சனி, 18 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகம் 17

சுலோகம் 17

விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே
தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17
.

மாலுந்தி யந்தா மரைமணத்தின் மன்னகலஞ்
சாலுங் களபத் தனி மணத்தின் -- காலடிசேர்
கோல மறை மணத்திற் கோதாயுன் குந்தளஞ்சேர்
மாலையன்றோ மேலா மணம். .17.

பதவுரை:--

விபு: -- ப்ரபுவானவர்; நாபௌ -- உந்தியில்; விஶ்வாயமாந ரஜஸா -- ஓரோர் துளியும் ஒரண்டமாகும் பெருமையையுடைய; கமலேந -- தாமரைப்பூவினாலும்; கமலாஸ்த்தந சந்தநேந -- தாமரையாளின் தனச்சந்தனத்தால்; வக்ஷஸ்த்தலே ச -- திருமார்பிலும்; நிகமை -- வேதங்களால்; அங்க்ரியுக்மே (ச) -- இரண்டு திருவடிகளிலும்; ஆமோதிதோபி -- வாஸனையேறப்பெற்றதும்; தவ -- உன்னுடைய; மௌளிமாலாம் -- சிரோமாலையை; நதேந -- வணங்கிய; ஶிரஸா -- தலையால்; தத்தே -- தரிக்கிறார்.

ஓரோர் துளியும் ஓரோருலகமாக மாறும் பெருமையை உடைய தாமரையாலுந்தியிலும், தாமரையாளின் தனச்சந்தனத்தால் திருமார்பிலும், வேதங்களால் கழலிணையிலும், கந்தம் கமழப்பெற்றும், வணங்கிய தலையால் உன் சிரோமாலையை ப்ரபு தரிக்கிறார்.

அவதாரிகை

(1) பெருமாளை விபு என்றார் முன் சுலோகத்தில். இங்கும் விபுவென்கிறார். எல்லா உலகங்களுக்கும் நாயகன், எங்கும் பரந்துளன். அவன் உந்திக் கமலத்தின் ஓரோர் துளியும் ஓரோர் விச்வமாகும் என்று காட்டி அவன் விபு என்று விளக்குகிறார்.

(2) வைஜயந்தியைக் காட்டிலும் கோதை சூட்டிய மாலையின் ஏற்றத்தைக் காட்டினார். இங்கே உந்திக் கமலத்தினிலும் ஏற்றத்தையும், கந்தத்வாரமான தாமரையாள் தனச்சந்தனத்திலும் வேதவாஸனை ஏறிய திருவடித் தாமரைகளிலும் அதிக வாஸனையைப் பேசுகிறார்.

(3) உலகநாயகன் உன் மாலைக்கு வணங்கி அதை சிரஸால் தரிக்கிறார்.

விஶ்வாயமாந ரஜஸா -- தாமரைப்பூவுக்கு தூளிகளால் வாசனை. ஓரோர் துளி ஓரோர் அண்டமாய் விரிவதால், வாசனை எல்லா அண்டங்களிலும் பரவுவதைக் காட்டுகிறது. வாசனை எத்தனை தூரம் வீசுகிறதோ, அது அதற்கு ஏற்றம். அகிலமான அண்டங்களும் பரவும் உந்திக் கமல வாசனையிலும் மேன்மை (வ்யதிரேகம்)

கமலேந -- தாமரையால். ஓரோர் துளி வாசனை ஓரோரண்டம் பரவியது. எத்தனையோ தூளிகளை உடைய கமலத்தின் வாசனைப் பலப்பை என் சொல்வது?

நாபௌ (ஆமோதிதோபி) -- உந்தியில் வாஸிக்கப்பட்டும்

கமலாஸ்த்தந சந்தநேந -- முன்பு கமலத்தின் வாசனை. இங்கே கமலையின் (தாமரையாளின்) தன வாசனை கலந்த சந்தன வாசனை. அச்சந்தன வாசனையால், பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் சுமந்துகொண்டு இருவர் திருமார்பிலும் பூசிய சந்தனத்தோடே கோதையைப் பாணிக்கரஹணம் செய்து கொள்ள அவள் மாலையை வணங்கிய முடியால் சுமக்கிறார். ஆண்டாள் வாசனைக்கு ஒப்பாவதற்காக ஸர்வகந்தன் கமலையின் கந்தத்தையும் சேர்த்துக் கொண்டார். பெரியபிராட்டியாரிலும் மணமேற்றமென்று நேராகப் பேசுவதில்லை. கோதையும் அவளுக்குத தனம் போன்ற அவயமாதலால் அவள் தனத்திலும் கோதைக்கு அதிக வாசனையைப் பேசினாலும் அதுவும் கமலையின் ஓர் ஸ்தனவிசேஷத்தின் வாசனைப் பெருமையேயாகுமென்று காட்ட ஸ்தனசந்தனமென்கிறார்.

வக்ஷஸ்தலே ச -- திருமார்பிலும், தாமரையாளும் எங்கும் பரந்த விபுஸ்வரூபம். அவள் வாசனையும் எல்லையற்றுப் பரவியது. (ஆமோதிதோபி -- வாஸிக்கப் பெற்றும்)

நிகமை -- வேதங்களுக்கு நித்யாபூர்வமான வேலாதீதமான திவ்ய வாசனை உண்டு. வேதங்கள் அனந்தங்கள். ஆழ்வார் தமிழ்வேதத்தின் மகிழம்பூவாசனை திருவடிகளில் கங்குலும் பகலும் நித்யகாலமும் ஒட்டிக் கொண்டிருக்கும். அனந்த வேதங்களின் எல்லையற்ற அபூர்வ வாசனைகள் திருவடிகளில் சேர்ந்துள. நிகமமென்று கடைத்தெருவுக்கும் பெயர். விவாஹ காலங்களில் கடைத்தெருவிலிருந்து உயர்ந்த வாசனைகளை வாங்கித் தரிப்பர். இந்த வேதவேத்யனான திவ்யபுருஷனுக்குக் கடைத்தெருவென்ற நிகமங்களின் மணம் பொருந்தாது. வேதமென்னும் நிகமங்களின் வாசனைப்பரப்பே சிறந்தது. கடைத்தெரு வாசனைத்ரவ்யங்களின் மணம் க்ருதரிமம் (செயற்கை), வேதவாசனை அக்ருத்ரிமம் (இயற்கை). இங்கே நிகமங்கள் தங்கள் சிரஸுகளோடு (வேதாந்தங்களோடு) திருவடிகளைத் தொழுகின்றன. பன்மையினால் அனந்தமான வேதங்களைக் காட்டி வாசனையின் எல்லையற்ற பரப்பைக் காட்டுகிறது.

அங்க்ரியுக்மே ச --- திருவடி ஜோடியிலும். உந்திக் கமலத்தில் உலகங்களையெல்லாம் படைக்கும் காரணத் தன்மையைக் கண்டதும், அக்காரணம் லக்ஷ்மீபதியானதால், திருமார்பில் கண் சென்று சேர்த்தியை ஸேவித்து, திருவடிகளில் கண் சென்றது.

விபு: -- ப்ரபு. எங்கும் ஸ்வரூபத்தால் பரந்துளன். எங்கும் வாசனையாலும் பரந்துளன். "ஸர்வகந்த:" என்று நிகமங்களால் புகழ்பவன். ஸ்வயமாகவே எங்கும் பரந்த வாசனையை உடையவர்.

ஆமோதிதோபி -- வாஸனையேறியும். தூரம் சென்று பரவும் வாஸனையை ஆமோதம் என்பர்.

நதேந சிரஸா -- வணங்கின சிரஸால். நெடியோன் வணங்கித்தான் ஆண்டாள் திருக்கையால் மாலையை க்ரஹிக்கவேணும்.

தவ மௌளிமாலாம் தத்தே -- உன் சிரோமாலையைத் தரிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக