வியாழன், 18 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

சுலோகம் 9

त्रिवर्गपथवर्तिनां त्रिगुणलङ्घनोध्योगिनां
द्विषत्प्रमथनार्थिनां अपि च रङ्गदृस्योदया |
स्खलत्समयकातरीहरणजागरूका: प्रभो !
करग्रहणदीक्षिता: क इह ते न दिव्या गुणा: ||

 

த்ரிவர்க₃பத₂வர்த்திநாம் த்ரிகு₃ணலங்க₄நோத்₄யோகி₃நாம்
த்₃விஷத்ப்ரமத₂நார்த்தி₂நாம் அபி ச ரங்க₃த்₃ரு̆ஸ்யோத₃யா |
ஸ்க₂லத்ஸமயகாதரீஹரணஜாக₃ரூகா: ப்ரபோ₄ !
கரக்₃ரஹணதீ₃க்ஷிதா: க இஹ தே ந தி₃வ்யா கு₃ணா: ||

 

ப்ர‌போ -- என் ப்ர‌புவே!, த்ரிவ‌ர்க்க‌ப‌த‌வ‌ர்த்திநாம் -- த‌ர்ம‌ அர்த்த‌ காம‌ங்க‌ளைக் கோருகிற‌வ‌ருக்கும், த்ரிகுண‌ ல‌ங்க‌நோத்யோகிநாம் --- ப்ர‌கிருதி ம‌ண்ட‌ல‌த்தைத் தாண்ட‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் ப்ர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு கைவ‌ல்ய‌த்தையும் மோக்ஷ‌த்தையும் கோருகிற‌வ‌ருக்கும், த்விஷ‌த் ப்ர‌ம‌த‌நார்த்திநாம் அபி -- (பெருமாளுடைய‌வோ அல்ல‌து த‌ன்னுடைய‌வோ) ச‌த்ருக்க‌ளின் நிர‌ஸ‌க‌த்தைக் கோருகிற‌வ‌ருக்கும், ர‌ங்க‌த்ருஶ்யோத‌யா -- அர‌ங்க‌த்தில் ப்ர‌த்ய‌க்ஷ‌மாக‌ அனுப‌வ‌த்திற்கு வ‌ரும‌வையும், ஸ்க‌ல‌த்ஸ‌ம‌ய‌ காத‌ரீ ஹ‌ர‌ண‌ ஜாக‌ரூக‌ -- த‌ட‌ங்க‌ல் வ‌ரும் கால‌த்தில் சேரும் ப‌ய‌த்தை வில‌க்குவ‌தில் தூங்காம‌ல் விழித்து ஜாக்கிர‌தையாய்க் காத்துக்கொண்டிருப்ப‌துமான‌, தே திவ்யா: குணா -- உம்முடைய‌ திவ்ய‌ குண‌ங்க‌ள், இஹ‌ -- இங்கே, க‌ -- எவை, க‌ர‌ க்ர‌ஹ‌ண‌ தீக்ஷிதா -- கை கொடுத்து ர‌க்ஷிப்ப‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாகக்) கொண்ட‌வைய‌ல்ல‌

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அறமுதலாம் மூன்றுதனில் அகம்படிந்து துணிவோர்க்கும்
அல்லல்மிகு வாழ்வென்னும் ஆழ்கடலைக் கடந்துசெலும்
பெருமுயற்சி செய்வோர்க்கும் பணிந்துன்னை வாழ்வார்தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம்கொண்ட அடியார்க்கும்
நெறிதவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள்கரத்தால் காத்திடவே
பெருநகராம் அரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமானுன்
பல்குணத்துள் எவையேதாம் விரதத்துடன் நிற்கவில்லை? 9.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி

ப‌ர‌மைகாந்தி ஒருவ‌ர் ஒருக்கால் வ‌ஸித்தால் ஏற்ப‌டும் ர‌க்ஷையைக் கூறினார். அந்த‌ ர‌க்ஷையும் ர‌ங்க‌த்தில் நித்ய‌வாஸ‌ம் செய்ய‌ விரும்பும் எம‌க்கே ர‌க்ஷை. எம்மைக்காத்து எம் இஷ்ட‌த்தைப் பூர்த்தி செய்ய‌ உம்முடைய‌ திவ்ய‌குண‌ங்க‌ளே போதும் என்கிறார்.

"ஆர்த்த‌ன், கைவ‌ல்ய‌த்தை விரும்பும‌வ‌ன், அர்த்தத்தை விரும்பும‌வ‌ன், மோக்ஷ‌த்தில் ஆசையுள்ள‌வ‌ன், என்ற‌ நால்வ‌ர் என்னைப் ப‌ஜிக்கிறார்க‌ள்" என்றார் கீதையில். இவ்்விட‌த்திற் கேற்ப‌ இங்கே ஒருவ‌கையான‌ விபாக‌ம். (1) த‌ர்மம் அர்த்த‌ம் காமம் மூன்றையும் விரும்புகிற‌வ‌ர்க‌ள் (2) ப்ர‌க்ருதியை வில‌க்கி (ஜ‌யித்து) கேவ‌லாத்மாநுப‌வ‌த்தை ஆசைப் ப‌டுகிற‌வ‌ர்க‌ள் (3) ப்ர‌க்ருதியைத் தாண்டி மோக்ஷ‌ம் செல்ல‌ இச்சிப்ப‌வ‌ர்க‌ள் (4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வ‌தால்) ந‌ம‌க்கு விரோதியான‌வ‌ர்க‌ளை நிர‌ஸிக்கக் கோரும் நாம்.

பெருமாள் திருமேனிக்கு வ‌ரும் கெடுதியே ந‌ம‌க்கு ஆர்த்தி. அவ‌ர் திருமேனிக்குச் ச‌த்ருக்க‌ளே ந‌ம‌க்குச் ச‌த்ருக்க‌ள். அவ‌ர் திருமேனி தீங்கின்றி விள‌ங்குவ‌து ந‌ம் காமம். பிர‌கிருதி வியுக்த‌மாக‌ப் பிர‌கிருதி ஸ‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேவ‌லாத்மாநுப‌வ‌ம் இருப்ப‌தால், கைவ‌ல்யார்த்தி க‌ளையும் "ப்ர‌க்ருதில‌ங்க‌நார்த்திநாம்" என்ப‌தால் சேர்த்து ஸ‌ங்க்ர‌ஹிக்க‌லாம்.

நீர் தூங்குகிற‌துபோல் பாவ‌னை செய்தாலும், உம் குண‌ங்க‌ள் விழித்துக்கொண்டே இருந்து எங்க‌ளைக் கைதூக்கி ர‌க்ஷிக்கும். ர‌க்ஷ‌ணைக‌ தீக்ஷித‌ரான‌ பெருமாள்போல‌, அவ‌ர் திவ்ய‌ குண‌ங்க‌ள் க‌ர‌க்ர‌ஹ‌ண‌ தீக்ஷித‌ங்க‌ள். த‌ர்மார்த்த‌ காம‌ங்க‌ளும் கைவ‌ல்ய‌ யோக‌மும் மோக்ஷ‌த‌சையில் அங்குர‌மான‌ அனுப‌வ‌மும் இந்த‌ அர‌ங்க‌த்தில் உம்மை ப‌ஜிப்ப‌தால் உம் குண‌ங்க‌ள் கொடுக்கக் கிடைக்கின்ற‌ன‌. அப்ப‌டியே இத‌ற்கு விரோதிக‌ளை நிர‌ஸிக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோர‌த‌மும் உம் குண‌ங்க‌ளின் வ‌லிமையினால் நிறைவேறி, நீர் கோயிலில் நித்ய‌மாக‌ எழுந்த‌ருளியிருந்து ஸேவை ஸாதிக்க‌ வேண்டும் (9)

புதன், 17 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 8


சுலோகம் 8
कदाचिदपि रङ्गभूरसिक ! यत्र देशे वशी
       त्वदेकनियताशय: त्रिदशवन्दितो वर्तते |
ततक्षत तपोवनं तव च राजधानी स्थिरा
       सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ||
கதாசிதபி ரங்கபூரஸிக ! யத்ர தேஶே வஶீ
        
த்வதேகநியதாஶய: த்ரிதஶவந்திதோ வர்த்ததே |
ததக்ஷத தபோவநம் தவ ராஜதாநீ ஸ்திரா
        
ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் ஸுசரிதஸ்ய துர்கம் மஹத் ||

ர‌ங்க‌பூர‌ஸிக‌ --ஸ்ரீர‌ங்க‌த்தில் வ‌ஸிப்ப‌வ‌ரே!, வ‌ஶீ - இந்திரிய‌ங்க‌ளை வ‌ச‌ப்ப‌டுத்திய‌ வ‌ரும், த்வ‌தேக‌ -நிய‌த‌ - ஆஶ‌ய‌ -- (தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள்போல‌) உம்மிட‌த்திலேயே நிலைநிறுத்திய‌ ப‌க்தியை யுடைய‌வ‌ரும், த்ரித‌ஶ‌ வ‌ந்தித‌ -- தேவ‌ர்க‌ளால் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌ப் ப‌டுப‌வ‌ருமான‌ (பெரிய‌வ‌ர்), ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், க‌தாசித‌பி -- ஒரு பொழுதாவ‌து, வ‌ர்த்ததே -- இருக்கிறாரோ, தத் -- அது, அக்ஷ‌த‌ -- இடையூறில்லாத‌, த‌போவ‌ந‌ம் -- த‌போவ‌ந‌ம், த‌வ‌ ச‌ -- உம‌க்கும், ஸ்திரா -- ஸ்திர‌மான‌, ராஜ‌தாநீ -- ந‌க‌ர‌ம், ஸுக‌ஸ்ய‌ (ச‌) -- ஸுக‌த்திற்கும், ஸுக‌ம் -- ஸுக‌மான‌, ஆஸ்ப‌த‌ம் -- இட‌ம், ஸுச‌ரித‌ஸ்ய‌ -- ந‌ல்லொழுக்க‌த்திற்கும், ம‌ஹ‌த் -- பெரிய‌, துர்க‌ம் -- அர‌ண் (கோட்டை)
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
அரங்கத்தில் அன்புடனே அணைந்துறையும் பெருமானே!
அலைபாயும் புலன்களினை அடக்கியாளும் திறமுடைத்துன்
ஒருவனையே மனம்வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஒன்றுகூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒருபொழுதே வாழ்ந்திட்ட ஓரிடமே தடையின்றி
உயர்தவத்தைப் புரிவதற்கு உறுமிடமாம்! உன்னுடைய
உறுதியான தலைநகராம்! ஒப்பற்ற சுகத்தலமாம்!
உற்றபெரும் நல்வினைக்கோர் உரியபெரும் அரணாமே! 8.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         ய‌ம‌வ‌ச்ய‌தையில்லாம‌லே ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ருகிற‌தே என்று காட்டி, நீர் இப்ப‌டி சாஸ்த்ர‌ ம‌ரியாதையைக் குலைக்க‌லாமோ என்று த்வ‌னிக்கும்ப‌டி முன் சுலோக‌த்தில் பேசினார். உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌முடைய‌ ஒரு ப‌க்த‌ர் ஏதோ ஒரு கால‌த்தில் ஒரு தேச‌த்திலிருந்தால் அந்த‌ தேச‌ம் ப‌க‌வானுக்கு ஸ்திர‌மான‌ ராஜ‌தானியாகும். த‌வ‌ம் செய்வ‌த‌ற்கு இடையூறில்லாத‌ த‌போவ‌ன‌மாகும். ந‌ல்லொழுக்க‌த்திற்கு அழிவ‌ற்ற‌ கோட்டையாகும் என்ப‌ரே. தொண்ட‌ர‌டிப் பொடிக‌ளிலும் உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌ முடைய‌வ‌ருண்டோ? अत्रैव श्रीरङ्गे सुखमास्स्व (அத்ரைவ‌ ஸ்ரீர‌ங்கே ஸுக‌ம் ஆஸ்ஸ்வ‌) என்ற‌ல்ல‌வோ இத்த‌கைய‌ வ‌டியார்க‌ளுக்கு உம்முடைய‌ ஆக்ஞை! "அச்சுவை பெறினும் வேண்டேன் அர‌ங்க‌மாந‌க‌ருளானே" என்று ப‌ர‌மப‌தத்து வைகுண்ட‌நாத‌னையும் ஒதுக்கி உம்மிட‌ம் நிய‌தாஶ‌ய‌ராய் இருந்த‌ன‌ர். "இங்கே ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மாயிரு" என்று எங்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டுவிட்டு, நீர் இவ்விட‌மிருந்து வெளியேறுவ‌து த‌குதியோ? பெரிய‌ பெருமாள் ஓரிட‌மும் நீர் ஓரிட‌முமானால், எங்க‌ளுக்கு ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மான‌ இருப்பு எப்ப‌டி ஏற்ப‌டும்?
         ர‌ங்க‌பூ ர‌ஸிக‌ -- பாற்க‌ட‌ல், ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌ம், வைகுண்ட‌ம் எல்லாவ‌ற்றைக் காட்டிலும் உம‌க்கு ஸ்ரீர‌ங்க‌த்திலே (ர‌தி) இன்ப‌ம் இருக்கிற‌து. रतिं गतो यतस्तस्मात् "ர‌திம் க‌தோ ய‌த‌ஸ்த‌ஸ்மாத்" என்று ரிஷிக‌ள் பொருள் கூறினார்க‌ள். அர‌ங்க‌த்தில் அர‌ங்க‌னாகிய‌ நீர் ஸ‌பாநாய‌க‌ராக‌ வீற்றிருந்து காவ்ய‌ங்க‌ளை ர‌ஸித்து அர‌ங்கேற்றுவ‌து, रङ्गास्थाने रसिकमहिते रञ्ज्चिताशेषचित्ते (ர‌ங்காஸ்தாநே ர‌ஸிக‌ம‌ஹிதே ர‌ஞ்ஜிதாஶேஷ‌சித்தே).
         ர‌ங்க‌பூர‌ஸிக‌ -- ர‌ங்க‌பூமிக்கும் ர‌ங்க‌ந‌க‌ர‌வாஸிக‌ளுக்கும் உம்மிட‌ம் ர‌ஸ‌மிருப்ப‌து போல‌, உம‌க்கும் அவ‌ர்க‌ளிட‌ம் ர‌ஸ‌ம். இப்ப‌டிப் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌மிருப்ப‌தால் ர‌ஸ‌பூர்த்தி. ப்ர‌ஹ்மா வினால் ஸ‌த்ய‌ லோக‌த்தில் சில‌கால‌ம் ஆராதிக்க‌ப்ப‌ட்டு, அதை விட்டு அயோத்தி வ‌ந்தீர். அங்கு நீண்ட‌ கால‌மிருந்து அதை விட்டு ஸ்ரீர‌ங்க‌த்திற்கு எழுந்த‌ருளினீர். இனி ஓரிட‌மும் போக‌மாட்டீராத‌லால் இங்கே உம‌க்கு நிர‌திச‌ய‌ப்ரீதி என்று பாதுகா ஸ‌ஹ‌ஸ்ர‌த்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது. सत्याल्लोकात् परममहितात् स्थानतो वा रघूणां -- ஸ‌த்யால்லோகாத் ப‌ர‌மம‌ஹிதாத் ஸ்தாநதோ வா ர‌கூணாம் -- என்று கூறின‌து பொய்யாக‌லாமோ?
         ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், "ய‌த்ர‌" என்று ம‌ட்டும் ப்ர‌யோகித்தார். "ய‌த்ரைகாந்த்ய‌" என்ற‌ ஸ்தாந‌ விசேஷாதிகார‌ சுலோக‌த்தில்.
         வ‌ஶீ -- "இந்த்ரிய‌ங்க‌ளை எல்லாம் அட‌க்கின‌வ‌ர் எங்கே எங்கே வ‌ஸிக்கிறாரோ, அங்க‌ங்கே குருக்ஷேத்ர‌மும் நைமிச‌மும் புஷ்க‌ர‌முமுள‌" என்ற‌ சுலோக‌ம் ஸ்தாந‌ விசேஷாதி கார‌த்தில் எடுத்துக் காட்ட‌ப்ப‌ட்ட‌து.
         த்வ‌த‌தேக‌நிய‌தாஶ‌ய‌ -- ऐकान्त्यव्यवसितधिय -- ஐகாந்த்ய‌ வ்ய‌வ‌ஸித‌ திய‌ -- என்று அதிகார‌ ச்லோக‌ம்.
         க‌தாசித‌பி -- यस्य कस्यापि लाभ -- ய‌ஸ்ய‌ க‌ஸ்யாபி லாப‌ -- என்று அங்கு இர‌ண்டிட‌த்திலும் இர‌ண்டையும் अपि   அபி என்ப‌தைக் கொண்டு சேர்த்துக் கொள்ள‌ வேணும்.
         த்ரித‌ஶ‌வ‌ந்திதோ வ‌ர்த்ததே -- தேவ‌ர்க‌ள் இவ‌ருக்குப் ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜிக்கிறார்க‌ள். तस्मै देवा बलिमावहन्ति த‌ஸ்மை தேவா ப‌லிமா வ‌ஹ‌ந்தி . "நித்ய‌ஸூரிக‌ளும் கோயிலில் வாஸ‌த்தைத் தேடி ம‌னுஷ்ய‌ர்க‌ளோடும் திர்ய‌க்குக‌ளோடும் சேர்ந்து தொழுகிறார்க‌ள்" என்று ப‌ட்ட‌ர் ஸாதித்தார். ப‌ர‌மைகாந்திக‌ளும், அவ‌ர்க‌ளைப் பூஜிக்க‌வும் உம்மை ஸேவிக்க‌வும் வ‌ரும் நித்ய‌ஸூரிக‌ளும் ஏமாறும்ப‌டி செய்ய‌லாமோ? "த்ரித‌ச‌வ‌ந்தித‌ராக‌ இருக்கிறார் " என்ப‌தால் அவ‌ர்க‌ளோடு தேவ‌ர்க‌ளும் வ‌ஸிக்கிறார்க‌ள் என்று காட்ட‌ப்ப‌டுகிற‌து. "த‌ஸ்மை தேவா ப‌லிமாவ‌ஹ‌ந்தி" பெருமாளை அவ‌ர்க‌ள் ஸேவிக்க‌ வ‌ருவ‌து ராக‌ப்ராப்த‌ம். இவ‌ர்க‌ளை வ‌ந்த‌ன‌ம் செய்து ப‌லி ஸ‌ம‌ர்ப்பிப்ப‌து வைத‌ம், சுருதி விதித்த‌ ஆக்ஞா கைங்க‌ர்ய‌ம்.
         ஸா ச‌ ராஜ‌தாநீ ஸ்திரா -- விதேய‌ம் முக்கிய‌மான‌தால் அதை அநுஸ‌ரித்து "ஸா" என்று ஸ்திரீலிங்க‌ம் உப‌யோகிக்க‌ப் ப‌டுகிற‌து. ராஜ‌தானிக்கே ஆப‌த்துக்க‌ள் அதிக‌ம். ச‌த்ருக்க‌ள் ப‌ல‌ர் இருப்பார்க‌ள். யுத்த‌மும் முற்றுகையும் வ‌ந்து கொண்டேயிருக்கும். ப‌ர‌மைகாந்தி வ‌ஸித்த‌ அல்ல‌து வ‌ஸிக்கும் ர‌ங்க‌ராஜ‌தாநீ ஸ்திர‌மாயிருக்க‌ வேண்டும். ராஜா வ‌ஸிக்கும் இட‌ம் ராஜ‌தாநியாகையால், ந‌ம்பெருமாள் வேறொரிட‌த்தில் இருந்தால் அதுவும் ராஜ‌தாநியாகிலும், அது ர‌ங்க‌ராஜ‌தானி யாகாத‌ல்ல‌வா?
         ஸுக‌ஸ்ய‌ ஸுக‌மாஸ்ப‌த‌ம் -- ஸுக‌மென்ப‌த‌ற்கே இது ஸுக‌மான‌ இருப்பிட‌ம். ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் ஸுக‌மும் இத்த‌னை ஸுக‌மாக‌ இருக்காது.
         ஸுச‌ரித‌ஸ்ய‌ துர்க‌ம் ம‌ஹ‌த் -- த‌ர்மம் உல‌க‌த்தைக் காக்கும் என்ப‌ர். த‌ர்ம‌த்திற்குப் ப‌ர‌மைகாந்தி வ‌ஸிக்கும் க்ஷேத்ர‌ம்தான் பெரிய‌ அர‌ண். இத்த‌னைக்கும் ஹாநி வ‌ர‌லாமோ? (8) 

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

08-08-2016 அன்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்திய‌ 48வ‌து (சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்) டெலி உப‌ந்யாஸ‌ம்

பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்
http://www.mediafire.com/download/1b6n8e64sgwz7zu/048_SSR_(08-08-2016).mp3

15-08-2016 அன்று ம‌ங்க‌ள‌மாக‌ முடிந்த‌ அயோத்யா காண்ட‌ம் டெலி உப‌ந்யாஸ‌ம்

http://www.mediafire.com/download/azbgfbb5gym57oa/049_SSR_(15-08-2016).mp3

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்த‌வ‌ம் 

சுலோக‌ம் 7

रमादयित ! रङ्गभूरमण ! कृष्ण ! विष्णो ! हरे !
      
त्रिविक्रम ! जनार्दन ! त्रियुग ! नाथ ! नारायण! |
इतीव शुभदानि य: पठति नामदेयानि ते
      
न तस्य यमवश्यता नरकपातभीति: कुत: || 7
ரமாதயித ! ரங்கபூரமண ! க்ரு̆ஷ்ண ! விஷ்ணோ ! ஹரே !
      
த்ரிவிக்ரம ! ஜநார்த ! த்ரியுக! நாத! நாராயண! |
இதீவ ஶுபதாநி : படதி நாமதேயாநி தே
      
தஸ்ய யமவஶ்யதா நரகபாதபீதி: குத: || 7
: எவன், மாதயித-- க்ஷ்மீகாந்த! , ங்கபூர--ஸ்ரீரங்கத்தில் ரமிப்பனே!, க்ருஷ்ண-- ண்ணா ! (பூர்ணாநந்தபூமியே!,), விஷ்ணோ -- எங்கும் நிறைந்தனே!, ரே -- ரியே (ஆபத்தை ஹரிப்பனே, சிங்கமே ), த்ரிவிக்ர-- மூவுலந்தசேவடியோனே!, நார்த்த-- னார்த்தனனே!, த்ரியுக-- ஆறுகுணத்தோனே!, நாத-- நாதனே!, நாராய-- நாராயனே!!, இதீவ-- இதுவும், இதுபோலுள்ளவுமான, ஶுபதாநி -- க்ஷேமத்தை அளிக்கும், தே -- உம்முடைய, நாமதேயாநி -- திருநாமங்களை , தி -- உச்சரிக்கிறானோ, ஸ்ய-- அவனுக்கு, ஶ்யதா -- காலனுக்கு வமாவதென்பது, : -- கிடையாது, - பாத- பீதி -- த்தில் வீழ்வதென்னும் பம், குத: -- எங்கிருந்து வரும்.
ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
பூமகளின் நற்துணைவா! பொழிலரங்கக் காதலனே!
முகில்வண்ண கண்ணாவே! மறைந்தெங்கும் நிற்பவனே!
தீமைகளை ஒழிப்பவனே! திருவடியால் உலகளந்த
திரிவிக்ரமாஸ்ரீ ஜநார்தனா! திருவாறு குணமுடையோய்!
நாம்வணங்கும் பெருந்தலைவா! நாராயணா! என்றென்று
நலமெல்லாம் தருமுன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன்தனக்கு வயமாக்கும் நிலையென்றும் ஏற்படாதே!
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம்தான் உண்டோதான்? 7.
ஸ்ரீ அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி

       முன் சுலோகத்தில் "துப்புடையாரை" நினைத்தார். அத்திருமொழியில் மேல்பாசுரங்களில் "என்னை அநேகண்டம் செய்வதா நிற்பர் நன்தர்கள்", "ன் தம் பற்றும்போது", "ன்தர் பற்றலுற்றஅன்றைக்கு" என்று யச்யதா பமில்லாமல் காப்பராகஅரங்கத் தணைப் பள்ளியானைத் துதிக்கிறார்.
     விஷங்கள் சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில் ஓடஇங்கே இந்தசுலோகம் அமைக்கப் பட்டுள்ளது. ம்பெருமாள் திவ்யங்கவிக்ரம் கோவிலை விட்டு வெளியே எழுந்தருளியிருந்தம், ஸ்ரீரங்கநாய்ச்சியாரை விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது. ஸ்ரீரங்கபூமியை விட்டுப் பிரிவு, ஸ்ரீரங்கபூமியிலுள்ளனுஜதிர்யகாதி விஷவாஸிகளை விட்டுப் பிரிவு, ஸ்வாமியைப்போல் ததேகநியதாசராய் ஸ்ரீரங்கநாதனையே த்யானம் செய்து ரமிப்பரோடும் பிரிவு. "உம்மோடு கூடஇருப்பதே ஸ்வர்க்கம். உம்மை விட்டுப் பிரிவே நம்" என்று ஸ்வர்க்கக்ஷம் சீதை லக்ஷ்மன் போன்றசேஷங்களுக்கு. ம் பெருமாளைவிட்டுப் பிரிவு நபாததுல்யம். "விஷ்ணு பக்தருக்கு, வைஷ்ணருக்கு, ன் தர் பமில்லை. னுக்கு வமாவதில்லை. அவர்கள் இவர்களைக் கண்டு பந்து ஓடுவார்கள்" என்று விஷ்ணு புராணத்தில் பீஷ்மர் நகுலனிடம் யனுக்கும் அவன் பர்களுக்கும் நந்தம்வாதத்தை வர்ணித்தார். அவர்கள் ஸம்வாதத்தை நத்தில் அப்போது அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தகாளிங்கர் நேரில் கேட்டார். அவர் ஜாதிஸ்மரர். அதாவது ஒரு சக்தி விசேஷத்தால் பூர்வன்மங்களில் தாம் அனுபவித்ததை யெல்லாம் ஸ்மரிப்பர். பூர்வன்மத்தில் தாம் நத்தில் கூடஇருந்து கேட்டபேச்சை அப்படியே அவர் தம்முடையபிராமன்மத்தில் பீஷ்மருக்கு வர்ணித்தார். பீஷ்மர் நகுலனுக்கு வர்ணித்ததைப் பராசரர்வர்ணித்தார். இந்தம்வாதத்தில் ஸ்ரீசங்கரர் முதலியஅத்வைதப் பெரியார்களுக்கு விசேஷஈடுபாடு. ன் பாடினான் என்று "ஹ‌ரிகுருவ‌ஶ‌கோஸ்மிஸ்வந்த்ர: ப்ரதி ஸம்யதே மமாபி விஷ்ணு:" (हरिगुरुवशगोऽस्मि न स्वतन्त्र: प्र्भवति संयमते ममापि विष्णु:) என்றசுலோகத்தை பதீ க்ரந்தம் உதாஹரித்தது. "து ஸூதப்ரந்நரைப் பரிஹரிப்பாயாக. வைஷ்ணர்கள் பேரில் எனக்கு அதிகாரமில்லை. வைஷ்ணர்கல்லா தாருக்கே நான் ப்ரபு" என்றசுலோகத்தை மதுஸூதர் தம் அழகானகீதா வ்யாக்யானத்தில் உதாஹரித்தார். ரி, விஷ்ணு, நார்த்தனன், துஸூதனன், வாஸுதேவன் முதலியதிருநாமங்களை தர்மராஜர் அங்கே அடிக்கடி கீர்த்தம் செய்கிறார். இந்தத் திருநாமங்களை உச்சரிப்பர்களைக் கண்டு யமபர்கள் நடுங்கவேண்டும்.
     "ன்தர் தலைகள் மீதே ………….. நின் நாமம் கற்றஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நருளானே" என்று அரங்கனையே அத்யந்தம் ஐகாந்த்யத்தோடு பற்றிய(ததேகநியதாஶரான) தொண்டரடிப்பொடிகளும் யனுடையகானத்தை அநுகானம் பண்ணினார். காதோடு ரஸ்யமாகச் சொல்லுகிறேன் என்று தொடங்கியன் போகப்போகந்தோஷபாரச்யத்தால் மெய் மந்து உரக்கப் பாடினான் என்னும் ரத்தை பாமதி அநுபவித்தது. பீஷ்மரும் பராசரரும் அநுபவித்தார்கள். छिन्धि भिन्धि (சிந்தி, பிந்தி) (கிழி, பிள) என்று கொடுமையே பேசுபர் பாடினார் என்றும் ரம். गीतं वैवस्वतेन यत् (கீதம் வைவஸ்வதேநத்) என்று கடைசியில் யன் இப்படிப் பாடினான் என்று பீஷ்மராசரர்கள் ரஸித்தார்கள். ன் பாட்டுக்களில் கடைசிப் பாட்டு
कमलनयन वासुदेव विष्णो धरणिधराच्युत शङ्खचक्रपाणे |
भव शरणमितीरयन्ति ये वै त्यज भट दूरतरेण तानपापान् ||
வாஸுதேவவிஷ்ணோ தணிதஅச்யுதங்கக்ரபாணே |
பவ ஶம் இதீரந்தி யே வை த்வதூரரேணதாந் அபாபாந் ||
என்பது. "இந்தத் திருநாமங்களைச் சொல்லி நீயே அடைக்கம் என்று பேசுபரிடமிருந்து, அதி தூரம் விலகிச் செல்லுங்கள்" முன் "விலகு" "தூரவிலகு" என்று பாடிற்று. இங்கு திருநாமத்தைச் சொல்லி "அடைக்கலம்" என்று பேசுபர் விஷத்தில் "தூரம் விலகு" என்று பாடப்பட்டது.
     முன் பாதியில் திருநாமங்கள் அடுக்காகப் படிக்கப்பட்டது. இந்தசுலோகத்திலும் அதே ரீதியாகமுன்பாதியில் திருநாமங்களை மட்டும் அடுக்கி அமைத்து :"இதி ஈரந்தி" என்றதுபோல் "இதீவதி நாமதேயாநி தே" என்று இங்கும் பின்பாதியின் அமைப்பு. "இதீவ" "இதுபோன்றநாமதேயங்களை". னுடையசுலோகத்திலும் அதே நாமங்களையோ மற்றநாமங்களையோ என்று தாத்பர்யம் என்பதை ஸ்வாமி "இவ" என்று காட்டியருளுகிறார். ன் பாடினடியும் தொண்டடிப்பொடிகள் பாடினடியும் உம் திருநாமங்களைச் சொல்லி நீரே சம் என்று வாயாலேயாவது சொல்லும் எம்போல்வார்க்கு யஶ்யதை என்பதே ஸம்பவிக்கமாட்டாது. "த்வயா விநா" உம்மைவிட்டுப் பிரிவினால் நாங்கள் நத்தையே அனுபவிக்கிறோம். ஶ்யதை இல்லாதார்க்கு நகாநுபம் வந்யாயமில்லை. உம் பிரிவால் ரௌரவாதி ஸப்தங்களை நாங்கள் இப்போது அனுபவிப்பது உண்மை. எங்களுக்கோ யஶ்யதை கிடையாது என்பது திண்ணம். ஶ்யதை நகாநுபத்திற்குக் காரம். காரமில்லாமல் காரியம் உண்டாகிறதே, இது என்னஅந்யாயம் என்று கடைசிப் பாதத்தில் கைமுத்யத்தால் விளக்கும் அழகு ரஸிக்கத் தக்கது.
     ஸ்வாமி திருவுள்ளப்படி ஒவ்வொரு பதத்தின் ரத்தைக் கொஞ்சம் காட்டுவோம்.
         மாதயித-- தேவரீர் செஞ்சிக்கோட்டையிலும், ஸ்ரீரங்கநாச்சியார் கோயிலிலுமாகஇருப்பது ந்யாயமோ? "நிரயோ யஸ்-த்வயாவிநா" "விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ" "அககில்லேன் இறையும்" என்னும் உம் பிரியகாந்தைக்காகவாவது நீர் கோயிலுக்குத் திரும்பி எழுந்தருளவேண்டாமோ? निवर्त्य राजा दयितां दयालु (நிவர்த்யராஜா தயிதாம் தயாளு) என்று ரகுவம்சம். யிதை விஷத்திலும் தயாளுவல்லவோ ?
       ங்கபூர-- பிராட்டி விபுவாகம்மோடு எங்கும் எப்போதும் गाढोपगूढ (காடோபகூட)மாய் அணைந்தே இருப்பள். அவளை விட்டுப் பிரிவு என்பதே இல்லை என்பீரோ, ங்கபூ என்னும் அரங்கர் (அயோத்யை) நோவு படுகிறதே. அதற்கு நீர்தானே ரன். அதற்குப் பொறுக்காதஅரதி. அதில் வஸிக்கும் மநுஜ- திர்யக் - ஸ்தாவமெல்லாம் ராமவிரத்தில் அயோத்தியில் சராசம்போலக் கறுகின்றவே. னில்லாமல் ரங்கபூமி நாயற்றஸ்திரீபோல் துக்கப்படுகிறதே. "ங்கம்" என்னும் நர், "பூ" என்னும் பூமிதேவி, இருவருக்கும் "" என்றும் கொள்ளலாம். ங்கம் பூமியிலே ஏகதேசமானாலும், ங்கத்தை மட்டும் தனித்து எடுத்துப் பேசுவது ரம். அரங்கமும் கறுகிறது. பூமிப் பிராட்டியும் கறுகிறாள்अश्रुमुखी खिन्ना- क्रन्दन्ति करुणं (அஶ்ருமுகீகிந்நா- க்ரந்தந்தி ருணம்) உபநாச்சிமாரும் அவர்களிருக்கும் நமானங்கமும் கறுகிறார்கள் என்பதைக் காட்ட, "ங்க" என்பதை இரண்டு நாச்சிமாருக்கும் நடுவில் வைத்தார். தாய்களும் ப்ரஜைகளும் நோவுபடுகின்றஎன்றடி. அடைக்கம் கொள்ளுவற்கு இந்தத் திருநாமங்கள் ஸப்ரயோஜம்.
         க்ருஷ்ண-  "ஹா க்ருஷ்ணா" என்று த்ரௌபதி கூப்பிட்டதிருநாமம். த்தொன்பதாவது சுலோகத்தில் அவள் வ்ருத்தாந்தத்தைப் பேசப் போகிறார். "க்ருஷ்ண" என்பற்கு "ஆனந்தத் தின் எல்லை பூமி" என்று பொருள். "க்ருஷி" என்று பூமிக்குப் பெயர். "ங்கபூ" என்று பேசியதும் "பெருமாளே நிர்வ்ருதிபூமி" "ஆனந்தத்திற்கு எல்லைபூமி" என்று ரமாய்ச் சேர்க்கிறார். ங்கபூமியில் நிர்வ்ருதிபூமியானநீர் சேர்ந்திருந்தால் பஸ்பம். "ங்கம்" என்பற்கு "திம் க:" "தியை அடைந்தார்" என்று பொருள். அதிலிருப்பதால் ரதி அடையப் படுகிறது. रति गतो यतस्तस्मात् रङ्गमित्यभिधीयते  (திம் கதோ யஸ் தஸ்மாத் ரங்கம் இதி அபிதீயதே)
         விஷ்ணோ! ரே ! -- ன் பாடியதிருநாமங்கள். மபருக்கு பமுண்டாக்குபவை. "रकारादीनि नामानि, अकारादीनि नामानि"  (காராதீநி நாமாநி, அகாராதீநி நாமாநி) உலத்தின் ஆபத்தை யெல்லாம் ஹரிப்பராயிற்றே. ப்ரதார்த்தி ல்லவோ?   
         த்ரிவிக்ர--  लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं प्रभो (லோக விக்ராந்தணௌ ஶம் தே அவ்ரம் ப்ரபு ) -- உலந்தஉம் சேவடிகளைச் சம் புகுந்தேன் என்று சண் புகும் கை. विष्णुं क्रान्तं वासुदेवं विजानन् ( விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநந்) என்றடி.
         நார்த்த-- இதுவும் யன் பாடல்களிலுள்ளது.
     த்ரியுக-- மூவிரண்டானஆறு குணங்களை உடையரே ! முதல் மூன்று யுகங்களில் ட்டும் மத்தியில் அவதாரம் செய்பர். லியில் அதன் முடிவில்தான். விபவாவதாரம் கலி த்தியில் கூடாதென்று இருக்கிறீரோ?
         நாத-- "ங்கநாத" என்று கூப்பிடக் கூடாமலிருக்கிறதே, இதனிலும் எங்களுக்குக் ஷ்டமுண்டோ?
         நாராய-- இடராயினவெல்லாம் நிலம்தம் செய்யும் நாமம் பெருமாள் சக்ரபாணியாய் ஆகாசத்தில் எழுந்தருளி தன்னைக் காட்டக் கண்டபோது, "நாராய! அகிலகுரோ! ந் ! ஸ்தே " என்று கஜேந்த்ராழ்வார் முதலில் கூப்பிட்டநாமம். திருவஷ்டாக்ஷத்திலும் த்வத்திலும் விளங்கும் திருநாமம்.
         இதீவ-- இப்படி, இதுபோன்ற. இவஎன்பதால் முழுவதும் சரியாகச் சொல்லாவிடினும், சொல்லுவதுபோலிருந்தாலும் போதும்.
         தி இவ-- வேறு ஏதோ ப்ரஸ்தாவத்தில் இந்தப்தத்தை மட்டும் உச்சரித்தாலும். "நாராய" என்னும் திருநாமத்தால் அஜாமிளன் கதையை நினைத்து, "தீவ" -- பாடம் டிக்கிறது போலிருந்தாலும் என்று கருத்துआक्रुश्य पुत्रमघवान् यदजामिलोऽपि म्रियमाण अवाप मुक्तिम् (ஆக்ருஶ்யபுத்ரம் அகவாந் யஜாமிளோபி நாராயஇதி ம்ரியமாணஅவாபமுக்திம்) இந்தநாமத்தின் ப்ரபாவத்தை ரஸித்தஸ்ரீவித்யாரண்யஸ்வாமி பஞ்சசியில் இந்தசுலோகத்தை உதாஹரித்தார்.
         நாமதேயாநி -- திருநாமப்தத்தை மட்டும்அர்த்தம்கூடவேண்டியதில்லை. வாச்யனானஉம்முடையநினைப்பில்லாமல், உம் பேராயிருப்பது மாத்ரமே போதும். "ம்" என்று பேசுவார் என்றான் யன். "இதி ஈரந்த" शरणगतिश्ब्दभाज" (ணாகதி ஶப்தபாஜ) என்று ஆழ்வான் "ஸ்வார்த்தே தேயட் ப்ரத்யயம்" என்பர்.
         தே -- உம் திருநாமமாதலால் சப்தத்தின் பமாத்ரத்திற்கு இத்தனை ப்ரபாவம்.
      ஸ்யஶ்யதா -- அவர்கள் விஷத்தில் தக்கும் தன் பர்களுக்கும் அதிகாரமில்லை என்று அதிகாரி புருஷனானர்மராஜனே சொல்லி இருப்பதால், அதில் ந்தேஹமில்லை. இதைக் காட்டவே அந்தசுலோகத்தின் ரீதி இங்கே அனுஸரிக்கப் பட்டது. ஶ்யதை வராமல் நபாதம் ஸம்பவிக்கந்யாயமில்லையே. ப்தங்களிலும் யனுடையஅதிகாரம் (வ்யாபாரம்) தான் என்று ஸூத்ரகாரர் "अपि सप्त", "तत्रापि च तद्वयापारादविरोध: " என்று தீர்மானித்தார். ஸூத்ரப் பிரஸித்தியைக் கொண்டு இங்கே கைமுதிகந்யாயத்தை வைக்கிறார். காநுபத்திற்குக் காரமானஶ்யதை இல்லாமலே நாங்கள் நதுல்யமானயாதனைகளை உம் பிரிவினால் அனுபவிக்கிறோம். இதையெல்லாம் உடனே நிவர்த்திக்கவேணும். ஸ்ரீரங்கநாச்சியார், அரங்கம், பூதேவி, அரங்கவாஸிகள் எல்லோரும் நாதனுடன் கூடியிருக்கவேணும். நாதனோரிடம், அரங்கமோரிடமாகஇருக்கலாகாது என்கிறார்.  (7)