சனி, 23 செப்டம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ - இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: -
கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.
வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.
ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் --
அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி " என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: --- உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக்.
திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,
ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் --
ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களையுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப்படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.
சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி --
ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு' என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல்குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும்காலையும் - 8- 6, மாலைநண்ணி -9-10, கண்ணன்கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக்காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.
அதர்வா ரஸைச்ச பாதி
ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.
ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.
மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை. இவை மேலே உபபாதிக்கப்படுகின்றன.













சனி, 9 செப்டம்பர், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

பஹுபஜநபதம்”, “ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தியோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”, “அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது "உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

"அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச்செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது விசதம் என்பதுடன் சேராது. விசதம்' என்பதற்கு விரோதமில்லாமல் ஸங்க்ஷேபா " என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத்விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக்குருகைப்பிரான்பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்' எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்தச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபய வேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் யுக்தமாக இது வரையில் வெளியிடப்படவில்லை. ஸ்ரீ தேசிகன் திருவுள்ளக் கருத்தையே முற்றிலும் வெளியிடவேண்டும் என்கிற ஒரே அபிலாஷத்துடன் வெளியாகும் இப்பதிப்பை நிர்வஹித்தருளும் பண்டிதாக்ரேஸரர்களின் உதவியால் மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் கூறப்படுகிறது. இத்தைக் கேவலம் ஒரு தூண்டுகோலாகக் கருதி மற்றுமுள்ள பண்டிதாக்ரேஸரர்கள் தங்களுடைய யோஜனகளைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். அவை கிடைத்ததும் அந்தந்த ஸ்வாமிகளின் திருநாமங்களுடனே அவை வெளியிடப்படும்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

நிர்தோஷத்வாதிரம்ய: என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை 'இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம் என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரணத்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் "பற்றிலன்" என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன்கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண்புகழ்நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி" யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி" தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் "இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ....... நிகமிக்கிறார் " என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ' ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ......... .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள்

வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்தவிசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது" என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது" என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு' என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன்எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல்பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,
ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய்நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ' பத்துடையடியவர்'  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி'க்கு முன் (--1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.
இங்கு சாரீரகஸூத்ரார்த்த க்ரமம் என்று நிரூபிக்காமல் சாரீரகார்த்த க்ரமம் ' என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. விசதம் என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
        முதல் ஸூத்திரத்தில் ஸித்தபரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  யவன் அவன்என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனேஎன்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது உயர்வற உயர் லமுடையவன் என்னப்பட்டது. உயர்வற உயர்நலம் உடையன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. "மயர்வற மதிநலம் அருளினன்  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரஷ்டா - பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதையில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு பொறி உணர்வு அவையிலன்என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்என்னப்பட்டது.
இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது தேஹீ" என்னப் பட்டது. இது இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், நிரவதிமஹிமா  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை அந்நலனுடை ஒருவனைஎன்கிற பாட்டில் காணலாம்.