ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

கோயிற்கெழுந்தருளியது

விருத்தம்

வரம்பிலாப்புகழ்சிறந்துவளமேயோங்கு

       வடதிருக்காவிரியினீராட்டஞ்செய்து

கரம்பனூருத்தமனைத்தொழுதுகண்டே

      கனகமயகோபுரஞ்சூழ்கோயில்கொண்டே

நிரம்பியவானந்தவெள்ளம் பெருகக்கொண்டு

        நிறையவேயாராதவருளன்றேத்திப்

பரம்பியவங்குளவரெதிர்கொண்டுகாணப்

        பரிசிப்பார்  பொன்னரங்கந் தரிசிப்பாரே.

தரு- இராகம்-- நாதநாமக்ரியை-- தாளம்-- ஆதி

பல்லவி

தெரிசனநிகமாந்ததேசிகன்  செய்தார்

தென்னரங்கத்திற் றெரிசனம்

    அனுபல்லவி

தெரிசனநிகமாந்த                    தேசிகபீடஞ்

செகத்திற்பவக்கடலுக்           கொருவோடம்

பெரியதிருவடியின்                    மந்திரபாடம்

பிரபலர்திருவரங்கர்       கருணைக்கோர்கூடம்       (தெரிச)

                                            சரணங்கள்

ஆதிகேசவனைப்             போற்றி

வேதவசனங்கள்                சாற்றி

மேதினியெங்கெங்குங்      கீர்த்தி

யோதுதாமோதர                னேர்த்தி

யடுத்தகோபுரத்தை     நாடியே -- பணிந்துஞ்சூடிக்

கொடுத்தநாச்சியாரைப்   பாடியே -- மன்னனாரையுந்

தொடுத்தபெரியாழ்வாரைத்  தேடியே -- தொண்டரடிப்பொடியென்

றெடுத்தவாழ்வாரைக்கொண்   டாடியே - பார்த்தசாரதியென்னு

மன்னவர்பொன்னடிமுன்னதமாய்ப்ப  ணிசைந்து -- பாஷ்யகாரர்தம்

சன்னதிதன்னதின்   முன்னதாகப்புகுந்து -- வந்தேதமியேனா

மென்னவேபன்னிய   சொன்னயச்சுலோகம்பகர்ந்து -- காதாதாவென்

றின்னவைவன்னனையென்னெதிமன்னர்க்குயாந்து -- அனுசந்தித்தே

யரியதபோநிதிபுருஷகாரமாய்ப்  பண்டு -- தென்னரங்கத்திற்

பெரியபெருமாளைத்திருவடிதொழுவராய்க்கொண்டு--கோபுரநைனார்களை

வரிசையாய்க்கிட்டித்திருவாழியாழ்வானைத்தொண்டு-- செய்வோமென்றசு

தரிசனாஷ்டகஞ்சமர்ப்பித்துத்துதிமிக  விண்டு-- வந்தனஞ்செய்தே

ஆரெங்கும்புகழே           சொன்ன

சீரங்கநாச்சியார்          முன்னன்

ரேரங்கநகரின்        மன்ன

னாரங்கருள்சேர்ப்ர         சன்ன                               (தெரிச)

எடுத்தகையழகியநைனாரை       யன்பாலே

தொடுத்தங்கேதொழுதுமத்திரு      வாசலாலே

அடுத்தபின்னுள்ளேபுகுந்தும்      பாவாறே

திடத்துடன்வலமாகவந்ததின்     மேலே

யேற்றசந்திரபுஷ்கரணியிலே      வேதி--யர்சிகாமணியிவர்

தீர்த்தஞ்சுவீகரித்திசைமந்ந்த்ர     மோதி- அக்கரையில் விளங்கிய

தீர்த்தரக்ஷகர்களானகுமு              தாதி--களையுமின்னஞ்

சூத்திரகாரவேதவியாசபகவா       னாதி--யிவர்களையும் வணங்கி

யேகிருஷ்ணபதரிகாசிரமவாசிநாராயண   ரான-- வைகுந்தநாதர்

பாகத்தினாழ்வார்கள் திருமழிசையாழ்வார்முதல் ஞான-- மிகுந்தவரை

யோகத்தினுடனிவர்திருவடிதொழுதுகொண்டே-- நல்லருளைபெற்று

மேகத்தர்பெரியதிருவடியைநோக்கியங்   கான---- பிரணாமஞ்செய்தன்

பிருக்கவேண்டியுமங்குநின்றுயர்திருக்கொட்டாரந்-- தனிலேசென்று

பெருக்கமொங்குசெங்கமலநாச்சியாரை  யந்நேரஞ்-- சுற்றிக்கொண்டன்பு

பருக்குமுதலாழ்வாரையுந்துதிசெய்து நமஸ்காரங் - கைக்கொண்டுமன

துருக்கமாகவே வரிசைசெய்தார்     பிரகாரம் -- பரவாசுதேவனையு

மிலங்குதிருமங்கையாழ்வார்    கோபுரஞ்சுற்றும்

துலங்கவேயாரியபட்டர்திரு    வாசல்பெற்றும்

நலங்கோளணியரங்கர்திரு      முற்றத்திலுற்றுந்

தலங்கள்புகழ்பாஷியகாரர்      குறட்டைக்குறித்துந்              (தெரிச)

பலிபீடத்துக்குத்தெற்கே       சாஷ்டாங்கவந்தனம்

நலியாமனத்தினிற்பத்தி       சேர்ந்தாங்கிசைந்தனஞ்

சொலியேபிரதக்ஷிணமாய்ப்    பார்த்தாங்குயர்ந்தன

மலைநேர்கோபுரமதி             லாஸ்தானபந்தனம்

பலபலமண்டபகோபுர  நேர்த்தி-- யைப்பணிந்தேதிருச்சுற்றி

யிலுள்ளஞானப்பிரானையுந்தச      மூர்த்தி--  லக்ஷ்மிநாராயணர்கள்

சொலுமிவர்களைமங்களாசாஸனஞ்  சாத்தி-- அயக்ரீவரைக்கிட்டி

நலப்பிரசீத்துநிகமசதமென      வேத்தி-- இன்னமுந்திருமடப்

பள்ளியரவிந்த  நாச்சியார்சங்கநிதிபத்மநிதி மேலே -- கூடப்பாண்டிய

வள்ளல்கோபுரத்தைக்கிட்டித்துவாரபாலரனுமதியாலே -உட்சென்றுதூப்புல்

பிள்ளை கிழக்கேநாலடி நடந்துதண்டன்சமர்ப் பித்துயர்நூலே-   

                                                                             சொன்முறைகண்டு

விள்ளுவர்திருக்கருகூலநாச்சியாரைமிகு பரிவாலே-- வணங்கித் 

                                                                              திருமாலை

பலகையருகேதொண்டரடிப்பொடியாழ்வாரையுமுன்பு--                                                           பரவாசுதேவனையும்

நலப்ரணவாகாரவேதசிருங்கவிமானத்தையும் பின்பு-                                                          விபீஷனாழ்வானை 

வலமாகச்சேனாமுதலாழ்வானைத்தொழுததே யன்பு - உறையூர்நாச்சியா

தலமேவுகிருஷ்ணனையுஞ்சேவித்ததுவும்வெகுதென்பு-- அழகியமணவாளன்

பருமண்டபத்திலே  பாங்காகவேறிக்

திருவணக்கந்திரு     வாசன்மேற்றேறிப்

பெரியதிருவடிகை    னாந்துதிமீறி

வரிசைத்துவாரபாலர்    ஜயவிஜயரைக்கூறித்         (தெரிச)

நயனத்தானந்த          கருணாரசம்வைத்து

ஜயவிஜயர்களனு        மதியுந்தான்பெற்று

வயனமாய்த்திரி           வுடைமாளிகையுற்று

உயர்வுள்ளசேர்த்தியி    லெழுந்தருளுங்கிரமத்து

நாபிநளினநாகசயனநர    சிங்கர் - நாராயணர்களைச்சொல்

லாபமுடன்றொழுதுதிருமணத்தூணருகேயெங்க-- ளனந்தாரியகுல

தீபர்விளங்கிநின்றேழையெய்திலேனெனவேதுலங்க-- பாட்டனுசந்தனைப்

                                                                                                  பிர

தாபமுடன்றிருவடிகளின்மிகுந்து   வணங்க -- அமலனாதிப்பிரானை

நாட்டியிப்படிப்பாதாதிகேசமாகவரங்கத்தம்மான்றிருக்க -- மலபதமென்று

பாட்டுத்தொடங்கியாழ்வாரனுபவித்தார்போலிவரன்புபெருக்கத்--திருக்

                                                                         கணைக்கால்களையும்

பூட்டுமுழந்தாடித்திருத்தொடையுந்தியுயர்மார்பு வலத்திருக்கை --

                                                                  ஆசானுலம்பியாகக்

கூட்டிமற்றதிருக்கையுமுகமண்டலமுமணிநெருக்க--ஆதிராச்சியசூசகமாம்

நல்லாபிஷேகத்தையுந்தனித்தனியாகவனுபவித்தார்-- பாதாம்போஜமென்

சொல்லியிசைவடமொழிதனிற்றுதிபரவவுற்பவித்தார்-- வாசனாமௌலி

யெல்லையாகமீளவங்கேசேர்த்தனுபவித்துக்கைகுவித்தார்-- பாயுநீரரங்கம்

வல்லவர்தொடுத்துப்பின்னுங்காந்தோதாரையென்னுங்கவித்தார்--

                                                                   அழகியமணவாளன்

அங்கநாதன்மேனியாகதிலக       மென்றார்க்கு

மங்கேசேர்த்தியிலனுபவித்த       துண்டாக்கு

மெங்கள்தீவினையாகியபாவங்கள்    போக்கும்

பொங்குபுண்ணியர்திருவுள்ளத்திற்  றேக்கும்              (தெரிச)