திங்கள், 23 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

வந்தே வ்ருஷகிரீசஸ்ய மஹிஷீம் விச்வதாரிணீம்
   தத்க்ருபா ப்ரதிகாதா நாம் க்ஷமயா வாரணம்யயா.  .7.

அன்னவன ருட்குறுத டக்குகள டக்கத்
   துன்னுகமை கொண்டுதனி முன்னுதவு நன்மைத்
   தன்னிலை யிலோங்கிமகி தாங்கியெனு நாமம்
   மன்னுவிடை யத்திரியன் பத்தினிது தித்தேன்.
   .7.

{ அகில புவனங்களையும் தாங்குகிறவளும், வேங்கடாத்ரி நாதனுக்குப் பத்தினியாயும், கமையெனும் பொறுமைக் குணத்தால் வேங்கடநாதனுடைய கிருபைக்கு விக்நங்கள் அனைத்தையும் தடுப்பவளுமான க்ஷமை எனப் பெயரிய பூமிப்பிராட்டியைத் துதிக்கிறேன்.}

நிசாமயதுமாம் நீளாயத்போக படலைந்த்ருவம்
   பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்ததோ ஷேஷ்வதர்சநம்.  .
8.

ஏகசர ணன்பரக மேதுமது காணா
  வாகுதரு மாணிமறை யாணையன் விழிக்கோர்
  போகுறும யக்களிபி ணைப்படல டைத்தே
  ஈகைமிகு சீலநல நீளையெனை நோக்கும்.    .8.

[யாருடைய போக மயக்குகளினால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்கவொட்டாமல் ஸ்ரீநிவாஸனுடைய கண் மறைந்தது போல, அவர் அக்குற்றங்களை அறவே நோக்காதது போல இருப்பாரோ அந்த நீளையென்னும் பிராட்டி அடியேனைத் தனது நீண்ட கண்களால் நோக்கி யருள வேண்டும்.]

கமப்யநவதிம் வந்தே கருணா வருணாலயம்
   வ்ருஷசைல தடஸ்தா நாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம்.  .9.

செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
   விடைக்கிரி தடத்தம ரடைக்கல மலர்க்கே
   கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
   படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன்
.
              .9.

[ கருணையென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கட மாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வருணிக்கக்கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகிறேன்.]

அகிஞ்ச நநிதிம் ஸூதிம்ப வர்கத்ரிவர்கயோ
   அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.  .10.

கைம்முதலி லர்க்கொருக ரத்துறுநி திப்போல்
   இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
   அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
  செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன்

[கைம்முதலில்லாத பேதைகளும், வேறு கதியற்றவர்களு மான  சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும், திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்நம் என்கிற மாசு அடியோடு இல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக