திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஊர்ப்பதிகம்

||ஸ்ரீ:||

செந்தமிழ்த் தென்பாண்டி நன்னாட்டு
அநுமந்த நகரம் மதுரகவி
ஸ்ரீ உ. வே. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி
இயற்றிய

ஊர்ப்பதிகம்

திங்களூர் மாடந் திகழுமூர் தெய்வமெலா
நங்களூ ரென்று நவிலுமூர் -- பங்கயத்தோன்
பூசித்துப் போற்றும் புருடோத்த மன்றுயிலும்
ஆசற்ற வூரரங்கமாம்.                                                                    .1.
 

நாடிப் புலவர் நணுகுமூர் நற்பதின்மர்
பாடிப் பணிந்து பரவுமூர் -- சூடிக்
கொடுத்தாள் விருப்பங் கொளுமூர் பூஞ்சோலை
யுடுத்தா ரியஞ்சிறந்த வூர்.                                                             .2.

பொன்னியிரு பாலும் பொலிந்தவூர் போகமெலா
மன்னுமூர் சோழன் வழுத்துமூர் --- மன்னரங்கன்
றென்னிலங்கை நோக்கித் திருக்கண் டுயிலுமூர்
ஒன்னலரும் போற்றுமணி யூர்.                                                     .3.

ஏத்துபுகழ்க் கம்பனரங் கேற்றுமூ ரெண்பதின்மர்
தோத்திரப்பா மாலை துலங்குமூர் -- சாத்துவிகப்
பத்திநெறி யாளர் பயிலுமூர் பண்டைமறை
யுத்தமர்கள் வாழ்ந்துறையு மூர்.                                                   .4.

மேனோக்கு புண்டரத்தார் வேதாந்த விற்பனர்முக்
கோனோக்குஞ் சீயர் குழாமுறையூர் -- வானோக்கி
யேழ்புரிசை யோங்கி யிருக்குமூ ரும்பர்கண
மூழ்கடிய வந்துறையு மூர்.                                                            .5.

வாதூர் புறச்சமைய வல்லிருட்கு மித்திரனாம்
பூதூர் முனிவன் புகழுமூர் -- தாதூரும்
செம்பதும மாலைச் செழுமறையோர் போற்றுமூர்
உம்பர் குறையிரக்கு மூர்.                                                             .6.

மட்கி மதிவெய்யோன் மறுவொழிப்பான் றம்பெயராற்
புட்கரணி யாற்றிப் புகழுமூர் -- உட்கரணம்
நன்றறிந்த வீடணனார் நாடோறும் வந்துபணிந்
தென்றும் புகுமூ ரிது.                                                                      .7.

வேதம் புகழுமூர் வேதாந்தம் வேட்குமூர்
மாதந் தொறுஞ்சாறு மன்னுமூர் --- ஆதுலர்க்கு
வண்மை திகழ வழங்குமூர் மாதரெலா
முண்மை வழங்கிவரு மூர்.                                                             .8.

மாலூர் வளனூர் மணியூ ரணியூர்தண்
சேலூர் பழனந் திகழுமூர் – நாலூரான்
பன்னிப் புகழ்ந்துட் பரவிப் பணியுமூர்
உன்னற் கரியதுநம் மூர்.                                                                .9.

திருவரங்கஞ் செல்வந் திகழரங்கஞ் செய்யாண்
மருவரங்க மன்பர் வரங்கள் --- தருவரங்கம்
தேன்றுளிக்குஞ் சோலைத் தெருவரங்கஞ் செய்யபுகழ்
ஊன்றரங்க மென்றுரைக்கு மூர்.                                                    .10.

Saranagati Deepikai slokam 8

Natteri swamy’s today’s tele-upanyasam is on slokam 8 of Swami Desikan’s “Saranagati Deepikai”

ज्ञानं बलं नियमनक्षमताऽथ वीर्यं

शक्तिश्च तेज इति ते गुणषट्कमाद्यम् ।

सर्वातिशायिनि हिमोपवनेश यस्मिन्

अन्तर्गतो जगदिव त्वयि सद्गुणौघः

ஜ்ஞாநம் பலம் நியமநக்ஷமதாsத வீர்யம்

ஶக்திஶ்ச தேஜ இதி தே குணஷட்கமாத்யம் .

ஸர்வாதிஶாயிநி ஹிமோபவநேஶ யஸ்மிந்

அந்தர்கதோ ஜகதிவ த்வயி ஸத்குணௌக: 

 
As usual, the upanyasam may be downloaded from
http://www.mediafire.com/?jb7vw6vo151gaci