வியாழன், 3 டிசம்பர், 2009

திருவருட்சதகமாலை (தயாசதகம்)

தமிழாக்கமும் பொழிப்புரையும்
வைகுந்தவாஸி ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்கார்

மையோபநதைஸ்தவ ப்ரவாஹைர நுகம்பே க்ருதஸம்ப்லவா தரித்ரி
   சரணாகதஸஸ்யமாலிநீயம் வ்ருஷசைலக்ருஷீவலம் திநோதி.  21.

உள்ளு மத்திரு வொத்த வத்தறு வாயெழுந் தயை! மாநிலம்
  தள்ள லில்லுன துள்ள மொள்ளிய தண்ண ளிப்பெரு வெள்ளநீர்
  தெள்ளு தானடை கொள்ளு வாழ்கதிர் காழ்த்த தூமுடி தாழ்த்தவே
  கொள்ளு வன்களி கண்டு வேங்கடத் தொய்ய னல்லற வையனே.  .21.

[ தயையே! ஸமயத்தில் (காலத்தில்) வரும் உனது ப்ரவாஹங்களால் ஜலம் நிறைந்த பூமியானவள் சரணாகதர் என்னும் பயிர்களை மாலையாக அணிந்துகொண்டு வேங்கடமலைக்கு அதிபதியாகிய பயிரொளியை ஸந்தோஷப்படுத்துகிறாள்]

கலசோததிஸம்பதோ பவத்யா: கருணே ஸந்மதிமந்தஸம் ஸ்க்ருதாயா:
  அம்ருதாம்சமவைமி திவ்யதேஹம் ம்ருதஸஞ்ஜீவநமஞ்ச நாகலேந்தோ. 22.

திண்ண நன்மதி மந்த ரந்தரு மேனி யுந்தமு திந்துவாய்த்
  தண்ண லந்தெளி யண்ண லுந்துயிர் தந்தெ ழும்நிறை நன்றியாழ்ந்
  தெண்ண ரும்பொரு ணண்ணு நற்கரு ணைத்தி ருப்பெருந் தேவியுன்
  வண்ண லந்திகழ் பாற்க டல்வளங் கொண்ட மெய்யிது கண்டனன். .22.

[கருணையே! அஞ்ஜநமலையில் சந்திர பிம்பம் போல் விளங்கும் ஸ்ரீநிவாஸனுடைய ம்ருதஸஞ்ஜீவினி போன்ற திருமேனியை நன்மதி யென்னும் மத்தினால் கடையப்பெற்ற திருப்பாற் கடல் போன்ற உன்னுடைய அம்ருதம் என்னும் ஸாராம்சமாக நினைக்கிறேன்.]

ஜலதேரிவ சீததா தயே த்வம் வ்ருஷசைலாதிபதே: ஸ்வபாவபூதா
  ப்ரளாயரபடீ நடீம் ததீக்ஷாம் ப்ரஸபம் க்ராஹ்யஸி ப்ரஸத்திலாஸ்யம்   .23.

  தண்மை யேதரு நன்மை யேதெரி தன்மை யார்கலி வேங்கட
  விண்ணி லத்திரு வண்ண னின்னிய லென்னு மன்னரு ளன்னையே
  உண்ண டூழிகொ ணீக்க னோக்கெனுங் கூத்தி யாரப டிப்பெயர்
  அண்ண னண்ணிட மென்னி லாசிய மாய்வ லித்ததை யாக்குவாய்.  23.

[தயையே! ஸமுத்ரத்திற்குக் குளிர்ச்சி எவ்வாறு ஸ்வபாவமோ அவ்வாறே வேங்கடமலை அரசனுக்கு நீ ஸ்வபாவமானவள். பிரளய காலத்தில் தலைவிரிகோலமாய்க் கூத்தாடும் அவருடைய கொடும் பார்வை யென்னும் நர்த்தகியை நீ பலாத்காரமாக அந்தக் கொடுமையான ஆட்டத்திலிருந்து திருப்பி ஸ்ருஷ்டி என்னும் ம்ருதுவான ப்ரஸந்ந நர்த்தனத்தில் ப்ரவர்த்திக்கச் செய்கிறாய்.]

From tomorrow Sri Kesava Ayyangar’s  introduction in English to his own “Thiruppadukamalai” will be resumed here

புதன், 2 டிசம்பர், 2009

BookletCreator – Print and bind books at home - instant fundas

This is a posting I found at instantfundas 
             Thanks to sri Kaushik

Have you ever tried to print an ebook on a desktop printer and then staple the pages together with the intention of turning it into a book? But the ‘book’ doesn’t feel right, isn’t it? Because just stapling together some pages doesn’t make it a book. They are always a size too large (letter/A4) and hence difficult to hold, the pages doesn’t stay open and all kinds of discomfort.

BookletCreator is an online service that lets us print and create proper books at home by making two things right – the size of the pages and the position where you pin the pages together. The size of a typical printer paper (A4/A3 etc) isn’t the correct size for printing books. Printing on such large sized papers will always make your books bulky. BookletCreator solves this problem by allowing you to print two pages on a single side of the paper. It also reorders the pages such that after printing and folding the pages, a small book is created.

Here is how BookletCreator works

Let's say your document looks like this:

boolket-creator-original

When you upload this document to the BookletCreator website and download the result, you will get something like this:

booklet-creator-arranged

When printing the document choose "print on both sides" in your printer preferences. If your printer can't print on both sides automatically, print the odd pages first then put the printed paper back into your printer and print the even pages. Finally, stack the pages in the correct order, fold them in half, and staple or stitch them at the center of the fold.

booklet-creator-booklet

The perfect home printed booklet.

BookletCreator

is free and can print only PDF files. If you have a Word document, you have to first convert it into PDF. The maximum size of the upload is limited to 20 MB.

BookletCreator also has a desktop software that can do the same thing without an Internet connection and from the comfort of the desktop. The software is priced at $9.95.

BookletCreator – Print and bind books at home - instant fundas

செவ்வாய், 1 டிசம்பர், 2009

திருவருட்சதகமாலை

        தமிழாக்கமும் பொழிப்புரையும்
  வைகுந்தவாஸி ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்கார்.

வ்ருஷகிரிக்ருஹமேதிகுணா போதபலைச்வர்ய வீர்யசக்திமுகா:
  தோஷா பவேயுரேத யதி நாம தயே த்வயா விநா பூதா:

போதரே யென்று வையம் பூக்குமா கருணை யுன்னை
  யாது மோர் போதுஞ் சற்றே யயர்ந்துதாம் பிரிந்தா லந்தோ!
  போதமும் பலமு மாட்சி வீரமும் மற்று மோதும்
  மாதவன் குணங்கள் யாவு மாசெனத் தாமே யாமே.   15.

[தயையே!திருவேங்கடமா மலையில் குடித்தனம் செய்யும் க்ருஹமேதியான மாதவனுடைய ஜ்ஞாநம்,பலம்,ஐசுவரியம்,சக்தி முதலிய குணங்கள் உன்னோடு கூடியிராமல் உன்னை விட்டு அகன்றிருந்தால் உலகத்தினருக்குக் கெடுதி உண்டாக்கும் தோஷங்களே ஆகி விடும்.]

ஆஸ்ருஷ்டி ஸந்ததாநாம்பராதாநாம் நிரோதிநீம் ஜகத:
  பத்மாஸஹாய கருணே ப்ரதி ஸஞ்சர கேளி மாசரஸி.     .16
.

படைப்பு நாள் தொடக்க மாகப் படிப்படி மிகுத்துப் பின்னும்
  கடைப்படச் செய்யும் வையக் கடுவினை தடிக்கும் பாவம்
  தடைப்படத் திருவி னாதன் கருணை நீ தருண நோக்கி
  முடிப்பெனப் பார்து டைக்கு மொருதிருக் கேளி செய்வாய். .16.

[பத்மாஸஹாயமான ஸ்ரீநிவாஸனுடைய தயையே! படைப்புக் காலந் தொடங்கி விஸ்தாரமாய் வையத்தார் செய்த பாவமனைத்தையும் நிரோதம் செய்வதற்காக ப்ரளயம் என்னும் ப்ரதிஸஞ்சரம் எனும் விளையாட்டை நீ ஆசரிக்கின்றாய்.]

அசிதவிசிஷ்டாந் ப்ரளயே ஜந்தூநவலோக்ய ஜாதநிர்வேதா
  கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷசைலநாத கருணே த்வம். .17
.

உருவுடன் பெயர கன்றே யொருசடப் பொருளி னூடே
  பிரளயத் துணர்வி ழந்தே பிணங்குபல் லுயிர்க ணோக்கி
  உருகி நீ கருணை யம்மா வகையினின் றவைக ளுய்யக்
  கருமமா ரறநெ றிக்கண் கரணமா ருடலம் தந்தாய்.  .17.

[வேங்கடாசலநாதனுடைய கருணையே! அசேதனத்தோடே சேதனமாய் சேதனகுணமே யில்லாமல் பிரளயத்தில் கிடக்கும் பிராணிகளைப் பார்த்து மனம் நொந்து நீ அவர்கள் தேறுவதற்காக ஜ்ஞானம் ப்ரஸரிக்க உபயோகமான இந்திரியங்கள் கூடிய களேபரமென்னும் சரீரத்தை அளிக்கிறாய்]

அநுகுணசார்ப்பிதேந ஸ்ரீதர கருணே ஸமாஹிதஸ்நேஹா
  சமயஸி தம: பிரஜாநாம் சாஸ்த்ரமயேந ஸ்திரப்ரதீபேந. .18.

தந்துடன் பின்னு மன்னும் தசையுணர் தயையு னேய
  முந்த நீ பெய்ய வந்துன் வையநன் றுய்யு மாறே
  கந்தமார் கமலை கேள்வன் கழலிணைக் கோன்மை காட்டும்
  முந்தை நூல் விளக்குத் தந்தே மன்னிருண் மாற்றி னாயே.18.

[ஸ்ரீதரனுடைய கருணையே! ஸ்நேஹத்தை (எண்ணெயை) நிறைய வைத்து ஸரியான தசையில் (திரியில்) ஏற்றி வைத்த சாஸ்த்ரமயமான ஸ்திரமான தீபத்தினால் பிரஜைகளுக்கு இருளைப் போக்குகிறாய்]

ரூடா வ்ருஷாசலபதே: பாதே முக காந்தி பத்ரலச் சாயா
  கருணே ஸுகயஸி விநதாந் கடாக்ஷவிடபை: கராபசேய பல: .19.

எந்தைதாண் மூல மூன்றி யெழுதிருத் தருவாய் நின்றாய்
  சுந்தரன் வதனச் சாயை யுந்தடைச் சவிமி ளிர்ந்தாய்
  செந்தளிர்ப் பரம னோக்குக் கொம்பெனப் பம்பி நின்பால்
  வந்தடைந் தவர்கொள் கையிற் கருணை நீ கனிகு விப்பாய். .19.

[ஏ கருணையே! வேங்கடமலையரசன் திருவடியில் முளைத்து வளர்ந்து அவருடைய பச்சை மாமலை போல் மேனியின் திருமுகத்தின் நீல காந்திகளாகிய இலைகளால் நிறைந்த விருக்ஷமாகிய நீ உன்னை வணங்கி உன் நிழலை அடைந்தவர்களுக்குக் கையால் பறிக்கக் கூடிய பழங்கள் தொங்கும் நீல கடாக்ஷமென்னும் கிளைகளால் ஸுகப் படுத்துகிறாய்]

நயநே வ்ருஷாசலேந்தோ ஸ்தாராமைத்ரீம் ததாநயா கருணே
  த்ருஷ்டஸ்த்வயைவ ஜநிமாநபவர்கமக்ருஷ்டபச்யமநுபவதி .20.

விடைவரைத் தண்ண வன்கண் விழைமணித் தாரை யாயே
  தடையறக் கிருபை யீரத் தருகிநீ யுருகி நோக்கும்
  படியுறும் பிறவி யாக்கம் பூக்குநற் சரணம் புக்கார்
  கொடைநயத் துழுத லோம்பாக் கதிர்நயத் தமுத முண்பார். 20
.

[கருணையே! வேங்கடமாமலைமேல் உதித்த சந்திரனுடைய திருக்கண்களில் தாராமைத்ரீ என்னும் அத்ருஷ்ட வசமான அருள் நிறைந்த ஸ்நேஹத்தை உண்டுபண்ணும் உன்னால் குளிர்ந்த கடாக்ஷத்தோடு பார்க்கப் பெற்று பிறவி அடைகிறவன் உழவு முதலிய பயிர்த்தொழில் சிரம மன்னியில் மோக்ஷம் என்னும் பலத்தை அநுபவிக்கிறான்]