திங்கள், 26 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 4

மந்தாரச்சோலை வளரும்
பசும் கிள்ளாய்
மந்தாரச் சோலை வளரும் பசுங்கிள்ளாய்
சந்தாபம் எய்தித் தளர்வுற்றேன் –நந்தாத                     .21.
அந்தரங்க மந்திரம் சொல் அஞ்சுகம் முந்தரங்கம் கண்டு முடிச்சோழன் சீர்பொருந்த
அந்தரங்க மந்திரஞ்சொல் அஞ்சுகமே – நந்தணியும்   .22.
நற்புதுவை ஆண்டாள் நற்புதுவை ஆண்டாள் நலங்கனியும் பொற்றொடிக்கை
பொற்பமைய வீற்றிருக்கும் பூங்கிளியே—அற்புதஞ்சேர். .23
சோலைக்குள்ளே வீற்றிருக்கும் தென்றல் சோலைக்கு ளேபிறந்துசோலைக்கு ளேவளர்ந்து
சோலைக்குள் வீற்றிருக்கும் தோன்றலே – சோலைப்   .24.
படைவீட்டு மாரன் பரி படைவீட்டு மாரன் பரியேஅம் மாரன்
படைவீட்டு மாறென் பரியே --  நடையாற்றும்              .25.
அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமாம் அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமா ஆதரவாய்
அஞ்சுகமே காணல் அரிதாமே – நெஞ்சுகக்குந்             .26.
தத்தையே நீக்குக தத்தையே நீக்குக என் தத்தையே யுற்றவருத்
தத்தையை மேவுமனத் தத்தையே – உத்தமமாம்           .27.
காமன் மலரம்பு பட்டு
உடல் வருந்தினேன்
வன்னியே காமன் மலரம்பு பட்டுடலம்
வன்னியே ஒப்ப வருந்தினேன் –மன்னியசீர்க்                .28.
தென்றலும் சங்கீரணமே கீரமே ஒத்தமனக் கீரமே கொண்டுகிளர்
கீரமே தென்றலுஞ்சங் கீரணமே – ஊரறிய                    .29.
பேசு புகழ் ஏசியே ஏசியே வன்னகண்ணா ரேசிலசொற் கூறலுனக்(கு)
ஏசியே கூறலுளம் ஏறாதோ – பேசுபுகழ்க்                       .30.
கொள்ளையே கொள் ளும் நிலாக்கொள்ளை கிள்ளையே மாரன்மனக் கிள்ளையே என்றனுயிர்
கொள்ளையே கொள்ளுநிலாக் கொள்ளையே – வள்ளைவிழிச்       .31.
சாருமலர்ப் பூங்குழலார் சாருமலர்ப் பூங்குழலார் தங்களுரை போலுமொழி
சாருமதி ரூபமணிச் சாருவே – கூருநயந்                           .32.
தேருஞ் சுவாசகமே தேறுஞ் சுவாசகமே தேறாதிருக்கும் எனைச்
சேருஞ் சுவாசகமே தேற்றாயோ – மாரனடர்
                  .33.
அஞ்சிறைக் கிள்ளாய் வெஞ்சிறையி னின்றும் விடுவிப்பாய் என்றிருப்பேற்(கு)
அஞ்சிறைக் கிள்ளாய் அருளாயோ --                               .34.

21. மந்தாரச் சோலை –கற்பகச்சோலை; வளரும் –வாழும்; பசுங்கிள்ளாய் –பச்சைக்கிளியே; சந்தாபம் எய்தி – மன்மதபாணம் தைக்க, தளர்வுற்றேன் –மெலிந்தேன், நந்தாத—குறைவுபடாத
22. முந்து – முன்பு, அரங்கம் கண்டு –திருவரங்கம் உண்டாக்கி, முடிச்சோழன் –முடியுடைச் சோழமன்னன், சீர் பொருந்த – சிறப்புற, அந்தரங்க மந்திரஞ்சொல் – இரகசிய மந்திரம் கூறும், அஞ்சுகமே – கிளிய, நந்தணியும் – சங்கு வளை புனையும்
23. நற்புதுவை ஆண்டாள் –நல்ல வில்லிபுத்தூர்க் கோதையின், நலங்கனியும் –நலம் பெருகும், பொற்றொடிக்கை  -- பொன்வளையல் புனைந்த கரத்து, பொற்பு அமைய – அழகு அமைய, வீற்றிருக்கும் – அமர்ந்துள்ள, பூங்கிளியே – மென்மையான கிளியே, அற்புதம்சேர்—ஆச்சரியம் அமைந்த,
24 – 25.  சோலைக்குளே பிறந்து – பொழிலின் உள்ளே தோன்றி, சோலைக்குளே – பொழிலகத்து, வளர்ந்து – வாழ்ந்து, சோலைக்குள் வீற்றிருக்கும் –பொழிலிடை அமர்ந்திருக்கும், தோன்றலே –வருபவளே, சோலைப்படை வீட்டு மாரன் – பொழிலே படைவீடாய்க் கொண்ட , பரியே – வாகனமே, அம் மாரன் – அந்த மன்மதன், படை – சேனையை, வீட்டுமாறு – வீழ்த்தும் வழி, என் – என்ன, பரியே –பரிந்து கூறுக, நடையாற்றும் – மெல்நடை பயிலும்.
26. அஞ்சுகமே – கிளியே, ஓரிரவும் – ஒவ்வொரு இராத்திரிப் பொழுதும், அஞ்சுகமா – ஐந்து யுகமாம், ஆதரவாய் – அன்பாக,  அஞ்சுகமே காணல் – அழகார் இன்ப நலம் காண்பது, அரிதாமே – அருமையாம், நெஞ்சு(உ)கக்கும் – மனம் மகிழும்,
27. தத்தையே – கிளியே, நீக்குக என் தத்தையே – என் துன்பத்தை மாற்று, உற்ற – அடைந்த, வருத்தத்தையே – துன்பத்தையே, மேவுமனத் தத்தையே – என் மனத்து விளங்கும் அத் துன்பத்தையே, உத்தமமாம் –நலமாம்
28. வன்னியே – கிளியே, காமன் மலரம்பு பட்டு – மன்மதன் பூங்கணை தைத்து, உடலம் –மெல்லிய சரீரம், வன்னியே ஒப்ப—அக்கினி நிகராக, வருந்தினேன் – துன்புற்றேன், மன்னியசீர் –சிறப்புப் பொருந்திய.
29. கீரமே ஒத்த –பாலை நிகர்த்த, மனக்கு ஈரமே கொண்டு கிளர் – உள்ளத்தில் இரக்கம் கொண்டு விளங்கும், கீரமே – கிளியே, தென்றலும் – தென்றல் காற்றும், சங்கீரணமே – அசுத்தமாம், ஊரறிய – ஊரில் உள்ளோர் அறியும்படி.
30. ஏசியே – பழித்து, வன்ன கண்ணாரே –கொடிய பார்வையர்களே, சில சொற் கூறல் – சில வார்த்தை பேசுவது, ஏசியே – கிளியே, கூறல் – சொல்வது, உனக்கு உளம் ஏறாதோ – உன் உள்ளத்து ஏறவில்லையா, பேசு புகழ் – சிறப்பாகப் பேசப் பெறும்
31. கிள்ளையே – கிளியே, மாரன் – மன்மதன், மனக்கிள் –உள்ளத்தில் நெருடல், ஐயே – ஐயோ, என்றனுயிர் – என் ஆவி, கொள்ளையே கொள்ளும் –கவர்ந்து கொள்ளும், நிலாக் கொள்ளையே – சந்திரனைப் போன்ற குளிர்ந்த, வள்ளை விழி – கொடிபரந்த கண்களும்
32. சாருமலர்ப் பூங்குழலார் – புஷ்பங்கள் கூடிய கூந்தலும் உடைய பெண்கள், தங்கள் உரை போலும் – தம் இன்சொல் நிகர்ப்ப, மொழி சாரும் – உரை பேசும், அதி ரூப – மிக்க வடிவமுள்ள, மணிச் சாருவே – அழகிய கிளியே, கூருநயம் – மேன்மை மிக்கவை
33. தேரும் – தெளியும், சுவாசகமே –கிளியே, தேறாதிருக்கும் எனை – ஆறுதலின்றி இருக்கும் எனக்கு, சேரும் –அடையும், சுவாசகமே – நல்ல வாக்கினால், தேற்றாயோ – ஆறுதலளிக்க மாட்டாயோ, மாரன் அடர் – மன்மதன் வலிய
34. வெஞ்சிறையினின்றும் – கொடும் சிறைச் சாலையிலிருந்து, விடுவிப்பாய் – விடுதலை அளிப்பாய், என்றிருப்பேற்கு – என இருக்கும் எனக்கு, அஞ்சிறைக்கிள்ளாய் – அழகிய சிறகுள்ள கிளியே, அருளாயோ – தயை புரிய மாட்டாயோ.    

1 கருத்து: