புதன், 13 மே, 2009

சேதுக்கரையில் தீர்த்தவாரி

திருப்புல்லாணி சித்திரை உத்ஸவத்தில் 10ம் நாள் சேதுக்கரையில் நடந்த தீர்த்தவாரி வைபவம் இங்கு ஸ்லைட் ஷோவாக

திங்கள், 11 மே, 2009

11th day (Vidayaatri) at Thiruppullani

நேற்று திருப்புல்லாணி சைத்ரோத்ஸவ விடையாற்றி நாள். சீதா லக்ஷ்மண ஸமேதராய் இராமன் காலையிலேயே வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நடந்தது.

மாலையில் சாத்துமுறைக்காக காத்திருந்த சமயத்தில், அங்கு கூடியிருந்த பெண்களிடம் பாலிகையைச் சுற்றி கும்மி அடிக்க கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அவர்களோ … தயங்கினார்கள் எனக்குத் தெரியாது உனக்குத் தெரியாது என ஒதுங்கினார்கள். கோவிலாரோ விடுவதாயில்லை. ஒருவழியாக ஆரம்பித்தாலும், தட்டுத் தடுமாறி என்ன பாடுவது எப்படி கும்மி அடிப்பது என்று புரியாமல் திகைத்த வேளையில் “கல்கி” கதை ஆழ்வார்க்கடியான் போல் ஒருவர் திடீரென்று பெண்கள் நடுவில் நுழைந்து ஆண்டாள் குறவஞ்சியைப் பாடிக்கொண்டு கும்மி அடிக்க ஆரம்பித்தார் அதன்பின் அவரைப் பார்த்து எங்களூர்ப் பெண்களும் ஒருவழியாக கும்மி அடித்து முடித்தார்கள்.

இதில் வேதனை பெண்கள் அனைவருமே கோவில் கைங்கர்ய பரர்கள் குடும்பத்தினர் என்பதும் வந்தவர் திருக்குறுங்குடி நாராயண பாகவதர் என்ற அபிராமணர் என்பதும்தான்.

,

அந்த வீடியோ காட்சியைக் காணுங்கள். முதலில் பெண்கள் திகைப்பதையும், நடுவில் பாகவதர் நுழைந்து தூள் கிளப்புவதையும் கவனியுங்கள்.

கும்மி ஒலியில் பாடல் தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் இருப்பதோ ஸ்டில் காமரா. ஆண்டாள் குறவஞ்சி கேட்க விரும்புபவர்களுக்காக அவரை மீண்டும் பாடச் சொல்லி பதிவு செய்துள்ளேன். அதை இங்கிருந்து கேட்கலாம் தரவிறக்கிக் கொள்ளலாம்.