திங்கள், 19 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (19-11-2012)

நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய உபந்யாஸம் ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவனின் வைபவங்களைப் பற்றியது. மிகத் தற்செயலாக, கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து, தனது மதுரை சாதுர்மாஸ்யத்தை முடித்துக்கொண்டு தென் மாவட்டங்களில் சஞ்சாரம் செய்து சிஷ்யர்களை சம்ரக்ஷித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி சரணாகதி மார்க்கத்தில் அவர்கள் சிந்தையைத் திருப்பி வெற்றிகரமாக விஜய யாத்திரையை முடித்துக் கொண்டு நேற்று (18-11-2012) இரவுதான் ஸ்ரீமத் ஆண்டவன் சென்னை ஆச்ரமத்துக்கு எழுந்தருளி யிருக்கிறார். இன்று காலையில் ஸ்ரீமத் ஆண்டவன் ப்ரபாவத்தைப் பற்றி நாட்டேரி ஸ்வாமி உபந்யஸிக்க ஆரம்பித்திருக்கிறார். இன்றைய உபந்யாஸம் ஒரு சிறு முன்னுரைதான்.
ஏற்கனவே, ஸ்ரீரங்கநாத பாதுகாவில் பதின்மரும் ஒருவரானார் என்று நம் ஸ்ரீமத் ஆண்டவனைப் பற்றி மிக அற்புதமான கட்டுரை எழுதியிருந்தார். அதைப் போலவே, இன்றைய உபந்யாஸத்திலும் , எப்படி தனக்கு முன்னால் இருந்த ஆசார்யர்கள் ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளையும் தனக்குள் அடக்கி ஓர் ஒப்பற்ற ஆசார்யனாகத் திகழ்கிறார் என்பதை மிக மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் நாட்டேரி ஸ்வாமி. ஆச்ரம சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் என்றில்லை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் கேட்டு ரசித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய அருமையான உபந்யாஸம் . இன்று மட்டுமில்லை. இனி வரும் காலங்களிலும் சொடர்ந்து கட்டாயம் கேட்கப்பட வேண்டியது.
தரவிறக்க
http://www.mediafire.com/?ox6pp74mmsi16vl

1 கருத்து:

  1. Many many thanks for this valuable post on HH SriMushnam Andavan on this auspicious occassion of His ThiruNakshatram, especially for those sishyaas who missed hearing from the one and only sri Naatteri swami.
    Adiyen
    Daasan Raghavan

    பதிலளிநீக்கு