செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

நிர்தோஷத்வாதிரம்ய: என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை 'இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம் என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரணத்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் "பற்றிலன்" என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன்கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண்புகழ்நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி" யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி" தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் "இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ....... நிகமிக்கிறார் " என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ' ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ......... .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.