செவ்வாய், 3 ஜனவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

  சுலோகம் 10

தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்
         கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
         லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் ||    (10)


மாகர்துதிக் கெட்டா மணவாள னின்றமப்ப
னாகுமவன் பாட்டுக் கருள்புரிதல் -- நாகிளம்பூஞ்
சோலைசூழ் வில்லிபுத்தூர்த் தோகாய்நீ சூடியருண்
மாலையா லன்றோ மகிழ்ந்து.           (10)


பதவுரை

         தே -- உன்னுடைய; தாதஸ்து -- தகப்பனாரோ என்றால்; ஸ்துதிலேஶ்வஶ்யாத் -- கொஞ்சம் தோத்திரத்தாலேயேகூட வசப்படக்கூடிய; மதுபித: -- பெருமாளிடமிருந்து; கர்ணாம்ருதை: -- செவிக்கு அமுதமான; ஸ்துதிஶதை: -- பல நூறு துதிப் பாசுரங்களாலும்; மஹத்தரபதாகுணம் -- மஹத்தரர் (மிகப் பெரியவர்) என்னும் திருநாமம் பெறுவதற்கேற்ற; (பதவிக்கேற்ற); ப்ரஸாதம் -- அநுக்ரஹத்தை; த்வந்மௌளி கந்த ஸுபகாம் -- உன்னுடைய கூந்தல் வாசனை ஏறியதால் ஸௌபாக்யம் பெற்ற; மாலாம் -- மாலையை; உபஹ்ருத்ய -- உபஹாரமாக ஸமர்ப்பித்து; லேபே -- பெற்றார்.

         கொஞ்சம் துதி செய்தாலேயே வசப்பட்டுவிடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

அவதாரிகை

         (1) ஆழ்வார்களெல்லோரும் உன்னைப் புத்திரி என்று அபிமானிக்கிறார்கள். ஆனால் நீ விஷ்ணுசித்தரிடமிருந்துதான் தோன்றியவளென்றீர். எல்லா ஆழ்வார்களும் அபிமானத் தாதைகளாய் இருந்தாலும் விஷ்ணுசித்தரை விசேஷித்துப் பிதா என்று கொள்ளக் காரணம் என்ன? அம்மா! எல்லா ஆழ்வார்களும் பொதுவில் ஆழ்வார்களென்ற மஹத்தான பதத்தைப் பெற்றவர்கள். ஆழ்வார் பதம் மஹத்தானது என்பதில் ஐயமில்லை. பெருமாளுடைய தசாவதாரங்கள்போல், அவர்கள் அவருடைய அபிநவ தசாவதாரங்கள். தமிழ்வேத மந்த்ர த்ரஷ்டாக்களான தச ரிஷிகள். மஹத் பதம் மஹர்ஷி பதம்தான். ஆழ்வார் பதமே மஹாபதமாயிருக்கையில், 'பெரியாழ்வார்' என்று உன் தகப்பனாருக்குத்தானே 'மஹத்தர' பதம் கிடைத்தது! மஹத்தான ஆழ்வார் பதத்திற்கும் மேற்பட்ட 'பெரிய' பதம் கிடைத்தது. அவர் வேதப் பாசுரங்களால் கிடைத்தது ஆழ்வார் பதம். உன் பிதாவால் நீ சூடிக்கொடுத்த மாலையை ஸமர்ப்பித்ததால் ஆழ்வார்களிலும் 'பெரிய ஆழ்வார்' என்னும் பஹுமான பதம் கிடைத்தது. மற்ற ஆழ்வார்கள் குடிக்கும் நீ ஸந்ததி என்று அபிமானத்தில் பேசினாலும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லையே!

         (2) பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று முன் ச்லோகத்தின் முடிவில் ஸாதித்தார். பெரியபிராட்டியாரை 'கந்தத்வாராம்' என்று ஸர்வகந்தரான பெருமாளுடைய ஸௌகந்தயத்திலீடுபட்ட வேதம் புகழ்ந்தது. அவளுக்கு உடன் பிறந்தாளும், அவளோடுகூட பெருமாளுக்குப் பத்தினியுமாவதற்கு ஆநுகுண்யத்தைக் கோதையின் ஸர்வோத்தரமான ஸௌகந்த்யத்தைக் காட்டி ஸமர்த்திக்கிறார்.

         தாதஸ்து தே -- உன் தகப்பனாரான பெரியாழ்வாரோ என்றால்; விசேஷித்து உன் பிதாவானதால் மற்ற ஆழ்வார்களிலும் மேலாக 'பெரிய' என்னும் உயர்த்தியான உபபதத்தைப் பெற்றார். 'து' என்பதால் இந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. 'உன் தகப்பனார்' ஆனதுபற்றித்தான் இந்த ஏற்றம். ஆழ்வாரானதால் மட்டுமல்ல. உன் விஷயமான இந்த கோதாஸ்துதியைப் படிப்பவன்கூட அவருக்கு (பெருமாளுக்கு) பஹுமான்யராகும்போது உன் மாலையை ஸமர்ப்பித்த உன் தகப்பனாரை இப்படி அவர் பஹுமானியாது இருப்பாரோ?

         மதுபித:-- வேதங்களை அபஹரித்த மது என்னும் அஸுரனை ஸம்ஹரித்து வேதங்களை மீட்ட பெருமாளிடமிருந்து. இதனால் வேதங்களின் அரும்பெருமையைப் பெருமாளே அறிந்தவர் என்பது ஸூசனம். வேதங்களை அப்படி அரும்பெரும் பாடுபட்டுப் பஹுமானிக்கும் பெருமாள் வேதங்களான ஆழ்வார்கள் ப்ரபந்தங்களைப் பஹுமானித்து அவர்களுக்கு 'ஆழ்வார்கள்' என்று 'மஹத்' பதத்தை அளிப்பது உசிதமே. வேதங்களை அஸுரர் அபஹரித்தாலும், தமிழ் வேதங்களிருந்தால் போதும். ஸம்ஸ்க்ருத வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தது போதுமோ? அதன் பொருளைத் தெளிய தமிழ் மறைகளும் வேணும்.

         ஸுத்திலேஶவஶ்யாத் - 'ஸ்தவப்ரிய:' என்று திருநாமம். ஸ்வாராதரென்பர். ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரென்பர்.

         கர்ணாம்ருதை: -- "ப்ரதி ச்லோகமும் அபத்தமாயிருந்தாலும், அநந்தனுடைய யசோமுத்ரை உடைய திருநாமங்கள் கலந்திருப்பதால், ஸாதுக்கள் கேட்டும், பாடியும் மகிழ்வர்" என்று பகவத் ஸ்தோத்ரங்களின் பெருமையை சுகர் மகிழ்ந்து பாடினார். "கிருஷ்ணகர்ணாம்ருதம்", "ராமகர்ணாம்ருதம்" என்று பகவத் ஸ்தவங்களுக்குத் திருநாமமிடுவர்.

         ஸ்துதிஶதை: -- யோகியான ஒரு ஆழ்வார் 'பத்தே' பாசுரங்கள் பாடினார். உன் தகப்பனார் கிட்டத்தட்ட ஐந்நூறுகள் பாடினார்.

         அநவாப்தபூர்வம் -- கர்ணாம்ருதமான வேதங்களான பல நூறுகள் பாடியதற்கு மற்ற ஆழ்வார்களைப்போல, 'ஆழ்வார்' என்று திருநாமம் மட்டும் கிடைத்தது. 'பெரிய" என்று ஏற்றப் பதம் கிடைக்கவில்லை. மற்ற ஆழ்வார்களுக்கும் அது கிடைக்கவில்லை.

         த்வந் மௌளிகந்த ஸுபகாம் -- தம்முடைய கர்ணாம்ருத வேதப் பாசுரங்களால் கிடைக்கவில்லை. தம் மாலைகளால் கிடைக்கவில்லை. நீ அவதரிக்குமுன் எத்தனையோ பூமாலைகள் ஸமர்ப்பித்தவரே. உன் பூமாலையால் கிடைத்தது. பாக்களால் கிடைக்கவில்லை. உன் ஒரு பூமாலையால் கிடைத்தது. நீ சூடி வாசனையேற்றிக் கொடுத்த ஒரு பூமாலையை உபஹாரமாக ஸமர்ப்பிக்கும் பாக்யம் உன் பிதாவுக்குத்தானே கிடைத்தது! உன் சிரஸான மூளையின் (புத்தி வ்ருத்திகளின்) வாசனை உன் பாமாலையிலேறியுளதுபோல், நீ சூடின பூமாலையிலும் ஏறியது. "மௌளி" என்பது மூளையென்னும் புத்திஸ்தானமுமாகும். உன் கூந்தல் வாசனையால் மாலை ஸுபகமாயிற்று என்றால், உன் ஸௌபாக்யத்திற்குக் கேட்க வேணுமோ?

         மாலாம் உபஹ்ருத்ய -- மாலையை உபஹாரமாக ஸமர்ப்பித்து (உடனே)

         லேபே -- உபஹ்ருத்ய லேபே -- இரண்டு பதங்களையும் சேர்த்தது ரஸம். ஸமர்ப்பித்த உடனே பெற்றார். நடுவில் ஒரு க்ஷணமேனும் தாமதமில்லை. "நாகாரணா தாநந்தர்யம்" என்று ந்யாயம். உன் மாலையை ஸமர்ப்பித்ததுதான் 'பெரிய' என்ற 'மஹத்தர' பதம் கிடைத்ததற்குக் காரணம். அந்வய வ்யதிரேகங்களால் கார்ய காரண பலம் ஸித்திக்கும். நூற்றுக்கணக்கான பாமாலைகளாலும் பூமாலைகளாலும் முன்பு அடையப்படாதது என்று வ்யதிரேகம் காட்டப்பட்டது. இங்கே அந்வயம் காட்டப்பட்டது.

         மஹத்தரபதாநுகுணம் ப்ரஸாதம் -- ஆழ்வார்களிலும் உயர்த்தியாய் 'பெரிய ஆழ்வார்' என்னும் ஏற்ற பதவி கிடைக்கும்படியான அநுக்ரஹத்தைப் பெற்றார். ஏனைய ஆழ்வார்கள் சிலர் நாயகீ பாவத்தில் ஆழ்ந்து மூழ்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணுக்கே ஸபத்நியாகவில்லை. உன் பிதா சில அவஸரங்களில் உனக்கே ஸபத்நீபாவத்தை அடைந்தார். மூன்றாம் சதகத்தில் 'ஐயபுழுதி'யில் "மாயன் மாமணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே" என்றும், "நல்லதோர் தாமரை"யில் "என் மகளை எங்கும் காணேன்", "செங்கண்மால்தான் கொண்டுபோனான்" என்றும், இவ்வாழ்வாரைப் பெற்ற தாயலற்றியதைக் கவனிக்கவேண்டும். புருஷ‌ப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தது, ஏதோ பெண்ணாக மாறிவிட்டது. அது போகட்டும். பெண்ணாக மாறிவிட்ட என் புருஷ‌க் குழந்தையை இந்தப் பாடா படுத்தவேண்டும் என்று அலற்றல். உன் மணாளனுக்கே பத்தினியாகி அவருடைய அந்த ரீதியான அநுபவ ஆழ்ச்சி மற்றவர் ஆழ்ச்சியிலும் பெரிதாயிற்று. மிக வியக்கத் தக்கதாயிற்று. இன்னுமொரு ரஸமும் உண்டு. 'பெருமாள்', 'பெரிய புருஷர்', 'மஹாபுருஷர்'. ஆண் என்பது 'ஓர் புருஷன்'. ஜீவாத்மாக்கள் 'புருஷர்கள்'. பெருமாள் மஹத்தான 'மஹா புருஷர்'. உன் பிதா அவருக்கும் மாமனாராகி அம்மஹா புருஷனுக்குக் குருவானார். ஹிமவானை "த்ரயம்பக ஈச்வரரான குரு" என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வர்ணிக்கப்பட்டது. 'பூர்வரான குருக்களுக்கும் குருதமர்' என்று ஜனகர் வசிஷ்டரை வர்ணித்தார். மஹாபுருஷனுக்கு மஹனீயரான ச்வசுர குருவானதால் 'மஹத்தரர்' என்னும் பதம். 'மஹத்தரபதம்' என்பது பரமபதத்தைச் சொல்லுவதாகவும் உரை கொள்ளுவர். 'விஷ்ணுவின் பரமம் பதம்' என்று ச்ருதி. விஷ்ணுசித்தர் விஷ்ணுவின் பரமமான பதத்தைப் பெற்றார். இது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானதால், வைலக்ஷண்யம் ஏற்படாமற் போகும். ரஸிகர் மனமே ப்ரமாணம். "பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ" என்பதைக் கவனிக்கவேண்டும். ச்வசுரராகிய பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர் இவர் மணாளனானதும், அந்த ச்வசுரராகிய வீட்டையும் படுக்கையையும் விட்டு இந்த ச்வசுரர் மனக்கடலில் பள்ளிகொண்டார். "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்றபடி இவர் மணாளன் மாயன். "ஔதந்வதே மஹதி ஸத்மதி" என்ற பாற்கடலாகிய அந்த மஹாக்ருஹத்திலும் மஹத்தரமான க்ருஹமாயிற்று இவர் மனக்கடல். பெரிய பெருமாளான மஹாபுருஷருக்கும் பெரிய குருவானார், மஹத்தரானார். முத்ராராக்ஷஸாதி நாடகங்களில் 'ஸ்வஜாதிமஹத்தர' என்று கௌரவமாயழைப்பர். 'உம் ஜாதியில் (குலத்தில்) உயர்ந்தவரே' என்று 'மஹத்தர' பதத்தாலழைப்பர். ஆழ்வார் ஜாதியில் (குலத்தில்) பெரியவரே, மஹத்தரரே என்று அழைப்பு. .10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக