திங்கள், 24 டிசம்பர், 2012

சரணாகதி தீபிகை–ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி டெலி உபந்யாஸம்–2.

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி சென்ற வாரம் ஆரம்பித்த “சரணாகதி தீபிகை'” டெலி- உபந்யாஸத்தின் இரண்டாவது பகுதி.

श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी।

वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि॥

पद्मापतेः स्तुतिपदेन विपच्यमानं

पश्यन्त्विह प्रपदनप्रवणाः महान्तः।

मद्वाक्य संवलितमप्यजहत्स्वभावम्

मान्यं यतीश्वर महानस संप्रदायम्॥१॥

 

இன்று (24-12-2012)  நடந்ததை நேரடியாகக் கேட்டு மகிழ

It can be downloaded from here

http://www.mediafire.com/?f6rk0o8pb5mmlbb

திங்கள், 17 டிசம்பர், 2012

Saranagati Deepikai

 

Ashampoo_Snap_2012.12.17_06h48m25s_001

Sri Natteri Rajagopalacharyar swami has started his tele-upanyasam on “Saranagati Deepikai” from today.

It may be listened to here directly

Bhagavath dhyana sobhanam

நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி சென்னையில் சாதித்து வரும் ‘பகவத் த்யான சோபானம்’ உபந்யாஸத்தின் இரண்டாவது பகுதி. இது நேற்று (16-12-2012) அன்று பதிவு  ஸ்ரீ ஆர். தேவநாதன் ஸ்வாமியால் செய்யப்பட்டு,  பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நகலிறக்க

http://www.mediafire.com/?n8iaf0aud33te63

நேரடியாகக் கேட்டு மகிழ

திங்கள், 10 டிசம்பர், 2012

மங்களம் ! சுப மங்களம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த “குரு பரம்பரை வைபவ” உபந்யாஸம் இன்றைய உபந்யாஸத்துடன் நிறைவு பெற்றது.  இன்றைய உபந்யாஸத்தில் இதுவரை நடந்த உபந்யாஸங்களின் ஸாரத்தைப் பிழிந்து, இந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்காதவர்கள் இன்றைய ஒரு உபந்யாஸத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே இதுவரை நடந்த 113 உபந்யாஸங்களில் தெரிவிக்கப் பட்டது என்ன என்பதை எளிதில் உணரும் வண்ணமும், கேட்ட மாத்திரத்தில் கேட்காத உபந்யாஸங்கள் அனைத்தையும் சேகரித்துக் கேட்கும் வண்ணமும் அருமையாக ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இந்த இரண்டு ஆண்டுகளாக விடாமல் இந்த உபந்யாஸங்களைப் பதிவு செய்து இங்கு பகிர்ந்து கொண்டது ஆசார்ய வள்ளல் ஸ்ரீமத் ஆண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தால் அடியேனுக்குக் கிடைத்த பெரும் பாக்யம்.  ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி,எழுத்திலே உணர்த்த முடியாத பல விஷயங்களை இங்கு சொல்லி நம்மை நெகிழ வைத்தார், இந்த ஆச்ரம சிஷ்யனாய் இருப்பதற்கு என்ன தவம் செய்தனம் என்று பெருமிதப் படவும்  வைத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வகையிலே இந்த உபந்யாஸங்கள் அமைந்தன. அவருக்கு எப்படி க்ருதஜ்ஞைகளைத் தெரிவிக்கப் போகிறோம்!
இந்த உபந்யாஸங்கள் அமெரிக்கா வாழ் ஆச்ரம சிஷ்யர்களின் ஏற்பாடு. ஆனால் வாராவாரம் இதைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ள அவர்கள் அடியேனுக்கு அளித்த ஆதரவு அடியேனது இன்னொரு பாக்யம். குறிப்பாக, ஸ்ரீ வெங்கட், ஸ்ரீராம், இவ்விருவரது திருத்தகப்பனார் பூண்டி இராமாநுஜம் ஸ்வாமி அவர்களுக்கெல்லாம் அடியேன் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்!
இன்றைய உபந்யாஸத்தை வழக்கம்போல்  நகலிறக்க
http://www.mediafire.com/?tihi659edvw06d9

நேரடியாகக் கேட்டு மகிழ

 


எல்லா உபந்யாஸங்களையும் தரவிறக்க
http://sdrv.ms/SO842G 
இன்னொரு முக்கியமான சேதி!
அடுத்த வாரத்திலிருந்து "சரணாகதி தீபிகை" உபந்யாஸம் தொடர்கிறது. அநுபவிக்கத் தயாராவோம்! 

சனி, 8 டிசம்பர், 2012

ரெடியா இருங்க!

கணிணியோ, மொபைலோ அதில் தட்டச்சிடுவது பலருக்கு ஒரு கஷ்டமான காரியமாகவே இருந்து வருகிறது. இந்திய மொழிகளில் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் தமிழ் என்றால், இன்னும் பலருக்கு ஒரே குழப்பம்தான். நேற்று குடுகுடுப்பைக்காரர் வந்து சொன்னார். எல்லாக் குழப்பமும் இன்னும் சில நாள்களில் போய்விடுமாம். 1,2,3 தெரிந்தால் மட்டும் போதுமாம். இந்திய மொழிகள் எதில் வேண்டுமானாலும், (கணிணியோ, மொபைலோ,) தட்டச்சிடலாமாம். சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். inscript keyboard என்று ஒன்று. அது பழகியிருந்தால் (அனேகமா ரொம்பப் பேர் பழகாதது) எந்த இந்திய மொழியிலும் சர்வ சாதாரணமாக தட்டச்சிடமுடியும். எல்லாவற்றுக்கும் விசைகள் ஒரே மாதிரி இருக்கும். அதேபோலவே வரப்போற புதிய முயற்சியிலும் 1 என்று அடித்தால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரே எழுத்து வருகிற மாதிரி பண்ணியிருக்கிறார்களாம். சோதனைகளெல்லாம் முடிஞ்சு வெற்றியாம். காப்புரிமைக்காகக் காத்திருக்கிறார்களாம்! 2013 மார்ச்சுக்குள் வந்துவிடுமாம்.  செய்தியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் !
     இப்போ நாம எல்லாரும் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! (அதென்னங்க! பெருமிதமா இருந்தா காலரைத் தூக்கிவிட்டுக்கறது! ) இப்படி ஒரு அருமையான மென் பொருளைத் தயாரித்திருப்பது நம்ம தமிழ்நாட்டுக்காரர். தென்மாவட்டங்கள் ஒன்றில் இருக்கிறார். இவர் கம்ப்யூட்டர் துறையில் எந்தப் பட்டமும் வாங்காதவர். படித்ததோ வேறு பாடம்!

புதன், 5 டிசம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

                            ……………..காரிகையார்
சொற்பாங்கியர் தமக்கும் சொற்றிடேன்
கற்பாங் கியல்தரும்என் காமவிடாய் தீராத
சொற்பாங் கியர்தமக்கும் சொற்றிடேன் – நற்பாங்கின்          .45.

பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன்
ஆங்குயிர்க்கும் அன்னைதனக்(கு) அல்லாற்பின் தாய்க்குதவாப்
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன் – தேங்குயற்சீர்ப்           .46.

என்னெஞ்சுக்கு இன்னல் எடுத்துரைப்பேன்
பொன்னெஞ் சுவக்கும் புயல்பாற் பொஒருந்தியுற
என்னெஞ்சுக்(கு) இன்னல் எடுத்துரைப்பேன் – துன்னும்சீர்         .47.

மாலிலியாய் நின்று வருந்துவேன்
மாலிலியாய்நின்று வருந்துவன் மன்மதன் தேர்க்
காலிலியாய் நிற்போற்கென் கட்டுரைப்பேன் –  வேலைஎன        .48.

கள்ளருந்து வார்க்கு என் கழறுகேன்
விள்ளருந்துன் புற்று மெலிகுவேன் வேரிமலர்க்
கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – தெள்ளறநீர்             .49.

ஓடும் கயல்மீன் உறாதனவேல்
ஓடுங் கயல்மீன் உறாதனவேற் உள்ளமிக
வாடுங் குருகினுக்கெவ் வாறுரைப்பேன் – பீடுபெறும்      .50.

45. காரிகையார் – பெண்களின்; கற்பாங்கியல் தரும் –கல்லைப் போன்ற கடினத்தன்மை கொண்ட; என் காமவிடாய் – என் விரகதாபம், தீராத – தீர்க்காத, சொற்பாங்கியர் தமக்கும் –இன் சொற்றோழியரிடமும், சொற்றிடேன் – கூறவில்லை, நற்பாங்கின் – நல்ல இணக்கம் உடைய.

46. ஆங்குயிர்க்கும் – அங்கே என் நிலை கண்டு பெருமூச்செறியும், அன்னைதனக்கு –தாய்க்கும், அல்லால் பின் – அல்லாது, தாய்க்குதவா – தன்னை முட்டை இட்ட தாய்க்கு உதவாமல் காகக்கூட்டில் பிறக்கும், பூங்குயிற்கும் – அழகிய கோகிலத்துக்கும், ஆசை – என் ஆவலை, புகன்றிடேன் – கூறவில்லை, தேங்குழற்சீர் – இனிய கூந்தல் சிறப்புடைய.

47. பொன் – திருமகள், நெஞ்சுவக்கும் – மனம் மகிழும், புயல்பால் – மேக வண்ணனிடம், பொருந்தியுற – சேர்ந்தடைய, என் நெஞ்சுக்கு – என் மனத்துக்கு ஏற்பட்ட, இன்னல் – தாபம், எடுத்துரைப்பேன் –எடுத்துக் கூறுவேன், துன்னும் சீர் – சிறப்பமைந்த.

48. மாலிலியாய் நின்று – மயக்கமுடையவளாயிருந்து, வருந்துவேன் – துன்புறுவேன், மன்மதன் தேர் –மன்மதன் இரதமாம், காலிலியாய் – காலற்ற தென்றற் காற்றாக, நிற்போற்கென் கட்டுரைப்பேன் – நிற்பவருக்கு (வருந்தும் தலைவருக்கு) என்ன கூறுவேன், வேலை என – கடல் போல.

49. விள்ளரும் – கூற அரிய, துன்புற்று – இடரடைந்து, மெலிகுவேன் – வாடுவேன், வேரி மலர்க் கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – பூந்தேன் நுகரும் வண்டுகளுக்கு என்ன கூறுவேன், தெள்ளற நீர் – தெளிவற்ற நீரில்

50. ஓடும் கயல் மீன் – விரைந்து செல்லும் மீன், உறாதனவேல் –கிடைக்காவிடில், உள்ளம் மிகவாடும் குருகினுக்கு – மனம் மிகுதியாக வாட்டமுறும் கொக்கினுக்கு, எவ்வாறு உரைப்பேன் – எவ்விதம் கூறுவேன் – எவ்விதம் கூறுவேன், பீடு பெறும் – புகழ் பெறும்.

திங்கள், 3 டிசம்பர், 2012

Guru Paramparai Vaibhavam

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் திவ்ய வைபவங்களைத் தொடர்கிறார். தரவிறக்கிக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/?uf62tp6lezq63kk

நேரடியாகக் கேட்டு மகிழ

வியாழன், 29 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

…………………………………………………………………………………….நஞ்சமன                               34

பாவம் திகைப்புள்ளே பாராயோ
மேவந் திகைப்புறும்என் மேனிவெதும் பாமல்அருட்
பாவந் திகைப்புள்ளே பாராயோ – சேவகஞ்சேர்                    .35.

வண்காற் பவள வரிச்சுகமே வான் பொதிய
வண்காற் பவள வரிச்சுகமே வான்பொதியத்
திண்காற் கொழுந்தடங்கச் செய்யாயோ –எண்பாவு              .36.

பொற்கீரமே நீ புரியாயோ
நற்கீர மேயபதம் நான்அருந்து மாறுசிறைப்
பொற்கீர மேநீ புரியாயோ – எற்கீரம்                                      .37

மெல்லலகை மேய விழுப்புள்ளே
இல்லலகை யாய இருட்பிழம்புக் (கு) என்புரிவல்
மெல்லலகை மேய விழுப்புள்ளே – புல்லியமை                      .38.

அஞ்சாருவே துதித்தேன் ஆளாயோ
நஞ்சாரு மேக நவையகற்றச் சாருதிஎன்(று)
அஞ்சாரு வேதுதித்தேன் ஆளாயோ – தஞ்சாரு                       .39.

அன்னப்புள்  மேவ உள்ளம் ஆராய்ந்து
மன்னப்புள் மேவும் வனசமலர் மீதுறையும்
அன்னப்புள் மேவஉளம் ஆராய்ந்து – நன்னிறத்துப்               .40.

அப்பாலதனை ஓர்ந்து பகர்ந்திடேன்
பாலயனை வேறாய்ப் பகுத்தமையப் பண்ணுறும்அப்
பாலதனை யோர்ந்து பகர்ந்திடேன் – சீலமுறப்                      .41.

பெட்டோகை இல்லாப் பிணிமுகம் என்றோர்ந்து
பெட்டோகை யில்லாப் பிணிமுகம்என் றோர்ந்துமணிக்
கட்டோகை கண்டு கழறிடேன் – உட்டேறித்                           .42.

தாராதரம் எனவே தான் அறிந்து
தாரா தரம்எனவே தான்அறிந்து நீர்கலுழுந்
தாரா தரங்கண்டு சாற்றிடேன் – நேராருஞ்                              .43.

சாரிகை கொண்டு எங்கும் தலைப்படரும் தன்மை
சாரிகைகொண் டெங்குந் தலைப்படருந் தன்மையினாற்
சாரிகைக்கும் உள்ளன்பு சாற்றிடேன்.                                       .44.

குறிப்பு;-
34. நஞ்சமன – விடமனைய கொடிய உளத்தில்.
35. மேவ – பொருந்த; அந்தி – மாலை; கைப்புறும் – கசக்கும்; என் மேனி வெதும்பாமல் – என் உடல் வாடாமல்; அருள் – அருள் செய்; பாவ அம் திகை – பரவிய அழகிய தேமலை ; புள்ளே – கிளியே; பாராயோ – பார்க்க மாட்டாயா; சேவகம்சேர் – வணக்கம் சேரும்.
36. வண்காற் பவள – பவழம்போற் சிவந்த வலிய கால்களை உடைய; வரிச்சுகமே – வடிவுடைக்கிளியே; வான் பொதியத் திண்காற் கொழுந்து – வானளாவும் திண்ணிய பொதிகை மலையின் இளம் சுடர் (தென்றல்) அடங்க- தணிய; செய்யாயோ – செய்யமாட்டாயோ; எண் பாவும் – உளம் பரவிய
37. பதம் மேய  -- திருவடியிற் சார்ந்த; நற்கீரம் – நல்ல பாலை; நான் அருந்துமாறு – நான் பருகும்படி; சிறைப் பொற் கீரமே – பொன் சிறகுள்ள கிளியே; நீ புரியாயோ – நீ செய்ய மாட்டாயா; எற்கு ஈரம் இல் – என் பாலிரக்கமற்ற
38. அலகையாய – பேயான, இருட் பிழம்புக்கு – செறிந்த இருளுக்கு, என்புரிவல் – என் செய்வேன், மெல் அலகைமேய –மென்மையான மூக்கை உடைய, விழுப்புள்ளே – சிறந்த பறவையே, புல்லியமை – கருமை தழுவிய.
39. நஞ்சாரும் – விடம் பொருந்திய, ஏகம் – ஒரே, நவையகற்ற – குற்றம் நீங்க, சாருதி என்று – அடைக என, அம்சாருவே – அழகிய கிளியே, துதித்தேன் – தொழுகின்றேன், ஆளாயோ –ஆட்கொள்ளாயோ, தஞ்சாரும் – தான் சார்ந்துள்ள.
40. மன்னப்புள் – பட்சிராஜன், கருடன்; மேவும் –விளங்கும்,(தலைவனை நீங்காது), வனசமலர் மீதுறையும் – தாமரை மலர் மேலுள்ள, அன்னப்புள் – அன்னப்பறவை, மேவ – அடைய, உளம் ஆராய்ந்து – மனம் தேர்ந்து, நன்னிறத்து – நல்ல வெள்ளை நிற.
41. பால் அயனை – பாலையும் நீரையும், வேறாய் – வேறு வேறாக, பகுத்தமைய –பிரித்தமைய, பண்ணுறும் – செய்யும், அப்பாலதனை – அத்தன்மை கருதி, ஓர்ந்து பகர்ந்திடேன் – தேர்ந்து தூதாகக் கூறவில்லை, சீலமுற – குணமுற.
42. பெட்டோகை இல்லா – தோகையற்ற பெண், பிணிமுகம் என்றோர்ந்து – மயில் என நினைந்து, மணி – அழகிய, கண் – விழியுடைய, தோகை கண்டு – மயிலினைப் பார்த்து, கழறிடேன் – கூறவில்லை. உட்டேறி – மனம் தெளிந்து.
43. தாராதரம் எனவே தானறிந்து – ஆதரவு தாராது என்பது உணர்ந்து, நீர் கலுழும் – நீர் சிந்தும், தாரா – வாத்தின், தரங் கண்டு – தன்மை நோக்கி, சாற்றிடேன் – கூறவில்லை, நேராரும் – நேர்மை கொண்ட,
44. சாரிகை கொண்டு – வட்டமிட்டுச் செல்லுந் தன்மையுடன், எங்கும் – எவ்விடத்தும், தலைப்படரும் – வாழ்வித்திருக்கும், தன்மையினால் – குணத்தால், சாரிகைக்கும் – பூவைப் பறவைக்கும், உள்ளன்பு – என் உள்ளத்துப் (தலைவன் பாலுள்ள) பிரியத்தை, சாற்றிடேன் – கூறவில்லை.  

திங்கள், 26 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (26-11-2012)

குரு பரம்பரை வைபவத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆவலுடன் கேட்டு வருபவர்கள் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்த ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய வைபவங்களைப் பற்றி இந்த வாரம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி. 

“தேசிக னென்னு மாசான்
        தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
         விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே'”

என்று அன்று நம் ஸ்வாமி தேசிகனைப் பற்றி வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் பாடியது நம் ஸ்ரீமத் ஆண்டவனுக்கும் சாலப் பொருந்தும்.  என்றாலும், மிகவுமே கடினமான அந்தக் காரியமாம் ஸ்ரீமத் ஆண்டவன் வைபவங்களை அழகாக ஆச்சரியப்படும் வகையில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஸ்ரீமத் ஆண்டவனுடன் மிக நெருக்கமாகப் பழகிடும் பாக்கியம் பெற்ற சிலருக்கே தெரிந்த ஸ்ரீமத் ஆண்டவனின் பூர்வாச்ரமப் பெருமைகளை, அன்றே வெளிவந்த அவரது உதார குணங்களை, கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும் அவருக்கு அன்றே இருந்த ஆனந்தங்களை, ஸ்ரீகோசங்களைப் படிப்பதில் அவருக்கு இருந்த அபாரமான ஆர்வத்தை என்று விவரித்துக்கொண்டே போகுமளவுக்கு இருக்கும் விவரங்களை ஆசாரியன் என்று தள்ளி நின்று தரிசிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ள அனைவரும் அறிந்து ஆச்சரியப்பட்டுப் புளாகாங்கிதமடையும் வகையில், என்ன தவம் செய்தனம் இவரை ஆசாரியனாக அடைய என்று சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து மெய்சிலிர்க்கும் வகையில், பூர்வாச்ரம விருத்தாத்தங்களில் ஓரிரண்டு சொன்னாலும் அருமையாகச் சொல்லி மகிழ வைக்கும் இன்றைய உபந்யாஸத்தைத் தரவிறக்கிக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?60t604c3lnfxrax

அதற்கெல்லாம் பொறுமையில்லை இப்பவே இங்கேயே கேட்கணும்னு நினைக்கிறவர்களுக்கு

இந்த உபந்யாஸத்திலே ஸ்ரீமத் ஆண்டவன் பாதயாத்திரையாய் சஞ்சாரம் பண்ணுகையில் ஒரு கிணற்றில் இறங்கி ஜலத்தில் மிதந்து யோகம் புரிந்ததைக் குறிப்பிட்டதைக் கேட்டபோது 2008ல் திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய சமயத்தில் சக்ரதீர்த்தத்தில் நீச்சலடித்து அதன்பின் வானம் பார்த்துப் பல நிமிடங்கள் மிதந்து அடியோங்களை பிரமிக்க வைத்ததுநினைவுக்கு வருகிறது.

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 4

மந்தாரச்சோலை வளரும்
பசும் கிள்ளாய்
மந்தாரச் சோலை வளரும் பசுங்கிள்ளாய்
சந்தாபம் எய்தித் தளர்வுற்றேன் –நந்தாத                     .21.
அந்தரங்க மந்திரம் சொல் அஞ்சுகம் முந்தரங்கம் கண்டு முடிச்சோழன் சீர்பொருந்த
அந்தரங்க மந்திரஞ்சொல் அஞ்சுகமே – நந்தணியும்   .22.
நற்புதுவை ஆண்டாள் நற்புதுவை ஆண்டாள் நலங்கனியும் பொற்றொடிக்கை
பொற்பமைய வீற்றிருக்கும் பூங்கிளியே—அற்புதஞ்சேர். .23
சோலைக்குள்ளே வீற்றிருக்கும் தென்றல் சோலைக்கு ளேபிறந்துசோலைக்கு ளேவளர்ந்து
சோலைக்குள் வீற்றிருக்கும் தோன்றலே – சோலைப்   .24.
படைவீட்டு மாரன் பரி படைவீட்டு மாரன் பரியேஅம் மாரன்
படைவீட்டு மாறென் பரியே --  நடையாற்றும்              .25.
அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமாம் அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமா ஆதரவாய்
அஞ்சுகமே காணல் அரிதாமே – நெஞ்சுகக்குந்             .26.
தத்தையே நீக்குக தத்தையே நீக்குக என் தத்தையே யுற்றவருத்
தத்தையை மேவுமனத் தத்தையே – உத்தமமாம்           .27.
காமன் மலரம்பு பட்டு
உடல் வருந்தினேன்
வன்னியே காமன் மலரம்பு பட்டுடலம்
வன்னியே ஒப்ப வருந்தினேன் –மன்னியசீர்க்                .28.
தென்றலும் சங்கீரணமே கீரமே ஒத்தமனக் கீரமே கொண்டுகிளர்
கீரமே தென்றலுஞ்சங் கீரணமே – ஊரறிய                    .29.
பேசு புகழ் ஏசியே ஏசியே வன்னகண்ணா ரேசிலசொற் கூறலுனக்(கு)
ஏசியே கூறலுளம் ஏறாதோ – பேசுபுகழ்க்                       .30.
கொள்ளையே கொள் ளும் நிலாக்கொள்ளை கிள்ளையே மாரன்மனக் கிள்ளையே என்றனுயிர்
கொள்ளையே கொள்ளுநிலாக் கொள்ளையே – வள்ளைவிழிச்       .31.
சாருமலர்ப் பூங்குழலார் சாருமலர்ப் பூங்குழலார் தங்களுரை போலுமொழி
சாருமதி ரூபமணிச் சாருவே – கூருநயந்                           .32.
தேருஞ் சுவாசகமே தேறுஞ் சுவாசகமே தேறாதிருக்கும் எனைச்
சேருஞ் சுவாசகமே தேற்றாயோ – மாரனடர்
                  .33.
அஞ்சிறைக் கிள்ளாய் வெஞ்சிறையி னின்றும் விடுவிப்பாய் என்றிருப்பேற்(கு)
அஞ்சிறைக் கிள்ளாய் அருளாயோ --                               .34.

21. மந்தாரச் சோலை –கற்பகச்சோலை; வளரும் –வாழும்; பசுங்கிள்ளாய் –பச்சைக்கிளியே; சந்தாபம் எய்தி – மன்மதபாணம் தைக்க, தளர்வுற்றேன் –மெலிந்தேன், நந்தாத—குறைவுபடாத
22. முந்து – முன்பு, அரங்கம் கண்டு –திருவரங்கம் உண்டாக்கி, முடிச்சோழன் –முடியுடைச் சோழமன்னன், சீர் பொருந்த – சிறப்புற, அந்தரங்க மந்திரஞ்சொல் – இரகசிய மந்திரம் கூறும், அஞ்சுகமே – கிளிய, நந்தணியும் – சங்கு வளை புனையும்
23. நற்புதுவை ஆண்டாள் –நல்ல வில்லிபுத்தூர்க் கோதையின், நலங்கனியும் –நலம் பெருகும், பொற்றொடிக்கை  -- பொன்வளையல் புனைந்த கரத்து, பொற்பு அமைய – அழகு அமைய, வீற்றிருக்கும் – அமர்ந்துள்ள, பூங்கிளியே – மென்மையான கிளியே, அற்புதம்சேர்—ஆச்சரியம் அமைந்த,
24 – 25.  சோலைக்குளே பிறந்து – பொழிலின் உள்ளே தோன்றி, சோலைக்குளே – பொழிலகத்து, வளர்ந்து – வாழ்ந்து, சோலைக்குள் வீற்றிருக்கும் –பொழிலிடை அமர்ந்திருக்கும், தோன்றலே –வருபவளே, சோலைப்படை வீட்டு மாரன் – பொழிலே படைவீடாய்க் கொண்ட , பரியே – வாகனமே, அம் மாரன் – அந்த மன்மதன், படை – சேனையை, வீட்டுமாறு – வீழ்த்தும் வழி, என் – என்ன, பரியே –பரிந்து கூறுக, நடையாற்றும் – மெல்நடை பயிலும்.
26. அஞ்சுகமே – கிளியே, ஓரிரவும் – ஒவ்வொரு இராத்திரிப் பொழுதும், அஞ்சுகமா – ஐந்து யுகமாம், ஆதரவாய் – அன்பாக,  அஞ்சுகமே காணல் – அழகார் இன்ப நலம் காண்பது, அரிதாமே – அருமையாம், நெஞ்சு(உ)கக்கும் – மனம் மகிழும்,
27. தத்தையே – கிளியே, நீக்குக என் தத்தையே – என் துன்பத்தை மாற்று, உற்ற – அடைந்த, வருத்தத்தையே – துன்பத்தையே, மேவுமனத் தத்தையே – என் மனத்து விளங்கும் அத் துன்பத்தையே, உத்தமமாம் –நலமாம்
28. வன்னியே – கிளியே, காமன் மலரம்பு பட்டு – மன்மதன் பூங்கணை தைத்து, உடலம் –மெல்லிய சரீரம், வன்னியே ஒப்ப—அக்கினி நிகராக, வருந்தினேன் – துன்புற்றேன், மன்னியசீர் –சிறப்புப் பொருந்திய.
29. கீரமே ஒத்த –பாலை நிகர்த்த, மனக்கு ஈரமே கொண்டு கிளர் – உள்ளத்தில் இரக்கம் கொண்டு விளங்கும், கீரமே – கிளியே, தென்றலும் – தென்றல் காற்றும், சங்கீரணமே – அசுத்தமாம், ஊரறிய – ஊரில் உள்ளோர் அறியும்படி.
30. ஏசியே – பழித்து, வன்ன கண்ணாரே –கொடிய பார்வையர்களே, சில சொற் கூறல் – சில வார்த்தை பேசுவது, ஏசியே – கிளியே, கூறல் – சொல்வது, உனக்கு உளம் ஏறாதோ – உன் உள்ளத்து ஏறவில்லையா, பேசு புகழ் – சிறப்பாகப் பேசப் பெறும்
31. கிள்ளையே – கிளியே, மாரன் – மன்மதன், மனக்கிள் –உள்ளத்தில் நெருடல், ஐயே – ஐயோ, என்றனுயிர் – என் ஆவி, கொள்ளையே கொள்ளும் –கவர்ந்து கொள்ளும், நிலாக் கொள்ளையே – சந்திரனைப் போன்ற குளிர்ந்த, வள்ளை விழி – கொடிபரந்த கண்களும்
32. சாருமலர்ப் பூங்குழலார் – புஷ்பங்கள் கூடிய கூந்தலும் உடைய பெண்கள், தங்கள் உரை போலும் – தம் இன்சொல் நிகர்ப்ப, மொழி சாரும் – உரை பேசும், அதி ரூப – மிக்க வடிவமுள்ள, மணிச் சாருவே – அழகிய கிளியே, கூருநயம் – மேன்மை மிக்கவை
33. தேரும் – தெளியும், சுவாசகமே –கிளியே, தேறாதிருக்கும் எனை – ஆறுதலின்றி இருக்கும் எனக்கு, சேரும் –அடையும், சுவாசகமே – நல்ல வாக்கினால், தேற்றாயோ – ஆறுதலளிக்க மாட்டாயோ, மாரன் அடர் – மன்மதன் வலிய
34. வெஞ்சிறையினின்றும் – கொடும் சிறைச் சாலையிலிருந்து, விடுவிப்பாய் – விடுதலை அளிப்பாய், என்றிருப்பேற்கு – என இருக்கும் எனக்கு, அஞ்சிறைக்கிள்ளாய் – அழகிய சிறகுள்ள கிளியே, அருளாயோ – தயை புரிய மாட்டாயோ.    

புதன், 21 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கன் தத்தைவிடு தூது 3

மண்நாட்டிலும் விண்நாட்டிலும் மண்நாட்டில் யாரும் மதிக்கும்வணம் மேவுதலால்
விண்நாட்டில் வாழ்வோர் விரும்புதலால் – எண்ணாட்டும் .9.
பரீட்சித்து மன்னன் மேன்மை பெற பாரகலை எல்லாம் பரீட்சித்து மேன்மைபெற
ஆரமுதம் நாண அறைதலால் – நீரமையும்                         .10.
நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நன்மையிலாப்
பூரியர்பாற் செல்லாப் புலமையான் – ஆர்வமுடன்            .11.
வனக்காட்டிடை வாழ்ந்து களித்தல் நாட்டிடையே யன்றிஎந்த நாளும்இனி தாகவளக்
காட்டிடையே வாழ்ந்து களித்தலால் --- வேட்டுருகிக்       .12.
கூடுவிடுக்
கூடு பாயும்
கூடுவிட்டுக் கூடு குடிபுகும்அக் கொள்கையினால்
பாடுபெறும் அஞ்சிறையிற் பற்றுறலால் – நீடுதவ            .13.
மாசுக நல் ஞானம் மாசுகநல் ஞான வளம்பெருகு நாமமொடு
நீசுகனாய் வாழ்தல் நிசமன்றோ – தேசுபெறும்                 .14.
வாசம் சிறந்த வனம் வாசஞ் சிறந்தவனம் மன்னுதலால் மாதவத்தோர்
பேசுநய வாணி பிறங்கலால் – காசினியின்                        .15.
மன்னும் குரம்பை வளன் மன்னும் குரம்பை வளனமையத் தான்படைத்துத்
துன்னும்ஒரு நான்முகமுந் தோன்றலால் – முன்னியநற்    .16.
அருள் வாய்ந்த வேள்வி கேள்விமறை யோர்புகலுங் கீதமறை ஓதுதலால்
வேள்வியருள் வாய்ந்த விதிஒப்பாய் – நீள்ஒளிசேர்          .17.
வண்ணக் கனி வாய் மருவுதல் வண்ணக் கனிவாய் மருவுதலால் வான்உலகில்
நண்ணிப் பயில்வோரும் நட்புறலால் --- ஒள்நிறஞ்சேர்     .18.
அஞ்சுவண வன்னம் அமைதல் அஞ்சுவண வன்னம் அமைதலால் ஆங்கெதிர்வோர்
நெஞ்சுவந்து கோடல் நிகழ்த்தலால் – நஞ்சவிழி               .19.
விந்தை நிகர் ஆயிழையார் விந்தைநிக ராயிழையார் மேவிவிளை யாடலினால்
ஐந்தருவை நீநிகராம் அன்றோகாண் --- சுந்தரஞ்சேர்       .20

9. மண் நாட்டில் – நிலவுலகில், யாரும் – எவரும், மதிக்கும் வணம் – புகழும்படி, மேவுதலால் – விளங்கலால், விண் நாட்டில் வாழ்வோர் – வானவர்கள், விரும்புதலால் –நேசிப்பதால், எண்நாட்டும் – உளத்தில் பதித்த

10.பாரகலை எல்லாம் – பெருங் கலைகள் யாவும், பரீட்சித்து மேன்மை பெற – பரீட்சித்து மன்னன் உயர்வு பெற, ஆரமுதம் நாண—அரிய அமுத மும் நாணும்படி சுவை பெற, அறைதலால் – கூறுவதால், நீரமையும் –நீரில் பொருந்திய (நீராடிய)

11. நாரியரும் – பெண்களும், நாணாமல் – வெட்கமுறாமல், நண்ணுத லால் – அடைதலால், நன்மையிலா – நலமில்லாத, பூரியர் பாற் செல்லா – அற்பர்களிடம் சென்றடையாத, புலமையால் – ஞானத்தால், ஆர்வமுடன் – அன்புடன்.

12. நாட்டிடையே யன்றி – மக்கள் வாழும் நாடுகளில் அல்லாமல், எந்த நாளும் – எப்போதும், இனிதாக – இன்பமாக, வளக்காட்டிடையே – செழித்த கானகத்தில், வாழ்ந்து – வசித்து, களித்தலால் – மகிழ்வதால், வேட்டுருகி – விரும்பி உருகி.

13. கூடுவிட்டுக் கூடு குடி புகும் அக்கொள்கையினால் – அட்டசித்துக் களுள் ஒன்றாம் ஒரு உடலை விட்டு வேறுடல் செல்லும் (பரகாயப் பிரவேசம்) அத்தன்மையால், (சுகர்), கூடு விட்டுக் கூடு மாறும் தன்மையது (கிளி), பாடு பெறும் – துன்பமுறும், அஞ்சிறையில் – அழகிய சிறைச் சாலை யில், (சுகர்) அழகிய சிறகில் (கிளி), பற்றுறலால் – பற்றி இருத்தலால், நீடு தவ --- நீண்ட தவத்தால்.

14. மா சுக நல் ஞான வளம் பெருகும் – பேரின்ப ஞான வளம் பெருகிய, நாமமொடு – சுகர் என்ற பெயருடன், நீ சுகனாய் வாழ்தல் – நீ கிளியாக (சுக மகரிஷியாக) வாழ்தல், நிசமன்றோ – உண்மை அன்றோ, தேசு பெறும் – ஒளி பெறும்.

15. வாசம் சிறந்த அனம் மன்னுதலால் – சிறந்த அன்ன வாகனத்தில் விளங் குவதால் (பிரமன்), வாசனை மிக்க சோறு உண்பதால் (கிளி), மாதவத் தோர் – மகரிஷிகள், பேசும் – புகழும், நயவாணி – எழிலார் சரசுவதி, பிறங்கலால் – விளங்குவதால் (பிரமன்), மாது – தலைவி, அவத்து – துயரில், ஓர் – ஒரு, பேசுநய வாணி – நயமாகப் பேசும் பேச்சால், பிறங்கலால் – விளங்கலால்(கிளி), காசினியின் –உலகில்.

16. மன்னும் – பொருந்தும், குரம்பை – சரீரத்தை (பிரமன்), கூடு (கிளி), வளனமைய – சிறப்பாக, தான்படைத்து – தான் சிட்டித்து, துன்னும் – விளங்கும், ஒரு நான்முகமும் – ஒப்பற்ற சதுர் முகங்களும் (பிரமன்), நாற்புறமும் (கிளி), தோன்றலால் – உண்டாவதால், முன்னிய – நினைந்த, நல் –நல்ல

17. கேள்வி மறையோர் – கேள்வி ஞானமுள்ள வேதியர், புகலும் – பிரமன் அருளும் (பிரமன்), கூறும், (கிளி), கீதமறை – இசைசார்வேதம், ஓதுதலால் –கூறுதலால் (பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே  --சம்பந்தர் தேவாரம்) வேள்வி யருள் வாய்ந்த – யாக அனுக்கிரகம் பொலிந்து, விதி ஒப்பாய் – பிரமன் நிகராவாய், நீள் ஒளி சேர் – பெருஞ் சோதி சேரும்.

18 – 20. (கற்பகத்தரு – கிளி சிலேடை) வண்ணக் கனிவாய் மருவுதலால் – பல நிறப் பழங்கள் பொருந்துவதால் (ஐந்தரு) நல்ல நிறமுள்ள பழம் போன்ற வாய் உள்ளதால் (கிளி), வானுலகில் – தேவலோகத்தில், நண்ணி – அடைந்து, பயில்வோரும் – விளங்குபவர்களும், நட்புறலால் – நேயமுறலால், ஒள்நிறஞ்சேர் – ஒளிவண்ணம் சேரும், அஞ்சுவண வன்னம் – அழகிய பொன்நிறம் (கற்பகத்தரு) பஞ்சவர்ணம் (கிளி), அமைதலால் – பொருந்துவதால், ஆங்குஎதிர்வோர் – அங்கு எதிர்வருபவர், நெஞ்சுவந்து – மனம் பொருந்தி, கோடல் – கொள்ளுதல், நிகழ்த்தலால் – நடத்துவதால், நஞ்சவிழி – விஷத்தன்மை சேர் கண்களுடைய, விந்தை நிகர் – வீரலட்சுமி அனைய, ஆயிழையார் – மகளிர், மேவி – சார்ந்து, விளையாடலினால் – களியாடலால் (பொது) ஐந்தருவை – கற்பகச் சோலைக்கு, நீநிகராம் அன்றோ காண் – பார், நீ ஒப்பாவை அன்றோ, சுந்தரஞ் சேர் – எழில் பொருந்திய

திங்கள், 19 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (19-11-2012)

நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய உபந்யாஸம் ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவனின் வைபவங்களைப் பற்றியது. மிகத் தற்செயலாக, கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து, தனது மதுரை சாதுர்மாஸ்யத்தை முடித்துக்கொண்டு தென் மாவட்டங்களில் சஞ்சாரம் செய்து சிஷ்யர்களை சம்ரக்ஷித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி சரணாகதி மார்க்கத்தில் அவர்கள் சிந்தையைத் திருப்பி வெற்றிகரமாக விஜய யாத்திரையை முடித்துக் கொண்டு நேற்று (18-11-2012) இரவுதான் ஸ்ரீமத் ஆண்டவன் சென்னை ஆச்ரமத்துக்கு எழுந்தருளி யிருக்கிறார். இன்று காலையில் ஸ்ரீமத் ஆண்டவன் ப்ரபாவத்தைப் பற்றி நாட்டேரி ஸ்வாமி உபந்யஸிக்க ஆரம்பித்திருக்கிறார். இன்றைய உபந்யாஸம் ஒரு சிறு முன்னுரைதான்.
ஏற்கனவே, ஸ்ரீரங்கநாத பாதுகாவில் பதின்மரும் ஒருவரானார் என்று நம் ஸ்ரீமத் ஆண்டவனைப் பற்றி மிக அற்புதமான கட்டுரை எழுதியிருந்தார். அதைப் போலவே, இன்றைய உபந்யாஸத்திலும் , எப்படி தனக்கு முன்னால் இருந்த ஆசார்யர்கள் ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளையும் தனக்குள் அடக்கி ஓர் ஒப்பற்ற ஆசார்யனாகத் திகழ்கிறார் என்பதை மிக மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் நாட்டேரி ஸ்வாமி. ஆச்ரம சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் என்றில்லை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் கேட்டு ரசித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய அருமையான உபந்யாஸம் . இன்று மட்டுமில்லை. இனி வரும் காலங்களிலும் சொடர்ந்து கட்டாயம் கேட்கப்பட வேண்டியது.
தரவிறக்க
http://www.mediafire.com/?ox6pp74mmsi16vl

ஞாயிறு, 18 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது

Untitled-11

நூல்

பூமகளும், புவிமகளும், நீளையும் போற்ற அரவணையில்
பள்ளிகொள்ளும் அரங்கன்

பூமகளும் செல்வப் புவிமகளும் நீளையெனும்
மாமகளும் பைந்தாள் மலர்வருடப் – பாமருவும்           .1.
வண்ண மணிக்கடிகை வாளரவப் பாயலின்மேல்
எண்ணுந் துயில்புரியும் எம்பிரான் – தண்ஒளிசேர்      .2.
சோலைக்கிளியே பச்சைமணி மேனிப் படிவம்எனப் பாய்ஒளியார்
இச்சையுறுஞ் சோலை இளங்கிளியே – உச்சிதஞ்சேர்                .3.
வண்டினங்கள் பாடும் சோலை கந்தாரம் பாடிக் களிவண் டினங்கஞலும்
மந்தாரச் சோலையகம் வைகலாற் – சந்தாரக்              .4.
கோதை நல்லார் கூறும் மொழிகள். கோங்குமுலை வாங்குமிடைக் கோதைநல்லார் கூறுமொழி
யாங்குருகக் கூவிநலம் ஆர்தலால் – ஓங்கெழிலார்      .5.
இந்த்ராணி இடும் முத்தம் தந்த்ராணி எல்லாம் தளர்ந்தழியத் தான் விளங்கும்
இந்த்ராணி முத்தம் இடுதலால் – நந்தாத                      .6.
கோட்டுமா ஏறிக் குலவுதலால் கோட்டுமா வேறிக் குலவுதலால் கோதையர்கை
நீட்டுமா நின்று நிலவலால்—வேட்டுருகும்                   .7.
ஆயிரம் கண் நாட்டம் அமைதல்

ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் அம்புவியில்
நீயமரர் வேந்தன் நிகரன்றோ—பாய்திரைசூழ்             .8.

(நம் அகத்துக் குழந்தையிடம் ஒரு சிறு வேலையைச் சொல்லும்போது கூட, “என் கண்ணே! நீ கட்டிச் சமர்த்தாச்சே! அப்பாவுக்கு ரொம்ப செல்லமாச்சே” என்று பலபடியாய் குளிரப் பேசினால்தான் வேலை நடக்கிறது. இங்கோ கவிஞர் ஆசைப்படுவதோ பெரிய காரியம்! கிளியை தூது அனுப்புகிறார். அதுவும் அரங்கனிடம்! கிளியே போய்ச் சொல்லு என்றால் கிளி கேட்குமோ கேட்காதோ! அதனால் கிளியைப் புகழ்ந்து பாட ஆரம்பிக்கிறார்.

கிளியின் வண்ணத்தைப் , பச்சைமாமலைபோல் மேனி கொண்டு அறிதுயில் கொள்ளும் திருமாலுடனும், இந்திரனுடனும் ஒப்பிட்டுப் புகழ்வது மேலே உள்ளது. திரு கம்பன் வழங்கும் குறிப்புரை கீழே)

1. பூமகளும் – மலர்மகள் திருவும், செல்வப் புவி மகளும் – திரு மிகு பூமிதேவியும், நீளை எனும் மாமகளும் – அழகிய நீளா தேவியும், பைம்தாள் மலர் வருட –பசுமையான திருவடி மலர்களைத் தடவிக் கொடுக்க , பாமருவும் – பிரபை வீசும்
2. வண்ணமணிக்கடிகை – பலநிற மணிகள் பதித்த தோள் வளையுடன், வாளரவப் பாயலின்மேல் – ஒளிசேர் அரவணையில், எண்ணும் துயில் புரியும் --- நோக நித்திரை புரியும், எம்பிரான் – எம் தலைவன், தண் ஒளி சேர்—குளிர்ந்த பிரகாசம் சேரும்.
3. பச்சை மணி மேனிப் படிவம் என – மரகத உருவம் போல, பாய் ஒளி ஆர்---பரவும் ஒளி சேர், இச்சை உறும் – விருப்பமுடைய, சோலை – பொழிலில் உள்ள, இளங்கிளியே – இளமை சேர் கிளியே, உச்சிதம் சேர் – தகுதி சேரும்
4. கந்தாரம் பாடி – காந்தாரப் பண் இசைத்து, களி வண்டினம் கஞலும் –மதுவுண்ட வண்டினங்கள் மிகுந்திருக்கும், மந்தாரச்சோலை – கற்பகக்கா, அகம் – உள்ளே, வைகலால் – இருத்தலால், சந்த ஆர – சந்தனம் பொருந்திய
5. கோங்கு முலை –கோங்கில வரும்பனைய தனங்கள், வாங்கும் இடை – தாங்கும் இடுப்புடைய, கோதை நல்லார் – பெண்கள், கூறுமொழி – சொல்லும் உரைகள், ஆங்கு – அங்கே, உருக – அவர்கள் உள்ளம் நெகிழ, கூவி – உரைத்து, நலம் ஆர்தலால் – நன்மை உறலால், ஓங்கெழிலார் – மிக அழகுள்ள மகளிர்.
6. தந்த்ராணி எல்லாம் – (தன் த்ராணி) தம் சக்தி யாவும், தளர்ந்து அழிய – சோர்வுற்று நீங்க, தான் விளங்கும் – ஒப்பற்றுப் பொலியும் , இந்த்ராணி – இந்திரன் மனைவி, முத்தம் இடுதலால் – முத்தம் கொடுப்பதால், நந்தாத – குறைவற்ற
7. கோட்டுமா ஏறி – கொம்புகளுடைய மாமரத்திலே ஏறி, குலவுதலால் – விளங்குதலால், கோதையர் கை நீட்டுமா – அரம்பையர்கள் கை நீட்டுமாறு, நின்று நிலவலால் – இருந்து விளங்குதலால், வேட்டுருகும் – அகம் விரும்பி உருகும்.
8. ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் – ஆயிரங் கண்ணுடையான் பார்வை படுதலால் (இந்திராணி), ஆயிரக்கணக்கானோர் பார்வையில் படுவதால் (கிளி), அம்புவியில் – உலகில், நீயமரர் வேந்தன் – இந்திரன், நிகரன்றோ – எப்பல்லவா, பாய்திரை சூழ் –பாய்ந்துவரும் அலைகடல் சூழும்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது 2

Untitled-11

3. நம்மாழ்வார் துதி.

விடையனங்கை யிரவமல விழியருளால் அறருளும்
                                       விமலன் வெள்வேற்
படையனங்கை யிரவமலர் பார்வைநடை வாய்ப்பதுமப்
                                        பாவை கேள்வன்
அடையனங்கை யிரவமல னகற்றரங்கன் அடியிணைமே
                                         லறையும் பாடற்(கு)
உடையநங்கை யிரவமல முறவுயிர்க்கும் தனிக்கதிர்எற்(கு)
                                          உதவும் மாதோ

விடையன் – இடப வாகனச் சிவன், அங்கை இரவ – கையிலேற்கும் பிச்சைத் தொழிலை, அமலவிழி அருளால் –குற்றமற்ற  கண்ணருளால்,  அற- நீங்குமாறு, அருளும் –அனுக்கிரகிக்கும், விமலன் – இறைவன், வெள்வேல் படை – ஒளி செய் வேல் ஆயுதம், அனம் – அனப் பறவை, கையிரவமலர் – ஆம்பல் மலர், (முறையே), பார்வை நடை வாய் – விழி நடை வாய், பதுமப்பாவை – தாமரைச் செல்வி (திருமகள்)யின், கேள்வன் – கணவன், அடையனங்கு – மன்மதனால் அடையும், அயிர் – ஐயம், அவம் – துன்பம், மலன் – பாவங்கள், அகற்று – நீக்கும், அரங்கன் – ஸ்ரீரங்கநாதன், அடியிணை மேல் – திருவடிகளின் மீது, அறையும் – சொல்லும், பாடற்கு – பாடலாம் தத்தை விடு தூதுக்கு, உடைய நங்கை – காரி மாறன் மனைவி, இரவு – பிறவி இருள், அமலம் உற – மாசற்ற தன்மை உற, உயிர்க்கும் – ஜனித்த, தனிக் கதிர் – ஒப்பற்ற சோதி, எற்கு – எளியேனுக்கு, உதவும்—உதவி புரியும், மாதோ – அசை.

4. குரு வீரராகவர் துதி.

மானவ னத்தத்தை யாயுதம் ஏந்திய மாயப்பிரான்
தீனவ னத்தத்தை மாற்றரங் கேசன் திருவடிமேற்
கானவ னத்தத்தை சொற்றரு தூதுக்குக் காப்புரைக்கில்
வானவ னத்தத்தை மாசிவந் தான்கழல் மாமலரே.

மானவன் – பெருமைக்கு உரியவன், அத்தத்து – கரத்தில், ஐ ஆயுதம் ஏந்திய – பஞ்சாயுதங்கள் தரித்த, (அழகிய சக்கரம் ஏந்திய எனலும் ஆம்) மாயப் பிரான் – திருமால், தீனவன் – கஜேந்திரனாம் எளியவன், அத்தத்தை – துன்பத்தை, மாற்று – நீக்க, அரங்கேசன் –திருவரங்கநாத இறைவன், திருவடி மேல் – சரணங்களில், கானவன் – இசை சேர் பொழிலில் உள்ள, அத்தத்தை – அக்கினி, சொல் தரு – உரையாகப் பாடும், தூதுக்கு – தூது ப்ரபந்தத்துக்கு, உரைக்கில் –கூறில், வானவன் – சூரியன், தத்து – விரும்பும், அத்தை—அந்த மகர மாதத்தில், மாசி வந்தான் – மக நட்சத்திரத்தில் உதித்தவன், கழல் – திருவடிகளாம், மாமலரே – தாமரை மலர்களே, காப்பு – இரட்சையாகும். (நூலாசிரியரின் குரு கோடி கன்னிகாதானம் வீரராகவ சுவாமி தை மாதம் மக நாளில் தோன்றியவர் போலும்)

                                                          தொடரும்…..,,,

வியாழன், 15 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது

ஹம்சத்தைத் தூது விட்டார் ஸ்வாமி தேசிகன். மேகத்தைத் தூது விட்டான் கவி காளிதாஸன். நம் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்காரோ (ஏற்கனவே லக்ஷத்துக்கும் அதிகமான கவிதைகள் இயற்றிய இவரைப் பற்றிப் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். ) திருஅரங்கனுக்கு கிளியைத் தூது அனுப்பியிருக்கிறார். தமிழறிந்த பலரும் இதை முன்பே படித்து ரசித்திருக்கலாம். இன்றுதான் இந்நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. காப்புரிமை இருக்கிறது. என்றாலும் நல்ல தமிழை, அரங்கனிடம் ஈடுபாட்டால் இன்னமுதாய்ப் பொங்கிவந்திருக்கும் ஒரு அருமையான நூலை அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஆசையால் காப்புரிமையை மீறத் துணிந்திருக்கிறேன். இங்கு படிப்பவரில் ஒரு சிலராவது காப்புரிமை வைத்திருக்கும் திரு கோவிந்தராஜனை (எண்8, நர சிம்மபுரம்,மைலாப்பூர், சென்னை) அணுகி நூலை வாங்கிப் படிக்க இது ஒரு தூண்டுதலாக அமைந்தால் மிக மகிழ்வேன். வழக்கமாக மதுரகவி நூல்களுக்குச் சிறு குறிப்புகள் வழங்கி உதவும் திரு. ‘கம்பன்’ இந்நூலுக்கும் எழுதியுள்ள குறிப்புகளுடன் இனி நூலைப் படித்து ரசியுங்கள். வழக்கம்போல், தினம் கொஞ்சம்.  

மதுரகவி
திருஅரங்கர் தத்தைவிடு தூது.

காப்பு

1.மாருதி துதி

சீர்மருவுந் தென்னரங்கர் சேவடிமேற் செந்தமிழால்
தார்மருவும் வாசிகையான் சாற்றுதற்கு – நீர்மருவும்
அஞ்சத்தான் எண்புயத்தான் ஆகத்தான் வந்தருளுங்
கஞ்சத்தார் மாருதிதாள் காப்பு.

சீர்மருவும் தென்அரங்கர் – சிறப்பு அமைந்த அழகிய அரங்கநாதப் பெருமாளின், சேவடிமேல் – சரணங்களில், செந்தமிழால் – செவ்விய தமிழ் மொழியால், தார் மருவும் –மலர்கள் பொருந்திய, வாசிகை – மாலை, யான் சாற்றுதற்கு – நான் உரைப்பதற்கு, நீர் மருவும் – நீரில் பொருந்திய, அஞ்சத்தான் – அன்னவாகனன் பிரமன், எண்புயத்தான் – சிவபெருமான், ஆகத்தான் – ஆகும்படிதானே, வந்து –தோன்றி, அருளும் – அனுக்கிரகிக்கும், கஞ்சத்தார் – தாமரை மலர்கள் பொருந்திய, மாருதி தாள் – அனுமன் திருவடிகள், காப்பு – சரணம்.

2. எதிராசர் துதி

செல்லியலுஞ் சோலை திருவரங்க நாதனுக்குச்
சொல்லியதோர் தத்தைவிடு தூதுக்கு – நல்அரணாம்
வாதூர் புறஇருட்கு மன்னுகதி ராகிவரும்
பூதூர் முனிஇருதாட் போது.

செல் இயலும் – மேகம் தவழும், சோலை – பொழில்களை உடைய, திருவரங்க நாதனுக்கு – ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு, சொல்லிய – கூறிய, ஓர் தத்தை விடு தூதுக்கு – ஒரு கிளி விடு தூது என்னும் சிற்றிலக்கியத்துக்கு, வாது ஊர் புற இருட்கும் – வாதம் தவழும் புறச்சமயமாம் இருளுக்கும், மன்னு – விளங்கும், கதிராகி, சூரியனாகி, வரும் – ஒளி செய்து வரும், பூதூர் முனி – எதிராசர், இருதாள்போது – இரு மலர்ச் சரணங்கள், நல் அரணாம் – நல்ல காப்பாகும்.

திங்கள், 12 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam dated 12-11-2012

இரண்டு வருடங்களாக நடந்து வந்த குரு பரம்பரை வைபவ உபந்யாஸங்களின் ஸாராம்சத்தை ஒரு மணி நேரத்தில் கொடுக்க முடியுமா? முடியும் என்று மிக அற்புதமாக நாட்டேரி ஸ்வாமி காண்பிக்கிறார். இந்த தொடர் உபந்யாஸத்தின் கடைசி பகுதியான ப்ரக்ருதம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமதாண்டவன் வைபவத்தைச் சொல்வதற்குமுன் இதுவரை கேட்காதவர்களும் ஓரளவு நம் ஆசார்ய பரம்பரையின் மேன்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் தானும் அநுபவித்து சொல்லி  நம்மையும் அநுபவிக்க வைத்த தனது உபந்யாஸங்களை மிக அழகாகச் சுருக்கி நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் உபந்யஸிப்பதைக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?0dyz7xocpuf5w3p

புதன், 7 நவம்பர், 2012

Guru Paramparai Upanyasam dated 5-11-2012

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாய் ஸ்ரீமத் மைசூர் ஆண்டவனின் சரிதத்தைப் பூர்த்தி செய்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி, ப்ரக்ருதம் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் வைபவங்களைக் கூற ஆரம்பிக்கு முன்னர், இதுவரை நாம் ரசித்த குரு பரம்பரா வைபவங்களின் சாராம்சத்தை சற்று விவரிக்கிறார். இதுவரை கேட்காதவர்களும் இதுவரை நடந்த உபந்யாஸங்களின் ஸாரத்தை ஓரளவு புரிந்து கொள்ள இன்றைய உபந்யாஸம் உதவும்.
மீடியாபையரிலிருந்து தரவிறக்க
http://www.mediafire.com/?xlmyciw25qect8p

வியாழன், 1 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (29-10-2012)

Sri Natteri swamy, in his tele – upanyasam dated 29-10-2012, narrates the divya charitham of HH Srimad Mysore Andavan. Eventhough, HH Srimad Mysore Andavan’s period of Acharya peetam was very short, his kainkaryams were great. Please enjoy it at

http://www.mediafire.com/?6x3b94r0lqjgpkr

வெள்ளி, 26 அக்டோபர், 2012

Guru Paramparai Vaibhavam (22 - 10 - 2012)

With today's tele -upanyasam, sri Natteri swamy concludes the divya charitham of the greatest Acharyan of the last century, HH Srimad Andavan Sri Thirukkudanthai Andavan.
Please visit to download and enjoy 
http://www.mediafire.com/?qrucavvqmwadw53 

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

Guru Paramparai Vaibhavam (15 - 10 2012)

எத்தனை வாரங்கள் சொன்னாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாததான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவனின் அற்புத அநுபவங்களை இந்த வாரமும் நாட்டேரி ஸ்வாமி விவரிப்பதைக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/?z8232akx58re75r

வியாழன், 11 அக்டோபர், 2012

Guru Paramparai vaibhavam --8-10-2012

Enjoy this week also the great charitham of HH Srimad Thirukkudanthai Andavan in the voice of Natteri Sri Rajagopalacharyar swamy
Mediafire link is here
http://www.mediafire.com/?wnvvyce76xt9fqq

To download from Skydrive
http://sdrv.ms/T7sX6q

திங்கள், 1 அக்டோபர், 2012

குரு பரம்பரை வைபவம் --01-10-2012

எத்தனை வாரம் சொன்னாலும் முழுவதுமாகச் சொல்லிவிட முடியாத ஸ்ரீமத் நிருக்குடந்தை ஆண்டவனின் திவ்ய சரிதத்தை, அவர் உபந்யஸிக்கும் அழகை இந்த வாரமும் தொடர்ந்து சொல்லி மகிழ்விக்கிறார் தானும் மகிழ்ந்து நெகிழ்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி
தரவிறக்கிக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/?3rx9t90d18b14yc

திங்கள், 24 செப்டம்பர், 2012

Guru Paramparai vaibhavam

On 17th September and 24th September Sri Natteri Swamy's tele-upanyasam was on HH Srimad Thirukkudanthai Andavan, the Yathi mentioning of whose name itself will make many Ashrama sishyas most emotional. No need to tell that the description of HH Srimad Thirukkudanthai Andavan by Sri Natteri swamy, who is a direct disciple of HH is emotion filled. 
Due to severe power cuts in this village adiyen was unable to upload the last week's file in time. adiyen may kindly be excuse.
The tele-upanyasam on 17-9-2012 can be downloaded from here.



the upanyasam on 24th September is here for online listenin

திங்கள், 17 செப்டம்பர், 2012

கண்டதில்லை திருப்புல்லாணி!

2012 செப்டம்பர் 12,15, 16 தினங்கள் திருப்புல்லாணி வரலாற்றில் காணாத தினங்களாக அமைந்தன என்றால் மிகையாகாது.
ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சார்யார் ஸ்வாமி (இனி அ, ப ஸ்வாமி ) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரதாம மஹா யக்ஞத்தை திருப்புல்லாணியில் நடத்திய தினங்கள் அவை.
2002ல் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஆலய சம்ப்ரோக்ஷணத்துக்குப் பிறகு பெருமளவில் ஜனத்திரள் கூடியது இந்த நிகழ்ச்சிக்குத்தான் என்பது உண்மை. இந்தக் கணக்கில் ஆடி, தை அமாவாஸை தினங்களைச் சேர்க்கக் கூடாது.
14ம் தேதி துவங்க இருந்த யஜ்ஞத்துக்கு 10ம் தேதி வரை எந்த அடையாளமும் இல்லை. யாக சாலை அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அப்போதுதான் கால்களில் இரும்பு ஆணிபோல் குத்தும் பழைய சிமிண்ட் சாலைக்கு மேல் நடைபாதைக் கற்கள் பரப்பப் பட்டிருந்தன. எங்களுக்கெல்லாம் அதை எப்படித் தோண்டி பந்தல் அமைக்க அனுமதி கிடைக்கும் என்று ஒரே குழப்பம். ஆனால் , ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சாரியாருக்கு ஒரு அற்புதமான ஆத்மபந்து. கோவை ஸ்ரீ ஜெகந்நாத பாகவதர் அவர். One man army என்பதற்கு சரியான உதாரணம். ஒரு வாரத்துக்கு முன்னேயே இங்கு வந்து விட்டார். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் திரு முனியசாமியை தனது அணுகுமுறையால் கவர்ந்து, இருந்த இடத்தை விட்டு அசையாமலேயே சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டார் என்பது பின்னரே தெரிந்தது. (என்ன பெயர் பொருத்தம். ஸ்ரீ அ. ப. ஸ்வாமிக்கு எங்கள் பெருமாளே தன் அனுக்ரஹத்தை இப்படிக் காண்பித்தார் போலும்)
11ம் தேதி மாலை மதுரையிலிருந்து பந்தல் காண்ட்ராக்டர் வந்து பேசி முடிவு செய்து, 12ம் தேதி பகலில் அவர் வேலையை ஆரம்பித்து இரவுக்குள் முடித்து 14ம் தேதி காலையில் ஸ்ரீ  அ. ப. ஸ்வாமி வரும்போது 5000 ச.அடி பந்தலும் அதற்குள் யாக குண்டமும் ரெடி. மயன் வேலை என்பது இதுதானோ? புதிய சாலைக்கு துளிக்கூட சேதம் இல்லாமல் இரும்பு பில்லர்களால் சில மணி நேரங்களில் அமைக்கப்பட்ட அந்தப் பந்தல் இந்த வழியில் நிரந்தரமாக இப்படி ஒரு பந்தல் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எங்களை யோசிக்க வைத்திருக்கிறது.
14ம் தேதி காலையிலேயே சிறிது சிறிதாகக் கூட ஆரம்பித்த கூட்டம், 15ம் தேதி காலையில் சுமார் ஆயிரம் பேர்  சேர்ந்து   16ம் தேதி கிட்டத்தட்ட 1500க்கும் மேல் திருப்புல்லாணி சமாளிக்க முடியாத அளவுக்குக் கூடியது. ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சிக்காம பல மாதங்களுக்கு முன்பேயே பதிவு செய்யப்பட்ட நிலையில் பழைய மடத்திலும் புதிய மாலோல பவனத்திலும் மட்டுமே இடமிருந்த சூழ்நிலையில், இராமநாதபுரத்தில் சில கல்யாண மஹால்களில் வந்திருந்தோர் தங்க வைக்கப்பட்டு அவர்கள் வருவதற்கும் போவதற்கும் வசதிகளும் செய்யப் பட்டிருந்தன. வந்திருந்தோரில் பெரும்பாலோர் கோயமுத்தூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
வந்திருந்தோரும் இட வசதி, சாப்பாடு பற்றியெல்லாம் பெரிதும் கவலைப்படாமல் பூரண ஒத்துழைப்பு கொடுத்தது பாராட்ட வேண்டிய ஒன்று.
இந்த மூன்று நாட்களிலும் எங்கள் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அனுக்ஞை அன்று ஸ்ரீ அஹோபில மடத்திலிருந்து , இந்த யக்ஞத்துக்காவே இஞ்சிமேட்டிலிருந்து எழுந்தருளிய பெருமாளை, திருவீதி ப்ரதக்ஷிணமாக யாகசாலைக்கு எழுந்தருளப் பண்ணி, ஸ்ரீ ஆதி ஜகந்நாதப் பெருமாள் ஆலய அச்வத்த மரத்தினடியிலிருந்து ம்ருத்சங்கரஹணத்துக்காக மண் கொண்டுவந்து அனுக்ஞையுடன் யஜ்ஞம் ஆரம்பித்து, விஷ்ணு சஹஸ்ர நாம ஜபத்துடன் ஹோமம் ஆரம்பித்தது. ஸ்ரீ அ. ப. ஸ்வாமிக்கு, ஸ்ரீ மடத்தில் ஆராதன கைங்கர்யம் செய்த வடுவூர் ஸ்வாமி, ஸ்ரீ துரை ஸ்வாமி, இஞ்சிமேடு பாலாஜி, பாம்பே சேஷாத்ரி, என ஏராளமான வேதம் வல்லார் பலர் உதவியாக வந்திருந்தனர். மூன்று நாட்களும் திருப்புல்லாணியே சஹஸ்ரநாம கோஷத்தால் நிறைந்தது.
இரண்டாம் நாள் காலை ஒரு லக்ஷம் காயத்ரிஜப ஹோமம். 130 பேர் அமர்ந்து செய்து முடித்த பிறகு,   ஹோமங்கள் முடிந்து பூர்ணாஹுதிக்குப் பிறகு பெருமாள் தீர்த்தவாரிக்கு சேதுக்கரைக்கு எழுந்தருளினார். பிரமிக்க வைத்த நிகழ்ச்சி அது.
கீழே கால் வைத்தால் ரோடோடு ஒட்டிக் கொள்கிற வகையில் வறுத்தெடுத்த வெய்யில். 4 கி.மீ. போக வேண்டும். ஆனால் ஸ்ரீ அ. ப. ஸ்வாமியோ உடன் வந்த மற்றவர்களோ மலைக்கவில்லை. தயங்க வில்லை.   தோளுக்கினியானில் வெறுங்காலுடன் நடந்நே அந்த தூரத்தை அநாயாசமாகக் கடந்து பெருமாளை சேதுவுக்கு எழுந்தருளப் பண்ணினர்.  பெருமாளை .சில நூறு பேர்கள் பின் தொடர்ந்தனர். அவர்களில் பலர் வெய்யிலே படாமல் ஏ.ஸி அறைகளிலே வாழ்பவர்கள், சமுதாயத்தில் பல உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் என்பது ஒரு ஆச்சரியம்.
சேதுக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயன் ஸன்னிதியில் பெருமாள் ஏளி, அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் ஸங்கல்பங்கள் செய்து வைக்கப் பட்டு பெருமாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருளினார்.
மாலையில் ஹோமங்கள் தொடர்ந்தன. யஜ்ஞத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு ரக்ஷாபந்தனம் ஆகி அதன் பின்1008 கலச ஸ்தாபனம் (சஹஸ்ர நாமத்தின் ஒவ்வொரு பெயராலும் ) நடை பெற்றது. முதல் நாள் ஆரம்பித்த விபீஷண சரணாகதியை மறுநாளும் மிக அற்புதமாக ஸ்வாமி உபந்யஸித்தார்.
இறதி நாளான 16ம் தேதி, ஹோமங்கள் முடிந்து மஹா பூர்ணாஹுதி முடிந்து, 1008 கலச தீர்த்தத்தாலும் பெருமாள், சக்கரத்தாழ்வாருக்குத் திருமஞ்சனங்கள் நடந்து அதன் பின் சக்கர தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருளி …..சுபம்
அடியேனைப் பொறுத்த மட்டில் ஒரு ஏமாற்றம். இந்த மூன்று நாட்களாகவே என் காமிராவுக்கு ஏதோ ஆகி விட்டது. (கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டது போலும்) ஒரு சில படங்கள் எடுத்தவுடன் மேற்கொண்டு தொடர முடியவில்லை. அதனால் ஒரு சில படங்களே இந்த மூன்று நாட்களும் எடுக்க முடிந்தது. தவிர ஆச்ரமத்தில் நடந்த நிகழ்ச்சி மிக நெருங்கிய உறவினர் விசேஷம் என்பதால் அங்கேயே பெரும்பகுதி இருக்க வேண்டி வந்ததும், எப்போதோ நடக்கும் இந்த யஜ்ஞத்தை முழுமையாகக் காணும் வாய்ப்பையும் பதிவு செய்கிற வாய்ப்பையும் இழந்தமைக்குக் கூடுதல் காரணங்கள். அது மட்டுமில்லை. முதல் நாள் உபந்யாஸத்தை பதிவு செய்து விட்டுப் பார்த்தால் முன்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பதிவாகாமல் பின்னால் பதிவாகி இருக்கிறது.
எடுத்த சில படங்கள் இங்கு இருக்கின்றன.

 

திங்கள், 10 செப்டம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (10-9-2012)

இந்த வாரம் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் உபந்யாஸம்

tk

இத்தனை நாள் நாட்டேரி ஸ்வாமி தான் கேட்டும் கற்றும் படித்தும் அனுபவித்த ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம பரம்பரையை அலங்கரித்த ஆசார்யர்களைப் பற்றி உபந்யஸித்து வந்தார். இன்றோ, தானே நேரில் கண்டு, அவரிடமே காலக்ஷேபங்களை அதிகரித்து, அவரது அனுக்ரஹத்தாலேயே ஏற்றம் பெற்ற தனது ஆசார்யரான ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் வைபவத்தைப் பரக்கப் பேச ஆரம்பித்திருக்கிறார். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி! கேளுங்கள்! அனுபவியுங்கள்!

MediaFire Link

http://www.mediafire.com/?es6qfrjwmu3g3jn

To listen to directly

2010ல் இந்த உபந்யாஸம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை உள்ள உபந்யாஸங்கள் எல்லாம் இங்கு உள்ளன.

http://sdrv.ms/K7Pz4R

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (03-09-2012)

Sri natteri swamy continues on HH Srimad Thenparai Andavan this week also.
The upanyasam may be downloaded from
http://www.mediafire.com/?xddmwt65mvqnu00

For direct listening,

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

Guru Paramparai Vaibhavam (27-08-2012)

இந்த வாரம் தனது "குரு பரம்பரை வைபவ" உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி ஸ்ரீமத் தென்பரை ஆண்டவன் சரிதத்தை விவரிக்கிறார்.
To download from Mediafire
http://www.mediafire.com/?ykg5yyf0rh2ez8k

நேரடியாகக் கேட்க

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஸ்தோத்ர ரத்னம் எளிய இனிய தமிழில்

1918லேயே இனிய எளிய தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள ஸ்தோத்ர ரத்னம்


Sthothra Rathnam Tamil

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

Guru Paramparai Vaibhavam (20-8-2012)

This week Natteri swamy describes the greatness of HH Srimad Akkur Andavan and his greatest devotion to his Acharyan HH Srimad Therazhundur Andavan.

Download from Mediafire
http://www.mediafire.com/?5vhp8mo68h0crg4

In the following link the upanyasam may be listened to online

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்ந பாஷ்யம் 13

4ம் கண்டம்

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்

1, 2, 3, 4 : ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன். (இந்த மூவரும்தான் இவளைக் காப்பாற்றி இந்த வரனுக்குக் கொடுத்துள்ளார்கள்).

4. கந்யலா :- இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள்.

5. ப்ரேதோமுஞ்சாதி :- இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் ஓ இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.

6. இமாந்த்வம் :- வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.

7. அக்நிரைது :- ஓ அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.

8. இமாம் அக்நி: :- விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.

9. மாதே க்ருஹே :- ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.

10. த்யௌஸ்தே ப்ருஷ்டம் :- உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம்.

11. அப்ரஜஸ்தாம் :- உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.

12. இமம்மே வருண, 13. தத்வாயாமி, 14. தவன்னோ அக்நே, 15. ஸத்வந்நோ அக்நே, 16. துவமக்நே அயாஸி ஆகிய மந்த்ரங்களுக்கான விளக்ககங்கள் உபநயனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... ‘வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.

14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... ‘அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்நம் 12

பாணிக்ரஹணம்

பாணிக்கிரஹணம் என்பது பெண்ணின் கையைப் பிடித்தல் என்பது பொருளாகும். கைப்பற்றி உரிமையாக்கிக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். பெண்ணின் வலது கையிலுள்ள ஐந்து விரலையும் குவித்த முறையில் சேர்த்து மணமகன் பிடிக்க வேண்டுமென்பது விதியாகும். மணமகனின் கை மேலேயும் பெண்ணின் கை அதில் அடங்கியும் இருக்க வேண்டும். இந்தப் பாணிக்கிரஹணம், நல்ல சத்புத்திரர்களைப் பெறுவதற்கும் அதனால் தேவர்களும், ரிஷிகளும், பித்ருகளும் சந்தோஷம் அடைவதற்கும் ஹேதுவாக விளங்குகிறதென்று சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், தேவேந்திரன் முதலான தேவர்கள் இந்தப் பாணிக்கிரஹணத்தால் சிறப்பு அடைந்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, லட்சுமி, இந்திராணி முதலான தேவதைகளும் பாணிக்கிரஹணத்தை ரக்ஷித்து, சகல சௌபாக்கியங்களையும் அளித்து இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி சத்புத்திரர்களைப் பெற உதவட்டும் என்று ப்ராத்திக்கப்படுகிறார்கள்.

மிகவும் போற்றி வணங்குகின்ற இராமாயணத்தில் சீதையின் கையை இராமன் கையால் சேர்த்துப் பிடிக்க வேண்டுமென்று வால்மீகி கூறுகிறார். ஜனகன் வம்சமும் - தசரதன் வம்சமும் தழைத்தோங்க இந்தப் பாணிக்கிரஹணம் உதவட்டும் என்ற கருத்தில் ‘இயம் சீதா மமசுதா" என்ற ஸ்லோகம் மூலம் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

மேலும், மாங்கல்யதாரணத்தைக் காட்டிலும் பலமடங்கு முக்கியமானது இந்த பாணிக்ரஹணமும், ஸப்தபதியும் என்பதைக் காண்போம்.

நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்தில் ....

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் காளை புகுதக் கனாக்கண்டேன்

அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன்

அதிரப்புதக் கனாக்கண்டேன் கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்

எந்தன் கைபற்றித் தீவலம்செய்யக் கனாக்கண்டேன் அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்

பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்

என்று விவாஹ காரிகைகளை வரிசையாக எடுத்தியம்பும் ஆண்டாள் எங்கும்

‘மங்கல நாண் சூட்டவென்றோ" ‘மாங்கல்யம் சூட்டவென்றோ" தெரிவிக்காததால் மாங்கல்ய தாரணம் என்ற, க்ருஹ்ய சூத்திரத்தில் சொல்லப்படாத ஒரு நிகழ்ச்சி, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒன்றே என்பது தெளிவாகிறது. மற்றும் இன்றும் திருமண பத்திரிகைகளில் பெண்வீட்டார் ‘கன்னிகாதானம் செய்துகொடுப்பதாய்" என்றும், பிள்ளை வீட்டார் ‘பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்" என்றும்தான் ப்ராதான்யமாக தெரிவிக்கிறார்கள். அந்த பாணிக்ரஹணமாகிய நிகழ்ச்சியை அநுக்ரஹித்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றுதான் பத்திரிகை வாயிலாக விண்ணப்பித்துக்கொள்கிறார்கள். மேலும், இந்து திருமண சட்டப்படியும் ‘ஸப்தபதி" என்கின்ற நிகழ்ச்சி நடந்து முடிந்தால்தான் திருமணம் முடிவடைந்தாக சட்டப்படி செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அண்மையில் ஏற்பட்ட மாங்கல்யதாரணம் என்ற நிகழ்ச்சி வழங்கும் முக்கியத்துவத்தைப்போல் பலமடங்கு முக்கியத்துவத்தை ‘பாணிக்ரஹணம்", ‘ஸப்தபதி" ஆகிய அதிமுக்கியமான வேத முக்கியத்துவம், சாஸ்த்ர முக்கியத்துவம், சட்ட முக்கியத்துவம், ஸம்ப்ரதாய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கும் வழங்கி மேலும் ஒரு பத்து நிமிடங்களில் முடிந்துவிடக்கூடிய அந்த நிகழ்ச்சிகளும் முடியும்வரை அனைவரும் பொறுமை காத்து மணமக்களை மனமார ஆசீர்வதிப்பதே சாலச்சிறந்ததாகும்.

பாணிக்ரஹண 4 மந்த்ரங்கள்

க்ருப்ணாமி தே ஸுப்ரஜாஸ்த்வாய :- ஏ வதுவே! தர்மத்தின் வழி நடக்கும்படியான நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக உன் திருக்கரங்களைப் பற்றுகிறேன். கணவனாகிய என்னுடன் கிழத்தன்மை அடையும்வரை சேர்ந்து வாழ்ந்து இல்லற சுகங்களைத் துய்ப்பாயாக. பகன், அர்யமா, ஸவிதா, இந்த்ரன் ஆகிய தேவர்கள் சிறந்த இல்லறத்தை நடத்தும் பொருட்டு உன்னை எனக்கு மனைவியாகவும், உற்ற தோழியாகவும் அளித்துள்ளார்கள்.

தேஹ பூர்வே ஜநாஸ: :- இந்த விவாஹ தர்மத்தை ஏற்படுத்தியவர்களான முன் சொன்ன தேவர்களும், முன்னோர்களும் அந்த தர்மத்தை அநுஷ்டித்து வந்தனர். தேவர்களில் தலையாயவனான அக்நியும், முன்னவனான ஸூர்யனும் இந்த விவாஹ தர்மங்களில் ஸம்பந்தம் உடையவர்களாவர்.

ஸரஸ்வதி :- சுபமான அழகுள்ளவளும், அன்னத்தைக் கொடுப்பவளுமான ஏ ஸரஸ்வதி தேவியே! நீயும் இந்த பாணிக்ரஹண வைபவத்தை ரக்ஷித்துக் காப்பாயாக. நாங்கள் இந்த ஸபையிலுள்ளோர் அனைவரின் முன்னிலையில் அனைத்து ஜீவராசிகள் சாட்சியாக உன்னைத் துதிக்கிறோம்.

ய ஏதி ப்ரதிஶ: எந்த வாயு தேவன், திக்குகள் - உப திக்குகள் என்று எல்லா திசைகளிலும் தடையின்றிச் ஸஞ்சரிக்கிறானோ, அன்னத்தைக் கொடுக்கும் அக்நியின் தோழனும், ஹிரண்யத்தை (தங்கத்தை) கையில் அணிந்திருப்பவனுமான அந்த வாயுதேவன் வதுவே! உன்னை என்னிடம் மாறாத, உறுதியான அன்புள்ளவளாகச் செய்யட்டும்.

ஸப்தபதி

பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை இடது கையால் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைப்பதை ஸப்தபதி என்று குறிப்பிடப்படுகிறது. விவாஹ க்ரியைகளிலேயே இது மிகவும் பொருள்பொதிந்தது. ஒரு பெண்ணும், ஆணும் இல்லற வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கவேண்டும் என்பதுபற்றி வேதம் மிக உயர்ந்த உதாரணங்களைக் கொண்டு அழகாக விளக்கிக் கூறியுள்ளது. வரன் வதுவைப் பார்த்து ‘ஏ பெண்ணே, உன் கையை வேதமந்திர ப10ர்வமாகப் பற்றி என் சொத்தாக ஆக்கிக்கொண்டபின், என் தர்ம பத்திநியாக என்னுடன் முதன் முதலாக அடி எடுத்து நடந்து வரப்போகிறாய். உன்னை எனக்கு தர்மபத்தினியாக்கிக் கொடுத்த அந்த தேவர்களின் முன்னிலையில் நான் விஷ்ணு பகவானை, உன்னுடனான இல்லறத்திற்கு எனக்குத் தேவையான ஏழுவிதமான பாக்கியங்களை அருளும்படி கோரப்போகிறேன்" என்று அவளுடைய காலைப் பற்றி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஒவ்வொரு விண்ணப்பமாக வெளியிடுகிறான்....

7 மந்திரங்கள். பாணிக்ரஹணம்போல் இதுவும் முடிந்தால்தான் விவாஹம் முடிந்ததாகப் பொருள்.

‘ஏகம் இஷே விஷ்ணுத்வாந்வேது" ... முதலடியால் ‘அன்னங்கள் குறைவின்றி கிடைக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘த்வே ஊர்ஜே ..." இரண்டாமடியால் ‘நம் தேஹத்தின் ஆரோக்யத்தை ரக்ஷிக்க விஷ்ணு தொடரட்டும்"

‘த்ரீணி வ்ரதாய..." மூன்றாமடியால் ‘வ்ரத கலாசாரங்களை காக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘சத்வாரி மாயோபவாய" நான்காவதால் ‘ஸகல இன்பங்களும் கிட்ட விஷ்ணு உடன் வரட்டும்"

‘பஞ்ச பசுப்பய:" ஐந்தாவதால் ‘வளர்ப்பு ப்ராணிகளை நல்கி ரக்ஷிக்க விஷ்ணு உடன் வரட்டும்"

‘ஷட்ருதுப்ய:" ஆறாவதால் ‘ஆறு பருவ காலங்களும் நமக்குச் சாதகமாக விஷ்ணு உடன் வரட்டும்"

‘ஸப்தஸப்தப்ய:..." ஏழாவதால் ஏழுவிதமான யாகங்களும், அதன்பயன்கறும் நல்க விஷ்ணுவும் வரட்டும்" என்று விஷ்ணுவை ப்ரார்த்திக்கிறான். ஹோதா, ப்ரசாஸ்தா, ப்ராஹ்மணாச்சம்ஸீ, போதா, நேஷ்டா, அச்சாவாக, ஆக்நீத்ர என்ற 7விதமான ருத்விக்குகளை (யாகத்தில் பங்ககேற்போர்) கொண்டு செய்யப்படுகிற ஸோம யாகாதி ஸத்கர்மாக்களை அநுஷ்டிக்கும்படியான பாக்யம் ஏற்பட ஸ்ரீமந்நாராயணன் தொடர்ந்து வந்து அநுக்ரஹிக்கட்டும்.

7ம் அடி முடிந்ததும் தொடர்ந்து ஜபிக்கப்படவேண்டிய மிக உயர்ந்த கருத்துடைய மந்த்ரம்:

‘ஸகா ஸப்தபதாபவ..." என்கிற மந்திரத்தால் தன் புதிய இளம் மனைவியிடம் நாம் எப்படிஎப்படி இருக்கவேண்டும் என்பதை பகிர்ந்துகொள்கிறான்...

‘ஏ வதுவே, ஏழு காலடி வைத்து என்னுடன் தொடர்ந்த நீ, இன்றுமுதல் எனக்கு வேதப்ரமாணமான ஸகி (ஸம்ஸ்க்ருதத்தில் நண்பனுக்கு ‘ஸகா" என்றும் அதற்கு பெண்பால் ‘ஸகி" என்றும் பெயர்) ஆகிவிட்டாய். நாம் பரஸ்பரம் நண்பர்காளகிவிட்டோம். இந்த நட்பிலிருந்து நான் ஒருபோதும் நழுவமாட்டேன். நீயும் நம் நட்பில் இந்தப் பாராங்கல்லைப்போல் (அம்மி போல்) உறுதியுடன் இருப்பாயாக. நான் விஷ்ணுவிடம் வேண்டிப்பெற்ற அனைத்தையும் நாம் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். இவ்வுலகில் ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று நிலைக்காததான பல்வேறு தத்துவங்கள் போல் நாம் இருவரும் இணை பிரியாதிருப்போம். நான் ஆகாயமானால் நீ பூமியாக இரு, நான் உயிரணுவானால் நீ உயிரைத் தாங்கும் கர்பக்ருஹமாய் இரு, நான் மனமானால் நீ வாக்கு எனும் சொல்லாக இரு (மனதால் நினைக்காத எதையும் வாயினால் பேச இயலாது), நான் ஸாம கானமானால் அந்த கானத்திற்கு கருப்பொருளான ருக்காக விளங்கு, இப்படி அநுஸரணையாய் இருவரும் இருந்து இன்பத்தின் சிகரங்களை எட்டுவோம், ஈடுஇணையில்லா புத்திரர்களையும், மஹாலக்ஷ;மிபோன்ற பெண் மகவையும் பெற்று கிழத்தன்மை அடையும்வரை சுகித்துக்கிடப்போம் வா என் ஸூந்ருதே"

குறிப்பு:- ப்ரியமானவளே, ஸுகம், சுபம், சௌக்யம், ஸுகந்தம், ஸுந்தரம், ஸுமங்களம், ஸுப்ரம், இன்பம், இனிமை என „ஸு… என்ற அடைமொழி பெறும் அனைத்து நற்றன்மைகளுக்கும் இலக்கணமானவள் என்ற பொருளுடைய ஒரே வார்த்தை „ஸூந்ருதே… என்பதாகும்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

101 Guru Paramparai Vaibhavam (13-08-2012)

ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய சரிதத்தை நிறைவு செய்து கொண்டு இந்த வாரம் நாட்டேரி ஸ்வாமி ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் அற்புதமான சரித்திரத்தை விவரிக்கிறார். ஸ்ரீமத் பெரியாண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தாலே அவதாரம் செய்தருளின ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம கைங்கர்ய விசேஷங்களை வழக்கம் போல் MediaFireல் இருந்து நகலிறக்கிக் கொள்ள

http://www.mediafire.com/?digrtm2l1vp19h2 

அந்த உபந்யாஸத்தின்போதே ப்ரபத்தி விசேஷத்தை விவரிப்பதை நேரடியாகக் கேட்டு மகிழ

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

Guru Paramparai vaibhavam dtd 6-8-2012


A caution at the outset
This episode is numbered as 100 but it is not the 100th tele-upanyasam in this series. In the early stage adiyen had committed some mistakes by which some upanyasams in duplicate are added in the list. For example sl.no. 1 and 3 are the same. adiyen noticed these defects only when adiyen was under “house arrest” at Triplicane during July 2012. Due to certain difficulties, adiyen was unable to correct them immediately. Actually today’s upanyasam must be either 96th or 97th upanyasam as there was no upanyasams on three Mondays in between. adiyen will correct them as early as possible. Kindly bear with me. But adiyen is hopeful that the listeners do not care for the numbers and they will expect this to continue as long as possible.
Today (06-08-2012) is the varshika kaimkarya dhinam of HH Srimad Therazhundur Andavan and hence Natteri swamy continues the Therazhundur Andavan anubhavam today also and completes it. Enjoy the great gnaana vairagya nithi HH Srimad Therazhundur Andavan this week also.
The mediafire link to download is herehttp://www.mediafire.com/?3od9kpfw39y9950

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்ந பாஷ்யம் 11

ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம் பின்வருவது.

கந்யா அபிமந்த்ரணம்

ஸோம ப்ரதம: ....

ஏ பெண்ணே! முதலில் உன்னை ஸோமதேவன் அடைந்தான், இரண்டாவதாக விச்வாசு என்னும் கந்தர்வ தேவன் அடைந்தான், மூன்றாவதாக அக்னி உனக்கு பதியானான். (இம் மூன்று தேவர்களும் முறையே பெண்ணுக்குத் தேவையான குணம், இளமை, அழகு இவற்றை அளித்ததாக வேதம் குறிப்பிடுகிறது).

பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாரீர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம்.

ஸோமோததது கந்தர்வாய ....

இவளை முதலில் ஸோமன் அநுக்ரஹித்து கந்தர்வனிடம் கொடுத்தான், கந்தர்வன் பிறகு இவளை அக்னியிடம் ஒப்புவித்தான். இப்போது இந்த அக்னிதேவன் இவளையும், புத்ரஸந்தானத்தையும், பரிபாலிக்கத் தேவையான தனங்களையும் எனக்கு அளிக்கவேண்டுமாய் அக்னிதேவனை ப்ரார்த்திக்கிறேன்.

ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.

குறிப்பு:- இந்த மந்திரம்பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர ஸம்பவமும், அதை ஒட்டி நாத்திகர்களால் எழுப்பப்படும் அபவாத்திற்கான ஸமாதானத்தையும் இங்கு காண்போம்.

நம் பூர்வாசார்யர்களில் ஒருவரான யாமுனாசாரியர் தன் குருவாகிய மஹாபாஷ்யபட்டருக்காக ஆக்கியாழ்வான் என்பவனை எதிர்த்து வாதிடும்போது, அவன் முன்னே, மறுத்து வாதிட இயலாததான 1. உன் தாய் மலடி அல்லள், 2. மஹாராஜா குற்றமற்றவன், 3. மஹாராணி கற்புக்கரசி என 3வாதங்களை வைத்து இவற்றை மறுத்து வாதிட்டால் நீர் வென்றவராவீர் என்றார். ஆக்கியாழ்வானால் முடியாதபோது, மஹாராணியின் உத்தரவுப்படி தானே அவற்றை மறுத்து நிரூபித்தார். 1. ‘ஒருமரம் தோப்பாகாது ஒன்றைப்பெற்றவள் தாயாகாள்" என்ற ஆதார வசனத்தைக் கூறி முதலாவதையும், 2. ‘குடிமக்களின் குற்றங்கள் கொற்றவனையே சாரும்" என்ற கூற்றால் இரண்டாவதையும், 3. மேற்படி ‘ஸோம: ப்ரதம:" என்கிற மந்திரத்தை ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டு மஹாராணி கற்புக்கரசி அல்ல என்று வாதிட முடியும் என்றும் நிரூபித்து ‘ஆளவந்தார்" என்ற பட்டத்தையும் பாதி ராஜ்யத்தையும் பெற்றார் என்பது சுவையான சரித்திர ஸம்பவம்.

இதே வாதத்தை நாத்திகர்கள் முன்வைத்து, மூவர் மணந்த பெண்ணை நான்காவதாக ஒருவனுக்கு மணம் செய்து வைப்பதாய் ப்ராமணர்கள் ஒரு இழுக்கான ஸம்ப்ரதாயத்தை கையாளுகின்றனர் என்று ப்ரசாரம் செய்கின்றனர்.

ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது.

‘மாநிலம் சேவடியாக தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கையாக

விசும்பு மெய்யாக, திசைகள் கையாக

பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக

இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய

வேதமுதல்வன் என்ப

தீதறவிளங்கிய திகிரியோனே"

என்றார் பரம்பொருளைப் பாரதம்பாடிய பெருந்தேவனார் நற்றிணையில்.

நாத்திகர் நம் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை இங்கு எடுத்துக்கொண்டோம். ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்நி எனும் தீயைப்போலவே, மதியமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.

மேலும் இந்த நாத்திகர்கள் கவலைப்படுவதெல்லாம் பெண்ணின் கற்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த ப்ராஹ்மணர்கள் என்பதுதான். இன்றுவரை சாஸ்த்ரம் கூறுவது, ப்ரயோகம் கூறுவது கந்யை என்று அதாவது பூப்படையாதவள் என்று. பூப்படையாத சிறுமியைத்தான் மூன்று தேவர்களும் தங்கள் அநுக்ரஹத்தால் பூப்படையச் செய்யும் யௌவனத்தை வழங்குகிறார்கள். இதில் கற்பு பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகர்கள் இயற்கையை அஃறிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள். இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?!