புதன், 2 ஏப்ரல், 2014

ராமாநுஜ தயாபாத்ரம் 2

ராமாநுஜ ஶப்தார்த்தம்

2. वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पति: (ஶிவபுராணம்)

        பரப்ரஹ்மம் என்பது தன்னோடு கூட மற்றொன்றைச் சேர்க்காத தனி வஸ்து அல்ல. அது மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஶ்ரிய:பதிதான் என்பதைப் பல ப்ரமாணங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஸ்வாமி.

1.शेषि दम्पति    (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்)
2. दम्पति जगतांपति    (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்)

3. युवां दम्पति दैवतं न:  (ஶ்ரீஸ்துதி)

4. श्रीमन्नारायणो न: पति: (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்)

5. ஶ்ரீமானான நாராயணன் (ஶ்ரீரஹஸ்யரத்னாவளி - 2)

6. ஶ்ரிய:பதியான நாராயணன் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)

7. விக்ரஹத்தில் ப்ரஹ்மசர்யாவஸ்தையிலுள்பட

कृष्णाजिनेन संवृण्वन् वधूं वक्ष: स्थलालयाम्
                             (தேஹளீஶ ஸ்துதி)
    என்னும்படியிறே நித்யயோகம் இருப்பது
                       (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்)

8. பரதத்துவமானது ஸ்வவ்யதிரிதிக்த வஸ்துக்கள் எல்லாத்துக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் ஶேஷியுமான ஶ்ரிய:பதி (ஶ்ரீதத்வபதவீ)

9. தண்டதரத்வமும் புருஷகாரத்வாதிகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வ்யாபாரங்கள்  (ஶ்ரீமத்ரஹஸ்ய தத்வத்ரயம்)

10. ப்ரதிபுத்தரான நமக்குப் பெரிய பிராட்டியாருடனேயிருந்து என்றும் ஒக்கப்பரிமாறுகிற இவனையொழிய ப்ராப்யாந்தரமும் ஶரண்யாந்தரமும் இல்லை. இத்தம்பதிகளே ப்ராப்யரும் ஶரண்யரும் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்)

11. சாற்றினர் நம்போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)

12. இப்படி ஶ்ரிய:பதியான நாராயணன் திருவடிகளே உபாயதசையிலும் பல தசையிலும் உபஜீவ்யர்கள் (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)

13. லக்ஷ்மீ விஶிஷ்டத்வம் உபாய ஐக்யத்துக்குப் பாதகமாகாது

14. யதா ப்ரமாணம் ஶரண்யாபிப்ராய விஶேஷாநுகுணமாக விஶிஷ்டம் உபேயமானாற்போலே விஶிஷ்டமும் உபாயமாகக் குறையில்லை.

15. ஏகஶேஷித்வத்தாலும் ஏகாபிப்ராயத்தாலும் பரஸ்பர ப்ராவண்யாதிஶயத்தாலும் ஸ்வரூப ரூபாதிகளில் பிரிவற்ற அந்வய விஶேஷத்தாலும் गाढोपगूढानि ते  (ஶ்ரீசதுஶ்லோகி)

      என்னும்படி ஸுஶ்விஷ்டமான விஶிஷ்ட தத்வம் நிற்கிற நிலை குலையாதபடி ஸவிஶேஷணமான நாராயண ஶப்தம் ப்ரதிபாதிக்கிறபடியை அநுஸந்திக்கை ஸத்வஸ்தற்கு ப்ராப்தம்.

16. திருநாரணனே மன்னியவன் சரண் (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)     

3. ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.

4. रमा सम्बन्धीति राम:  லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள். இந்த ஸம்பந்தத்தினால் பகவானுடைய பெருமைக்குப் பாதகம் இல்லை என்பதை மறுத்தவர்களுக்கு  1)  जलधिसुतया सार्धंदेवो जगत्परिपालयन् परमपुरुष: सिद्धोपाय: प्रतीष्टभरस्सताम्      (ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) என்றும் ஶ்ரீமச்சப்தத்தில் தோற்றின நித்யபத்னீ ஸம்பந்த விஶிஷ்டமானாலும் உபாயைக்யத்திற்குக் குறையில்லை. ஶ்ரிய:பதித்வ லிங்கத்தாலும் நாராயணன் ஶப்தத்தாலுமிறே ஶ்ருதிகளில் பரதத்வ விஶேஷ நிர்ணயம் பண்ணப்பட்டது (ஶ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்)  என்றும்  पूर्णं तेज: स्फुरति भवती पादलाक्षा रसाङ्कं   என்றும் அருளிச் செய்யப் பட்டுள்ளது (ஶ்ரீஸ்துதி)

தொடரும்                    

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ராமாநுஜ தயாபாத்ரம்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்

என்று தினமும் நம் ஆசார்யனைப் போற்றுகிறோம்.  இதில் ராமாநுஜ தயாபாத்ரம் என்பது பகவத் ராமாநுஜரின் தயைக்குப் பாத்திரமானவர் என்று பொருள் என்று சுருக்கமாக அனைவரும் அறிந்தது. ஆனால் ராமாநுஜ என்ற வார்த்தைக்கு எவ்வளவு விரிவான பொருள் உண்டு என்று சேட்டலூர் நரஸிம்மாச்சாரியார் மிக அருமையாக மணிப்ரவாள நடையில் எழுதியதை எல்லோரும்  அறிந்து இன்புற வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு ஸ்ரீரங்கம்  ஸ்ரீஉப.வே. சாமம் பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமி முழுவதும் தமிழ்ப்படுத்தி தனது ஷஷ்டியப்தபூர்த்தி தினத்தில் சிறு நூலாக வெளியிட்டார். அந்த நூலிலிருந்து  41 விதமாக ராமாநுஜ என்ற ஶப்தத்திற்கு சேட்லூர் ஸ்வாமி அளிக்கும் விளக்கங்களை இங்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கலாம்.

ராமாநுஜ ஶப்தார்த்தம்

ராம --  ராமனுக்கு; அநுஜ -- பிற்பாடு உண்டான

      இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்.

     राम ஶப்தத்திற்கு முதலில் உள்ள “रा” என்ற எழுத்து நம்மைப் போன்ற ஜீவர்களிடத்தில் உள்ள பாபத்தைப் போக்கும் எழுத்து. “रा” “म” என்றால் திரும்பி அந்தப் பாபம் ஜீவனிடத்தில் வராமல் தடுத்து ஆட்கொள்ளும். அதனால் राम ஜபம் சொல்லும் பலன், रा என்று சொல்லும்போது வாய் திறக்கும் म என்றவுடன் வாய் மூடிவிடும். பாபத்தைத் தடுக்கும் மந்த்ரம் “राम” மந்த்ரம்.
राम: रमयतीति राम: | மற்றவர்களை ஸந்தோஷப்படுத்துகிறவன் என்று அர்த்தம்.

மேலும்,

1.  रमन्ते योगिनोऽनन्ते चिदानन्ते परात्मनि इति रामपदेनासौ परब्रह्माभिधीयते|| रमन्ते अस्मिन् सूरयः (அகஸ்த்ய ஸம்ஹிதை)
என்கிறபடியே யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான். அதன்பலனாக அந்த உபாயத்தை அநுஷ்டித்த எண்ணிறந்த ஆத்மாக்கள் மோக்ஷம் என்ற ஸாம்ராஜ்யத்தை அடைந்தனர். அப்படிப்பட்டவர்கள் பரமாத்மாவினுடைய தயைக்குப் பாத்திரமானவர்கள் என்பர்.
रामा च रामश्च रामौ, तयोः अनुज रामानुज
பிராட்டியும் இராமனும் ராமர்கள். அவர்களுடைய க்ருபைக்குப் பாத்திரமானவர் என்று பொருள்.
 

தொடரும்

Saranagati Deepikai tele-upanyasam (31-03-2014)

स्वामी दया जलनिधिर्मधुर: क्षमावान्
   शीलाधिक: श्रित वश: शुचिरत्युदार: |
एतानि हातुमनघो न किलार्हसि त्वं
   विख्यातिमन्ति बिरुदानि मय सहैव ||

ஸ்வாமீ தயா ஜலநிதிர்மதுர: க்ஷமாவாந்
             ஶீலாதிக: ஶ்ரித வஶ: ஶுசிரத்யுதார: |
ஏதாநி ஹாதுமநகோ ந கிலார்ஹஸி த்வம்
     விக்யாதிமந்தி பிருதாநி மய ஸஹைவ ||

என்ற “சரணாகதி தீபிகை”யின் 52வது ச்லோகத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் பெருமாளிடம் ப்ரார்த்திப்பது என்ன என்று மிக ரஸமாக நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி நேற்று (31`-03-2014) நடத்திய 66வது டெலி உபந்யாஸத்தில் விவரிப்பதை நகலிறக்கி ரசித்து மகிழ

(Please note: The file size is slightly bigger than the previous files. Some friends expressed their difficulty with small file sizes and hence without shrinking I have uplaoded and shared it here)

http://www.mediafire.com/listen/vegapvogcnmphmm/66_Saranagati_Deepikai_(31-03-2014).mp3

வியாழன், 27 மார்ச், 2014

Saranagai Deepikai tele-upanyasam dtd 24-03-2014

The 65th Tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai” by Natteri Sri Rajagopalacharyar swami is available for download at

https://www.mediafire.com/?0mruyzqa78appj1

புதன், 19 மார்ச், 2014

சரணாகதி தீபிகை (16-03-2014) டெலி உபந்யாஸம்

ஸ்வாமி தேசிகன் தனது சரணாகதி தீபிகையின் 50வது ச்லோகமான

यद्वा मदर्थ परिचिन्तनया तवालं
संज्ञां प्रपन्न इति साहसिको बिभर्मि |
एवं स्थिते त्वदपवाद निवृत्तये मां
पात्रीकुरुष्व भगवन् भवत: कृपाया : ||

யத்வா மதர்த்த பரிசிந்தநயா தவாலம்
ஸம்ஜ்ஞாம் ப்ரபந்ந இதி ஸாஹஸிகோ பிபர்மி|
ஏவம் ஸ்திதே த்வதபவாத நிவ்ருத்தயே மாம்
பாத்ரீகுருஷ்வ பகவந் பவத; க்ருபாயா;||

என்பதன் மூலம் சொல்ல வந்தது என்ன என்பதை நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் மிக அற்புதமாக விவரிப்பதைக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?445d002tiliz24q