ஞாயிறு, 17 அக்டோபர், 2010

திருப்புல்லாணியில் ஸ்வாமி தேசிகனின் 743வது திருநக்ஷத்ரோத்ஸவம்

DSC01410

   

உலகெலாம் உய்விக்க வந்த நம் ஆசார்ய வள்ளலின் 743வது திருநக்ஷத்ரோத்ஸவம் சென்ற வருடங்களைப் போலவே மிகச் சிறப்பாக, திருப்புல்லாணி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் ஸந்நிதியில் மூன்று நாள் உத்ஸவமாக நடைபெற்றது. திருநக்ஷத்திரத்தன்று இராமநாதபுரம் ஸமஸ்தானம் தேவஸ்தானம் சிரஸ்தேதார் தலைமையில் அனைத்து ஆலய கைங்கர்யபரர்களும் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாள், பத்மாசனித் தாயார் அனுக்ரஹித்து அளித்த மாலை, தீர்த்தம் பரிவட்டம் தளிகை மரியாதைகளைக் கொணர்ந்து ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்தனர். திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தின் 29வது வெளியீடான “திருச்சின்னமாலை” மறுபதிப்பாக வெளியிடப்பட்டு முதல் பிரதியை சிரஸ்தேதார் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக