ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

தேசிக கீர்த்தனைகள்

கட்டளைக்கலித்துறை

நடையுடைபாவனையெல்லாநடத்தையுஞானமுமே
புடைசூழ்பெரியவர்கொண்டாடவேவந்தபுண்ணியர்காண்
தடையானதில்லைநிகமாந்ததேசிகர்தாரணிமேல்
விடையவிரத்திதொடுத்தாரெனச்சொல்லிவேண்டுவமே.

தரு - இராகம் - பியாகடை - தாளம் - ஆதி

பல்லவி

தொடுத்தாரேவிரத்திவிரதத்தின்மனங்கொடுத்தாரேதேசிகரே.

                அனுபல்லவி

தொடுத்தார்வைராக்கியநிதியென்றும்போதா
வெடுத்தேயருளாளரிவர்சொப்பனத்தில்வரத்        (தொ)

சரணங்கள்

உம்முடையவிரத்திகண்டுகந்தோமானாலு
    முமக்குக்குமாரர்பெற்று    மின்ன
இம்மையிலொருநாளாகிலுந்தேவியா
    ரிடத்தினிற்பிரவர்த்தியு   மென்ன

எம்மாலென்றவவருமனுஷ்டானஞ்செய்வதற்
     கேற்குமோவென்னவும்பிர  சன்ன
செம்மையாயுமக்குநாம்புத்திரராகவந்து
     செகத்திலவதரிப்ப     மென்னத்                  (தொ)

நமக்காகநீருமொருநாள்கர்ப்பாதானஞ்செய்வீர்
    நாட்டினிஷித்தமல்ல     பாரு
முமக்குப்பிறக்குஞ்செல்வர்தமக்குத்திருநாம
     முண்மையாய்ச்சாற்றுமன்பு    கூரு

மெமக்குப்பிரீதியென்றேவரதரருளிச்செய்ய
     விவருமனதிசைந்து      நேரும்
இமைக்குந்திருக்கண்விழித்தாச்சரியங்கொண்டார்
     வயிராக்கியநிதியென்றுயர்     பேரும்            (தொ)

அவனுக்குவுகப்பாகிலப்படிச்செய்வோமென்று
      அருளாளர்கிருபைதன்னை      யேற்றுக்
கவனத்துடனேகர்ப்பாதானஞ்செய்வதற்குயர்
       காலஞ்சோதிஷநூலைப்      பார்த்து
நலமுற்றகிரஹங்களுஞ்சுபமாய்ப்பனிரண்டாண்டி
      னல்லநாளொன்றொன்றுக்குக்   காத்துத்
தவமிக்கதேவியரிடத்திற்கர்ப்பத்தைத்தாமே
      தரிப்பித்தருளியன்பு       சேர்த்து               (தொ)

நயினாராசாரியர்   திருவவதாரம்

கற்பனைசேர்பாமாலைகண்ணனடிக்கேசாற்று
மற்புதவேதாந்தார்யரவர்தாஞ் -- சொப்பனத்தில்
வந்தருளுங்கச்சிவரதர்திருவருளாற்
றந்தருளுஞ்செல்வரைப்பெற்றார்.

தரு - இராகம் - மத்திமாவதி - ஏகதாளம்

பல்லவி

செல்வரைப்பெற்றார்திருவேங்கடநாதர் செல்வரைப்பெற்றார்

அனுபல்லவி

செல்வரைப்பெற்றாரேகல்விமிகுத்தாரே
    சீராருந்தூப்புற்றிருவேங்கடநாதர்               (செல்)

சரணங்கள்

திருநக்ஷத்திரநாற்பத்திரண்டினிற்
     சேர்ந்திடுநளசம்வச்சரத்திலே
பெருமையாகிய வாவணிரோகிணி
      பேரருளாளர்குமாரராகிவரச்                   (செல்)

வருகுமாரர்க்குச்சாதகன்மநெறி
      வண்மையாய்ச் செய்துமீராறுநாளிலே

வரதராசர்தந்நியமனப்படி
     வரதநாமமெனத் திருநாமம்செய்               (செல்)

திருவிளையாட்டுமாடிக்கொண்டேயிந்தச்
     செல்வர்வளர்ந்திட்நாளிலயக்கிரீவர்
திருவிளையாட்டின்மகிமைக்கண்டவர்
      தெரிசனத்தையு  நிலைநிறுத்தினார்          (செல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக