புதன், 4 அக்டோபர், 2017

நம்மாழ்வார் வைபவம்

1 விஷயாதி நிரூபணம்.

இந்த ப்ரபந்தத்திற்கு விஷயம் ஸ்வபாவத்திலேயே வேறு ஒருவருக்கும் இல்லாதவையாய் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே யிருப்பவைகளான எண்ணிறந்த கல்யாண குணங்களையுடைய பகவானே என்பது ‘உயர்வற உயர் லமுடையவன் ’ என்னப்பட்டது. அப்படிப்பட்ட பகவானுக்கு நிருபாதிக தாஸபூதர்களான ஜீவாத்மாக்கள் மீட்சியில்லாத வாட்சியைப் பெறுதலே ப்ரயோஜனம் என்பது ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு’ என்று கூறப்பட்டது, அவனை அடைவது உண்மையான ஜ்ஞானத்தினாலே யாகையாலே அந்த ஜ்ஞானத்தை அடைவதும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே என்பது ‘மயர்வற மதி லம் அருளினன் ' என்னப்பட்டது, இப்படி ஸர்வஜ்ஞனான பகவானால் அஜ்ஞான கந்தமில்லாதபடி அருளப்பெற்றவர் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்ட ப்ரபந்தமாகையினாலே இப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்பதும் விச்வஸநீயம் என்பதும் விவக்ஷிதம். இப்படிப் பகவான் அனுக்ரஹிப்பதற்குக் காரணம் அவனுக்கும் தமக்குமுள்ள ஸ்வாமித்வ தாஸத்வமாகையால் ஸம்பந்தம் அர்த்தாத் நிரூபிக்கப் பட்டதாயிற்று. ஆக மதி, நலம், தொழுது என்கிற பதங்களினால் விவக்ஷிதமான பக்தி ப்ரபத்தி களாகிற உபாயங்களும், துயரறு என்பதினால் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியும், எழு என்பதினால் பகவத் கைங்கர்யமாகிற அவாந்தர பலன்களும் என் மனனே என்று தம்முடைய மனதுபோலே அந்தரங்கர்களான சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை குறிப்பிடப்பட்டு அவர்கள் அதிகாரிகள் என்பதும், விஷயமாகிய பகவானுடன் விஷய விஷயிபாவமும், உத்பாத்ய உத்பாதக பாவமும் ப்ரதி பாதிக்கப்பட்டபடியினால் விஷய ப்ரயோஜன அதிகாரி ஸம்பந்தங்கள் என்னப்படும் அனுபத்தி சதுஷ்டயமும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.

2.மங்களாசரணம்

இந்த ப்ரபந்தத்திற்கு ப்ரதான தாத்பர்யமாய் மற்ற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்ததான பரமாத்மாவை முதலடியிலேயே நிரூபித்திருப்பதினால் வஸ்து நிர்த்தேச மங்களமும், ‘எழு’ என்பதினால் ஆசீர்வாதரூப மங்களமும், ‘நலம் தொழுது’ என்கிற பதங்களினால் நமஸ்காராதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பக்தியாகிற உபாயமும் நமச்சப்தார்த்தமான ப்ரபத்தியாகிற உபாயமும் கூறப்பட்டபடியினால் நமஸ்கார ரூபமான மங்களமும் செய்யப்பட்டதாகிறது. இந்த ப்ரபந்தத்தை லக்ஷ்மீவாசகமென்று ச்ருதி ப்ரஸித்தமான உகாரத்தினால் ஆரம்பித்திருப்பதினால் ‘தேவதா விசேஷம் எதுவென்று தெரிந்து கொள்ளுவதற்கும், அவளுடைய பர்த்தாவாகிய பகவான் நம்மால் அடையப்படுவதற்கும் விசேஷமான மங்களங்களை அடைவதற்கும் இவ்விடத்தில் லக்ஷ்மீ முதலில் சொல்லப் பட்டாள் " என்று ஸ்ரீ கீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் அருளிச் செய்திருக்கும் விசேஷாம்சங்களும் இங்கு விவக்ஷிதங்கள்.

3 சாஸ்த்ரார்த்தானுக்ரமம்

இந்த ப்ரபத்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் மேலே 6 - ம் 8 - ம் சுலோகத்தின் விவரணத்தில் கண்டு கொள்வது.

4 ப்ரஹ்ம சப்தார்த்தநிரூபணம்

எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்கிற முதலாவது அடியில் உயர்வற என்பதினால் இப்படிப்பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது, ஒரு வித தபஸ்ஸு முதலியது செய்ததனுடைய பலனாகப் பெற்றதன்று என்று தெரிவிக்கிறபடியினாலே பகவானுடைய ஸ்வரூபம் ஹேயப்ரத் யகமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்றதாயிற்று,

ப்ரஹ்ம என்னும் பதத்திற்கு மேன்மையையுடைய வஸ்து என்றர்த்தம், அயலாரையும் அப்படியே மேன்மையுடையவர்களாகச் செய்வதும் அதன் உட்பிரிவு ஆகையினால் எந்த வஸ்து மற்ற எல்லா வஸ்துக்களையும் விட உயர்ந்ததோ அது ‘ப்ரஹ்ம’ என்னும் பதத்தினால் சொல்லப்படும். இப்படியே யாஸ்கரும் நிருக்தி செய்திருக்கிறார் என்பது ப்ரஸித்தம். ஆகையினால் விசேஷமான தபஸ்ஸு முதலியவைகளைச் செய்து தங்கள் தங்கள் பதங்களைப் பெற்ற ப்ரஹ்மாதிகளைப் போலன்றிக்கே ஒரு விதமான ச்ரமமின்றியும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட உயர்வு இருக்கிற தென்று சொல்ல முடியாதபடியும் நிற்கும் எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்பதை முதல் பாதத்தில் ‘உயர்வற உயர் நலமுடையவன்’ என்று நிரூபித்திருப்பதனாலும், இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அப்படிப் பட்ட மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுப்பவன் என்று அருளிச் செய்திருப்பதினாலும் திருமாமகள் கேள்வனாகிய தேவனே ப்ரஹ்ம சப்தத்திற்கு முக்யார்த்தம் என்று உபபாதிக்கப்பட்டதாயிற்று.

தொடரும்--------------