வியாழன், 5 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 19

முப்பத்தோராவது ஸர்க்கம்

[ராவணன் ரம்பையை பலாத்காரம் செய்ததும்,
அதனால் கோபமடைந்த தளகூபரன் அவனை சபிப்பதும்]

          அன்றைய ராத்திரியை அந்த உபவனத்தில் ராவணன் கழிக்க நினைத்தான் நடுநிசி சந்திரன் தனது பூர்ண கிரணங்களையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஸந்தோஷிப்பித்துக்கொண்டிருந்தான் அந்த ரம்யமான வேளையில் அவ்வழியாக அப்ரஸ்ஸுக்களுள் உயர்ந்த அழகியாகக் கருதப்படும் 'ரம்பை உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவளாகவும், திவ்யகந்தபுஷ்பங்களை தரித்தவளாகவும் தோழிகளுடன் சென்று கொண்டிருந்தாள் அவளைக் கண்ட ராவணன் அவளுடைய அழகில் மயங்கியவனாய் அவனை வழிமறித்து, ''அழகியே! நீ யார்? எங்கே செல்கிறாய்? உன்னுடைய இந்த அழகிய மேனியின் சுகத்தை அநுபவிக்கும் பாக்யவான் யார்? என்னைக்காட்டினும் உயர்ந்த புருஷன் இவ்வுலகினில் இல்லை என்பதை நீ அறிவாயா? என்னை அதிக்ரமித்து. நீ வேறொருவனை நாடிச் செல்வது நல்லதல்ல, வா, இப்படி உட்கார். எனது காமத்தைப் பூர்த்தி செய்யவும்" என்றான்

          இப்படி வேண்டுகிற ராவணனைப் பார்த்து ரம்பையானவள் நடுங்கியவளாய், கைகளிரண்டையும் கூப்பிக்கொண்டு "தாங்கள் இப்படிக் கூறுவது உசிதமல்ல. தாங்கள் எனது குரு, என்னை இதரர் கெடுக்க நினைத்தால் தங்களால் ரக்ஷிக்கப்படத் தகுந்தவள் நான் தங்களது மருமகள் உண்மையைக் கூறினேன் " என்று சொன்னாள்

          இதைக் கேட்ட ராவணன், "நீ எனது மருமகளானால் நீ சொல்வது ஏற்கத்தக்கதே" என்றான் அதற்கு ரம்பை, "நான் கூறியது உண்மையே ராக்ஷஸ ச்ரேஷ்டரே! உமது ஸஹோதரர் குபேரன் அவரது தர்மபுத்திரர் நளகூபரன் அவர் உமது குமாரர் அல்லவா? அவரால் வரிக்கப்பட்டு அவருடைய இச்சையைப் பூர்த்தி செய்விக்கவே இப்பொழுது சென்று கொண்டிருக்கிறேன் அந்த நளகூபரர் தர்மத்தினால் பிராம்மணராகவும். பலத்தினால் க்ஷத்ரியராகவும், கோபத்தில் அக்கினியாகவும், பொறுமையில் பூமிக்குச் சமமானவர் என்றும் பிரஸித்தி பெற்றவர் என அறியவும்" என்றாள்

          ரம்பையினால் இவ்வாறு பதில் அளிக்கப்பட்ட ராவணன் மறுபடியும் அவளைப் பார்த்து, "நீ சொல்லும் மருமகள் முறை பதிவ்ரதைகளுக்கு ஏற்றது இரு உலகங்களிலும் ஏற்புடையதே ஆனால் அப்ஸரஸ் ஸ்த்ரீகளுக்குப் பதிவ்ரதத்வம் ஏது? அவர்கள் ஒரே பர்த்தாவைக் கொண்டவர்களல்லவே இதை நான் அறிவேன் எனவே உனது வாதம் ஸரியாணதல்ல” என்று கூறி அவளை பலாத்காரமாக அநுபவித்துத் தனது இச்சையைப் பூர்த்தி செய்துகொண்டான்

          இப்படி ராவணனால் பலாத்கரிக்கப்பட்ட ரம்பையானவள் துக்கமடைந்தவளாய் கலைக்கப்பட்ட அலங்காரத்தை உடையவளாய் நளகூபரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள் இதைக் கேட்ட நளகூபரன் மிகவும் கோபமடைந்து, கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதை முறைப்படி அபிமந்த்ரணம் செய்து, "தன்னை விரும்பாத எந்த ஸ்திரீயையாவது இவன் பலாத்காரம் செய்தால் இவனது தலை ஏழு சுக்கல்களாக வெடித்தும் போகக்கடவது'' என்று சாபமிட்டான்

          ஜ்வலிக்கும் அக்கினி போன்று விளங்கிய நளகூபரன் இப்படிச் சாபமிட்டதும் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது பிரம்மா முதலிய தேவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள் ரிஷிகளும் பித்ருக்களுங் கூட அகமகிழ்ச்சி கொண்டனர் இதைச் செவியுற்ற  ராவணனும் தன் செய்கையில் வெறுப்புற்றான் பயந்தான் அவனால் பலாத்காரமாக அபஹரித்து வரப்பட்ட ஸ்த்ரீகளும் இதை அறிந்து பயமற்றவர்களாக ஆனார்கள் நளகூபரனையும் மனமாற வாழ்த்தினர்

முப்பத்திராண்டாவது ஸர்க்கம்

[ராவணன் தனது பெரும் படையுடன் கைலாசமலையில் இருந்து புறப்பட்டு தேவலோகம் செல்லுதல், தேவாஸுரயுத்தம், அதில் வசுக்களில் எட்டாமவனான ஸாவித்ரனால் கதையால் அடிக்கப்பட்டு ஸுமாலியின் வதம்)

          கைலாஸமலையிலிருந்து தனது பெரும்படையுடன் ராவணன் தேவ லோகத்தை நோக்கிப் புறப்பட்டான் அந்தப் படையினர் இட்ட கோஷமானது கடையப்படும் பெருங்கடலின் கோஷம் போன்று மேலே கிளம்பித் தேவலோகத்தை அடைந்தது இதை அறிந்த தேவேந்திரன் சிந்தை கலங்கினான் ஆஸனத்தினின்றும் எழுந்து அங்குக் கூடியுள்ள ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள் மருத்துக்கள் முதலிய தேவர்களைப் போருக்கு ஆயத்தமாகும்படிக் கட்டளையிட்டான் அவனது உத்திரவுப்படி அவர்களும் யுத்த ஸந்நத்தரானார்கள் அப்படி இருந்தும் ராவணனிடத்திலுண்டான பயத்தினால் இந்திரன் ஶ்ரீமன் நாராயணனைச் சரணம் அடைந்து, "பிரபோ! பலவானான ராவணன் யுத்தத்திற்கு வந்துவிட்டான் அவனோ பிதாமஹனுடைய வரதானத்தால் கர்வம் கொண்டவன் அவனுடன் நான் எவ்வாறு போரிட முடியும்? எனவே தேவரீரே. நமுசி, விருத்ராஸுரன், பலி, நரகாஸுரன், சம்பராஸுரன் முதலியவர்களை அடக்க உபாயம் செய்தது போல ஏதேனும் செய்து அவனை அழிக்கவும்” என்று பிரார்த்தித்தான்

          இப்படி இந்திரனால் வேண்டப்பட்ட நாராயணன். “நீ பயத்தை விட்டொழிக்கவும், நான் சொல்வதைக் கேட்கவும் துஷ்டாத்மாவான ராவணன் தேவர்களாலோ அஸுரர்களாலோ கொல்லப்படத் தகாகதவன் மிகுந்த பலசாலியாகவும் உள்ளான் மேலும் அவன் தனது புத்திரனான மேகநாதனுடன் கூடியவனாக வந்துள்ளான் உன்னை வைத்துக்கொண்டு இப்பொழுது அவனுடன் போரிட முடியாதவனாக உள்ளேன் ஏனெனில் அவன் நம்மால் கொல்லப்படத் தகாதவன் என்பதை நீயும் அறிவாய் “நாராயணன் போரிட்டு எதிரியைக் கொல்லாமல் திரும்பினான்" என்ற சொல் ஏற்படக் கூடாது எனவே உனக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள் "ஒரு காலத்தில் இ வனுடைய வதத்திற்கு நானே காரணமாவேன் இதை உறுதியாக நம்பவும் இப்பொழுது நீயே உனது பரிவாரங்களுடன் சென்று போர் செய்" என்று கூறினார்

          அதைக் கேட்ட தேவேந்திரன் தனது சேனைகளுடன் சென்று ராவணனை எதிர்த்தான் அப்போது ராவணனுடைய மந்திரிகளான மாரீசன், பிரஹஸ்தன். மஹாபார்ச்வன். மஹோதரன், அகம்பனன் ஜம்புமாலி விரூபாக்ஷன், நிகும்பன், சுகன், ஸுப்தக்னன், யஜ்ஞ கோபன், துர்முகன், கரன் தூஷணன். த்ரிசிரஸ், மஹாகாயன், அதிகாயன், தேவாந்தகன். நராந்தகன் ஆகிய மஹாவீரர்கள் கூடி ராவணனது பாட்டனான "ஸுமாலி" என்பவனைத் தலைவனாகக் கொண்டு தேவர்களை எதிர்த்தனர் அந்த அரக்கர் படையானது, அனேகவித ஆயுதங்களால் தேவர்களின் படைகளைத் தாக்கிப் பெருங் காற்றானது மேகக் கூட்டங்களைச் சிதற அடிப்பது போல, நான்கு பக்கங்களிலும் சிதறியோடும்படிச் செய்தது

          இப்படி அடிபட்டு ஓடும் ஸேனையைக் கண்டு வசுக்களில் எட்டாமதானவனும்,மிக்க பராக்கிரமசாலியுமான ஸாவித்ரன் என்பவன் மிக்கச் சினம் கொண்டவனாகிச் சேனைகள் புடை சூழச் சென்று, அந்த ஸுமாலியை எதிர்த்துப் போர் செய்தான் அவன் பெரிய- கோபங் கொண்ட ஸிம்ஹமானது சிறிய மிருகங்களைத் தாக்கியடிப்பது போல அரக்கர் படையைத் தாக்கி அழித்தான்

          அதே ஸமயத்தில் ஆதித்யர்களில் ஒருவரரன த்வஷ்டா பூஷா என்பவர்களும் யுத்தபூமியில் பிரவேசித்து அசுரப் படைகளைத் தாக்கினர் அப்போது இரு தரத்துப் படைகளுக்கும் மிக்க பயங்கரமான யுத்தம் உண்டாயிற்று அந்த யுத்தத்தில் ஸுமாலியின் தலைமையிலான அரக்கர் படையினால் தேவர்களின் படையானது நன்கு அடிக்கப்பட்டு நிலைநிற்க முடியாமல் நாலு பக்கங்களிலும் ஓடியது

இப்படியான நிலைமையைக் கண்ட எட்டாவது வஸூவானவன் ஓடும் தன் படைவீரர்களைக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தி, மூர்க்கத்தன்மையுடன் போரிடும் ஸுமாலியை எதிர்த்துப் போரிட்டான் ஸுமாலிக்கும் வஸு விற்கும் மிகக் கடுமையான சண்டை நடந்தது அப்போது வஸுவானவன் கொடூரமான பாணத்தால் ஸுமரலியினுடைய ரதத்தை நாசம் செய்தான் உடனே ஒரு மிகப் பெரிய கதையைக் கையில் எடுத்துக்கொண்டான் ஜ்வலிக்கும் நுனியை உடையதும், மற்றொரு காலதண்டம் போன்றதுமான அந்தக் கதையால் ஸுமாலியின் தலையில் ஓங்கி அடித்தான் அந்தக் கதையானது கொழுந்து விட்டு எரியும் பெரிய கொள்ளிக்கட்டை போல் அவண் தலைமீது விழுந்தது அந்த க்ஷணமே அவனது தலையோ கால்களோ கைகளோ ஏதுமே காணப்படாமல் சூர்ணமாகிவிட்டது அவன் மடிந்ததைக் கண்ட அஸுரப்படை பயத்துடன் திரும்பி ஓடி விட்டது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக