சனி, 21 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

||ஸ்ரீ:||

தயாசதகம்

திருவருட்சதகமாலை

அசேஷ விக்நசமநம் அநீகேச்வர  மாச்ரயே
   ஸ்ரீமத:கருணாம் போதே: சிக்ஷாஸ்ரோத இவோத்திதம். .5.

துன்றுதடை யாவுமுட னன்றவை துடைக்கும்
   வன்றரும மங்கையுறை மார்பனரு ளாழி
   வென்றியுறு வீறுதரு மேரணிய றக்கோல்
   ஒன்றிருடி கேசனநி கேசனைய டுத்தேன்.  .5.

[தடைகள் யாவையும் உடனே துடைப்பவரும், ஸ்ரீநிவாஸனுடைய கருணை நிரம்பிய தடாகத்திலிருந்து சிக்ஷணம் செய்கிறது என்ற வாய்க்காலாகக் கிளம்பினவருமான  விஷ்வக்ஸேனர் என்னும் ஸேனை முதலியாரை ஆச்ரயிக்கிறேன்.]

ஸமஸ்த ஜநநீம்வந்தே சைதந்யஸ்தந்யதாயி நீம்
   ப்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் .6.

துன்னுமுடி மின்னுமறை யுன்னுதிரு மன்னன்
   பொன்னருளி னன்னருரு வென்னவுயி ரெல்லாம்
   மன்னுமக வன்னவுணர் வம்மமினி தூட்டும்
   அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன்.  .6.

[உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.]