செவ்வாய், 13 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 5 -- ப்ரபஞ்ச மித்யாத்வ நிரூபணம்

 

प्रपञ्चमिध्यात्वनिरूपणम्

ப்ரபஞ்ச – மித்யாத்வ - நிரூபணம்

      ச்ருதிப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறாப்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம் ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால்-இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை. இது ஸத்யமாக இருந்தால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த த்யமாக ஆகும். ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்குப் பின்னும் காணப்படுவதில்லை. ஸத்யமாயிருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப் படவேண்டும். அப்படியன்றிக்கே ஒரு காலத்திலுண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத. வஸ்துக்கள் பரமார்த்த ஸத்தாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள் தோன்றுகிறது போல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த அர்த்தம் 'மாயையை யுடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்' என்றும், 'பரமாத்மா மாயைகளால் அநேக ரூபமுள்ளவனாய்த் தென்படுகிறான்' என்றும் சொல்லும் பல ச்ருதிகளால் கிடைக்கிறது.

     மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமயமாயும், ஸத் என்றும் அஸத் என்றும் சொல்லமுடியாததாயும், ( सत् - ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்ல வொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை. असत्-- ஒருகாலத்திலும் இல்லாத முயற்கொம்பு போன்றவை.) தன்னாச்ரயத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை யடைவதுமான ஒரு வஸ்து. இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும். சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று. இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும், அதிலிருந்துண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது. காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறதுபோல ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும். இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயாகார்யம் -- மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.

     அன்றிக்கே ச்ருதிகள், 'பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறபடியாலும், இந்த ப்ரபஞ்சம் மித்யை (मिथ्या –– பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸூர்யகிரணத்தில் தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசி யுண்டு : அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்; ப்ருதிவீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத்.

      ஸத் என்பது ப்ராதிபாஸிகம், வ்யாவஹாரிகம், பாரமார்த்திகம் (प्रातिभासिकं, व्यावहारिकं, पारमार्थिकअम्) என்று மூன்றுவகைப் படும். இதில் ப்ராதிபாஸிகஸத்தாவது ப்ரஹ்மம் தவிர வேறு வஸ்துக்களில் தோன்றி, அந்த வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதனால் நிவ்ருத்திப்பது. அதாவது தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது முத்துச் சிப்பியின் ஸ்வரூபம் மறைந்து அது வெள்ளி என்று ப்ரமம் உண்டாகிறது. பின்பு ஸமீபத்தில் போய்பார்த்தால் இது வெள்ளியன்று, சுக்தி (शुक्ति – முத்துச்சிப்பி) என்று தெரிகிறது. இங்கு ப்ரமத்திற்கு
ஆதாரமான சுக்தியினுடைய ஸ்வரூபஜ்ஞானத்தால் வெள்ளி நிறுத்திக்கிறது. இவ்வாறு முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளிதான் 'ப்ராதிபாஸிகஸத்' என்று சொல்லப்படுகிறது.

     வ்யாவஹாரிகஸத்தாவது, ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூதபௌதிக ப்ரபஞ்சம். ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி-ப்ரபஞ்சம் ஏற்படுகிறது. வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்மஸ்வரூபத்தின் ஸாக்ஷத்காரம் உண்டாகும்போது முன் ஏற்பட்ட ஆகாசாதி - ப்ரபஞ்சம் நசித்துப் போகிறது. இதனால் ப்ரஹ்மஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும், ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்ரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.

     பரமார்த்தஸத்தாவது ஒருகாலத்திலும் நிவ்ருத்தியாமல் (निवृत्ति:- நீங்குதல்.) எல்லாக் காலங்களிலும் அநுவர்த்திக்கும் (अनुवृत्ति – இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர் குணப்ரஹ்மம்.

தொடர்வது

जीवेश्वरभेदभ्रमनिरूपणम्-- ஜீவேச்வர பேத ப்ரம நிரூபணம்

சனி, 10 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 4

 

अद्वैतसिद्धान्त प्रकरणम् ॥
அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்.
இனி அத்வைத ஸித்தாந்தத்தை நிருபிக்கிறேம்.
இதற்கு ப்ரவர்த்தகர் ஸ்ரீ சங்கராச்சாரியர்.



ब्रह्मैकं परमार्थसत्तदितरन्मायामयत्वान्मृषा
ब्रह्मैवैकमुपाधिबिम्बितमतो जीवेशभावं गतम् ।
भ्रान्तिस्संसृतिरस्य तत्प्रशमनं मुक्तिस्तदप्यात्मनो
ब्रह्मैक्यावगमाच्छूति श्रवणजादित्याद्दुरद्वैतिनः ॥

ப்ரஹ்மைகம் பரமார்த்த-ஸத் ததிதான் - மாயா - மயத்வான்-ம்ருஷா
ப்ரஹ்மைவைக முபாதி -பிம்பித-மதோ ஜீவேச-பாவம் கதம் 1
ப்ராந்திஸ் - ஸம்ஸ்ருதி-ரஸ்ய தத்-ப்ரசமனம் முக்திஸ்-ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி-சரவண-ஜாத் இத்யாஹு ரத்வைதிந்:11

து இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ சலோகம். இதன் அர்த்தம்:-

ஏகம் = தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும்
ஒரு தர்மமும் இல்லாததான, ப்ரஹ்ம-ஆத்ம வஸ்து, பரமார்த்தஸத்பரமார்த்தமாயுள்ளது
(
ஆத்மவஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது)
   இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மாதவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும், ஆத்மவஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது. இங்கு 'ப்ராதிபாஸிகஸத்' 'வ்யாவஹாரி கஸத்' இவைகளைக்காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக 'பரமார்த்தஸத்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'ததிதரன் ... ம்ருஷா'-ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது மாயையின் கார்யமானதால் பொய்; 'ப்ரஹ்மை.......கதம்'-ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய் அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும் ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

   'ப்ராந்தி: அஸ்ய'ஜீவாத்மாவுக்கு நான்ஞாதா, நான்கர்த்தா, நான்போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

'தத்ப்ரசமனம் முக்தி:' அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்,

   ததபி.........ச்ரணஜாத்' தத்வமஸி என்கிற வேதாந்தவாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால் (தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்யஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி யுண்டாகிறது.

'இத்யா... :' என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

 

1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிருபண ப்ரகரணம்.

ப்ரிதிவீ,(पृथिवी ––பூமி) ஜலம், தேஜஸ், (तेझः -அக்னி) வாயு, ஆகாசம் என்று பெயருடைய பஞ்சபூதங்களும், அவைகளுடைய கலப்பாலுண்டான 'பௌதிகம்'(भौतिकं - பூதங்களிலிருந்து உண்டானவை) என்று பெயருடைய சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமானவையன்று. பாலைவனத்தில் மத்யாஹ்நத்தில் (मध्याह्नम्) ஸூர்யகிரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத ஜலப்ரவாஹமும் அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையாயில்லாதபோதிலும் உள்ளது போல் தோன்றுகிறது.அங்கே பரவிய சூரியகிரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல, இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்சரூபமாய்க் காணப்படுகிறது. இதுதான் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

  வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்மஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படு வானேன் எனில்- வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது. இந்த மாயைக்குத் தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம். அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.
   இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு. அதனால்தான் இது ஸச்சிதாநந்தஸ்வரூபமென்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்மஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று. இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

   ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று 'ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆநந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்' என்றிது முதலிய ஶ்ருதிகளாலும் அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் -- கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் பாலைவனத்தில் பரவின ஸூர்யகிரணத்தில் ஜலப்ரமம் உண்டாகிறது. இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது. அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும். அந்த வஸ்து ஸத்யமன்று என்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு *ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படியே மேல் மேல் ஆதார #பரம்பரை ஒப்புக்கொள்ளவேண்டியதாக வருகிறது. ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதே.

*ஆதாரம் -- எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது ஆதாரம்.

#பரம்பரை -- ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.

தொடர்வது 
प्रपञ्चमिथ्यात्वनिरूपणम्  –– ப்ரபஞ்ச மித்யாதவ நிரூபணம் 

 


புதன், 7 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3

॥द्वैतसिद्धान्तप्रकरणम्॥

த்வைத-ஸித்தாந்த-ப்ரகரணம்.


இந்த ஸித்தாந்த-ப்ரவர்த்தகர்

ஸ்ரீ ஆநந்த-தீர்த்தர்.

श्रीमन्मध्वमते हरिः परतरः सत्यं जगत्तत्वतो

भिन्ना जीवगणा हरेरनुचरा नीचोच्चभावं गताः ।

मुक्तिर्नैजसुखानुभूतिरमला भक्तिश्च तत्साधनं

ह्यक्षादित्रितयं प्रमाणमखिलाम्नायैकवेद्यो हरिः ।।


ஸ்ரீமந்- மத்வ - மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ

பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா: |

முக்திர் - நைஜ-ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் –– ஸாதனம்

ஹ்யக்ஷாதி - த்ரிதயம் ப்ரமாணமகில- ஆம்நாயைகவேத்யோ ஹரி: II


இந்த சலோகத்தின் தாத்பர்யத்தை விவரிக்கிறோம். ஸ்ரீ மஹாவிஷ்ணு எல்லாவற்றைக் காட்டிலும் மேற்பட்டவன். இவனிடத்தில் எல்லா குணங்களும் நிறைந்திருக்கின்றன; அஜ்ஞானம் முதலிய ஒருவித தோஷமும் கிடையாது. ஆகையால் இவனுக்கு ஸர்வோத்தமத்வம் ஏற்பட்டிருக்கிறது. இவன் தான் ஜகதீச்வரன்; இவன்தான் பர-ப்ரஹ்மம். இவன் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி முதலான எட்டுக் காரியங்களைச் செய்கிறான். அவையாவன-ஸ்ருஷ்டி, ஸ்திதி, ம்ஹாரம், நியமனம், ஞானம், பந்தம், மோக்ஷம், இவன் ஸர்வஜ்ன், ஜகத்திலுள்ள ஸர்வ பதார்த்தங்களைச் சொல்ஓம் சப்தங்களால் மஹாயோக-வ்ருத்தியைக் கொண்டு அவனே சொல்லப்படுகிறான். மஹாயோக-வருத்தியாவது-சப்தத்தின் பூர்ணமான அவயவ-சக்தி-விசேஷம்.


    இவனுக்கு அப்ராக்ருதமாய் நித்யமான ஒரு சரீரமுண்டு. இந்த சரீரத்தில் பாதம் முதல் தலை யளவான ஸர்வாவயவங்களும் ஞானாநந்தாத்மகமாயிருக்கிறது. 'இதில் கண், காது முதலான எல்லா இந்திரியங்களும் நித்யமாயுண்டு, ஒவ்வொரு இந்திரியமும் தனித்தனியே ரூபம் ரஸம் முதலிய எல்லாவற்றையும் க்ரஹிக்க ஸாமர்த்தியமுள்ளது. இந்த விக்ரஹமும், இதன் அவயவங்களும் இவன் ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவை யன்று. இவன் ஒருவன் தான் 'ஸர்வத்திலும் ஸ்வதந்த்ரன்.


    இவன் வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்றும், மத்ஸ்யம், கூர்மம் முதலானதும், கேசவன் முதலானதுமான அநேக ரூபங்களுள்ளவன். எல்லா ரூபங்களும் ஞான-ஆநந்தாதி-குணங்களால் நிறைந்தவைகள். அளவிடமுடியாதவைகள். இவனிடத்தி லிருக்கும் ஞான-ஆநந்தாதி குணங்கள், க்ரியைகள், ரூபரஸாதிகள் எல்லாம் 'ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று.


இவனுக்கு லக்ஷ்மி என்று ஒரு பத்னியுண்டு. இவள் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவள். இவனொருவனுக்கு மாத்ரம் ஆதீனப்பட்டவள். இவனைக் காட்டிலும் ஞான-ஆநந்தாதிகளால் குறைந்தவள். இவள் தான் பகவானுக்கு அடுத்தவள். ஜீவாத்மாக்களெல்லாம் இவளுக்குத் தாழ்ந்தவர்கள். பரமாத்மாவுக்குப் போலவே இவளுக்கும் ஞான-ஆனந்த-ரூபமாய் அப்ராக்ருதமான சரீரமுண்டு. அநேக ரூபங்களுமுண்டு. அஜ்ஞானாதி தோஷங்கள் கிடையாது. இவளும் பரமாத்மாவைப் போலவே மஹா-யோக வ்ருத்தியால் எல்லா-சப்தங்களாலும் சொல்லப்படுகிறாள். இவளும் ஸர்வதேசத்திலும் வ்யாபித்திருக்கிறாள்.


இவர்களிருவர்தான் நித்ய-முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது; எல்லோருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைகிறவர்கள். இந்த ச்லோகத்தில் "ஹரி:" *பரதர: (परः – உயர்ந்தவன். परतरः –– அதற்கும் உயர்ந்தவன்) என்கிற வித்தால் எல்லா ஜீவர்களைக் காட்டிலும் லக்ஷ்மி மேற்பட்டவள் என்றும் இவளைக் காட்டிலும் விஷ்ணு மேற்பட்டவன் என்றும் ஸூசிப்பிக்கப் படுகிறது. சராசர ரூபமான ஸ்கல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது; அஸத்யமன்று. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக்காட்டிலும் ஒருவருக்கொருவரும் வேறுபட்டவர் கள். இவர்கள் ஸ்த்ரீ-ஜாதி, பும்.ஜாதி என்று இருவகைப்பட்டவர்கள். புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார-தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ-சரீரத்தை யடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ-ஜாதீயராகவே இருப்பார்கள்.. ஸ்த்ரீ-ஜாதியர் ஸம்ஸார-தசையிலும் மோக்ஷ-தசை யிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பார்கள்.


    இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்யஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப் பட்டிருப்பார்கள். இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி கணம், பித்ரு -கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தமகணம் என்று ஐந்து வகையினர். அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை யுண்டு. ப்ரஹ்மா, வாயு முதலானவர் தேவ- கணங்கள் ; நாரதர் முதலியவர் ரிஷி-கணங்கள்; சிராதிகள் பித்ரு-கணங்கள்; ரகு அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி-கணங்கள்.

(தொடரும்) 

 

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 2

॥श्रिः॥ 

श्रिनिवासपरब्रह्मणे नमः 

॥श्रिसिद्धान्तत्रयसंग्रहः॥  

 आत्मीयनित्यनिरवद्य नितान्तहृद्य-
     विद्योतमानवपुरुत्थमहः प्ररोहै । 
मेघङ्करं वृषगिरेः शिखरं वितन्वन् 
    देवो दयाजलनिधिर्दिशतु श्रियं नः ॥ 

ஆத்மீய நித்ய நிரவத்ய நிதாந்த ஹ்ருத்ய 
    வித்யோதமான வபுருத்த மஹ: ப்ரரோஹை: 
மேகங்கரம் வ்ருஷகிரே: சிகரம் விதந்வந் 
    தேவோ தயா ஜலநிதிர் திசது ஸ்ரீயம் ந: 

 

இதன் அர்த்தம் -

     தன்னுடையதாய், எப்பொழுதும் தோஷலேசமில்லாததாய், மிகவும் அழகானதாய், விசேஷித்துப் ப்ரகாசித்துக்கொண்டிருக்கும் திருமேனியி னின்றும் உண்டாகியிருக்கிற காந்தியின் முளைக்குறுத்துகளால் திருமலை யினுடைய சிகரத்தை, மேகத்தை உண்டாக்குவதாகச் செய்துகொண்டிருக்கிற வனாயும், கருணைக்கடலாயுமிருக்கிற ஶ்ரீநிவாஸன் நமக்கு ஞானஸம்பத்தை கொடுப்பானாக. 

 தாத்பர்யம்:- அனுபவிக்க அநுபவிக்க திருப்தியில்லாதபடி மேல் மேல் அநுபவத்தில் ஆசையையுண்டாக்கும் அழகையுடைய, நீர் கொண்ட மேகம் போன்ற தம்முடைய திருமேனி காந்திகளால் திருமலையின் சிகரத்தை மேகத்தால் வ்யாபிக்கப்பட்டது போல் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீநிவாஸன் நமக்கு ஜ்ஞான ஸம்பத்தைக் கொடுப்பானாக. லோகோஜ்ஜீவனார்த்தமாக ஸர்வேச்வரன் ப்ரவர்த்திப்பித்த உபநிஷத்துக்களின் ஸித்தாந்தமாக அவ்வோ வாதிகள் நிர்ணயித்த ஸித்தாந்தங்கள் பல உண்டு. அவைகளில் த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று சொல்லப்படுகிற இம்மூன்று ஸித்தாந்தங்களின் ஸ்வரூபம் இங்கு ஸங்க்ரஹமாக நிரூபிக்கப்படுகிறது.

திங்கள், 5 ஜனவரி, 2026


                           ||ஸ்ரீ :||


முகவுரை


    


||ஸ்ரீ :||

முகவுரை

 

இந்த கிரந்தத்தின் கர்த்தாவான மஹாமஹோபாத்யாய ஸ்வாமியை அறியாதார் இல்லை. ஆஸேது ஹிமாசலம் உள்ள பண்டிதர்கள் இவருடைய அரும் பெருமையையும் அநிதர ஸாதாரணமான வைதுஷ்யத்தையும் அறிவர். அத்யாத்ம சாஸ்த்ர ஞானத்தில் இவரினும் பெரியாரில்லை. வயதில் மிக முதிர்வும் மிக்க தேக அசக்தியுமுள்ள இந்த ஸ்வாமியினுடைய அத்யந்த விலக்ஷணமான ஞானத்தை ஒரு அத்யாத்மதீபம்போல் இந்த கிரந்தமுகமாக உலகத்திற்கு சாச்வதமாய் பிரகாசித்துக் கொண்டு யாவர்க்கும் தெளிவான ஞானம் உண்டாகும்படிக்கும், ஸம்சய விபாயயங்கள் ஏற்படாமல் இருக்கும் படிக்கும் மிகத் தெளிவாக இந்தகிரந்தம் செய்தருளியிருப்பது லோகோபகாரம் ஆகும். ஸங்கல்ப ஸுர்யோதயத்தின் பத்தாவது அங்கத்தில் "வித்யாஸந்ததிக்கும் உலகத்தில் விச்சேதம் வாராதபடி செய்ய விஞ்ஞாபனம் செய்கிறேன். ச்ருதிகளின் பாக்யமான பகவானிடத்தில் ஸர்வதா மனதையுடைய இம்மஹான் பூமியில் எழுந்தருளி யிருக்கிற ஸமயத்திற்குள் தத்வம் முழுவதுமறிந்த இவரிடம் அறியவிரும்பும் விஷயங்களை எல்லாம் அவதானத்தோடுகேட்டு அறிந்து கொள்வீராக" என்று ஸாதித்திருக்கிறபடிக்கும் "பீஷ்மர் எழுந்தருளி யிருப்பதற்குள் மனதிலுள்ள ஸம்சயங்களை எல்லாம் கேட்டுத் தீர்த்துக் கொள்ளும்" என்று தர்மபுத்திரரைப் பார்த்து ஸர்வசம்சயங்களுக்கும், சேத்தாவான கீதாசார்யன் ஏவினபடிக்கும் இந்த விபூதியில் இந்த ஸ்வாமி எழுந்தருளியிருக்க நாம் பாக்யம் பெற்றிருக்கிற காலத்திலேயே இவருடைய ஞானங்கள் எல்லோருக்கும் பிரயோஜனமாகும்படி பிரகாசமாவது நம் 

முடைய பாக்யமே. 


உத்தரதேசத்தில் வித்யைக்குப் பெயர்போன காசி முதலிய மஹா நகரங்களில் வேதாந்த வாதங்கள் பிரபலமாக நேர்ந்த காலங்களில் அங்கே ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த ஜகத் குருக்களான ஸ்ரீஉத்தராதிஸ்வாமிகளும், ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியும் இவரை எழுந்தருளப்பண்ணி இவரைக் கொண்டு வாதங்கள் செய்வித்து அங்கேயுள்ள எல்லா வித்வான்களும் இவருடைய பாண்டித்யத்தை புகழ்ந்தது எல்லோருக்கும் பிரஸித்தம்.  ஈசாவாஸ்ய உபநிஷத்துக்கு வியாக்யானம் செய்கிறது என்கிற  வியாஜத்தைக்கொண்டு 

.எல்லா உபநிஷத்துக்களையும் அதிலும் முக்யமான சாந்தோக்யத்திலுள்ள ஸத்வித்யையையும் அபூர்வமாகவும் அத்புதமாகவும் அசும்பிதசரமாகவும் விசாரித்து இவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். அது சீக்கிரத்தில் பிரசுரமாகும். ஆனால் அந்த கிரந்தம் வித்வான்கள் மட்டும் நன்றாய் அறியக்கூடியது. இந்த கிரந்தம் மிகத்தெளிவாக எல்லோரும் அறியும்படி தமிழில் எழுதியது. இதில் மூன்று மதங்களின் பிரமாணப்பிரமேயங்களை எளிய நடையில் தெளிவாய்க் காட்டியிருக்கிறது. ஸ்ரீபாஷ்யம் ஸ்ரீநிவாஸனை முன்னிட்டுக்கொண்டு அவதரித்ததுபோல இவரும் வட மாமலையின் உச்சியை மேகமயமாகச்செய்யும் கிருஷ்ணமேகத்தினிடம் சாதகபக்ஷியின் விருத்தத்தை அவலம்பித்து இந்தக் கிரந்தத்தை செய்தருளியிருக்கிறார். விசிஷ்டாத்வைத தரிசனத்திலுள்ள ஸம்பிரதாய பேதாம்சங்கள் ஒன்றையும் பாராட்டாமல் எல்லோருக்கும் பொதுவாக தரிசனம் விளக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 20 வருஷங்களுக்கு மேற்பட்ட காலமாக உடையவர் ஸம்பிரதாயங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் பேதங்களைப்பற்றி யாதொரு விவாதமும் கூடாதென்றும் எல்லோரும் கலந்து அநுபவிக்க வேண்டும் என்றும் இந்த ஸ்வாமி பல ஸ்தஸுகளில் உறுதியாக ஸாதித்திருக்கிறார். அந்த நீதியிலேயே இந்த கிரந்த செய்தருளப்பட்டது எல்லோருக்கும் ரஸ்யம். 


 

ஸ்ரீபாஷ்யபிரஸ்தானத்தில் இந்த ஸ்வாமி அநவரதமும் பரிச்ரமப் பட்டுக் கொண்டேயிருந்துவருவதால் இந்தக் கிரந்தத்தில் பல இடங்களில் ஸ்ரீபாஷ்யத்தின் பதங்களும் பாவங்களும் அப்படியே ஒத்திருப்பதைக் காணலாம். 51 வது பக்கத்தில் "கண்களுக்கெட்டாத அர்த்தங்களை ச்ருதி தானே சொல்லி நிஷேதிக்கின்றதென்று சொன்னதாக ஆகும். இது பைத்தியக்காரனுடைய வியாபாரம் போலாகும்", என்று ஸாதித்திருப்பது  पुनस्तदेव नानुन्मत्तः प्रतिषेधति  என்கிற "ப்ரக்ருதைதாவத்' ஸூத்திரத்தின் பாஷ்ய வாக்யமே ஆகும். 'அநந்தசப்தத்தின்' அர்த்தத்தை விளக்குகையில் வஸ்து பரிச்சேதம் இல்லை என்பதற்கு "தனக்கு மேற்பட்ட ஒரு வஸ்து இல்லாமல் இருக்கையே ஒழிய மற்றொரு வஸ்துவே யில்லை என்னும்படி இருக்கை அன்று" என்று 55-வது பக்கத்தில் ஸாதிக்கப்பட்டது. இரண்டு பிரகாரங்களாக வஸ்துவினால் அளவில்லாமை ஸித்தாந்தத்தில் உபபாதிக்கப் பட்டிருந்தாலும் ஸர்வவஸ்து ஸாமானாதி கரண்யம் பொருந்தும். யோக்யதை என்கிற பிரகாரம் ந்யாய ஸித்தாஞ்ஜன வியாக்யானத்தில் ஸாதித்தபடி புத்தியில் நிச்சங்கமாக ஆரூடமாகாததாலும் இத்தனை குணந்தானுடையவன் என்று வஸ்துவின் உயர்த்தியை அளவிட இயலாது என்கிற பக்ஷத்தில் மற்றொரு பக்ஷமும் அடங்கிவிடுவதாலும் முதல் பக்ஷமே உயர்ந்தது என்பதைத் திருவுள்ளம்பற்றி ஸாதித்தது என்று கொள்ளவேண்டும். இங்கே இவ்வளவு குணந்தான் உள்ளவன் என்று வரையறுக்க இயலாமை என்கிற பக்ஷமே அநேகமாய் ச்லாக்யம். ஸ்வரூபத்தினாலும் குணத்தாலும் விபூதியாலும் மற்ற எந்த ஆகாரத்தினாலும் வேறெந்த வஸ்துவைக்காட்டிலும் இளப்பமாய் இருப்பது வஸ்து பரிச்சேதம் என்று ந்யாய ஸித்தாஞ்ஜனத்தில் நிஷ்கர்ஷமாய் அருளிச்செய்யப்பட்டது. 'எல்லாப் பொருள்களிலும் உட்புகுந்து உயிராக இருந்து ஸத்தையைக் கொடுத்து ஸ்திதியையும் பிரவ்ருத்தியையும் மஹாகுணத்தால் தான் ஸர்வ வஸ்து ஸாமாநாதிகரண்யத்தை ஸாதிக்க வேண்டுமாகையால் குணங்களி னால் நிரதிசயமான ப்ரகர்ஷம் என்கிற பக்ஷம் அழகானது' என்று "ஜந்மாத் யதிகரண' ச்ருதப்ரகாசிகை. 'ஸர்வவஸ்து ஸமாநாதிகரணார்ஹத்வ மும் இதில் அந்தர்கதம். ஸர்வ சரீரகத்வம்தானே அது. அதுவும் நியமந, தாரண சேஷித்வங்களின் எல்லைதானே' என்று அங்கே அருளிச்செய்யப்பட்டது. 


"ஸ்வப்நத்தில் கண்ட வஸ்து தூங்கியெழுந்தபின் கண்ட தொழிய ஒன்றுமில்லை என்றும் முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய் அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகின்றது' என்று இங்கே 46-வது பக்கத்தில் ஸாதிக்கப்பட்டது அப்யுபகமவாதமென்று கொள்ளலாம். ஸ்ரீபாஷ்யத்தில் ஜிக்ஞாஸாதிகரணத்தில் அஸத்யமானதிலிருந்து ஸத்யத்திற்கு உத்பத்தியை நிரஸநம் செய்யுமிடத்து, ஸ்வப்னத்தில் ஏற்படும் புத்திகளுக்கு அஸத்யத்வம் இல்லை. அங்கே பார்க்கப்படும் விஷயங்கள் தானே பொய்யாகும். அந்த விஷயங்களுக்குள் தானே இல்லை என்கிற வாதம் காணப்படுகிறது. ஏற்பட்ட அறிவுகள் ஏற்படவில்லை என்று வாதமில்லையே யென்று ஸாதித்தது அப்யுபகம வாதத்தால் என்று ச்ருத ப்ரகாசிகையில் ஸாதிக்கப்பட்டது. அப்யுபகமமாவது :- "பிறர் சொல்லுவதை யாம் வாஸ்தவத்தில் நம் மதத்தில் ஒப்புக்கொள்ளா விடினும் கக்ஷிக்காக பிறர்சொல்லுவதை ஒப்புக்கொண்டே சொல்லுவது”. वैधर्म्याच्च न स्वप्नोदिवत् என்கிற ஸுத்திரத்தில் 'ஸ்வாப்ந பதார்த்தங்கள் அஸத்யமென்று ஒப்புக்கொண்டு அப்யுபகமவாதமாக பேசப்படுகிறது “என்று ச்ருதப்ரகாசிகை யில் ஸாதிக்கப்பட்டது. காரண தோஷமும் பாதகப்ரத்யயமும் ஸ்வாப்ந பதார்த்தங்களுக்கு உள்ளதாகையால் அது பிராந்தியாகும் என்று அங்கே தீபத்திலும் ஸாரத்திலும் ஸ்ரீபாஷ்யத்திலும் அருளிச் செய்யப்பட்டது. ஸூத்திரத்திலுள்ள சகாரத்தினால் ஸ்வப்ந பதார்த்தங்களும் அஸத்யமல்ல என்று பின்னாலே ஸ்வப்நாதிகரணத்தில் காட்டப்போவதாக ஸூசிப்பதாக தீபத்தில் வ்யாக்யானம் செய்யப்பட்டது. 

ஸ்வப்னாதிகரணத்தின் அதிகரணஸாராவளியில்

 

स्वप्नेर्थास्सन्तु सृष्टास्तदपि बहुविधा दुस्त्यजा भ्रान्तिरत्र 

प्रध्वस्तानामिदानीन्तनवदनुभवात्स्थायितादिभ्रमाच्च । 

सत्यं श्रुत्यादिसिद्धे श्रुतिपरिहरणायोगतः सृष्टिमात्रं 

स्वीकृत्यांशे तु बाधाद् भ्रममपिहि यथाजागरं न क्षिपामः ॥ 


என்கிற ச்லோகத்திலும் அதின் வியாக்யான சிந்தாமணியிலும் ஸ்வப்ந பதார்த்தங்கள் பிராந்தி ஸித்தங்கள் ஒழிய உண்மையல்ல என்னும் பூர்வபக்ஷம் ஸத்யம் என்று பாதி அங்கீகாரம் செய்யப்பட்டது. லோகாநுபவத்தினாலும் அவைகள் பொய் என்று தோன்றினாலும் ச்ருதியில் ‘ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான்' என்கிற ஸ்ருஷ்டி சப்தத்தால் அறிவிக்கப்படும் ஏதோ ஒரு. விதமான அநிர்வாச்யமும் லோகவிஜாதீயமும் நினைக்க நினைக்க கேவலம் ஆச்சர்யமும் ஒரு அஸ்திரமுமான இருப்பைக் கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் இல்லை என்று பாதிக்கப்படுவதால் ஜாக்ரத்தசையில் பாதத்தால் பிராந்தி என்று கொள்வதுபோல இங்கேயும் பிராந்தித்வத்தை அங்கீகரிக்கவேண்டுமென்று சிந்தாமணி. 'ச்ருதி சொல்லுவதையும் ஸ்வப்நாதிகரண ஸூத்ரங்கள் சொல்லுவதையும் கொண்டுமட்டும் நாங்கள் அஸத்யமல்ல வென்று லோகப்ரதீதியையும் தள்ளிப் பேசுகிறோம்' என்று ச்ருத ப்ரகாசிகையில் காண்கிறோம். சததூஷணியில் 30-வது வாதத்தில் ஸ்வப்நத்தில் ஏற்படும் ப்ரமரூபமான ஞானம் ஸத்யமாகையாலும் அந்த ப்ராந்தி ஞானத்தினால் சுபாசுபமான பலங்கள் சித்தமாகையாலும் அதனால் அஸத்யத்திற்கு உத்பத்தியென்பது ஸித்திக்காது. ஸ்வப்ந பதார்த்தங்கள் ஈச்வரஸ்ருஷ்டம் என்கிற பக்ஷத்தில் அவைகள் மித்யை என்பது ஸித்திக்காதாகையாலும் என்றும் ஸ்வப்நாதிகளிலும் பதார்த்தங்களைப் பார்ப்பது என்பது உள்ளது தானே. விஷயங்கள் மட்டுந்தானேயில்லை என்று பாதகப்ரத்யயம் உண்டாகிறது. எந்த இடத்தில் ஸ்வப்நத்தில் ஒரு பொருள் அறியப்படுகிறதோ அந்தவிடத்தில் அது இருக்கிறது என்பதில்லையே யென்னில் அது உசிதமில்லை. அந்தக் காரணத்தினால் பிராமாண்யம் மட்டுமே நிவ்ருத்திக்கும், அறிவுக்கு விஷயமானது போகாது என்று ஸாதிக்கப்பட்டது. இந்தக் கிரந்தத்தின் 56- வது பக்கத்தில் புராணங்களில் சொல்லப்படும் ஸ்வப்ந திருஷ்டாந்தத்திற்கு ஸ்வப்நத்தில் காணப்படும் வஸ்துக்கள் போல அஸ்திரமென்பது தாத்பர்யம் என்று அஸ்திரத்வாம்சத்தை "மின்னின் நிலையில்" என்கிற பிரகாரத்தினால் காட்டப்பட்டது. வாசஸ்பதி மிச்ரரும் மித்யாத்வம் என்று அவர்கள் சொல்வது அநித்யத்வம் என்று ஓரிடத்தில் கூறியிருக்கிறார். அதை ஸ்ரீ ரங்கராமாநுஜ ஸ்வாமியும் எடுத்துக் காட்டியிருக்கிறார். அப்படிக்கொள்ளில் ஒரு முக்யமான பேதாம்சம் போய்விடும். இது 43-வது பக்கத்தில் ஸ்பஷ்டமாய் ஸாதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த கிரந்தத்தை ஸேவித்துக்கொள்வதால் இந்த மதங்களின் முக்யமான அம்சங்களை எல்லோரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். 





திருச்சினாப்பள்ளி,                                                                                 .வி.கோபாலாசாரி
12-6-34
.