சனி, 10 மார்ச், 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

ச்ருதப்ரக்ஜ்ஞாஸம்பந்மஹிதமஹிமாந: கதி கதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதிகுஹரகண்டூஹரகிர:
அஹம் த்வல்பஸ் தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமணபாதாவநி விது:

ஸ்ரீமதாண்டவன்: ஏ பாதுகையே! சாஸ்திரங்களையறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும், கேட்கிறவர்களுக்கு மிகவும் இன்பமாகப் பேசக்கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியவர்கள் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். ஒன்றும் தெரியாத நான் அவர்களைப் போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன். அப்படிப் பிதற்றுகிறதும் உன் அதீனம்தான் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீ ல.ந்ரு.: ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சாஸ்திர ஞானமும், புத்தியும் உடைய பெரியோர்கள் உன்னைப் பற்றி, இனிய சொற்கள் கொண்டு ஸ்தோத்திரம் இயற்றுவர். ஒன்றுமே தெரியாத நானும் ஸ்தோத்திரம் இயற்ற முனைந்தேன். என் பிதற்றலையும் நீ ரஸிப்பாய்.


யதேஷஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்துர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித:

ஸ்ரீமதாண்டவன்: ஞானம், சக்தி,பலம்,ஐச்வர்யம்,வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடைத்தாயிருக்கிற பெருமாளுடைய திருவடியைக் காப்பாற்றுகிற பாதுகையே! நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இகபர ஸௌக்கியமுண்டாகிறது. கங்கைக்குக் கொஞ்சமேனும் குறைவில்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்திரம் பண்ணினால் உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸௌக்கியங்களும் வருகிறது.

ஸ்ரீ ல.ந்ரு.: பெருமாளின் திருவடியைக் காக்கும் பாதுகையே!ஒன்றுமே தெரியாத நான், உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் இயற்ற முயல்வது, உன்னுடைய பெருமைக்கு எந்தக் குறைவையும் உண்டாக்காது. கங்கை நீரை ஒரு நாய் நக்கிக் குடித்தால் கங்கைக்குத் தாழ்வு உண்டாகுமா? மாறாக நாயின் வேட்கை அல்லவா தீருகிறது!

திங்கள், 5 மார்ச், 2007

விருப்பப்படி

"விருப்பப்படி" என்கிற மென்பொருள் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அது வெளியிடப்பட்டுவிட்டது. மிகப் பயனுள்ள அந்த மென்பொருள் பற்றிய முழு விவரங்களும் இதோ:---
clipped from sarma.co.in


Our VIRUPPAPADI software utility has been designed not only to
overcome these lacunae,  but also enable even those who are not proficient in
Tamil Typewriting and students to do Tamil Computing with whatever Tamil fonts
they may have.  Professional Data Entry operators, DTP operators, officials and
any lay person can easily do Tamil Computing in an easy way never imagined. Our
VIRUPPAPADI software utility will solve several impediments in
Tamil Computing.

ஞாயிறு, 4 மார்ச், 2007

BSNL news

BSNL is trying to improve its mail system. Please visit www.sancharnet.in for more information
clipped from sancharnet.in
With the continuous efforts from BSNL, TCIL, IBM,
Openwave and Symantec teams migration again started on 25-02-2007. We have
completed around 40% migration till now.

=====================================================================
 powered by clipmarks

தினமும் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்

யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா
கவீநாம் க்ஷூத்ராணாம் த்வமஸி மணிபாது ஸ்துதிபதம் II

ஸ்ரீமத் ஆண்டவன்: பாதுகையே! எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகின்றார். அவரை நீயொருவனாகவே தூக்குகின்றாய். எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய்ச் சேரவேண்டும். அந்தப் பெருமாள் ஒரு இடத்துக்குப் போக வேண்டுமானால் உன்னைச் சாற்றிக்கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது.பிரமன், சிவன் முதலானவர்களாலும்கூட உன்னுடைய பெருமையை அறிய முடியாது.அப்படியிருக்க, என்னைப் போன்ற அற்பக்கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்திரம் பண்ணமுடியும்? ஆழ்வார்பதத்தில், தூங்குகிற வஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா. அந்தப் பெருமாளுக்கு ஜ்ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அனுக்கிரஹத்தினால்தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார். பிரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள். ஆழ்வாருக்குப் பெருமாளைத் தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம். அந்த ஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்திரம் செய்வேன்? பெருமாள் சொல்லிக்கொடுத்தால்கூட என்னால் முடியாது.
ஸ்ரீ ல.ந்ரு. மணிபாதுகையே! அனைத்து உலகங்களையும் பகவான் தாங்கி நிற்கிறார். அவரை நீ தாங்குகிறாய். பிரம்மா, சிவன் ஆகியோராலும் அறிந்து கூற முடியாத உன் பெருமைகளை அற்ப கவியான நான் ஸ்தோத்திரம் பண்ணுவது எப்படி முடியும்?
தேசிக நூற்றந்தாதி
பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனையே பற்றும்
சித்தம் உடை வேதாந்த தேசிகனை - குற்றம் இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து.
இசைந்தேன் மனம் இவரை ஏத்த எப்போதும்
கசிந்துகரையும் உளம் என்செய்கேன் -- பசுந்துளவ
மாலையான் தன்னிலும் மன்னினரே வண்டுஅறையும்
சோலைசூழ் தூப்புல் இறை.