செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தாய்க்குலமே! தர்மத்தைக் காப்பாற்ற உங்களால்தான் முடியுமாம்!

5ம் தேதி. மாலையில் சென்னை கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஸ்ரீதரன் இன்று ஏராளமான சிஷ்யர்களின் வேண்டுகோளை ஏற்று அனுக்ரஹ பாஷணம் ஆரம்பமாகப் போகிறது என்று தகவல் கொடுத்தார். அடியேன் என்றும் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் ரகமில்லை. கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்கிறவன். 40 வருடம் சேரில் உட்கார்ந்தே தூங்கிப் பழக்கமாகையால் ( இப்போது retirementக்கு அப்புறம் அந்த சுகம் இல்லை என்பது வேறு விஷயம்) அனுக்ரஹ பாஷணத்தைப் பதிவு செய்துவிட்டு சென்னை போகலாம் என்று முடிவெடுத்து சின்ன அழகியசிங்கர் ஆஸ்ரமத்துக்குப் போன போது ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களாகி விட்டது. எனவே முதலிலிருந்து ஆரம்பிக்காமல் இருக்கும் இந்தப் பதிவுக்காக அடியேனை க்ஷமிக்க வேணும்.

பூராவும் கேளுங்கள். பெண்களால்தான் தர்மங்களைக் காப்பாற்ற முடியும் என்று அழகியசிங்கர் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதை நன்கு மனத்தில் வாங்கி அவரவர்கள் வீட்டு ஆண்களை அழகியசிங்கர் திருப்பித் திருப்பிச் சொல்வதான நித்ய கர்மானுஷ்டானங்களை அனுஷ்டிக்க வைப்பது இனி உங்கள் பொறுப்பு.

   இன்று முதல் உத்தானம் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் அனுக்ரஹ பாஷணம் நடந்தால் ஸ்ரீ முத்துகிருஷணன் பதிவதாகச் சொல்லியிருக்கிறார். அடியேன் பதிந்த இந்த கடைசி ஒன்று வீடியோவாக அமைந்ததும் விசேஷமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக