செவ்வாய், 22 மே, 2012

வைத்தமாநிதி 32

குரு தக்ஷிணை கொடுத்ததும்
முதுதுவரைக் குலபதி ஆனதும்

            ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும், முந்து நூலும் முன் ஈந்த அந்தணாளன் ஒருவன், “காதல் என் மகன் புகலிடம் காணேன். கண்டு நீ தருவாய்” என்று கோதுஇல் வாய்மையினான் வேண்ட; குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய், மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை; ஓதுவித்த தக்கணையா அஞ்ஞான்று உருவுருவே கொடுத்து; குறை முடித்தான் கோவலர் குரிசில்.

         வட மாமதுரை நாட்டில் தலைப்பழி எய்தி நன்மை இழந்து தலையிடாதே சமரில் தோற்றுச் சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் பொங்கு முந்நீர்க்கடல் சூழ், நித்திலங்கள் பவ்வத்திரை உலவு துவராபதி சென்றான்; அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப, ஒரு நாயகமாய் உலகு ஆண்டான் ஆயர்தம் பெருமான்.

[ நாளை “ருக்மணி கல்யாணம்” மிக விரிவாக]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக