வியாழன், 29 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)


சுலோகம் 8
போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
         பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
         ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:||  (8)

ஆழ்வார்க ணுங்கோ னருளழகிற் பெண்மையவாய்
வாழ்வா ரகங்கனிந்து மால் பெருகி -- நாழோரா
மாலாகிக் கோதாயுன் வாக்குமது வுண்டு நின்மான்
மேலாத லென்னோ வியப்பு.         (8)

பதவுரை
கோதே -- கோதாய்; தவ -- உன்னுடைய; ப்ரியதமம் -- அத்யந்த ப்ரியனான பர்த்தாவை; பவதீவ -- உன்னைப்போலவே; போக்தும் -- அநுபவிப்பதற்காக; நிஜாம் -- தங்களுடைய (சொந்தமான); பக்திம் -- பக்தியை; ப்ரணயபாவநயா -- ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக); க்ருணந்த: -- பேசிக்கொண்டு; த்வதீயா -- உன்னுடைய; குரவ: -- பெற்றோர்கள்; உச்சாவசை: -- மிகவும் அதிக்ரமித்த; விரஹஸங்கமஜை: -- பிரிவு கூடல்களால் ஏற்படும்; உதந்தை: -- வ்ருத்தாத்தங்களால்; ஹ்ருதயம் -- தங்கள் மனதை; ச்ருங்காரயந்தி -- ச்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
         
கோதாதேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணுசித்தர்) உன்னைப்போலவே உன் பிரியதமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும் காமபாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.
         அவதாரிகை
         (1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி. அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ச்ருங்கார ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம்போல் வர்ணித்தார்?

         (2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே, "தருணீகுணபம்" என்று பேசுகிறவராயிற்றே! எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?

         (3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப் புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான ஆழ்வார்கள் வாக்கின் இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி? என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே! ஜாமாதாவான என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?

         இதற்கெல்லாம் பதில்:-- வால்மீகி நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்? வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி அவரைத் தம்பதிகளுக்குள்ள ச்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது. "பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்" என்று தன்னைப் பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில் ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார். நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம் ரக்தி (ரதி)யுடையவனே. சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ? "அத்யர்த்தம் ப்ரிய", 'ப்ரியதம ஏவ வாணீயோ பவதி' என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து, அவனுக்குப்  பிரியதமமானால்தானே ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற மதிநலமருளப் பெற்றவரும் பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா. மற்ற ஆழ்வார்கள் போகட்டும். உன்னைப் பெற்ற ஆழ்வார் பெரிய ஆழ்வாரானாரேயம்மா! ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள் (விரோதிகள்) ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர். 'கந்யா வரயதே ரூபம்'. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய அரங்கனைத்தான் நீ தேடினாய். நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது. உன் தகப்பனார்கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே ஸபத்னீயானாரே. அதோடு நிற்காமல் "வந்து மண்ணும் மணமும் கொண்மின்" என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு, என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே. ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும் உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள் என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா! பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய ஆழ்வாரென்பது. வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது சுலோகம் வரையில் கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார். கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால் அடையப்படும் பெருமையைப் பேசுகிறார். கன்யையின் பிறப்பகத்தின் மஹிமைகள்.

         போக்தும் -- பேரின்பத்துடன் அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோகஸுலபமான வயது வந்ததைப் பார்த்து, இந்தக் கற்பகக்கொடியை ஓர் கற்பகவ்ருக்ஷத்திலணைத்துவிட வேண்டுமே என்று சிந்தார்ணவமக்னராய், அதன் கரைகாண அநுரூப வரனைத் தேடுவர். வரனைப் பார்க்கவே இவர் ச்ருங்கார சபளிதஹ்ருதயராய், ஸ்வயம்போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார். அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. 'ந ஜாநே போக்தாரம் கமிஹ' என்று காந்தர், காந்தைகளது ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார். உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக் கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.

         தவ ப்ரியதமம் -- பெண்ணாகிய உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ? பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார். நீ ச்ருங்கார பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப் பாடினாய் என்றேன் முன் சுலோகத்தில். உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில் நீ பாடுவது அத்புதமா? "கோதே கிமத்புதம் இதம்"

         பவதீவ -- உன்னைப்போல. (அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில் 'ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா" என்ற வைஷம்யமில்லை.

         கோதே -- நீ ப்ரணயரஸப் பாசுரம் கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள் ச்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து ஸமர்ப்பிக்கிறார்கள்.

         பக்திம் நிஜாம் -- தங்கள் ஸ்வந்த பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம். வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா! அந்த பக்தியே நிரதிசய ப்ரீதிரூபமாய் ஸ்நேஹரூபமாய் விட்டது. அடையவேண்டிய அநுபவமான நித்தியவிபூதி போகவிபூதிதானே! இங்கு போகம் நித்யபோகத்திற்கு ஸாதனம். வேறு கதியில்லையே, என்ன செய்வது? விச்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது. 'ப்ரியதமம்' என்பது பரஸ்பர ப்ரியதமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்யபாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது. அங்கும் வரணப்பேச்சே.

         ப்ரணயபாவநயா -- பக்தி என்பது மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ச்ருங்காரம் என்னும் வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது. 'ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி' என்று பேசுவது உசிதம்தானே. ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே! க்ருணந்தே --பேசுவது பக்திதான். ஆயினும் அதில் 'ஸதீவ ப்ரியபர்த்தாரம்' என்னும் ராகமும் கலக்கிறதம்மா!

         உச்சாவசை: -- உதக்ச அவாக்ச வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய். வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார். மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. "யாந்தீமிவ மநோரதை:" என்று வடக்கே ஓடுகிறார்.

         விரஹஸங்கமஜை: -- விரஹத்தில் தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.

         உதந்தை:-- வ்ருத்தாந்தங்களால். ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம். உதந்தை: -- அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: -- "உத்" என்பது ஸர்வ பாப்மோதிதரான அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான பெருமாளுக்குத் திருநாமம். அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று "உத்" என்னும் சப்தத்தாலும், அதில் 'அந்தத்தை நிச்சயத்தை' உடையவர் என்று 'அந்த' சப்தத்தாலும் காட்டி, ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.

         ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் -- தங்கள் ஹ்ருதயத்திலேயே ச்ருங்காரபாவமுள்ளதுபோல் செய்கிறார்கள். "பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா| ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:" என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம். ச்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக் காரணமும் இங்கே ஸூசிதம். மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல. பெருமாளுக்குக் குரு முறைமையான தான், பெருமாளுக்கு ச்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும் அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம். பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம். இந்த ச்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில் இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.

         'ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்' என்று ஸீதைப்பிராட்டியாரேசல். 'ரங்கஜாமாதரம் ப்ராப்ய' அரங்கனென்னும் ஜாமாதாவை அடந்த ச்வசுரரே, புருஷவிக்ரஹமான தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம். 'ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன' இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது. 'ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா' என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில் பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

புதன், 28 டிசம்பர், 2016

கோதாஸ்துதி


கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)




சுலோகம் 7
வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
        
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
        
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: ||   (7)

புவிமகளா நின்செவியிற் போந்தமுனி நுங்கோன்
கவிமகனாய் வாழ்ந்து களித்தான் -- சவிமருவு
நீதா னியற்றுகவி நேசமுற மாலை வைத்தாய்
கோதாய் வியப்பென்னோ கூறு
.        (7)

பதவுரை
         கோதே -- கோதாய்!; வஸுதாத்மந: -- பூமிப்பிராட்டி ரூபமான; தே -- உனது; ச்ரவணத: -- செவியாகிற; வல்மீகத: -- புத்திலிருந்து; ஜாத: -- பிறந்த; - அந்த; முநி -- மஹர்ஷி; கவிஸார்வ பௌம: -- கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக; பபூவ -- ஆனார்; (ஆகையால்), தே -- உனது; வக்த்ராரவிந்த -- முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்); மகரந்தநிபா: -- தேன்போன்ற; அமீ ப்ரபந்தா: -- இந்த ப்ரபந்தங்கள்; ஸ்வதந்தே -- ருசிக்கின்றன; இதியத் -- என்னும் இது; கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்?

         கோதாய்! பூமிப்பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

அவதாரிகை

         (1) வால்மீகியையல்லவோ உத்தம கவி என்பர்! அவரையல்லவோ கவிகள் நல்வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்! "இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே" என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார். அவர்தானே கவிகளுக்கு மார்க்கதர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில் "ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்" என்று அம்முனிவரைப் பணிந்தீர். பாதுகாஸஹஸ்ரத்திலும், "யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:" என்று அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ? "கவிப்ரதம பத்ததிம்" என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார். "பரம் கவீநாம் ஆதாரம்" என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!

         (2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர். ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் "பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ" என்றபடி தன் ஸத்தையும் தாரணமும் அதனால்தானென்று "மஹாநுபாவம் சரிதம்" என்றும், "மமாபி பூதிகரம்" என்றும் புகழ்ந்துகொண்டு கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக்பிக்ஷை கேட்கிறீரே?

         (3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே? ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியாஇதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.

         வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே. அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன். பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார். நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா! வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை 'சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்' என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே? வல்மீகம் என்பது என்ன? "வஸுதாச்ரோத்ரம்"தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி? உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்! அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக்கொண்டேதான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன். "வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்" என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்? அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் "வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே" என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப் பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்? உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.

         (4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும். ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப் பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே? இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?

         அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரியபிராட்டியாருடைய அம்சமாயிருந்தபோதிலும், பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசயப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக (உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால் அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ பாடிவைத்ததைத்தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன். "ஸஹஜோ கவீச்வரேண" என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி? பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி. கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? "கரிணீ"தானே களபத்தைப் பெறும்? தாய் வேறுஜாதி குட்டி வேறுஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர். "மாதரம் த்விபதா இதி". ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!

         வஸுதாத்மந: -- பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய. "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்று முதல் ச்லோகத்திலேயே இதை ஸாதித்தார். "வல்மீகம்" - புற்று. அதற்கு "வஸுதாச்ரோத்ரம்" என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர். "வஸுதாச்ரோத்ர:" என்ற பர்யாயபதத்தைப் புத்திக்கும் கொண்டுவருவதற்காக "வஸுதா" சப்தத்தைப் பிரயோகித்தது.

         தே -- உன்னுடைய; ச்ரவணத -- திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ச்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள். அதுபோல உன்னுடைய ச்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.

         வல்மீகத: -- கரையான் புற்றிலிருந்து; ஜாத: -- பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார். ஜாத: கவிஸார்வபௌம: கவீச்வரராகவே பிறந்தார். "ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:" என்ற இடத்தில்போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.

         ஸ முனி: -- அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். 'முனி' என்பது வாய்திறவாத மௌனியைச் சொல்லும். வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். "மூகையான் பேசலுற்றேன்", "மூகம் கரோதி வாசாலம்", "ரகுவரசரிதம் முனிப்ரணீதம்", "ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்".

         கவிஸார்வபௌம: -- கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி. யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்). 7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவிஸார்வபௌமரானார். யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல், திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோஜயமாகும். ராவணலயம் மனோலயம். அது யோககாஷ்டை.
         பபூவ-- ஆனார்.

         கோதே! -- வாக்கையளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கையளித்தாய். ஆகையால்தான் அவருக்கும் கவிதாமூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன். "பரம் கவீநாம் ஆதாரம்" என்பதற்கும் மூலாதாரம் நீ.

         (தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: -- உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்). ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது. கண்ணன் பாடிய கீதையை "யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:" என்று வர்ணிப்பர். "வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது" என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.

         (தே) ப்ரபந்தா: -- உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள். த்வநிபரம்பரை போய்க்கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும். பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும். "மங்களாநாம் ப்ரபந்தாந்", "க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:"

         அமீ ப்ரபந்தா: -- இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமேயொழிய, இப்படிக்கொத்தது என்று வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள். "க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா" என்று ஜகந்நாத பண்டிதர். "க்ருஷ்ண" என்ற இரண்டு அக்ஷரங்கள் தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை "இவ்இனிப்பு" என்று பேசியதுபோல.

         யத் ஸ்வதந்தே -- தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.

         கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ? 'அத்புதம்' என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக்கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள். (1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தரகவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை? (2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?

         வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது சுலோகமாக வைக்கப்பட்டது. உன் "ச்ரவணத்திலிருந்து" என்பதற்கு எதிர்த்தட்டு உன் "வக்த்ராரவிந்தத்திலிருந்து" என்பது.    (7)