சனி, 11 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 7

குணதசகம்.


     எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று குணதசகத்தால் அநுபவிக்கிறார் தூப்புல் கோமான். அப் பாசுரம் இதுவே. :-


" பயின்மதிநீயே பயின்மதி தருதலின்
வெளியு நீயே வெளியுற நிற்றலின்
தாயு நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையு நீயே முந்தி நின்றளித்தலின்
உறவு நீயே துறவா தொழிதலின்
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின்
ஆறு நீயே யாற்றுக் கருடலின்
அறமு நீயே மறநிலை மாய்த்தலின்
துணைவனு நீயே யிணையிலையாதலின்
துய்யனு நீயே செய்யாளுறைதலின்
காரண நீயே நாரணனாதலின்
கற்பக நீயே நற்பதந் தருதலின்
இறைவனு நீயே குறையொன்றிலாமையின்
இன்பனு நீயே துன்பந் துடைத்தலின்
யானு நீயே யென்னுளுறைதலின்
எனது நீயே யுன தன்றியின்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய் நீயே வய்யமுண்டுமிழ்தலின்
எங்கனமாகு மெய்ய! நின் வியப்பே
அங்ஙனே யொக்க வறிவதாரணமே.''
         - (மும்மணிக்கோவை. 7)

    (தன்னைத்தான் அநுபவித்தபடியே பேசுமிடத்தில் ஸஹேதுகமாக உபபாதித்தருளுகிறார். பயில்மதி - இடை விடாதே அநுபவிக்க அளவுடைமையை ; தருதலின் - எனக்கு அருள் செய்கையாலே ; பயில்மதி - அநுபவயோக்யனான சந்திரன் ; வெளியுற - இதர தேஜோவஸ்துக்கள் பிரகாசத்தை அடையும்படி ; நிற்றலின் - நிற்பதினாலே ; வெளியும் - நிருபாதிகதேஜோ ரூபியான சூர்யனும் ; சாயை-நிழலை (சாயை -- ஸம்ஸார ஸந்தாப ஹரமான திருவடிகளை); தந்து - கொடுத்து ; உகத்தலின் - சந்தோஷித்தலால், தாயும் - மாதாவும் ; முந்தி - சிருஷ்டி காலத்திற்கு முன்னே ; அளித்தலின் - கரணகளேபர ப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; தந்தையும் - பிதாவும் ( அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து, அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்" - திருவாய் மொழி 2-3-3) ; துறவாது - விடாதே ; ஒழிதலின் - ஒழிகையாலே ; உறவும் - நிர்வ்யாஜ பந்துவும் ("தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை, வேறே போக எஞ்ஞான்றும் விடலே'. திருவாய்மொழி 2-9-10) ; சிற்றின்பம் - அல்பாநுகூலங்களாகத் தோற்றிப் பின்னர் அநர்த்தத்தை விளைவிக்கும் காமங்கள் ; இன்மையின் -- இல்லாமையால் ; உற்றதும் - ப்ராப்தமும், வகுத்த விஷயமும் ; பரித்யாகாநர்ஹ அந்தரங்கவஸ்து ; வாஸஸ்தானமும் ; ஆற்றுக்கு - அநுஷ்டிக்குமேதேனுமொரு வ்யாஜமாத்ரமான உபாயத்துக்கு ; அருள்தலின் - உபாயலாகவத்தையும், பல கௌரவத்தையும், நினையாதே பரிபூர்ண பலப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; ஆறும் - நிருபாதிக ஸர்வவித ஸம்பந்தமுமுடையவனாகையாலே இத்தலையில் வ்யாஜ மாத்ரத்தைக்கொண்டுதான் உபாயாந்தர ஸ்தானத்திலே நிற்கையாலே ஸகலபல சாதகமும்; மறநிலை - பாபங்களின் நிலையை ; மாய்த்தலில் - நசிப்பிக்கையாலே ; அறமும் - தர்மமும் ; இணை - தன்னோடொப்பார் ; இல்லையாதலின் - இல்லாமையால் ("ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா" - திருவாய்மொழி 2-3-2) ; துணைவனும் - சகாயமாய் நிற்பவனும் ; செய்யாள் - பெரிய பிராட்டியார்; உறைதலின் – அகலகில்லேனிறையுமென்று நித்யவாஸம் பண்ணுகையாலே ; துய்யனும் -- பரிசுத்தனும்
நாரணனாதலின் -- நாராயணனாகையாலே ; காரணம் --
நிகில ஜகந்நிமித்தோபாதாநருப ஸர்வவித காரணபூதனும் ; நற்பதந்தருதலின் - பரம பதத்தைத் தருகையாலே ; கற்பகம் - கல்பவ்ருக்ஷம் ; குறை ஒன்று - ஒருகுறையும்; இலாமையின் -- ஸ்வரூப ரூபகுண விபவாதிகளில் நியூநதை ஒன்றுமில்லாமையாலே ; இறைவனும் - ஸர்வேசுவரனும்; துன்பம் - துயரங்களை; துடைத்தான் -- நீக்குகையால்; இன்பமும் - நிருபாதிகாநந்த ஸ்வருபமும்; என்னுள் -- எனக்குள்; உறைதலின் - கறந்தபாலுள் நெய்யே போல் அப்ருதக்ஸித்தனாய் வஸிக்கையாலே; யானும் - இவ்வாத்மாவைப்பற்ற எவன் நியந்தாவும், ஆதாரமும், சேஷியும் ஆகையாலே யானும் நீயே; உனதன்றி - உன்னுடையதல்லாமல் : இன்மையின் - இல்லாமையின்; எனதும் மதியமெல்லாம் பொல்லாங்கு இலாமையின் - தீமையொன்றுமில்லையாதலின்; - நல்லாய்- கல்யாண ஸ்வபாவன், நல்லவன்; வய்யம்-பூமியை, ப்ரஹ்மாண்ட லக்ஷ சதகோடிகளை ; உண்டு-பிரளயம் வந்தவாறே வயிற்றில் வைத்து ரக்ஷித்து; உமிழ்தலில் -பிரளயம் போனவாறே யதா பூர்வம் நிகரணம் பண்ணுகையாலே; வல்லாய் --          வல்லவன், நிகில ஜகத் ஶ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகரண சக்தன்;  மெய்ய --  அடியவர்க்கு மெய்யனே; எங்ஙனமாகும் அங்ஙனமே-எவ்வகையாயிரா நின்றதோ அவ்வகையில் எல்லாம் ; நின் வியப்பு -உன் ஆச்சர்ய ஸ்வபாவம்; ஒக்க அறிவது -- உன் படிக்கேற்க அறிய வல்லது; ஆரணமே -- அபௌருஷேயமான நித்ய நிர்த்தோஷமான வேதமே).

"ஸோ அங்கவேத யதியா ந வேத" என்று கைவாங்கின
பழமறை போலன்றிக்கே மாறன்மறை அனைத்தையும் அறிவது. "ஸேவா யோக்ய:" (திரமிடோபநிஷத் ஸாரம்) இத்யாதியிற்படியே திருவாய்மொழி பத்து பத்துக்களிலும் ப்ரதிபாதிதங்களான பத்து அர்த்தங்களும் இப்பாசுரத்திலே அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. எங்ஙனமென்னில்,


(1) பயின்மதி நீயே -- ஸேவ்யத்வம் (எம்பெருமானே தொழத் தகுந்தவன்)
(2) வெளியுநீயே --போக்யத்வம் (எம்பெருமானே பரம போக்யன்)
(3) தாயு நீயே, தந்தையு நீயே - சுபஸுபக விக்ரஹத்வம்
(எம்பெருமானே விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹம் படைத்தவன்)

(4) உறவு நீயே, உற்றதுநீயே -ஸர்வ போக்யாதிகத்வம்
(போக்யங்களான ஸகல புருஷார்த்தங்களிற் காட்டிலும் மேம்பட்ட அளவற்ற யோக்யதையை யுடையவன்)

(5) ஆறுநீயே, அறமுநீயே - ச்ரேயஸ்தத்தேதுதாநம் (உபாயமான புருஷார்த்தத்தையும் அதற்கு உறுப்பான உபாயத்தையும் எம்பெருமான் தானே கொடுத்தருள்பவன்).

(6) துணைவனு நீயே, துய்யனுநீயே - ப்ரபதந ஸுலபத்வம்
(தன்னை யடைக்கலம் புகுகிறவர்களுக்கு மிகவும் எளியன்)

(7) காரணநீயே, கற்பகநீயே - அநிஷ்ட நிவர்த்தகத்வம் (அடியார்களது அல்லல் போக்கும் தன்மையன்)

(8) இறைவனுநீயே, இன்பனுநீயே - ஆச்ரிதேச்சாநுஸாரித் வம் (அடியார்களுடைய அபிப்பிராயத்தைப் பின் சென்று நடப்பவன்)

(9) யானு நீயே, எனதுநீயே - நிருபாதிக ஸுஹ்ருத்வம்
(இயற்கையாகவே இன்னருள் புரியும் இயல்வினன்)

(10) நல்லாய் நீயே, வல்லாய் நீயே - ஸ்த்பதவீ ஸஹாயத்வம்
(தாளடைந்தோர் தங்கட்குத்தானே நலமந்தமில்லதோர் நாட்டில் வழிக்குத் துணையாமவன் எம்பெருமான்)

இங்ஙனம் இங்கு குணதசக வடைவை வமைத்த வற்புத
வள்ளலாரின் வன்மையே வன்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக