சனி, 4 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்ப‌டி ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்னும் அர்த்தத்தைஇர‌ண்டு சுலோக‌ங்க‌ளினால் உபபாதித்த‌ருளி, அந்த‌ ஸேவ்ய‌த்வ‌ம் முத‌லிய‌ ப‌த்துக் குண‌ங்க‌ளையும் ப்ர‌திபாதிக்கும் க்ர‌ம‌த்தை நிரூபிக்கக்கோலி, அதை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ ஒரு ச்லோக‌த்தில் அருளிச் செய்கிறார் ---- “ப்ரூதே” என்றார‌ம்பித்து.

ब्रूते गाथा सहस्रं मुरमथनगुणस्तोमगर्भं मुनीन्द्र:

प्रत्येकम् चात्र गाथा: प्रथितविभुगुणा: स्पष्टमध्यक्षयाम: |

तत्रासंकीर्णतत्तद्शकगुणशतस्थापनौचित्ययुक्तान्

ऐदंपर्यावरुद्धानगणितगुणितान् तद्गुणान् उद्गृणीम: ||

ப்₃ரூதே கா₃தா₂ ஸஹஸ்ரம் முரமத₂நகு₃ணஸ்தோமக₃ர்ப₄ம் முநீந்த்₃ர:

ப்ரத்யேகம் சாத்ர கா₃தா₂: ப்ரதி₂தவிபு₄கு₃ணா: ஸ்பஷ்டமத்₄யக்ஷயாம: |

தத்ராஸங்கீர்ணதத்தத் த‌3ஶககு₃ணஶதஸ்தா₂பநௌசித்யயுக்தாந்

ஐத₃ம்பர்யாவருத்₃தா₄நக₃ணிதகு₃ணிதாந் தத்₃கு₃ணாந் உத்₃க்₃ரு̆ணீம: ||

முநீந்த்ர: - முனிவர்களுள் தலை சிறந்து நிற்கும் ந‌ம்மாழ்வார், காதாஸஹஸ்ரம் – ஆயிரம் பாசுரங்களையும், முரமதனகுண‌ ஸ்தோம கர்ப்பம் – எம்பெருமானுடைய திருக்கல்யாண‌ குண‌ங்களின் கூட்டங்களைத் தம்முள் பொதிந்து கொண்டிருக்குமாறு, ப்ரூதே - அருளிச் செய்கிறர். அத்ரச - இத்திருவாய்மொழியில், காதா-பாசுரங்களை, ப்ரத்யேகம் - ஒவ்வொன்றும், ப்ரதிதவிபுகுணா:- எம்பெருமானுடைய குணங்களை வெளிப்படுத்துவனவாக, ஸ்பஷ்டம் - தெளிவாக, அத்ய க்ஷ‌யாம- கண்கூடாகக் காண்கிறோம், தத்ர - அதில், அஸ‌ங்கீர்ண தத்தத் தசககுணசத ஸ்தாபந ஔசித்ய யுக்தாத் - கூறியது கூறாத அந்தந்தப் பதிகங்களின் நூறு குணங்களை ஸ்தாபிப்பதில் பொருத்தமுடையனவாய், ஐதம்பர்யாவ்ருத்தாத் - அக்கருத்தையே வற்புறுத்துதலில் நோக்கமுடையனவாய், அகணித குணிதாத் - மறுமுறை கூறப்பட்டன வாயினும், (ப்ரயோஜனமுடையதாகையினாலே குற்றமற்றனவான), தத் குணாந் - அந்தந்தப் பாசுரங்களில் விளக்கப்படும் குணங்களை, உ.த்க்ருணீம - எடுத்துக் கொள்ளுகிறோம்..

இந்த ப்ரதிஜ்ஞை மேல் பதினோராம் சுலோக்ம் முதல் ப்ரதிப்ாதிக்கப்பட்டிருக்கும் ப்ரகாரம் மேலே திருவாய்மொழிதோறும் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சிற்சில குணங்கள் மறுபடியும் கூறப் பட்டிருந்தபோதிலும் அந்தத் திருவாய்மொழி ப்ரகரணத்திற்கு ப்ரயோஜனமாயிருப்பதினால் அவைகள் ஸங்க்ரஹிக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்து. கீழ் இரண்டாம் சுலோகத்தில் உபபாதிக்கப் புட்டிருக்கிற‌படியே திருவாய்மொழியாகிற திருப்பாற்கடலை ஆசார்ய ஸார்வபெளமன் தம்முடைய அநிதரஸாதாரணமானதும் அத்யுத்க்ருஷ்டமென்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஜ்ஞானத்தை ம‌த்தாக நாட்டி, யதிவரனார் மடைப்பள்ளி வந்த மண‌மாகிற யதிராஜமஹாநஸ ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாக் கொண்டு கடைந் தருளின பொழுது உண்டான குண விசேஷம் ஒவ்வொன்றையும் ஒரு ரத்னமாகக்கொண்டு அவற்றை எடுத்து ஒரு மாலையாகச் சேர்க்கும்பொழுது அந்தந்த ப்ரதான குணங்களை ப்ரதிபாதிப்பதில் உபயோகமிருப்பதினால் புனருக்தமேயாகிலும் மறுபடியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுலோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும்பொழுது அஸ்மத் ஸ்வாமி “ஸ‌ர்வந்த்தர ஸ்வதந்த்ரராகையாலே தட்டானாயிருந்து ரத்னஹாரம் செய்தருளினபடி இது, எப்படி ஒரு தட்டான், ஒரு உத்தமமான ஹாரத்தைச் செய்யும்பொழுது, பல வகைகளான ரத்னங்களைச் சேகரித்து, அவற்றைப் பிரித்து, தன் முன் பல ரகங்களாக வைத்துக் கொண்டு, ஹாரத்திற்குப் பொருத்தமான பச்சை சிவப்பு வெள்ளை மஞ்சள் முதலிய கற்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டுவனோ, அதைப்போலவே திருவாய்மொழிப் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்ட குணங்கள் ஸ்வாமி தேசிகனுக்குத் முன்பே மானஸமாகத் தோன்ற, அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, ஒருமாலையாகக் கோக்கிருர் என்பது இங்கு விவக்ஷிதமாகும்" என்று நிர்வஹித்தருளும்படி இருந்தது.

இப்படித் திருவாய்மொழியினுடைய தாத்பர்யத்தை வெளியிடுகிற‌ இந்த ஸ்ரீத்ரமிடோப நிஷத் தாத்பர்யர‌த்னாவளியானது ஸந்த்வஸ்தர்கள் எல்லோராலும் தரிக்கப்பட வேண்டியது என்று அருளிச் செய்து உபோத்காதத்தை உபஸம்ஹாரம் செய்தருளுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக