வியாழன், 24 மே, 2012

வைத்தமாநிதி 33

ருக்மிணி கல்யாணம்

    இன்துணை பதுமத்து அலர்மகள் உருப்பிணி நங்கை, அவ்வூர்த் துவரைத் திருநாமம் கற்றதன் பின்னையே, சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும், தேவபிரானையே அவரைப் பிராயம் தொடங்கி, தூராத மனக்காதல் கொண்டு, கரங்கள் கூப்பித் தொழும், அத்திசை உற்றுநோக்கியே இருந்து நாள்தொறும் அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்கும்; துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழன்று, பெருமையும் நாணும் தவிர்த்து, வடமொழி மறைவாணரை, தன் தூதாய், தாமரைக்கண் பெருமானார்க்கு வாயில் தூது மொழிந்து, “வைதிகரே! தொண்டீர் வம்மின்! தொழுது இரந்தேன்! முன்னம் அவரிடம் நீர் செல்வீர்கள்! மறவேல்மினோ” என் கனிவாய்ப் பெருமாளைக் கண்டு, பாதம் கைதொழுது, பணியீர்; உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே! பிரானார் புனைந்துழாய் மலர்க்கே மாலாகி மெலியும் என்னைச் சொல்லி இசைமின்கள்

                                                            ……….தொடரும்….

(எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமாக, ஒரே தடவையாக இந்த ருக்மிணி கல்யாணத்தை இங்கு இடமுடியவில்லை. தொடர்பவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.) .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக