது) (தாழ்வு - உயர்வு) இல்லாததாகச் செய்யட்டும். (அதாவது சாஸ்த்ரப்படி சரியாக அநுஷ்டிக்கப்பட்டதாகச் செய்யட்டும்.) பிறகு விசேஷ தாதா (வள்ளல்) என்று கீர்த்தி (புகழ்) பெறக்கூடிய புத்ரனைத் தரட்டும்.
    2. ஹோமத்தால் உபாஸிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அருள் புரியும் ஓ ராகா தேவதையே! அதே அநுக்ரஹ ஸங்கல்பத்துடன் (அருள்புரியும் நோக்கத்துடன்) ஸந்தோஷமாய் இப்போது எங்களை வந்தடைவாயாக. நாநா (பலவிதமான) பாக்யங்களை அளித்து அருள்வாயாக.
    பிறகு வீணா கானம் செய்வதற்கான இரு மந்த்ரங்கள்.
    இக்கடைசீ மூன்று மந்த்ரங்களையும் யஜனானன் (கர்த்தா) சொல்லியான பிறகு அக்னிக்கு மேற்கே தன் பார்யையை (மனைவியை கிழக்கு நோக்கி) உட்காரவைத்து, தான் மேற்கு நோக்கி நின்று கொண்டு, மூன்றிடங்களில் வெண்மை உள்ள முள்ளம்பன்றியின் முள், தர்பங்கள், காயுடன் கூடிய பேயத்திக் கொத்து, முளைவிட்ட நெற்பயிர் இவற்றை ஒன்றாக (கட்டி) வைத்துக்கொண்டு, மனைவியின் (கர்பிணியின்) சிரசின் (தலையின்) நடு பாகத்தில் மேல் நோக்கிச் செல்லும்படி ஒரு கோடு கிழிக்கவேண்டும். இதுவே ஸீமந்தோந்நயனமாகும். இது ஸ்த்ரீக்குரிய (கர்பிணி பெண்ணிற்குச் செய்யப்படும்) கர்மா. என் பிள்ளைக்கு ஸீமந்தம் என்று அஜ்ஞர் (விஷயம் தெரியாதவர்) கூறுவர்.
    பிறகு வீணை வாசிக்கத் தெரிந்தவர்களை வீணா கானம் செய்யச் சொல்லவேண்டும். பிறகு இதில் முதல் ரிக் (மந்த்ரம்) ஸால்வ தேசத்தைச் சேர்ந்தவருக்காகும். இரண்டாவது மற்ற தேசத்துக்காம் (மற்ற ப்ரதேசங்களைச் சேர்ந்தவருக்காகும்). இதில் ‘அஸெள" என்ற பதத்திற்குப் பதிலாக யஜமானன் (கர்த்தா) தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ப்ரபலமான (தாமரபரணி, வைகை, காவேரி, பாலாறு, கோதாவரி, க்ருஷ்ணா, யமுனா) நதியின் பெயரைச் சொல்லவேண்டும்.
    வீணாகான மந்த்ரம்
    1. ஓ யமுனா நதியே! உனது கரையில் வஸிப்பவர்களான ஸால்வ தேசத்து வாஸிகள், அக்கம் பக்கத்து ராஜாக்களைப் பார்த்து, ‘யுகாந்தர ராஜபுத்ரனே தங்களுக்கேற்ற ராஜா" என்று கானம் செய்கின்றனர்.
    2. மற்ற நதிகளின் கரையில் வஸிப்பவர்களான ப்ராஹ்மணர்கள், ‘ஸோம தேவதைதான் எமக்கு ராஜா" என்கின்றனர்.
    பிறகு முளையுடன் கூடிய நெற்பயிரை நூலில் கட்டி, அதை கர்பிணியின் தலையில் கட்டி, நக்ஷத்ரம் உதிக்கும்வரை மௌனமாய் இருந்து, பிறகு கன்று பசுவை (பெண்பால் கன்றுக்குட்டியை) கிழக்காகவோ, வடக்காகவோ முன் நடக்கவிட்டு, அதைத் தொடர்ந்து சிறிது தூரம் நடந்தபின் மௌனத்தைக் கலைக்கவேண்டும்.
அடுத்தது பும்ஸவனம்.

திங்கள், 11 ஜூன், 2012

குரு பரம்பரை வைபவம் (11-06-2012)

Srimad Kadanthetthi Andavan’s vaibhavam is continued this week also by Sri natteri swamy in his Guru Paramparai vaibhavam tele-upanyasam on 11-06-2012. How great an Acharyan he was! He adorned the peetam but yet refused to perform Samsrayanam and bharanyasams out of his respect to HH Periyandavan! Enjoy the vaibhavam in the words of Sri Natteri swamy

To download from Mediafire

http://www.mediafire.com/?7ceh2ewx5w5p90f

To listen to on line

சனி, 9 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 4

Please note Sri NVS swamy’s comments are within the brackets

13ம் கண்டம்
ஆபஸ்தம்ப ரிஷி இம் மந்த்ரங்களுக்கு தம் க்ருஹ்ய சூத்ரத்தில் ப்ரயோகம் எழுதும்போது, கர்பாதானம் செய்வதற்கு முன்பு, தன் பத்நீ ருதுவாக (மாதவிடாய் காலங்களில்) இருக்கும்போது, ரஜஸ்வலா (விலக்கான ஸ்த்ரீ) நியமங்களை (யஜுர் ஸம்ஹிதை 2ம் கண்டம் - 5ம் ப்ரச்னம் - முதல் அநுவாகம் கடைசீ பஞ்சாசத் (பஞ்சாதி) உத்கோஷிப்பதை (கூறுவதை) உபதேசிக்க (கணவனால் மனைவிக்கு எடுத்துக் கூறப்படவேண்டும் என்று) விதிக்கிறார்.
    கர்பம் தரிக்க காலம் ருது ஸ்நாநம் ஆகி (தூரம் குளித்ததிலிருந்து) 12 தினங்களுக்குள் தான். அதிலும் சில திதி வார நட்சத்திரங்கள் நிஷேதம் (தவிர்கக்ப்படவேண்டியது) உண்டு. அதிலும் இரட்டைப்படை தினங்களில் கூடினால்தான் புருஷ ப்ரஜைக்கு (ஆண் குழந்தைக்கு) ஹேது (வாய்ப்பு)  என்றும், இல்லாவிடில் ஸ்த்ரீ ப்ரஜைதான் என்றும் விஷயங்களை நம் தர்ம சாஸ்த்ர சங்க்ரஹத்தில் விரிவாய்க் காணலாம்.
    ரஜஸ் தோன்றிய அன்று அவள் சண்டாளிக்கு ஸமம்
    இரண்டாம் நாள் ப்ரஹ்மஹத்தி (ப்ராம்மணணை கொன்ற) செய்தவளுக்குச் ஸமம்
    மூன்றாம் நாள் வண்ணாத்திக்குச் ஸமம்
    நாலாம் நாளும் ரஜஸ் ஸம்பந்தம் இருக்கும் ஆதலால் அவள் பாகம் (சமையல்) செய்வதற்கும், மற்ற வைதீக கர்மங்களுக்கோ உகந்தவளல்ல. அதேபோல் போகத்திற்கும் (உறவு கொள்வதற்கும்  ) கூடாதவளே. அப்படிக் கூடினால் அதன் மூலம் பிறப்பவன் பதிதன் ஆவான்.
    ஸ்நாநமாகியும் அரண்யத்தில் அவளோடு கூடி பிறப்பவன் திருடன் ஆவான்.
    ருதுகால 3 தினங்களிலும் அவளுக்கு ஸ்நாநம் கூடாது. அப்படிச் செய்பவளுக்கு பிறப்பவன் நீரில் மரிப்பான். 
    எண்ணை தேய்த்துக்கொள்ளல் ஆகாது. அப்படிச் செய்பவளுக்கு கெட்ட சருமம் (தோல்) உள்ளவன் பிறப்பான்.
    (மேலும் என்னென்ன செய்யத் தகாத செயலுக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறப்பான் என பட்டியலிடுகிறார்).
    சீப்பு முதலியதால் தலைவாரிக்கொண்டால்    -    மயிரில்லாதவனும்
    மையிட்டுக்கொண்டால்                -    ஒரு கண்ணற்றவனும்
    பல் தேய்த்துக்கொண்டால்                -    கறுப்பு நிற பல்லுடையவனும்
    நகத்தைக் கிள்ளினால்                -    கெட்ட(ஒழுங்கற்ற) நகமுடையவனும்
    நூல் நூற்றால்                    -    ஆணும்-பெண்ணுமற்ற நபும்ஸகனும்
    கயிறு திரித்தால்                    -     கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவனும்
    பானங்களை இலையால் அருந்தினால்        -    பைத்தியக்காரனும்
    கைகளால் திரவம் அருந்தினாலும்
    உயரமற்ற சிறிய பாத்திரத்தால் அருந்தினாலும்    -    குள்ளனும்
    பிறப்பார்கள். நீண்ட பாத்திரத்தைத்தான் நீர் முதலிய பானங்களை அருந்த உபயோகிக்க வேண்டும். ரஜஸ்வலையான (விலக்கான) 3 தினங்களிலும் இந்த வ்ரதங்களை (ஒழுக்கத்தை) கடை பிடிக்கவேண்டும். மேலும் இதுபற்றிய விசேஷ அம்சங்களை எமது “ஸ்த்ரீ தர்மம்" என்கிற நூலினை படித்து அறியவும்.
மந்த்ர அர்த்தம் ஆரம்பம் (மந்திரங்களின் பொருள் விளக்கம் ஆரம்பமாகிறது).
கர்பாதானத்தில் தேவதா ப்ரஸாதம்
    1. பர்த்தா ப்ரார்த்திக்கிறான் (முதல் மந்திரத்தால் கணவன் கீழ்க்கண்டவாறு வேண்டுகிறான்):
    விஷ்ணு தேவதை (என் மனைவியாகிய) உன் பெண் குறியை கர்பாதானம் செய்வதற்கு ஏற்றதாகச் செய்யட்டும்.
    அப்படித் தயாரான யோநியில், என்னிடமுள்ள உயிரணுக்களை (ரேதஸை - படைப்புக் கடவுளான) ‘ப்ரஹ்மா" (அநுக்ரஹித்துச்) செலுத்தட்டும்.
    ‘தாதா" எனும் தேவன் அதை கர்பமாக மாற்றட்டும்.
    ‘த்வஷ்டா" எனும் தேவன் அந்த கர்பத்தில் அங்கங்களை (உடலுறுப்புகளை) ஏற்படச் செய்யட்டும்.
(இதன் மூலம் அறியவேண்டியது: மந்திரமின்றி புணர்பவனுக்கு இந்த தேவதைகளின் அநுக்ரஹம் கிட்ட வாய்ப்பில்லாததால் - (ஸத்புத்ரன் என்னும்) நல்ல ஸந்ததியை எதிர்பார்க்க இயலாது என்பது நன்கு விளங்குகிறது.)
    2. கர்பம் தரிக்க - ஸிநீவாலி - ஸரஸ்வதி முதலிய தேவதைகளும் உதவி புரியட்டும். தாமரை மாலையை அணிந்திருக்கும் அஸ்விநீ தேவர்கள், உனக்கு கர்பத்தை உண்டுபண்ணட்டும்.
    3. அழகு வாய்ந்த அச்விநீ தேவர்களால் ஆன, அழகான ஸந்ததியாய் நீ பத்தாம் மாதம் ப்ரஸவிப்பதை விரும்புகிறோம்.
    4. விசாலமான பூமி தேவியானவள் ஆகாசத்தில் மேகங்களால், மழையாகிற ரேதஸ்ஸை க்ரஹித்து நல்ல பயிரை எப்படி உண்டுபண்ணுகிறாளோ, அப்படி நீயும் பத்தாம் மாஸம் ப்ரஸவிக்க கர்பம் தரிப்பாயாக.
    5. பூமி அக்நியையும், த்யு லோகம் இந்த்ரனையும் கர்பத்தில் வைத்திருப்பதுபோல் நீயும் கர்பம் தரிப்பாயாக.
    6. ஹே விஷ்ணோ இவளிடம் பத்தாம் மாதம் கர்பத்தை உண்டுபண்ணும்.
    7. (கர்பத்தை சிதைப்பதை தொழிலாகக் கொண்டவரான) ஹே! நேஜமேஷ தேவனே, நீரிங்கு வரவேண்டாம். வருவதாயின் எமக்கு ஸத்புத்ர ஸந்ததியை அளிக்க வாரும்.
    8. (ஹே கல்யாணி! என்று இப்படித்தான் கணவன் மனைவியை அழைக்கவேண்டும்.) என்னால் வழங்கப்படும் ரேதஸ்ஸை க்ருஹித்துக்கொள்ள தக்க நிலையில் நீ உன் யோநியை பேணுவாயாக. இதனால் புருஷ ப்ரஜை (ஆண் குழந்தை) ஜநிக்கட்டும். அதை நீ பத்து மாதம் தாங்குக. பிறக்கும் பிள்ளை மிகவும் திறமைசாலியாக இருக்கட்டும்.
    9. அம்பு (அம்பராத்தோணி எனும் அம்புகளை வைக்கும்) அம்புப் பையில் புகுவதுபோல், எனது உயிரணுக்கள் உன் யோனியை அடையட்டும். நீ பத்துமாதத்தில் மிகவும் கெட்டிக்காரனான புத்ரனை ப்ரஸவிப்பாயாக.
14ம் கண்டம்
    1. ப்ரஹ்மாவின் கார்யமான சுக்ல விஸர்ஜனத்தை (உயிரணுவை விடுதல்) நான் உன்னிடம் செய்கிறேன். அது உன் கர்பப்பையை அடைந்து, அங்கு பழுதற்றதாய் பத்து மாதம் பூர்த்தியாக தங்கி, நொண்டி முதலிய தோஷமற்றதாயும், துர்தேவதைகளின் தொல்லையற்றதாயும் உள்ள நல்ல குழந்தை பிறக்கட்டும்.
    2. நல்ல பெண்மணியே! உனக்கு ஆண் குழந்தை பிறக்கட்டும். தொடர்ந்து (நீ விரும்பும்வரை)ஆண் குழந்தைகளே பிறக்கட்டும். ப்ரஜாபதி முதலிய தேவதைகள் நம் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கட்டும்.
    3. அவர்களால் (தேவதைகளால்) உண்டான வீர்யங்களால் (சக்திகளால்) நீ ஸந்ததிகளை அடைவாயாக. பசுவிடம் கன்றுகள் பால் அருந்துவதுபோல், நீயும் சிசுவுக்கு பால் அருந்தக்கொடுக்கும் பாக்யத்தைப் பெறுவாயாக.
    4. ஓ! வாயு தேவனே! எனக்கு மனைவியை மகிழ்விக்கும் சக்தி அதிகரிக்கும்படி அருள்வீராக. நான் விரும்பும் பலன் வீணாகாதபடி கை கூடட்டம் (பலிதமாகட்டும்). (அணுக்கள் பரிமாற்றத்தின்போது (ஆக்ஸிஜன் எனும்) ப்ராண வாயு கிரியா ஊக்கியாக செயல்படுவதால் வாயு தேவன் இம்மந்திரத்தால் ப்ரார்த்திக்கப் படுகிறான்.)
கர்பாதான ப்ரஹரணம் முடிவுற்றது

வியாழன், 7 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 3

ஶ்ரீ:

40 ஸம்ஸ்காரங்களின் பெயர்கள்

ஸம்ஸ்காரங்கள்

ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40 ஆகும். அவை கர்ம ரூபம். 8 ஆத்ம குணங்கள் இருக்கின்றன. ஆக 48ம் சேர்ந்தே ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்றன. கௌதமாதிகள் 48 ஸம்ஸ்காரமென்றே பிரித்துக்காட்டாது கூறுகின்றனர்.

கர்பாதானம், பும்ஸவநம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசநம், சௌளம், உபநயனம், ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்நேயம், வைச்வதேவம் என 4 வேத வ்ரதங்கள், ஸ்நாநம்(ஸமாவர்தனம்), விவாஹம், பஞ்ச மஹா யஜ்ஞங்கள் ஆக 19. 7 பாக யஜ்ஞங்கள், 7 ஹவிர் யஜ்ஞங்கள், 7 ஸோமஸம்ஸ்தை (யஜ்ஞங்கள்) ஆக 21. தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பூத யஜ்ஞம், ப்ரஹ்ம யஜ்ஞம் என்பதே பஞ்ச மஹா யஜ்ஞங்களாம். அஷ்டகா, அந்வஷ்டகா, பார்வணம், ச்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என 7 பாக யஜ்ஞங்கள். அக்நியாதானம், அக்நிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணி என்ற 7ம் ஹவிர் யஜ்ஞங்கள். அக்நிஷ்டோமம், அத்யக்நிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என 7 ஸோம யஜ்ஞங்கள். ஒவ்வொரு த்விஜனுக்கும் உபநயனம் உள்ள வரை ஸம்ஸ்காரங்கள் அத்யாவச்யமாகும். நைஷ்டிக ப்ரஹ்மசாhpயாய் இருக்க உத்தேசித்திருப்பவன் விவாஹாதிகளில் அதிகாரமில்லையாதலால் இவற்றுள் சில ஒரு ஜன்மத்தில் ஒரு தரமும், சில பன்முறைகளும், சில ப்ரதிதிநமும் அநுஷ்டிக்கப்படவேண்டும்.

ஸ்த்ரீகளுக்கும் ஜாதகர்மம் முதல் உபநயனம் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் உண்டு. அவர்களுக்கு விவாஹமே உபநயன ஸ்தானம். பர்தாவோடிருத்தலே குருகுலவாஸ துல்யமாம் (ஸமம்).

அஹிம்ஸாஸத்யமக்ரோத: த்யாக: சாந்திரபைசுநம்

முதலிலாத்ம குணங்களைச் சுருக்கிக் கூறிவிட்டுப் பிறகு பெரிய மந்த்ரார்த்த விஷயங்களுக்குப் போகலாம்.

ஆத்ம குணங்கள்

1. தயை:- ஸர்வபூதஹிதேரத:, தயா பூதேஷு என்று பலவிடங்களில் பகவான் கீதையில் ஜீவகாருண்யத்தைப் பற்றி உபதேசிக்கிறார். பிறர் கஷ்டத்தைத் தன்னுடையதுபோல் பாவித்துத் தன்னாலியன்ற பொருள் (பணம் முதலியன), உடல் (சரீர கஷ்டம்), ஆக்கை (ப்ராணன்)களால் உதவிபுரிவதில் ஆசைப்படவேண்டும். பகவான் தன்னிடம் இருப்பதுபோல் ஸர்வ ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் இருக்கிறார். அதால் அவருக்குச்செய்வது போலாகும். அவர் த்ருப்தியடைகிறார். ‘ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்” என்பதல்லவோ பழமொழி.

2. க்ஷாந்தி:- அந்யநாலேற்படும் வாக்காலோ(திட்டு), சரீரத்தாலோ ஏற்படும் துன்பங்களை பதில் செய்யாது பொருத்துக்கொள்ளவேண்டும். பகவான் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஸதா ஸர்வகாலமும் ஆட்டி வைத்துக்கொண்டிருப்பதாக கீதை 18-61ம் ச்லோகம் உத்கோஷிக்கிறது. நாம் செய்யும் பாபத்தை பகவான் பலர்மூலம் நம்மை சிக்ஷிக்க அவர்கள்மீது கோபிப்பானேன்? தெருவில் போகும் ஒரு ப்ராஹ்மணனை ஓர் அப்ராஹ்மணன் இழிவாய் பேசுகிறான். இவன் அதை ஸஹியாது பதில் பேசத் தொடங்குவானேயாகில் அவனால் இவனுக்கு இன்னும் பலர் மூலமும் பரிபவமேற்படுவது நிச்சயம். பொருமை கடலினும் பெரிது. நம் பாபத்தை நாம்தான் அநுபவிக்கவேண்டும். பொறுத்தாலது செய்தவனையே தாக்கும். தீங்கிழைப்பவனுக்கு நன்மை செய்யச் சொல்லுகிறது சாஸ்த்ரம்.

3. அநஸூயா:- (பொறாமையின்மை): அவரவர் கர்மாநுஸாரியாய் ஸுகதுக்க லாபாலாபங்களை யநுபவிக்கப் பொறாமைப்படுபவனே அழிந்துபோவான். அவனுக்கு லாபமில்லை, பொறாமைப் படுபவனுக்கு நஷ்டமில்லை பாபந்தான் மிஞ்சும்.

(லாபம் அநுபவிப்பவனுக்கு பொறாமைப் படுபவனால் நஷ்டமில்லை, பொறாமைப்படுபவனுக்கு எந்த லாபமும் இல்லை பாபம்தான் மிஞ்சும் என்றிருக்கவேண்டும்-என்.வி.எஸ்.).

4. சௌசம்:- தைவாஸுர ஸம்பத்விபாக யோகமென்று தனியாக பகவான் கீதையில் (18ல் 16வது அத்யாயம்) போதிக்கிறார். த்ரிகரண சுத்தி யாவருக்கும் அவச்யமாகும். பரஸ்த்ரீகளை மனத்தினால் ஆசைப்படக் கூடாது. அதேமாதிரி அயலானுடைய (பிறருடைய) எந்தப் பொருளையும் விரும்பலாகாது. மநஸ் சுத்தி இருந்தால் போதுமென்று லௌகிகர் கூறுவர். அது எளிதில் வந்துவிடாது. பிறர்மீது குறைகூறுவதற்கான பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை என்கிறது சாஸ்த்ரம். ஆசாரஹீனனை (ஆசாரமற்றவனை) வேதங்கள் கூட அவர் எவ்வளவு கநபாடியாயிருந்தாலும் சுத்தி செய்யாதாம். ஆகையால் பொய் பேசாமை, வர்ஜ்யாவர்ஜ்யமின்றி புசியாமைகளைக் கவனிக்கவேண்டும். இவைகளை இதன் முன் பின் பக்கங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தர்மசாஸ்த்ரங்களில் விரிவாய் காணலாம்.

5. அநாயாஸம்:- பகவான் நமக்கிட்டிருப்பது இரு வேலைகளே. 1.கர்மாநுஷ்டானம் 2.ஸதா பகவத் த்யானம். இவைகளைவிட்டு நம் வேறு காரியங்களை அவர் ஈஷத்தும் (சிறிதும்) ஸம்மதிப்பதில்லை. பக்தனின் யோக க்ஷேமம் அவருடைய பொறுப்பென்று ஏற்றுக்கொண்டிருப்பதால் நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்வல்ப ஆயுளை தஸ்மாத்(ஆகையால்) ஸர்வேஷு காலேஷு(எக்காலத்தும்) யோகயுத்தோ பவ(யோகத்தை அநுஷ்டிப்பவனாய் இரு), ‘தஸ்மாத்ஸர்வகாலேஷு மமாநுஸ்மர” (ஆகையால் எப்போதும் என்னை நினைத்திரு) என்றபடி ஆத்ம த்யாநத்தில் ஈடுபடப் பார்க்கவேண்டும். வாக்காலும் (பேச்சாலும்) நாம் அபசப்தத்தை (தகாத வார்த்தைகளை) உச்சரிக்கக்கூடாது. ‘நாச்லீலங் கீர்த்தயேத் தீமாந்” என்றபடி. சில அநாச்சாரங்களால் நம்மிடமுள்ள லக்ஷ்மீகரம்போய் மூதேவி வந்தடைவதாகச் சாஸ்த்ரம் முறையிடுகிறது. கச்சமில்லாதவனை நக்னன் (துணியில்லாதவன் - நிர்வாணன்) என்கிறது. ‘புண்ட்ரமில்லாதவனின் நெற்றி ஸ்மஸான ஸத்ருச்யம்“ (சுடுகாட்டுக்குச் சமம்) என்கிறது. உஷஸில் (சூர்ய உதயத்தில்) உறங்குபவனை மூதேவி வந்தடைகிறாள் என்கிறது. ஆகையால் ஸதா பகவந்நாமோச்சாரணபரனாய் பார்ப்பவர்கள் சந்தோஷப்படும்படி நடை, உடை, பாவனைகளோடிருத்தலே மங்கலமாகும்.

7. அகார்ப்பண்யம்:-  ஸுக துக்கங்களை ஸமமாய் பாவிக்க பகவான் அடிக்கடி உபதேசித்திருப்பது ஜ்ஞாபகத்திலிருக்கவேண்டும்.  ஆறிலுஞ்சாவு, நூறிலுஞ்சாவு என்பதையும் மறவாதவராய் ஜந்மஸாபல்யத்திலேயே (ஜனனத்தின் பயனான ஜன்ம விமோசனத்திலேயே) நாடிய மனத்தினராயிருக்கவேண்டும்.

8. அஸ்ப்ருஹா :- ‘அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார க்ருஹாதிஷு“ என்பதிற்போல் மனைவி மக்கள் வீடு வாசல் பணம் சொத்துக்களின் மீது ஈஷத்தும் (சிறிதும்) மனம் வையாது, பரம வைராக்ய சீலராய் அவைகளைத் துச்சமாய்க் கருதினால்தான் மனஸ் ஆத்மாவில் நிற்க ஹேதுவாகும். ஆத்மாவில் மநஸ் நிலைத்திருப்பவனுக்கு வேறு எவ்வளவு பெரிய ஆநந்தமோ, துக்கமோ வந்தாலும் மநம் அதைப் பொருட்படுத்தாதிருப்பதே முமுக்ஷுவின் லக்ஷணம் என்கிறார் பகவான்.

இம்மாதிரி இன்னும் இதர (கோபமின்மை போன்ற) தேவ குணங்களும் (16ம் அத்த்) ஜந்ம ஸாபல்யத்திற்கு அநுகூலம்(உதவிகரம்) ஆகும்.

 

ஸம்ஸ்காரங்கள்
    சுபம் அசுபம் என்று கர்மாக்களை இருவிதமாய் பிரித்துக்கொள்ளலாம். ஆபஸ்தம்ப பூர்வப்ரயோகம், ஆபஸ்தம்ப அபரப்ரயோகம் என க்ரந்தங்களின் பெயராகும். கர்த்தா ச்ராத்தம்போல் ஸம்ஸ்கார சப்தமும் இரு கர்மாக்களிலும் வ்யவஹாரத்திலிருக்கிறது. கர்த்தா என்றால் செய்கிறவன். ச்ராத்த கர்த்தா என்று சொல்லுகிறோம். ஹவ்யம் என்னும் தேவபூஜா காரியத்திலும் யஜமானனை இதே பெயராலும் வழங்கி வருகிறோம். சுபத்தில் அப்யுதயத்தை நாந்தீ ச்ராத்தமென்கிறோம். ச்ரத்தையோடு செய்யப்படுவது ச்ராத்த பதார்த்தமாகும். அதுபோல் ப்ரேத, தஹன ஸம்ஸ்காரமென்றும் சொல்லுகிறோம். அதைப் பிரித்துக் காட்டுவதற்காகவே சுப ஸம்ஸ்காரம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த 40 ஸம்ஸ்காரங்களிலும் நாம் பொருள் எழுதப் புகுவது முதல் எட்டிற்கே. அதவாது கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தம்.
கர்பாதான மந்த்ரார்தம். மந்த்ர ப்ரச்நம் 12ம் கண்டம்.
ஓர் ரிக்கிற்கு 2 வாக்கியங்கள்:
'ஆரோஹூரும் உபபர்ஹஸ்வ பாஹும் பரிஷ்வஜஸ்வ ஜாயாம் ஸுமநஸ்யமாந:
தஸ்யம் புஷ்யதம் மிதுநௌ ஸயோநீ வஹ்நிம் ப்ரஜாம் ஜநயந்தௌ ....'
1. ஆதாநம் - வைத்தல், செய்தல், உண்டாக்குதல் என அர்த்தம். கர்பத்தை வைத்தல், புருஷனிடம் உள்ள சுக்லத்தை (உயிரணுக்களை) ஸ்த்ரீயினிடத்தில் வைத்தல். இது யாவருக்கும் தெரிந்திருக்கிறபடி வேதமும் உத்கோஷிக்கிறது.
    அதில் முதல் ரிக்கில்(மந்திரத்தில்) உள்ள ஊரூ - தொடை, ஆரோஹ - ஏறு, ஆலிங்கனம் இப்பதங்களால் ஸ்த்ரீ ஸம்போகத்தைக் (தாம்பத்ய உறவைக்) கூறுகிறது. தம்பதிகள் கூடும்போது, இருவருக்கும் மனஸ்துஷ்டியாக (மனம் ஸந்தோஷமாக) இருக்கவேண்டும் என்கிறது வேதம். ஸந்துஷ்டி இல்லாது புணர்வது அவலக்ஷணம், பலஹீனம், ரோகம் இவைகள் ஜநிக்கும் (பிறக்கும்) ஸந்ததிகளுக்கு (குழந்தைகளுக்கு) ஏற்படும் என்கிறது சாஸ்த்ரம்.
    2. அரணியிலிருந்து கடைந்த அக்நியைப்போல் தேஜஸ்வியான புத்ரன் உண்டாகட்டும்.
    3. பித்ருக்களின் ஹிதத்திற்காக ஸத்புத்ரனை உண்டுபண்ணுகிறேன்.
இங்கு ஓர் வேத வாக்யம் ஞாபகத்திற்கு வரவேண்டும். அதன் பொருளாவது: ஒருவன் பிறக்கும்போதே (ரிஷிகள், தேவதைகள், பித்ருக்கள் ஆகிய) மூவரிடம் கடனாளியாகப் பிறக்கிறான்.
    உபநயனம் ஆனதும் வேத அத்யயனம் செய்வதன் மூலம் ரிஷிகளின் கடனைத் தீர்க்கிறான்.
    க்ருஹஸ்த ஆச்ரமத்தில் யாகம், பஞ்சமஹா யஜ்ஞம் போன்ற அக்நி கார்யங்களைச் செய்து  தேவதைகளின் கடனைத் தீர்க்கிறான்.
    ஸத்புத்ரனைப் பெற்றால் அப்புத்ரன் ஆஸ்திகனாய் விதிப்படி ப்ரேத கார்யம் (
இறந்தவர்களுக்குச் செய்வது), ச்ராத்தாதிகளைச் செய்து, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களை த்ருப்திசெய்து வைக்கிறானாம். (இதனால் பித்ரு கடனைத் தீர்க்கிறான்).
    ஆகையால் ஒருவன் போகிப்பது (
தாம்பத்யத்தில் ஈடுபடுவது) அவனது ஸுகத்திற்காகவே அன்று. அந்த நினைவே பாபஹேது (பாபத்திற்கு வழிவகுக்கும்) என்று சாஸ்த்ரத்தில் இருப்பதை எழுதியிருக்கிறோம். அவனது முன்னோரை நரகத்தினின்றும் கரையேற்றி வைப்பதே ஸம்போகிக்க காரணமாகும்.
    விவாஹ மந்திரத்தின் முதல் ரிக், இவ்விவாஹத்தை தேவேந்திரனும் கலந்து ச்ரத்தையுடன் அநுக்ரஹிக்கிறான். அவனுக்கும் நான் விவாஹம் செய்துகொள்வது இஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், விவாஹம் ஆனதும் நான் என் பத்நியோடு செய்யப்போகும் ஸோம யாகத்தில் அவனுக்கு ஆஹாரம் கிடைக்கப் போவதை அவன் நிச்சயமாக அறிந்துகொண்டிருக்கிறான். இம்மாதிரி (
இவ்வாறாக) விவாஹம் செய்து கொள்வது தேவ, பித்ரு கர்மாக்களை அநுஷ்டிப்பதற்காகத்தான். அப்படி இல்லாதது (மனைவியால் தான் இன்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மணம் புரிந்துகொள்வது) தாஸியை (விலை மாதரை) அநுபவிப்பதற்கு ஒப்பாகும் என்கிறது சாஸ்த்ரம். ஸம்பந்தம் பதி-பத்நி வ்யவஹாரம் போய் (தர்மத்தை அநுஷ்டிக்காத வெற்று தாம்பத்ய உறவு) தாஸி என்றும், அவளை வைத்துக்கொண்டிருப்பவன் என்றும் ஆகிவிடுகிறது.
    4. நமக்கு நல்ல ஸந்ததி மட்டுமின்றி, ஸம்பத்தும், பேரன், கொள்ளுப் பேரன்களைப் பார்க்கும் வரை தீர்காயுஸ்ஸும் உண்டாகட்டும். ஹவிஸ்ஸுகளை ஹோமம் செய்கிறவர்களாயும் இருப்போமாக.
    5. யாசிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்போமாக. இருவரும் கூடும் முன் தேவதை பூஜையைச் செய்வோமாக. (ஹோமத்தாலும், பல(
பழ) தானத்தாலும் பகவத் பாகவதர்களின் அநுக்ரஹமேற்பட்டு, ஸத்ஸந்ததி ப்ராப்தமாக (கிட்ட) ஹேதுவாகும் (உபாயம் ஆகும்) என்பது மந்த்ரம் மூலம் தெரியவருகிறது)