ஸ்வாமி தேசிகனடியார்களுக்காக ஒரு mobile ring tone பிடித்திருந்தால் உங்கள் மொபைலுக்கு இறக்கிக் கொள்ளவும். அல்லது உங்கள் மொபைலில் GPRS/Wap வசதி இருந்தால் http://audiko.net/55625.mp3 என்ற முகவரியிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம்.
புதன், 2 ஏப்ரல், 2008
வியாழன், 27 மார்ச், 2008
Adhi Jagannaatha PerumaaL
திருப்புல்லாணி பங்குனி உற்சவத்தில் 4ம் நாள் இரட்டை கருட சேவை. ஸ்ரீமத் ஆண்ட வன் ஆச்ரம மண்டகப்படி. வழக்கமாக கோவிலிலேயே நடக்கும். இந்த வருடம் முதல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆச்ரமத்திற்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி இரவில் கருட வாகனப் புறப்பாடு வரை ஆச்ரமத்தில் நடக்க இராமனாதபுரம் சமஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. படங்கள் இங்கு் காணலாம்

வியாழன், 6 மார்ச், 2008
ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்
கனகதாராஸ்தவம் அருளிச் செய்தது.
விருத்தம்
நலந்தர வேவெண்பரிமுகத்தால்வந்த
லாலாமுதஞ்சிந்தியிருந்ததெல்லாங்
கலந்தெடுத்துத்தேவிகள்கைகொடுத்துவைத்தா
கதிகொண்டேசிறுகுழந்தைவரதநாதன்
மலர்ந்தகையாலெடுத்துண்ணப்பின்புகேட்டு
மைந்தனிவன்செய்ததிதோவென்றுதானே
குலந்தழைக்குமென்பதற்கு வேறாய்ச்சொன்ன
கூறுதானடைந்ததுமவ்வாறுதானே.
தரு - இராகம் - சாவேரி - தாளம் - ஆதி
பல்லவி
சாமியெங்கள்கருணாநிதி - குருசாந்த - வேதாந்தநிதியிவர்தாமே.
அனுபல்லவி
பூமிபுகழுங்கச்சிப் பேரருளாளர்பாதப்
பூங்கமலம்பரவும் வேங்கடநாதகுரு (சா)
சரணங்கள்
அந்தநாள் பிரமசாரி யொருத்தன்வந்து
அங்கங்கேதனவான்க ளாரென்றெங்கும்விசாரித்
தெந்தன்கலியாணத்துக்கே யெவர்கள்சொன்னங்கள்வாரித்
தந்திடுவாரென்றானே தந்ததிவர்சொன்னமாரி (சா)
இதுதருணத்தினல்ல தனவானிவரென்று
இவர்திருமாளிகையைக் காட்டியேசிலர்சொல்ல
அதுநிசமாமென்றெண்ணி யவனுமிவர்பாற்செல்ல
மதுரமிகுந்தகவி மாரிபொழியவல்ல (சா)
பரிவாயனுக்கிரகித்த பாகவதர்கள்சொற்ற
படியேபெருமாள்கிருபை பண்ணுவாரென்றுமெத்த
பெரியபிராட்டியார்மேல் சீர்த்துதிய்ன்றுரைத்த
வரிசையதினாற்சொன்னம் வாரிவாரிக்கொடுத்த (சா)
லேபிள்கள்:
ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள்
வெள்ளி, 29 பிப்ரவரி, 2008
Thirumalaiyil
திருமலையில் நடக்கும் சுப்ரபாத ஸேவை பற்றி youtube videoக்கள் சிலவ்ற்றை வலையில் கண்டேன். ஐந்தும் மறுபடி மறுபடி வந்த காட்சிகளே வருகிற மாதிரி இருந்தது. அடியேனுக்கு முடிந்த மட்டில் ஒரே வீடியோவாக, எடிட் செய்து கொடுத்துள்ளேன். நன்றாகவே தெரிகிறது, இது உண்மையல்ல வென்று. நிச்சயம் ஏதோ ஒரு பழைய தெலுங்குப் படத்தில் உள்ள சில காட்சிகள்தான் இவையென்று மனம் சொல்கிறது. ஆனாலும் திருவேங்கடமுடையானைப் பார்க்கும் தோறும் பரவசம் தானே.
புதன், 27 பிப்ரவரி, 2008
ENDLESS 2
நேற்று இங்கு வந்த ENDLESS க்கு எனது கணிணி ஆசான் மகுடதீபன் ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கோட்டோவியமே “புனரபி ஜனனம் புனரபி மரணம்” வரிகளுக்கு அருமையாக அமைந்த ஒரு உதாரணம். இந்தக் கவிதை மற்றொரு விளக்கம். பாருங்கள்
http://tinyurl.com/2bub6b
[Open in new window]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)