சனி, 9 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 4

Please note Sri NVS swamy’s comments are within the brackets

13ம் கண்டம்
ஆபஸ்தம்ப ரிஷி இம் மந்த்ரங்களுக்கு தம் க்ருஹ்ய சூத்ரத்தில் ப்ரயோகம் எழுதும்போது, கர்பாதானம் செய்வதற்கு முன்பு, தன் பத்நீ ருதுவாக (மாதவிடாய் காலங்களில்) இருக்கும்போது, ரஜஸ்வலா (விலக்கான ஸ்த்ரீ) நியமங்களை (யஜுர் ஸம்ஹிதை 2ம் கண்டம் - 5ம் ப்ரச்னம் - முதல் அநுவாகம் கடைசீ பஞ்சாசத் (பஞ்சாதி) உத்கோஷிப்பதை (கூறுவதை) உபதேசிக்க (கணவனால் மனைவிக்கு எடுத்துக் கூறப்படவேண்டும் என்று) விதிக்கிறார்.
    கர்பம் தரிக்க காலம் ருது ஸ்நாநம் ஆகி (தூரம் குளித்ததிலிருந்து) 12 தினங்களுக்குள் தான். அதிலும் சில திதி வார நட்சத்திரங்கள் நிஷேதம் (தவிர்கக்ப்படவேண்டியது) உண்டு. அதிலும் இரட்டைப்படை தினங்களில் கூடினால்தான் புருஷ ப்ரஜைக்கு (ஆண் குழந்தைக்கு) ஹேது (வாய்ப்பு)  என்றும், இல்லாவிடில் ஸ்த்ரீ ப்ரஜைதான் என்றும் விஷயங்களை நம் தர்ம சாஸ்த்ர சங்க்ரஹத்தில் விரிவாய்க் காணலாம்.
    ரஜஸ் தோன்றிய அன்று அவள் சண்டாளிக்கு ஸமம்
    இரண்டாம் நாள் ப்ரஹ்மஹத்தி (ப்ராம்மணணை கொன்ற) செய்தவளுக்குச் ஸமம்
    மூன்றாம் நாள் வண்ணாத்திக்குச் ஸமம்
    நாலாம் நாளும் ரஜஸ் ஸம்பந்தம் இருக்கும் ஆதலால் அவள் பாகம் (சமையல்) செய்வதற்கும், மற்ற வைதீக கர்மங்களுக்கோ உகந்தவளல்ல. அதேபோல் போகத்திற்கும் (உறவு கொள்வதற்கும்  ) கூடாதவளே. அப்படிக் கூடினால் அதன் மூலம் பிறப்பவன் பதிதன் ஆவான்.
    ஸ்நாநமாகியும் அரண்யத்தில் அவளோடு கூடி பிறப்பவன் திருடன் ஆவான்.
    ருதுகால 3 தினங்களிலும் அவளுக்கு ஸ்நாநம் கூடாது. அப்படிச் செய்பவளுக்கு பிறப்பவன் நீரில் மரிப்பான். 
    எண்ணை தேய்த்துக்கொள்ளல் ஆகாது. அப்படிச் செய்பவளுக்கு கெட்ட சருமம் (தோல்) உள்ளவன் பிறப்பான்.
    (மேலும் என்னென்ன செய்யத் தகாத செயலுக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறப்பான் என பட்டியலிடுகிறார்).
    சீப்பு முதலியதால் தலைவாரிக்கொண்டால்    -    மயிரில்லாதவனும்
    மையிட்டுக்கொண்டால்                -    ஒரு கண்ணற்றவனும்
    பல் தேய்த்துக்கொண்டால்                -    கறுப்பு நிற பல்லுடையவனும்
    நகத்தைக் கிள்ளினால்                -    கெட்ட(ஒழுங்கற்ற) நகமுடையவனும்
    நூல் நூற்றால்                    -    ஆணும்-பெண்ணுமற்ற நபும்ஸகனும்
    கயிறு திரித்தால்                    -     கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவனும்
    பானங்களை இலையால் அருந்தினால்        -    பைத்தியக்காரனும்
    கைகளால் திரவம் அருந்தினாலும்
    உயரமற்ற சிறிய பாத்திரத்தால் அருந்தினாலும்    -    குள்ளனும்
    பிறப்பார்கள். நீண்ட பாத்திரத்தைத்தான் நீர் முதலிய பானங்களை அருந்த உபயோகிக்க வேண்டும். ரஜஸ்வலையான (விலக்கான) 3 தினங்களிலும் இந்த வ்ரதங்களை (ஒழுக்கத்தை) கடை பிடிக்கவேண்டும். மேலும் இதுபற்றிய விசேஷ அம்சங்களை எமது “ஸ்த்ரீ தர்மம்" என்கிற நூலினை படித்து அறியவும்.
மந்த்ர அர்த்தம் ஆரம்பம் (மந்திரங்களின் பொருள் விளக்கம் ஆரம்பமாகிறது).
கர்பாதானத்தில் தேவதா ப்ரஸாதம்
    1. பர்த்தா ப்ரார்த்திக்கிறான் (முதல் மந்திரத்தால் கணவன் கீழ்க்கண்டவாறு வேண்டுகிறான்):
    விஷ்ணு தேவதை (என் மனைவியாகிய) உன் பெண் குறியை கர்பாதானம் செய்வதற்கு ஏற்றதாகச் செய்யட்டும்.
    அப்படித் தயாரான யோநியில், என்னிடமுள்ள உயிரணுக்களை (ரேதஸை - படைப்புக் கடவுளான) ‘ப்ரஹ்மா" (அநுக்ரஹித்துச்) செலுத்தட்டும்.
    ‘தாதா" எனும் தேவன் அதை கர்பமாக மாற்றட்டும்.
    ‘த்வஷ்டா" எனும் தேவன் அந்த கர்பத்தில் அங்கங்களை (உடலுறுப்புகளை) ஏற்படச் செய்யட்டும்.
(இதன் மூலம் அறியவேண்டியது: மந்திரமின்றி புணர்பவனுக்கு இந்த தேவதைகளின் அநுக்ரஹம் கிட்ட வாய்ப்பில்லாததால் - (ஸத்புத்ரன் என்னும்) நல்ல ஸந்ததியை எதிர்பார்க்க இயலாது என்பது நன்கு விளங்குகிறது.)
    2. கர்பம் தரிக்க - ஸிநீவாலி - ஸரஸ்வதி முதலிய தேவதைகளும் உதவி புரியட்டும். தாமரை மாலையை அணிந்திருக்கும் அஸ்விநீ தேவர்கள், உனக்கு கர்பத்தை உண்டுபண்ணட்டும்.
    3. அழகு வாய்ந்த அச்விநீ தேவர்களால் ஆன, அழகான ஸந்ததியாய் நீ பத்தாம் மாதம் ப்ரஸவிப்பதை விரும்புகிறோம்.
    4. விசாலமான பூமி தேவியானவள் ஆகாசத்தில் மேகங்களால், மழையாகிற ரேதஸ்ஸை க்ரஹித்து நல்ல பயிரை எப்படி உண்டுபண்ணுகிறாளோ, அப்படி நீயும் பத்தாம் மாஸம் ப்ரஸவிக்க கர்பம் தரிப்பாயாக.
    5. பூமி அக்நியையும், த்யு லோகம் இந்த்ரனையும் கர்பத்தில் வைத்திருப்பதுபோல் நீயும் கர்பம் தரிப்பாயாக.
    6. ஹே விஷ்ணோ இவளிடம் பத்தாம் மாதம் கர்பத்தை உண்டுபண்ணும்.
    7. (கர்பத்தை சிதைப்பதை தொழிலாகக் கொண்டவரான) ஹே! நேஜமேஷ தேவனே, நீரிங்கு வரவேண்டாம். வருவதாயின் எமக்கு ஸத்புத்ர ஸந்ததியை அளிக்க வாரும்.
    8. (ஹே கல்யாணி! என்று இப்படித்தான் கணவன் மனைவியை அழைக்கவேண்டும்.) என்னால் வழங்கப்படும் ரேதஸ்ஸை க்ருஹித்துக்கொள்ள தக்க நிலையில் நீ உன் யோநியை பேணுவாயாக. இதனால் புருஷ ப்ரஜை (ஆண் குழந்தை) ஜநிக்கட்டும். அதை நீ பத்து மாதம் தாங்குக. பிறக்கும் பிள்ளை மிகவும் திறமைசாலியாக இருக்கட்டும்.
    9. அம்பு (அம்பராத்தோணி எனும் அம்புகளை வைக்கும்) அம்புப் பையில் புகுவதுபோல், எனது உயிரணுக்கள் உன் யோனியை அடையட்டும். நீ பத்துமாதத்தில் மிகவும் கெட்டிக்காரனான புத்ரனை ப்ரஸவிப்பாயாக.
14ம் கண்டம்
    1. ப்ரஹ்மாவின் கார்யமான சுக்ல விஸர்ஜனத்தை (உயிரணுவை விடுதல்) நான் உன்னிடம் செய்கிறேன். அது உன் கர்பப்பையை அடைந்து, அங்கு பழுதற்றதாய் பத்து மாதம் பூர்த்தியாக தங்கி, நொண்டி முதலிய தோஷமற்றதாயும், துர்தேவதைகளின் தொல்லையற்றதாயும் உள்ள நல்ல குழந்தை பிறக்கட்டும்.
    2. நல்ல பெண்மணியே! உனக்கு ஆண் குழந்தை பிறக்கட்டும். தொடர்ந்து (நீ விரும்பும்வரை)ஆண் குழந்தைகளே பிறக்கட்டும். ப்ரஜாபதி முதலிய தேவதைகள் நம் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கட்டும்.
    3. அவர்களால் (தேவதைகளால்) உண்டான வீர்யங்களால் (சக்திகளால்) நீ ஸந்ததிகளை அடைவாயாக. பசுவிடம் கன்றுகள் பால் அருந்துவதுபோல், நீயும் சிசுவுக்கு பால் அருந்தக்கொடுக்கும் பாக்யத்தைப் பெறுவாயாக.
    4. ஓ! வாயு தேவனே! எனக்கு மனைவியை மகிழ்விக்கும் சக்தி அதிகரிக்கும்படி அருள்வீராக. நான் விரும்பும் பலன் வீணாகாதபடி கை கூடட்டம் (பலிதமாகட்டும்). (அணுக்கள் பரிமாற்றத்தின்போது (ஆக்ஸிஜன் எனும்) ப்ராண வாயு கிரியா ஊக்கியாக செயல்படுவதால் வாயு தேவன் இம்மந்திரத்தால் ப்ரார்த்திக்கப் படுகிறான்.)
கர்பாதான ப்ரஹரணம் முடிவுற்றது

வியாழன், 7 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 3

ஶ்ரீ:

40 ஸம்ஸ்காரங்களின் பெயர்கள்

ஸம்ஸ்காரங்கள்

ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40 ஆகும். அவை கர்ம ரூபம். 8 ஆத்ம குணங்கள் இருக்கின்றன. ஆக 48ம் சேர்ந்தே ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்றன. கௌதமாதிகள் 48 ஸம்ஸ்காரமென்றே பிரித்துக்காட்டாது கூறுகின்றனர்.

கர்பாதானம், பும்ஸவநம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசநம், சௌளம், உபநயனம், ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்நேயம், வைச்வதேவம் என 4 வேத வ்ரதங்கள், ஸ்நாநம்(ஸமாவர்தனம்), விவாஹம், பஞ்ச மஹா யஜ்ஞங்கள் ஆக 19. 7 பாக யஜ்ஞங்கள், 7 ஹவிர் யஜ்ஞங்கள், 7 ஸோமஸம்ஸ்தை (யஜ்ஞங்கள்) ஆக 21. தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பூத யஜ்ஞம், ப்ரஹ்ம யஜ்ஞம் என்பதே பஞ்ச மஹா யஜ்ஞங்களாம். அஷ்டகா, அந்வஷ்டகா, பார்வணம், ச்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என 7 பாக யஜ்ஞங்கள். அக்நியாதானம், அக்நிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணி என்ற 7ம் ஹவிர் யஜ்ஞங்கள். அக்நிஷ்டோமம், அத்யக்நிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என 7 ஸோம யஜ்ஞங்கள். ஒவ்வொரு த்விஜனுக்கும் உபநயனம் உள்ள வரை ஸம்ஸ்காரங்கள் அத்யாவச்யமாகும். நைஷ்டிக ப்ரஹ்மசாhpயாய் இருக்க உத்தேசித்திருப்பவன் விவாஹாதிகளில் அதிகாரமில்லையாதலால் இவற்றுள் சில ஒரு ஜன்மத்தில் ஒரு தரமும், சில பன்முறைகளும், சில ப்ரதிதிநமும் அநுஷ்டிக்கப்படவேண்டும்.

ஸ்த்ரீகளுக்கும் ஜாதகர்மம் முதல் உபநயனம் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் உண்டு. அவர்களுக்கு விவாஹமே உபநயன ஸ்தானம். பர்தாவோடிருத்தலே குருகுலவாஸ துல்யமாம் (ஸமம்).

அஹிம்ஸாஸத்யமக்ரோத: த்யாக: சாந்திரபைசுநம்

முதலிலாத்ம குணங்களைச் சுருக்கிக் கூறிவிட்டுப் பிறகு பெரிய மந்த்ரார்த்த விஷயங்களுக்குப் போகலாம்.

ஆத்ம குணங்கள்

1. தயை:- ஸர்வபூதஹிதேரத:, தயா பூதேஷு என்று பலவிடங்களில் பகவான் கீதையில் ஜீவகாருண்யத்தைப் பற்றி உபதேசிக்கிறார். பிறர் கஷ்டத்தைத் தன்னுடையதுபோல் பாவித்துத் தன்னாலியன்ற பொருள் (பணம் முதலியன), உடல் (சரீர கஷ்டம்), ஆக்கை (ப்ராணன்)களால் உதவிபுரிவதில் ஆசைப்படவேண்டும். பகவான் தன்னிடம் இருப்பதுபோல் ஸர்வ ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் இருக்கிறார். அதால் அவருக்குச்செய்வது போலாகும். அவர் த்ருப்தியடைகிறார். ‘ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்” என்பதல்லவோ பழமொழி.

2. க்ஷாந்தி:- அந்யநாலேற்படும் வாக்காலோ(திட்டு), சரீரத்தாலோ ஏற்படும் துன்பங்களை பதில் செய்யாது பொருத்துக்கொள்ளவேண்டும். பகவான் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஸதா ஸர்வகாலமும் ஆட்டி வைத்துக்கொண்டிருப்பதாக கீதை 18-61ம் ச்லோகம் உத்கோஷிக்கிறது. நாம் செய்யும் பாபத்தை பகவான் பலர்மூலம் நம்மை சிக்ஷிக்க அவர்கள்மீது கோபிப்பானேன்? தெருவில் போகும் ஒரு ப்ராஹ்மணனை ஓர் அப்ராஹ்மணன் இழிவாய் பேசுகிறான். இவன் அதை ஸஹியாது பதில் பேசத் தொடங்குவானேயாகில் அவனால் இவனுக்கு இன்னும் பலர் மூலமும் பரிபவமேற்படுவது நிச்சயம். பொருமை கடலினும் பெரிது. நம் பாபத்தை நாம்தான் அநுபவிக்கவேண்டும். பொறுத்தாலது செய்தவனையே தாக்கும். தீங்கிழைப்பவனுக்கு நன்மை செய்யச் சொல்லுகிறது சாஸ்த்ரம்.

3. அநஸூயா:- (பொறாமையின்மை): அவரவர் கர்மாநுஸாரியாய் ஸுகதுக்க லாபாலாபங்களை யநுபவிக்கப் பொறாமைப்படுபவனே அழிந்துபோவான். அவனுக்கு லாபமில்லை, பொறாமைப் படுபவனுக்கு நஷ்டமில்லை பாபந்தான் மிஞ்சும்.

(லாபம் அநுபவிப்பவனுக்கு பொறாமைப் படுபவனால் நஷ்டமில்லை, பொறாமைப்படுபவனுக்கு எந்த லாபமும் இல்லை பாபம்தான் மிஞ்சும் என்றிருக்கவேண்டும்-என்.வி.எஸ்.).

4. சௌசம்:- தைவாஸுர ஸம்பத்விபாக யோகமென்று தனியாக பகவான் கீதையில் (18ல் 16வது அத்யாயம்) போதிக்கிறார். த்ரிகரண சுத்தி யாவருக்கும் அவச்யமாகும். பரஸ்த்ரீகளை மனத்தினால் ஆசைப்படக் கூடாது. அதேமாதிரி அயலானுடைய (பிறருடைய) எந்தப் பொருளையும் விரும்பலாகாது. மநஸ் சுத்தி இருந்தால் போதுமென்று லௌகிகர் கூறுவர். அது எளிதில் வந்துவிடாது. பிறர்மீது குறைகூறுவதற்கான பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை என்கிறது சாஸ்த்ரம். ஆசாரஹீனனை (ஆசாரமற்றவனை) வேதங்கள் கூட அவர் எவ்வளவு கநபாடியாயிருந்தாலும் சுத்தி செய்யாதாம். ஆகையால் பொய் பேசாமை, வர்ஜ்யாவர்ஜ்யமின்றி புசியாமைகளைக் கவனிக்கவேண்டும். இவைகளை இதன் முன் பின் பக்கங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தர்மசாஸ்த்ரங்களில் விரிவாய் காணலாம்.

5. அநாயாஸம்:- பகவான் நமக்கிட்டிருப்பது இரு வேலைகளே. 1.கர்மாநுஷ்டானம் 2.ஸதா பகவத் த்யானம். இவைகளைவிட்டு நம் வேறு காரியங்களை அவர் ஈஷத்தும் (சிறிதும்) ஸம்மதிப்பதில்லை. பக்தனின் யோக க்ஷேமம் அவருடைய பொறுப்பென்று ஏற்றுக்கொண்டிருப்பதால் நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்வல்ப ஆயுளை தஸ்மாத்(ஆகையால்) ஸர்வேஷு காலேஷு(எக்காலத்தும்) யோகயுத்தோ பவ(யோகத்தை அநுஷ்டிப்பவனாய் இரு), ‘தஸ்மாத்ஸர்வகாலேஷு மமாநுஸ்மர” (ஆகையால் எப்போதும் என்னை நினைத்திரு) என்றபடி ஆத்ம த்யாநத்தில் ஈடுபடப் பார்க்கவேண்டும். வாக்காலும் (பேச்சாலும்) நாம் அபசப்தத்தை (தகாத வார்த்தைகளை) உச்சரிக்கக்கூடாது. ‘நாச்லீலங் கீர்த்தயேத் தீமாந்” என்றபடி. சில அநாச்சாரங்களால் நம்மிடமுள்ள லக்ஷ்மீகரம்போய் மூதேவி வந்தடைவதாகச் சாஸ்த்ரம் முறையிடுகிறது. கச்சமில்லாதவனை நக்னன் (துணியில்லாதவன் - நிர்வாணன்) என்கிறது. ‘புண்ட்ரமில்லாதவனின் நெற்றி ஸ்மஸான ஸத்ருச்யம்“ (சுடுகாட்டுக்குச் சமம்) என்கிறது. உஷஸில் (சூர்ய உதயத்தில்) உறங்குபவனை மூதேவி வந்தடைகிறாள் என்கிறது. ஆகையால் ஸதா பகவந்நாமோச்சாரணபரனாய் பார்ப்பவர்கள் சந்தோஷப்படும்படி நடை, உடை, பாவனைகளோடிருத்தலே மங்கலமாகும்.

7. அகார்ப்பண்யம்:-  ஸுக துக்கங்களை ஸமமாய் பாவிக்க பகவான் அடிக்கடி உபதேசித்திருப்பது ஜ்ஞாபகத்திலிருக்கவேண்டும்.  ஆறிலுஞ்சாவு, நூறிலுஞ்சாவு என்பதையும் மறவாதவராய் ஜந்மஸாபல்யத்திலேயே (ஜனனத்தின் பயனான ஜன்ம விமோசனத்திலேயே) நாடிய மனத்தினராயிருக்கவேண்டும்.

8. அஸ்ப்ருஹா :- ‘அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார க்ருஹாதிஷு“ என்பதிற்போல் மனைவி மக்கள் வீடு வாசல் பணம் சொத்துக்களின் மீது ஈஷத்தும் (சிறிதும்) மனம் வையாது, பரம வைராக்ய சீலராய் அவைகளைத் துச்சமாய்க் கருதினால்தான் மனஸ் ஆத்மாவில் நிற்க ஹேதுவாகும். ஆத்மாவில் மநஸ் நிலைத்திருப்பவனுக்கு வேறு எவ்வளவு பெரிய ஆநந்தமோ, துக்கமோ வந்தாலும் மநம் அதைப் பொருட்படுத்தாதிருப்பதே முமுக்ஷுவின் லக்ஷணம் என்கிறார் பகவான்.

இம்மாதிரி இன்னும் இதர (கோபமின்மை போன்ற) தேவ குணங்களும் (16ம் அத்த்) ஜந்ம ஸாபல்யத்திற்கு அநுகூலம்(உதவிகரம்) ஆகும்.

 

ஸம்ஸ்காரங்கள்
    சுபம் அசுபம் என்று கர்மாக்களை இருவிதமாய் பிரித்துக்கொள்ளலாம். ஆபஸ்தம்ப பூர்வப்ரயோகம், ஆபஸ்தம்ப அபரப்ரயோகம் என க்ரந்தங்களின் பெயராகும். கர்த்தா ச்ராத்தம்போல் ஸம்ஸ்கார சப்தமும் இரு கர்மாக்களிலும் வ்யவஹாரத்திலிருக்கிறது. கர்த்தா என்றால் செய்கிறவன். ச்ராத்த கர்த்தா என்று சொல்லுகிறோம். ஹவ்யம் என்னும் தேவபூஜா காரியத்திலும் யஜமானனை இதே பெயராலும் வழங்கி வருகிறோம். சுபத்தில் அப்யுதயத்தை நாந்தீ ச்ராத்தமென்கிறோம். ச்ரத்தையோடு செய்யப்படுவது ச்ராத்த பதார்த்தமாகும். அதுபோல் ப்ரேத, தஹன ஸம்ஸ்காரமென்றும் சொல்லுகிறோம். அதைப் பிரித்துக் காட்டுவதற்காகவே சுப ஸம்ஸ்காரம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த 40 ஸம்ஸ்காரங்களிலும் நாம் பொருள் எழுதப் புகுவது முதல் எட்டிற்கே. அதவாது கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தம்.
கர்பாதான மந்த்ரார்தம். மந்த்ர ப்ரச்நம் 12ம் கண்டம்.
ஓர் ரிக்கிற்கு 2 வாக்கியங்கள்:
'ஆரோஹூரும் உபபர்ஹஸ்வ பாஹும் பரிஷ்வஜஸ்வ ஜாயாம் ஸுமநஸ்யமாந:
தஸ்யம் புஷ்யதம் மிதுநௌ ஸயோநீ வஹ்நிம் ப்ரஜாம் ஜநயந்தௌ ....'
1. ஆதாநம் - வைத்தல், செய்தல், உண்டாக்குதல் என அர்த்தம். கர்பத்தை வைத்தல், புருஷனிடம் உள்ள சுக்லத்தை (உயிரணுக்களை) ஸ்த்ரீயினிடத்தில் வைத்தல். இது யாவருக்கும் தெரிந்திருக்கிறபடி வேதமும் உத்கோஷிக்கிறது.
    அதில் முதல் ரிக்கில்(மந்திரத்தில்) உள்ள ஊரூ - தொடை, ஆரோஹ - ஏறு, ஆலிங்கனம் இப்பதங்களால் ஸ்த்ரீ ஸம்போகத்தைக் (தாம்பத்ய உறவைக்) கூறுகிறது. தம்பதிகள் கூடும்போது, இருவருக்கும் மனஸ்துஷ்டியாக (மனம் ஸந்தோஷமாக) இருக்கவேண்டும் என்கிறது வேதம். ஸந்துஷ்டி இல்லாது புணர்வது அவலக்ஷணம், பலஹீனம், ரோகம் இவைகள் ஜநிக்கும் (பிறக்கும்) ஸந்ததிகளுக்கு (குழந்தைகளுக்கு) ஏற்படும் என்கிறது சாஸ்த்ரம்.
    2. அரணியிலிருந்து கடைந்த அக்நியைப்போல் தேஜஸ்வியான புத்ரன் உண்டாகட்டும்.
    3. பித்ருக்களின் ஹிதத்திற்காக ஸத்புத்ரனை உண்டுபண்ணுகிறேன்.
இங்கு ஓர் வேத வாக்யம் ஞாபகத்திற்கு வரவேண்டும். அதன் பொருளாவது: ஒருவன் பிறக்கும்போதே (ரிஷிகள், தேவதைகள், பித்ருக்கள் ஆகிய) மூவரிடம் கடனாளியாகப் பிறக்கிறான்.
    உபநயனம் ஆனதும் வேத அத்யயனம் செய்வதன் மூலம் ரிஷிகளின் கடனைத் தீர்க்கிறான்.
    க்ருஹஸ்த ஆச்ரமத்தில் யாகம், பஞ்சமஹா யஜ்ஞம் போன்ற அக்நி கார்யங்களைச் செய்து  தேவதைகளின் கடனைத் தீர்க்கிறான்.
    ஸத்புத்ரனைப் பெற்றால் அப்புத்ரன் ஆஸ்திகனாய் விதிப்படி ப்ரேத கார்யம் (
இறந்தவர்களுக்குச் செய்வது), ச்ராத்தாதிகளைச் செய்து, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களை த்ருப்திசெய்து வைக்கிறானாம். (இதனால் பித்ரு கடனைத் தீர்க்கிறான்).
    ஆகையால் ஒருவன் போகிப்பது (
தாம்பத்யத்தில் ஈடுபடுவது) அவனது ஸுகத்திற்காகவே அன்று. அந்த நினைவே பாபஹேது (பாபத்திற்கு வழிவகுக்கும்) என்று சாஸ்த்ரத்தில் இருப்பதை எழுதியிருக்கிறோம். அவனது முன்னோரை நரகத்தினின்றும் கரையேற்றி வைப்பதே ஸம்போகிக்க காரணமாகும்.
    விவாஹ மந்திரத்தின் முதல் ரிக், இவ்விவாஹத்தை தேவேந்திரனும் கலந்து ச்ரத்தையுடன் அநுக்ரஹிக்கிறான். அவனுக்கும் நான் விவாஹம் செய்துகொள்வது இஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், விவாஹம் ஆனதும் நான் என் பத்நியோடு செய்யப்போகும் ஸோம யாகத்தில் அவனுக்கு ஆஹாரம் கிடைக்கப் போவதை அவன் நிச்சயமாக அறிந்துகொண்டிருக்கிறான். இம்மாதிரி (
இவ்வாறாக) விவாஹம் செய்து கொள்வது தேவ, பித்ரு கர்மாக்களை அநுஷ்டிப்பதற்காகத்தான். அப்படி இல்லாதது (மனைவியால் தான் இன்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மணம் புரிந்துகொள்வது) தாஸியை (விலை மாதரை) அநுபவிப்பதற்கு ஒப்பாகும் என்கிறது சாஸ்த்ரம். ஸம்பந்தம் பதி-பத்நி வ்யவஹாரம் போய் (தர்மத்தை அநுஷ்டிக்காத வெற்று தாம்பத்ய உறவு) தாஸி என்றும், அவளை வைத்துக்கொண்டிருப்பவன் என்றும் ஆகிவிடுகிறது.
    4. நமக்கு நல்ல ஸந்ததி மட்டுமின்றி, ஸம்பத்தும், பேரன், கொள்ளுப் பேரன்களைப் பார்க்கும் வரை தீர்காயுஸ்ஸும் உண்டாகட்டும். ஹவிஸ்ஸுகளை ஹோமம் செய்கிறவர்களாயும் இருப்போமாக.
    5. யாசிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்போமாக. இருவரும் கூடும் முன் தேவதை பூஜையைச் செய்வோமாக. (ஹோமத்தாலும், பல(
பழ) தானத்தாலும் பகவத் பாகவதர்களின் அநுக்ரஹமேற்பட்டு, ஸத்ஸந்ததி ப்ராப்தமாக (கிட்ட) ஹேதுவாகும் (உபாயம் ஆகும்) என்பது மந்த்ரம் மூலம் தெரியவருகிறது)

செவ்வாய், 5 ஜூன், 2012

Guru Paramparai Vaibhavam 04-06-2012

நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ஸ்ரீமத் காடந்தேத்தி ஆண்டவனின் சரிநந்நை விவரிப்பதைக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?kshu9u0ivrp82sk

To listen to online

திங்கள், 4 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 2

 

Followers of this blog! Kindly note! This book is retyped by our respected Sri Deevalur N.V.Srinivasan swamy. Sri NVS swamy has added notes at several places within brackets in his anxiety that every word must be understood by all. His comments will be shown in color. They are not in the original book. And I take the liberty of editing some of his comments for which Sri NVS swamy may kindly excuse me.

ஸ்ரீமதே ஹயக்ரீவாய நம:
சுபஸம்ஸ்கார விபரங்களும்
மந்த்ரார்த்தங்களும்

அவதாரிகை


    ஸம்ஸ்காரம் என்னும் பதத்திற்கு சுத்தம் செய்தல், சீர் படுத்துதல் என்பது அர்த்தமாகும். "ஸம்ஸ்க்ருதம்" என்றால் சுத்தம் செய்யப்பட்டது என்று பொருள்படும்.
    ஒரு ஜீவன் பூலோகத்தில் பிறந்ததாலேயே அவன் அசுத்தன் என்று தெரிகிறது. சுத்தமாய் இருப்பின் அந்த ஜீவனுக்கு பிறவி இராது. யோகிகள் ஆத்ம சுத்திக்காக பல (பலனில்) உத்தேசமின்றி கர்மங்களைச் செய்கின்றனர்.
    "பாஹ்யஸ்பர்க்‌ஷேஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் ¦
    ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே ¦¦
                                கீதை 5-21.
    யஜ்ஞம், தானம், தபஸ்ஸுக்கள் மனிதனின் பரிசுத்திக்காக.
    யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
¦
    யஜ்ஞோ தாநம் தபச்சைவ பாவநாநி கார்யமேவ தத் ¦¦
                            கீதை - 18-5.
    பரமாத்ம ஸ்மரணை, இதர நிநைவின்றிய ஸ்மரணை, த்யாநம்.
    தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ் தத்பராயணா:
¦
    கச்சந்த்ய புநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்து}தகல்மஷா: ¦¦
                            கீதை - 5-17.

    மெய்மறந்த நிஷ்டையை உடைய பக்தன் பாபங்களை உதறிக்கொண்டவனாய்,      மறுபடிப் பிறவாத ஸ்தானத்தை அடைகிறான்.
    ப்ரஹ்ம நிர்வாணத்தை பாபங்களை ஒழிந்த ரிஷிகள் அடைகின்றனர்.
    லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ருஷய: க்ஷீணகல்மஷா:
¦
    சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்பூதஹிதே ரதா: ¦¦
                            கீதை - 5-25.
    முதலிய விஷயங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையில் இருக்கின்றன. இவைகளை அநுஷ்டிக்க சில சில ஸம்ஸ்காரங்கள் (சுத்திகர்மாக்கள்) வேண்டும். அவையில்லாத வ்ராத்யன் (கர்ம சண்டாளன்) செய்யக் கூடாது. அநதிகாரி (அதிகாரமற்றவன்) செய்யப் புகுந்தால் மஹா பாபியாகி, நீச (கீழான) ஜந்மங்களே வந்துகொண்டிருக்கும். நற்கதியடையும் உபாயம் அநுஷ்டிக்க மநுஷ்ய ஜந்மத்திற்கே ஹேதுவில்லாததாக ஆகிவிடும்.
{மநுஷ்ய ஜந்மாவை அடைந்தால்தான் நற்கதியை அடையும் உபாயத்தை (வழியை) அறிய இயலும். தொடர்ந்து மேற்படி பாபங்கள் ஸம்பவித்தால் மநுஷ்ய ஜந்மம் எடுப்பதற்கே வாய்பில்லாமல் போய்விடும் என்று அபிப்ராயப்படுகிறார் ஆசிரியர். - என்.வி.எஸ்}
    இது லௌகிக விஷயத்திலேயே இருக்க பகவான் விஷயத்தில் சொல்லவும் வேண்டுமா? முதலில் அவன் ஓர் த்விஜ ஸ்த்ரீயின் வயிற்றில் பிறக்க வேண்டும். முதல் மூன்று வர்ணத்தவரான ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யரே த்விஜர்களாகும். ஒவ்வொருவனும் செய்யத் தகுந்தவை எவை, தகாதவை எவை என்பதை சாஸ்த்ரம் மூலம் அறிந்து கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார் பகவான் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா. செய்ய வேண்டியதைத் தவிர்த்தலோ, தவிர்க்கப்பட்டவைகளைச் செய்தலோ பாபமாகும். பாபங்களிலிருந்து விடுதலையே முக்தி-மோக்ஷ சப்தார்த்தம் ஆகும். வேத மந்த்ரங்களோடு கூடின கர்மாக்களே ஸம்ஸ்கார ஸ்வரூபமாகும். தைவத்தினிடம் (தேவர்கள், பித்ருக்கள் யாவருக்கும் ஆத்மா பரமாத்மா ஆதலால்) நம் இஹபர க்ஷேமங்களை ப்ரார்த்திப்பது, ஓர் சுத்தமான பாஷையாக (மொழியாக) இருக்கவேண்டும். அதுதான் ஸம்ஸ்க்ருதம். வேத மந்த்ரங்களுக்கு ஸ்வரமுண்டு. ப்ரார்த்தனைக்கு இது ஓர் முக்ய வீர்யகரமும் (அழுத்தம் கொடுப்பதும்) முறையும் ஆகும்.
    (பகவான் மற்றும் தேவதைகளிடத்தில்) நமக்கு எப்படி முறையிட்டுக் கொள்வது (வேண்டிக் கொள்வது) என்பது தெரியாது. கேட்க வேண்டியவை என்னென்ன என்பதும் தெரியாது. (தவறாக வேண்டிக் கொள்வதால்) நமக்கு நேரக்கூடிய ஆபத்துக்களும் நமக்குத் தெரியாது.
    உதாரணமாக நம்முடைய ஆசையைக் கணக்கிட்டால் பத்து (விஷயங்கள்) இருக்கலாம். இன்னும் ஊன்றிப் பார்த்தால் 20 தேறலாம் . வேதம் 200க்கும் மேல் அல்லவோ ஆசைகளை விளக்கிக் காட்டி, அவைகளை பூர்த்தி செய்துகொள்ள இஷ்டிகளையும் க்ருஷ்ண யஜூர் வேதத்தில் 2ம் காண்ட முன்பாதியில் உத்கோஷிக்கிறது.
    இதற்கு (உதாரணமாக) லௌகிகத்தில் மனுதாரனுக்கு நீதிபதியிடம் முறைப்படி முறையிட வக்கீல் போல் ஆகும் நம் வேதம். இவ்விஷயம் இம்மந்த்ரார்த்தங்களை கவனித்தால் நன்கு விளங்கும். இந்த ஸம்ஸ்காரங்களை நாம் (முறைப்படி) செய்யாததால் (முறை தவறி செய்ததும் செய்ததாக ஆகாது) சைசவம் (குழந்தைப் பருவம்) முதல் ஸ்மசாநம் போகும் வரை அநேக கஷ்டங்களை அநுபவிக்கிறோம்.
    ஆபஸ்தம்பாதி ஸூத்ரார்த்தமெழுதி அதில் முடிவான சில பக்கங்களில் ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதீயத்திலிருந்து சில ச்ராத்த விதிகளை எழுதினேன். "அநேகர் ச்ரார்த்த மந்த்ரார்தமில்லை என்று குறை கூறினர்"
(அதாவது புத்தகத்தில் உள்ள விஷயங்களைக் குறை கூறவில்லை, அர்தங்களையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம் என்ற வாசகர்களின் அபிப்ராயத்தை அவ்வாறு ஆசிரியர் தெரிவித்துள்ளார் - என்.வி.எஸ்)
அதற்காக ச்ரமம் பாராட்டாது ச்ராத்த மந்த்ர ரிக்குகளை தேவநாகரி அக்ஷரத்தில் - படிப்பவர் அபஸ்வரமாய் உச்சரியாவண்ணம், ஸ்வரத்துடன் மூலத்தை எழுதி "ஸம்ஸ்க்ருத பாஷா ஜ்ஞானா அபிவ்ருத்யர்த்தம்"
(உபயோகிப்பாளர் ஸம்ஸ்க்ருத மொழியில் புலமை பெறவேண்டும் என்பதற்காக என்ற பொருளையே ஒரு மந்த்ரம்போல் எழுதியுள்ளார் ஆசிரியர் - என்.வி.எஸ்)
பதவுரையும் எழுதினேன். மந்த்ர ப்ரச்நத்திலுள்ள மற்ற பாக மந்த்ரார்த்தமும் மிகவும் லோகோபகாரமாய் (உலகுக்கு உதவியாய்) இருக்குமென்று கருதினேன். ஏனெனில் நான் தென் தேச ஜில்லாக்களில் (தென் தமிழகத்தில்) வசித்திருந்தபோது - "வேத தர்ம பரிபாலன ஸபையோர்" இவ்விஷயங்களை பல வித்வான்கள் மூலம், பலவிடங்களில் உபந்யஸித்திருப்பதைக் கேட்டிருந்தேன். அவை இச்சென்னை மாகாணத்தாருக்கும் பயன்படட்டும் என்று எழுதலானேன்.
    இதில் மூலம் கொடுக்கப்படவில்லை காரணம் அது வேதம். அதை ஸஸ்வரமாய் அபஸ்வரமின்றி உச்சரிக்கவேண்டும். இது அத்யயனம் பண்ணியவர்களுக்குத்தான் முடியும். அவர்களுக்கும் மூலம் தேவையில்லை. பதங்களின் அர்த்தப்போக்கைப் பார்த்தாலே மூலம் தானாகவே ஜ்ஞாபகத்திற்கு வந்துவிடும்.
(- ஆனால் நம்முடைய இந்த மறு வெளியீட்டில் மூலம் முடிந்தவரை சேர்க்கப்படும் - காரணம் அத்யயனம் பண்ணாதவர்கள் தமிழ் புத்தகங்களைப் பார்த்து ஸ்வரம் மட்டுமின்றி, சப்தத்தையும் தவறாகச் சொல்கிறார்கள். எனவே ஸ்ரீ வடுவூர் வீரவல்லி கனபாடி தேசிகாச்சார் ஸ்வாமின் - ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் மூலம் வெளியிட்டுள்ள பூர்வாபர ப்ரயோக புத்தகங்களில் உள்ளபடி பதச்சேதம் செய்யப்பட்டு, ஸஸ்வரத்துடன் கூடிய தேவநாகரி மந்த்ரங்களைச் சேர்த்து வெளியிட்டு இந்த கைங்கர்யத்தை முழுமையடையச் செய்வதன் மூலம் - எதிர்காலத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது அடியேனுடைய தாஸஸ்ய விஜ்ஞாபனம் - என்.வி.எஸ்).
    இதர விசேஷ அம்சங்களை விஷய ஸூசிகை பக்கங்களில் கண்டுகொள்ளவும்.
    பங்குனி உத்ரம்.                        நே.ஈ.வேங்கடேச சர்மா

ஞாயிறு, 3 ஜூன், 2012

மந்த்ரப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 1

001

 ஒரு பழைய நூலகத்தின் திறக்கப்படாத ஒரு பீரோவில் கிடைத்த சில புத்தகங்களில் இங்கு பக்கத்தில் காணும் “சுபஸம்ஸ்காராதி மந்த்ரார்த்த”மும் ஒன்று. படித்த பிறகு அதில் சில பக்கங்களை அமெரிக்கா ஸ்ரீ சடகோபன் ஸ்வாமியிடமும், சென்னை ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் தீவாளூர் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமியிடமும் பகிர்ந்து கொண்டேன். முதலில் இதை வலையிடுவதாக அடியேனுக்கு உத்தேசமில்லை. ஆனால் பெரியவர்கள் இருவருமே இதிலுள்ள விஷயங்கள் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார்கள். நம்மில் பெரும்பாலோர் வைதிக கார்யங்களில் சிரத்தை காட்டத்தான் செய்கிறோம். ஆனால் கடந்த 30/40 ஆண்டுகளாக நம்மில் பெரும்பாலோருக்கு ஸம்ஸ்க்ருதம் அடியோடு தெரியாத மொழியாகப் போனதால், பிருஹஸ்பதி ஸ்வாமி சொல்கின்ற மந்த்ரங்களை அவற்றின் அர்த்தம் தெரியாததால் முழு ஈடுபாடு இல்லாமல் செய்து வருகிறோம். இந்நூல் சுப காரியங்களில் சொல்கின்ற மந்த்ரங்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும்கூட முக்கியமானவற்றிற்கு எளிய தமிழில் அர்த்தம் சொல்கிறது. இந்நூலைப் படிப்பாருக்கு இனி அகங்களில் வைதிக கார்யங்கள் நடைபெறும்போது இந்த மந்தரங்கள் மூலம் தாங்கள் என்ன ப்ரார்த்திக்கிறோம் என்பதை உணர்ந்து சொல்வதால் வெகு உற்சாகமாக, அவற்றை செய்ய உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.

அடியேனுக்கு உள்ள சில சிரமங்களைக் கருத்தில் கொண்டு தீவாளூர் ஸ்வாமி தானே தட்டச்சிட்டுத் தர முன்வந்திருக்கிறார். இந்நூல் எளிய தமிழில் இருந்தாலும் 50/60 வருடங்களுக்கு முன் எழுதப் பட்டிருப்பதால், அக்கால வழக்கப் படி சில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கும் தீவாளூர் ஸ்வாமி தேவையான இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள்  இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். விஷயங்களின் முக்கியத்துவம் கருதி ஸ்ரீ சடகோபன் ஸ்வாமி ஆங்கிலத்தில் இந்நூலில் கண்டுள்ளவைகளுக்கு விளக்கம் அளிக்கவும் முன் வந்திருக்கிறார். தொடர்ந்து படியுங்கள்! நமது மந்திரங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டியானவை! எவ்வளவு இன்றியமையாதவை! என்பதை அறியலாம்.

இனி நூலைப் படியுங்கள்! தினமும் சிறு சிறு பகுதியாக வரும். முதல் பகுதியான “ஆமுகம்” (introduction) மட்டும் ஒரே தடவையாக இங்கு இருக்கிறது. சற்று பெரிதாக இருந்தாலும் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

subamanthrartha wrapper 1

 

 

 

ஸ்ரீ:

கீழ்க்கண்ட புத்தகத்தில் கண்டுள்ள விஷயங்கள் மீண்டும் அப்படியே (சில பெரிய சொற்றொடர்களை படிப்பவர் வசதிக்காக பிரித்துத்) தட்டச்சு செய்யப்படுகிறது. சில கடின பதங்களுக்கு ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. - என்.வி.எஸ்.

 

 

ஆமுகம்

வேதமே நம் தைவமாகும் அதில் ச்ரத்தை இல்லாதவனே நாஸ்திகன். வேதார்த்தங்கள் எளிதில் தெரியக்கூடியவை அல்ல. கூடார்த்தங்கள் (மறை பொருள்) பொருந்தப் பெற்றவை. மேலோடு படித்துவிட்டு அதில் ரஸமில்லை என்றோ, ஸந்தர்பத்திற்கு ஒட்டவில்லை என்றோ, அவச்யமில்லாததைச் சொல்வதாயோ (சொல்வதாகவோ) அதை அலக்ஷியம் செய்யக்கூடாது. ‘நாதன் வேதமயன்” என்னுமாப்போல பகவான் தம்மை, மந்த்ரம், ப்ரணவம், ரிக், ஸாமம், யஜுஸ், கர்மா என்று கூறுகிறார்.

இது ஒருவராலும் எழுதப்படாததென்று (அபௌருஷேயம்) மஹிமை பெற்றுள்ளது. ஸகுண ப்ரஹ்மத்திற்கு (குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்திற்கு) ஒரு கால் காலம் கல்பிக்கலாமோ என்னமோ, இது பகவானின் உச்வாஸ (உள் ஸ்வாஸம்) நிச்வாஸமான (வெளி ஸ்வாஸம்) ப்ராண வாயுவாய், பகவானின் சரீரத்திற்கு ஆகிறது. அநாதி (தொடக்கம்-முடிவு அற்றது), நித்யம் (என்றும் நிலைத்திருப்பது). வேத சாஸ்த்ரார்த க்ரஹணத்தில் (அர்த்தம் கொள்வதில்) நம் புக்தி, யுக்திகளை (அல்ப அறிவாற்றலை) கலப்பவன் நாஸ்திகன்.

ஒரு பாலகன் சது:சாஸ்த்ர பண்டிதரிடம் அக்ஷரப்யாஸம் செய்யப்புகுங்கால், ‘அவர் சொல்வது பிசகு” என்று சொன்னால் - எப்படி அது அஸம்பாவிதமோ (ஏற்றுக்கொள்ள இயலாதது), அப்படித்தான் அஜ்ஞர்களான (ஒன்றும் அறியாதவர்களான) நாம், அதன் (வேதத்தின்) கௌரவம் தெரியாது, அது விஷயத்தைப் பற்றி குறை கூறுவதாகும்.

எப்படிப்பட்ட மேதாவியும், மஹரிஷியாக இருந்தாலும் சரி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப்போல் ஈஷத்தாவது (இம்மியாவது) தம் புத்தியைக்கொண்டு எழுதிவிட முடியாது என்பதே, அது அபௌருஷேயம் என்பதற்கு அத்தாக்ஷியாகும் (ப்ரமாணம்).

யஜூர்வேத இந்த 80 ப்ரச்னங்களும், கார்யபத்ய, ஆவஹநீய, தக்ஷிணாக்நிகளான மூன்று அக்நிகளில் செய்யவேண்டிய கர்மாக்களைக் கூறுகின்றன. இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், ஆபஸ்தம்பர் ஸூத்ரங்கள் செய்துள்ளபடி, ஜாதகர்மாதி ஸம்ஸ்காரங்களிலும், இதில் வரும் ச்ராத்தாதிகளிலும், ஒரே அக்நியால் ஸாத்யமான (முடியக்கூடிய) கர்மாக்கள் ஆதலால் இதற்கு ‘ஏகாக்நி காண்டம்” என்ற பெயருமுண்டு. இந்த 80 ப்ரச்னங்களுக்கும் ஆபஸ்தம்பர், கல்ப (ச்ரௌத) ஸூத்ரம் எழுதியுள்ளார். இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், அநுஸ்யூதமாக க்ருஹ்ய ஸூத்ரம் எழுதியிருக்கிறார். அது நம்மாலும் (நே.ஈ.வேங்கடேச சர்மா) மொழி பெயர்க்கப்பட்டு அச்சாகியிருக்கிறது. இந்நூலில் நாமும் சிற்சில இடங்களில் ஸூத்ரகாரர் விதித்துள்ளார் என்று வரைந்துள்ளோம். இது இந்த யஜுர் ஸாகையைச் சேர்ந்ததா என்று சங்கிப்பர் (ஸந்தேஹப்படுவர்) சிலர். „மநு… தம் ஸ்ம்ருதியில் ஸ்த்ரீதர்ம ப்ரகரணத்தில் ஸ்த்ரீகளுக்கு சுத்திக்குறைவு ஸ்வாபாவிகம் (இயற்கையானது) என்று சொல்லுமிடத்தில் ‘யந்மே மாதா ப்ரலுலோபசரதி” என்று இதில் வரும் வாக்யத்தை அநுவாதம் (தம் வாதத்திற்கு துணை) செய்கிறார். ஆகையால் ஸம்சயம் (ஸந்தேஹம்) நிவர்த்தியாகிறது.

வேத உச்சாரணத்தில் ஸ்வரம் பிசகினால் அர்த்தம் அநர்த்தமாகி விபரீத பலன் ஏற்பட்டுவிடும். த்வஷ்டா (எனும்) தேவன், இந்த்ரனை கொல்லக்கூடிய புத்ரகாமனாய் (புத்ரனை விரும்பியவனாய்) ‘இந்த்ர சத்ரு: வர்த்தஸ்வ ஸ்வாஹா” என்றதை அபஸ்வரமாய்ச் சொல்லி ஹோமம் செய்ய, (இந்த்ரனைக் கொல்லக்கூடிய புத்ரனுக்கு பதிலாக) இந்த்ரனால் கொல்லப்டக்கூடிய புத்ரன் ஜநித்ததாகச் வேதம் உத்கோஷிக்கிறது.

‘விப்ரன் (ப்ராஹ்மணன்) வீட்டிற்போய் தக்ரம் (மோர்) குடித்தான்” என்கிறான். பத அர்த்தம் தெரியாதவன் இவன் சொன்ன மாதிரியிலிருந்து (சொன்ன விதத்திலிருந்து) அபக்ஷ்ய போஜ்யம் (சாப்பிடக்கூடாத வஸ்துவை சாப்பிட்டதாக) செய்ததாக க்ரஹிக்கிறான் (நினைக்கிறான்).

‘வெள்ளியோஓஓஓஓஓஓஓடு வெள்ளி - தீபாலிக்கு தீபாலி” என்று முந்தையதை நீட்டியும் பிந்தையதை சீக்ரம் சொல்வதாலேயே தெலுங்கன் போன்ற தமிழ் தெரியாதவன் ப்லுதமாய்ச் சொன்ன வெள்ளி வெகு காலத்திற்கு ஒரு முறை வருவது போலவும், தீபாவலியை வேகமாய்ச் சொன்னதால் அதிசீக்ரத்தில் வருவது போலவும் த்வநிப்பது லோக வ்யவஹாரத்திலும் (அன்றாட நடைமுறையில்) கவனிக்கலாம்.

உபஸம்ஹாரத்தில் (116ம் பக்கம்) சில விஷயங்கள் எழுதலானோம். இப்பொழுது இக்ரந்த அர்த்த ரீதியைச் சற்று விளக்குவோம். ‘சுபாசுப மந்த்ரார்த்தமான” என்று புஸ்தகப் பெயருக்கு மேல் எழுதியுள்ளோம். அதன்படிக்குத்தான் கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தமான ஸம்ஸ்கார மந்த்ரார்த்தம் எழுதியிருக்கிறோம். ஆனால் மூலத்தில் க்ரமம் மிகவும் பேதிக்கிறது. இதற்கு ‘மந்த்ரப்ரஸ்நம் பூர்ணபாஷ்யம்” என்று பெயர் வைத்திருப்பதால், இப்பொழுது நாம் மூலத்தை அநுஸரித்தே விஷயஸூசிகை எழுத ஆவச்யகமேற்பட்டுவிட்டது. இது இரு ப்ரச்நங்களைக் கொண்டதாகும். இதைச் சேர்ந்த மற்ற 80 ப்ரச்நங்களின் சிறு பிரிவுகளுக்கு அநுவாகங்கள் என்று பெயர். இதில் வருபவைகளுக்குக் கண்டங்களெனப் பெயரிருக்கிறது. அதில் முதல் ப்ரச்நம் 18ம், இரண்டாவது 22 கண்டமுமாக மொத்தம் 40 கண்டங்களிருக்கின்றன. முறையே 40 கண்டங்களுக்கும் அர்த்தம் இருக்கும் பக்கங்களை ப்ரதிகண்ட விஷயங்களையும் ஸூசித்தவாறு (தெரிவித்தவாறு) குறிப்போமாக.

கர்மாக்களில் சொல்லும் மந்த்ரங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டியதில்லை என்றாலும், தெரிந்து செய்தால் அதில் அதிக ச்ரத்தை உண்டாகிறது. சிசு ஜநித்ததும் செய்யவேண்டிய ஜாதகர்மா என்ன, புண்யாஹவாசன தினமான 11ம் நாளில் செய்யவேண்டிய நாமகரணமென்ன, இன்னும் அந்நப்ராசந, சௌள கர்மாக்களையும் உபநயன காலத்தில் சேர்த்து ஏதோ செய்தோமென்ற பேருக்கு அர்த்தம், நிமித்தங்கள் தெரியாது அதிசீக்கிரத்தில் செய்து முடிக்கின்றனர். இம் மந்த்ரார்த்தங்களை கவனித்தால் முழுவதும் சிசுவின் க்ஷேமமே நாநாப்ரகாரமாய் (பலவிதங்களில்) ப்ரார்த்திக்கப்படுகிறது. அதால் (அதனால்) பாலாரிஷ்டம் (குழந்தைக்கு ஏற்படும் தீங்கு), குழந்தைகளுக்கு வயிற்றுக் கட்டி முதலிய ப்ராணாபத்தான (உயிருக்கு ஆபத்தான) வ்யாதிகளையும், பாதைகளையும் (தொந்திரவுகளையும்) வராமல் தடுத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரிந்திருந்தால் இவ்வித கஷ்டத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. யாகங்களில் யஜமானன் சொல்லவேண்டிய மந்த்ரங்களையும், செய்யவேண்டிய கார்யங்களையும் ரித்விக்குகளையே (யஜமானனுக்காக ஹோமம் செய்பவர் ருத்விக்) ப்ரயோகிக்க (கர்மாவைச் செய்ய) வேதவிதி இருப்பதுபோல், சிசுவின் க்ஷேமார்த்தம் ஆயுஷ்ய ஹோமம், உபநயனம் முடிய பிதாவும், கந்யையின் மந்த்ர தந்த்ரங்களை (பெண் சொல்லவேண்டிய செய்யவேண்டியவைகளை) அவளது பர்த்தாவும் செய்வதால், செய்யவேண்டியவர்கள் செய்தது போலவே ஆகிவிடுகிறது.

உதாரணமாக ‘விஷ்ணோ: ஹவ்யம் ரக்ஷஸ்வ” என்று கர்த்தா சொல்லுகிறான், அவன் என்ன கேட்கிறான் என்று அவனுக்குத் தெரியாவிட்டாலும், அந்த விஷ்ணு தேவதை இதை அறிந்துகொண்டு, ப்ரார்த்தனையைத் தலைக்கட்டி (பூர்த்திசெய்து) வைக்கிறார். லெளகிக வ்யவஹாரத்திலும் ‘பவதி பிக்ஷாந்தேஹி” என்னும் (எனக் கேட்கும்) புதிதாக உபநயனமான வடுவுக்கு (சிறுவனுக்கு) அர்த்தம் தெரியாவிடினும், இதைக் கேட்கும் ஸ்த்ரீ, அத்யயநம் செய்யும் ப்ரஹ்மச்சாரிப் பையன் ஆஹாரத்தை அபேக்ஷிக்கிறான் (விரும்புகிறான்), அவனுக்கு இல்லை என்று சொல்வதோ, அவனைக் காக்க வைப்பதோ மஹா தோஷம் எனக்கருதி, அவள் அவனுக்கு உடனே பிக்ஷையிட்டு அனுப்பிவிடுகிறாள். அதே மாதிரியே தநிகர் (செல்வந்தர்), ஆசார்யர், பகவான்களின் ஸ்துதி விஷயத்திலுமாம். இந்த நிர்தாரணத்தை (தீர்மானத்தை) „த்ரிகாண்டீ… முதலிய ப்ராசீன க்ரந்தகாரர்கள் செய்துள்ளனர். உபநயன விவாஹாதிகளில், வடுவுக்கும், தம்பதிகளுக்கும் மந்த்ரார்த்தம் போதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அதை உற்சாகமாகச் செய்வார்கள்.

இன்னும் நம்மைப்போல் க்ருஸ்துவம், மஹம்மதியம், பௌத்தம், ஜைநம், சீக்கிய மதத்தினர் தெய்வத்தை நம்புகிறவர்களாய், தங்களுக்கு கஷ்டம் ஏற்படுங்கால் தங்கள் வேதம்போன்ற கௌரவமான மந்த்ரங்கள் மூலம் ப்ரார்த்திக்கின்றனர். ‘மந்த்ராதீநந்து தைவதம்” இத்யாதி நம் ப்ரமாணத்தால் தேவதைகள் மந்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டவை என்பது, அர்த்தம் தெரியாத - விஷபரிகாரம் (செய்யும்) மாந்த்ரீகன் ஏதோ சொல்லி விஷத்தை இறக்கிவிடுவது, சூந்யம், பில்லு போன்ற துர்மந்த்ரங்கள் பலிப்பதன் மூலமாகவும் ப்ரத்யக்ஷமாகின்றன (கண்கூடாகின்றன).

தேவதைகளுக்கும் நமக்கும் இடையில் மந்த்ரங்கள் (செயல்படுகின்றன). நாம் அக்நியில் சேர்க்கும் ஹவிஸ்ஸை அந்தந்த தேவதைகளுக்கு மற்றும் பித்ருக்களுக்கு அக்நி கொண்டுபோய் (கவய:, ஹவ்யவாஹந:) கொடுப்பதுபோல் (நவீன டெலிபோன் செல்போன் போன்ற) ஸாதனமாகும். இதர மதங்களில் ப்ரார்த்தனைகள் மட்டுமே உள்ளன. க்ரியை ஒன்றுமில்லை. நம் மதத்தில் இது (க்ரியை - செய்கை) சேர்ந்திருப்பது விசேஷமாகும். பால், தயிர், நெய், அந்நம், ஸமித் போன்ற ஹவிஸ்ஸுகளால் தேவதைகளைத் த்ருப்திசெய்து வைக்கும் க்ரியாகலாபங்களை ஸ்ரீபகவான் கீதையில் த்ரவ்ய யஜ்ஞம் என்கிறார். நமது ப்ராண தாரணத்திற்கு (உயிரைக் காப்பதற்கு) வேண்டிய அந்ந பாநாதிகளை பகவான் தான் அநுக்ரஹிக்கிறார். நாம் அவற்றை உபயோகிக்கும் முன்னர் அவருக்கு நிவேதனம் செய்யாதவனைத் ‘திருடன்” என்கிறார் கீதையில் (3-12). பலாபேக்ஷையின்றி (பலனில் பற்றில்லாமல்) செய்வதுதான் பகவத் ஸம்மதமான முறை. பலனில் விருப்பம் இல்லாதவனும் கர்மாவை விட்டால் தோஷமானதால் கர்மாவை செய்துதான் தீரவேண்டும்.

தத்காலத்தில் ஜீவிகைக்கு யாவரும் ச்ரமப்படுவதால் பலாபேக்ஷையின்றி இருக்கவும் முடியாது. ஆகையால் மந்த்ர ஸம்பந்தத்தோடு கூடிய கர்மாக்கள் இஹபர க்ஷேம ஸாதகமாகின்றன.

மாதாவுக்கும் சிசுவுக்கும் ப்ரஸவமான(திலிருந்து) பத்து திநங்களுமே பெருங் கண்டமான ஆபத்காலம். யக்ஷ, ரக்ஷஸ், பிசாசங்களான துர்தேவதா உபத்ரவங்கள் மிகவும் அதிகம். 2ம் ப்ரச்நம், 13ம் கண்டம், 7 முதல் 12ம், 14ம் கண்டம் 1முதல் 3 வரையுள்ள மந்த்ரங்கள் இதற்கு பரிஹாரம் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். அங்கு அவைகளின் (யக்ஷ, ரக்ஷ, பிசாசங்களின்) பயங்கர ரூப வர்ணனைகளும் உள்ளன.

அதே மாதிரி உபநயனமாகாத பாலகனையும் பிசாசங்கள் நெருங்குவதால் அவனை ‘அக்நயேத்வா பரிததாமி” முதலிய மந்த்ரங்களால் அக்நி, ஸோமன், யமன் முதலிய தேவர்களை பரிதாத்ருக்களாய் (பாதுகாவலர்களாய்) இருக்க ப்ரார்த்திக்கிறோம்.

ஜநித்த சிசுவைக் கொண்டுபோக ‘ஜாதஹாரிணீ” என்ற துர்தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள். அதற்காக ஸூதிகா க்ருஹத்தில் (ப்ரஸவ அறை) தீ, தீர்த்தம், தீபம், தூபம், உலக்கை, கத்தி, சாம்பல், கடுகு முதலியவைகள் ஸதா இருந்துகொண்டிருக்கவேண்டும். (2-14-3) ஆறாம் நாள் இரவு, புருஷர்கள் கையில் கத்தி வைத்துக்கொண்டும், ஸ்த்ரீகள் காநம் (பாட்டு பாடியபடி) செய்தவாறு விழித்திருக்கவேண்டும். 7-10 திநங்களும் ஆபத்தானவையே ஆகும். 7ம் நாள் ஸாயங்காலம் பகவானுக்கு பக்ஷ்ய (பட்சணம்) நைவேத்யம் செய்யச்சொல்லி நாரத மஹர்ஷி கூறுகிறார். இதை நாம் ‘காப்பரிசி” என்று அரிசியில் தித்திப்பைக் கலந்து நிவேதநம் செய்கிறோம். ஸுமங்கலிகள் ஸாயங்காலத்தில் பாடுகின்றனர். ஆபஸ்தம்பர் தம் க்ருஹ்ய ஸூத்ரத்தில் 1-15-6 ஸூத்ரத்தில் ஜாதகர்ம ஹோமத்தை 10 நாளும் செய்யவேண்டும் என்று விதித்திருக்கிறார்.

சிசுவை பிதா பார்த்து மோப்பதும் ஓர் ஆச்சர்யமான கர்மாவே. ‘ஆத்மாவை புத்ரநாமாஸி” என்கிறது ச்ருதி. பிதாவின் ஸகல அவயவங்களிலும் உள்ள இந்த்ரிய ஸாரம் திரண்டு உருண்டு பத்நீ கர்பத்தில் ப்ரவேசித்து புத்ரனென்ற நாமாந்தரத்துடன் பிதா(வே) ஜநிக்கிறான். (பிதாவே பிள்ளையாகப் பிறக்கிறான்). ஆகையால் புத்ரன் வேறல்ல, பிதா வேறல்ல. இருவரும் ஒருவரே. ரூபம், குணம், நடை, பேச்சு, இங்கிதம், குரல்கள் பிதாவினுடையதும் - புத்ரனுடையதும் ஒத்திருப்பது ப்ரத்யக்ஷம் (கண்கூடு).

‘பதிர் ஜாயாம் ஸம்ப்ரவிச்ய கர்போபூத்வேஹ ஜாயதேƒ

ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புந:ƒƒ”

என்கிறார் மநுவும் தம் ச்ருமிதியில்.

ஆபஸ்தம்பரும் தம் ஸூத்ரத்தில் இதைக் கூறுகிறார். ‘ப்ரஜாமநு ப்ரஜாயஸே” என்கிறது ச்ருதி மறுபடியும். இதனால்தான் கார்ஹஸ்த்யம் (இல்லறம்) அம்ருதமாய் ரிஷிகளால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ப்ராஜாபிரக்நேரம்ருதத்வமஸ்யாம் ததுதேமர்த்யாம்ருதம்.

சிசுவின் நெய், தேன் ப்ராசநத்தில் நல்ல மேதையும் (மேதாவித்தனமும்), ப்ரதம ஸ்தந்யபாநத்தில் (முதல் முறை தாய்ப்பால் அருந்தக்கொடுப்பதில்) சிசுவின், ஆயுஸ், தேஜஸ், யசஸ் மற்றும் பலமும் ப்ரார்த்திக்கப்படுகிறது.

2-11ல் 14-17 சீக்ர ஸுகப்ரஸவத்திற்கு உபாய மந்த்ர ப்ரயோகம் (வழங்கப்பட்டுள்ளது).

‘அப்ஸு அந்தரம்ருதம் அப்ஸு பேஷஜம்” என்கிற ச்ருதிப்படி நீரில் அக்நியின் சக்தியும், விசேஷ ப்ராண வாயுவும் இருப்பதை நவீன வைத்ய விஜ்ஞானிகளும் கூறுகின்றனர். ‘தூர்யந்தி” பச்சிலையை அவளின் (கர்பிணியின்) காலில் கட்டி, விதிவத்தாய் (விதிப்படி) க்ரஹித்த நீரால் ப்ரோக்ஷணமாம். ‘யா அக்நிம் கர்பம் ததிரே” என்கிற ச்ருதிப்படி நீரில் வித்யுத் சக்தி (மின்சாரம்) நிரம்பியுள்ளது. ‘வித்யுதஸி வித்யமே பாப்மாநம்” என்று வித்யுத்சக்தி (மின்னல்) ஜலத்தில் இருப்பதைக் கூறுகிறது. ச்ரம ப்ரஸவத்தில் ஆயுர்வேத வைத்யர் ‘ஆயமநீ” என்ற கருவிகளைப் போட்டு சிசுவை இழுக்கின்றனர். இதனால் சிசு மாதாக்களுக்கு காயம், ப்ராண ஹாநீ (உயிருக்குக் கேடு) உண்டாகலாம். இதின்றி ஒரு லகு ப்ரோக்ஷணத்தை வேதம் உத்கோஷித்துவிட்டது.

நாம் நீசமாய் பாவிக்கும் வபநம், வஸ்த்ரதாரணம் யாவும் தைவாம்சம் பொருந்திய கர்மாகவாக விதிக்கப்பட்டுள்ளது. மந்த்ரம் இவைகளுக்கெல்லாம் க்ஷேமத்தை ப்ரார்த்திக்கிறது. 6ம் காண்டத்தில் ‘அக்நேஸ்தூஷா தாநம் வாயோர்வாதபாநம்” வஸ்த்ர நிர்மாணத்தில் நூல், தறிகளுக்கு அக்நி முதலிய தேவதா ஸம்பந்தம் சொல்லி முடிவில் ‘தத்வாஏதத்ஸர்வ தேவத்யாம் யத்வாஸ:” என்கிறது. இதனால் வஸ்த்ரம் ஸகல தேவதா ஸம்பந்தம் உள்ளதாகத் தெரிகிறது. இதன் விவரம் 2 2-3ல் அறியலாம். முஞ்ஜை (ப்ரமச்சாரியின் இடுப்பில் கட்டப்படும் தர்பக்கயிறு) ஆரோக்யகரியாக (ஆரோக்யத்திற்கு உதவியாக) ஆயுர்வேதம் மூலம் ஏற்படுகிறது(அறியப்படுகிறது). குருகுல வாஸத்தில் இது (முஞ்ஜை) ஓர் பெரிய ரக்ஷை(காப்பு). 2, 2, 9 யக்ஷ ரக்ஷஸ்களும் நெருங்கமுடியாதாம். இன்னும் உபநயன மந்த்ரம் மூலம் அவனது குருகுலவாஸத்தில், ஆயுஸ், மேதை, சரீர புஷ்டி முதலிய க்ஷமத்திற்கு ஸர்வ தேவதா ப்ரஸாதமும் ப்ரார்த்திக்கப் படுவது கவனிக்கத் தக்கது.

ச்ரோத்ரேந்த்ரிய (காது) சக்தி குருகுல வாஸத்தில் வ்ருத்தியடைய பலாச தண்ட தாரணம் (உதவி) ஆகும். அதன் வ்ருத்தாந்தமும் (கதையும்) தெரியவரும். காது ரோகத்தை பலாசத்தின் பால், கஷாயம் குணப்படுத்தும் என்பது அநுபவ வைத்ய முறையாகும்.

6ம் கண்ட முதல் ப்ரச்நத்தில் ‘வாக்வை தேவேப்ய: வாசமேவாவருந்தே” என்று இருக்கிறது. வாக் தேவதை தேவர்களிடமிருந்து மறைந்து மரங்களிற் புகுந்தது. துந்துபி, வீணை, தூணவம் முதலிய மர வாத்யங்களில் கேட்கப்படும் வாக்கு (சப்தம்) அதுதான். ஆகையால் பலாச மர தண்டத்தை அணிவதால் வாக் சக்தி அதிகரிக்கும் (என்பது பொருள்).

ஸமிதாதானம் செய்யாத இரவில் ம்ருத்யு (யமன்) மாணவனை (ப்ரஹ்மசாரியை) பிடிக்கலாம் என்ற ச்ருதி வரனை போதாயனர் தர்ம ஸூத்ரத்தில் ஸூசிப்பிக்கிறார். அதன் விபரமாவது: ஒரு கால விசேஷத்தில் ம்ருத்யு (யமன்) ப்ரஹ்மசாரிகளைப் பிடித்து ஹிம்ஸிக்க முயல, அக்நி அவனைத் துரத்தி அடித்து ப்ரஹ்மசாரிகளை ரக்ஷித்ததால் அக்நி பூஜையான ஸமிதான கர்மா ப்ரஹ்மசாரிகளுக்கு நித்யம் அவச்யமாகும்.

விவாஹ மந்த்ர விசேஷங்கள்: யாகங்கள், அக்நிஹோத்ரம், ஔபாஸனம், வைச்வதேவ பஞ்சயஜ்ஞாதிகள் போன்ற தர்மங்களை தம்பதிகள் சேர்ந்து செய்து, தேவர்களை ப்ரீதி செய்து ஆத்மஹிதம் (மன நிம்மதி) பெறுவதுடன், மழை, ஸஸ்ய(பயிர்) வ்ருத்தி, அந்ந ஸம்ருத்தி உலகில் ஏற்பட்டு, சராசர (அசையும், அசையா - அனைத்தும் அல்லது அனைத்துலக) ப்ராணிகள் யாவற்றுக்கும் க்ஷேமம் இந்த விவாஹ ஸம்பந்தம் மூலமாகக் காரணமாகிறது. தம்பதிகளின் ஐகமத்யம் (ஐக்யம் - ஒற்றுமை), ஸந்தானம், ஸம்பத், பசு, தாந்யம், தீர்காயுஸ், ஆரோக்யம் யாவும் இம்மந்த்ரங்களில் பதேபதே (ஆங்காங்கே) ப்ரார்த்திக்கப்படுவது அயல்நாட்டாரும் வியப்புறக் காரணமாகிறது. விவாஹ முதல் மந்த்ரமே - இந்த்ரன் தனக்கு ஸோமயாகத்தால் த்ருப்தி ஏற்படப்போகிறதென்பதை அறிந்தவனாய் இந்த ப்ரஹ்மசாரியின் கல்யாணத்தை அவன் ஸோமயாகம் வரும் வஸந்தத்தில் செய்யப்போகிறான் என்று நிச்சயித்து ஆமோதிப்பதால் எனக்கு தேவதா அநுக்ரஹமிருக்கிறது என்பதை வரப்ரேஷணை (வரனை வரிக்கும்) ப்ராஹ்மணர்களிடம் கூறுவதால், விவாஹம் தர்ம கார்யார்த்தம் என்பது விளங்குகிறது.

(அகோர சக்ஷு) என்கிற மந்திரத்தின் மூலம், கந்யையின் (திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின்) பார்வையால் தனக்குக் கெடுதி உண்டாகாமலும், அவளால் க்ருஹத்தில் தேவபூஜை முதலியன ஸரிவர நடக்கவேண்டும் என்று ப்ரார்த்திப்பது தெரிகிறது.

மாடுபிடிக்கப்போகிறவன் மாட்டின் முதுகில் சில சுழிகள் இருந்தால் கெடுதல் ஏற்படுமென்று நல்ல அடையாளமுள்ளதைப் பார்த்தெடுக்கிறான். அதுபோல் வரும் (மணக்கவிருக்கும்) வதுவிடம் சில அவலக்ஷண சிஹ்நங்கள் (அடையாளங்கள்) இருக்கக்கூடும். அதனால் குடும்பத்தில் மாமனார், மாமியார், பர்தா, சிசு, தநம், தாந்யம் (மற்றும் வளர்ப்புப் ப்ராணிகளுக்கும்) ஹாநி (கெடுதல்) ஏற்படலாம். (பூராடம் நூலாடாது, மூலம் நிர்மூலம் என்று நக்ஷத்ரங்களுக்குச் சொல்லுவது போல்) இதற்கெல்லாம் விவாஹ மந்த்ரங்கள் பரிஹாரம் செய்கின்றன.

ருக் வேதத்தில் வரும் அபாலை என்பவளின் கதையால் நுகத்தடி அபிஷேக தத்துவம் விளங்குவதை அறியலாம்.

ஒருவனுக்கு பார்யை தேவதா ப்ரஸாதத்தால் ஏற்படுவதாய் (‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”) ச்ருதி (வேதம்) உத்கோஷிப்பது போல் மனுவும் கூறுகிறார். கைப் பிடித்தவளை கைவிடாமல் போஷித்து வருவதாய் ப்ரதிஜ்ஞை (ஸத்யப்ரமாணம்) செய்கிறான். இதுவே தேவ த்ருப்தி என்கிறார் மனு. ஸப்தபதியில் இவை கவனிக்கத் தக்கவை.

(குறிப்பு:- இப்புகத்தில் ‘மநு” என்று காணப்படுவது பிற பல புத்தகங்களில் ‘மனு” என்றே காணப்படுவதால் - படிப்பவருக்குப் புரியவேண்டும் என்பதற்காக புத்தக ஆசிரியர் ‘மநு” என்று குறிப்பிட்டிருப்பதை ‘மனு” என்று தட்டச்சு செய்துள்ள அபராதத்தை பொறுத்தருளவேண்டும். இன்னும் இதுபோல் பல அதிக ப்ரசங்கத்தனமான மாற்றங்களுக்கும் ஒரே முறையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் - என்.வி.எஸ்)

வைதிக மதம் ஸ்த்ரீகளை அடிமையாக்கி ஸ்வதந்திரமின்றி வைத்திருப்பதாக ஆதுநிகர்களின் (முற்போக்குவாதி?) மூடப்பேச்சுக்கு ப்ரவிச்ய ஹோம மந்த்ரம் தகுந்த பதில் அளிக்கிறது.

¦முதன் முதலில் செய்யப்படுவது நிச்சயதார்த்தம். இதில் பெண்ணிற்கு புடவை கொடுத்து அவளை (மருமகளாக) நிச்சயித்துக்கொள்வதற்காக சொல்லப்படும் மந்திரதிதின் பொருளை ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார். மேலும் ஒரு சிறு குறிப்பு:- தற்போது ‘மாட்டுப்பெண்” என்று மருமகளை குறிப்பிடுவது - ‘மாற்றுப்பெண்” அதாவது பெண்ணாக மாறியவள் - (டாட்டர் இன் லா) என்பதிலிருந்து மருவி வந்ததாகும்!

§‘உதுத்தரம் ஆரோஹந்தி ..... மூர்தாநம் பத்யுராரோஹ ப்ரஜயாச விராட்பவ ..... ....ƒ”

‘பர்தாவின் தலைமீது ஏறு, வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர்களுக்கு யஜமாநியாக விளங்கு” என்கிறது வேதம். ‘பத்நீஹி பாரிணஹ்யஸ்யேசே” - ‘வீட்டிலுள்ள ஸர்வ சொத்துக்களுக்கும் பத்நியே யஜமாநி” என்று ச்ருதி பலவிடங்களில் உத்கோஷிக்கிறது. நம் வைதிக மதம் ஒன்றிலேயே புருஷனைவிட ஸ்த்ரீக்கு குடும்பத்தில் அதிக பாத்யதை காட்டும் மஹிமை உள்ளது. தம்பதிகளுக்குள் வைமநஸ்யம் (மநஸ்தாபம்) ஏற்பட்டுவிட்டால் புருஷன்தான் வீட்டைவிட்டு அகலவேண்டும். ப்ரவிச்ய ஹோமத்தில் குடும்ப ஸர்வாபிவ்ருத்திக்கும் (குடும்பதிலுள்ளோர் அனைவரின் அனைத்துவித நன்மைக்கும்) ப்ராத்தனை செய்யப்படுகிறது.

இதில் க்ருஹ நிர்மாணம், ப்ரவேசம், ஸர்பபலி, ஈசாநபலி, (மாஸி)ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம், அபசகுநங்கள் போன்றவைகளுக்கு சாந்தி கர்மா, ‘யரோச சாந்தி, வைமநஸ்ய தம்பதிகளுக்குப் பரிஹாரம், பத்நியிடம் பர்த்தா ப்ரீதியாய் நடக்க உபாயம் முதலிய இதர விஷயங்களும் இருக்கின்றன.

மந்த்ரங்களை அபச்வரமின்றி ஸரிவர உச்சரிப்பது ஓர் யோகமாகும். இப்படிப்பட்டவனுக்கு நினைத்ததெல்லாம் கைகூடும் என்று ஆபஸ்தம்ப போதாயநாதி மஹரிஷிகள் கூறுகிறார்கள். மனுவும் (இந்த இடத்தில் இப்புத்தக ஆசிரியரும் ‘மனு” என்றே குறிப்பிடுகிறார்.) வேதோச்சாரணம் தபஸ் என்று வேதத்தில் போல் பறை சாற்றுகிறார். ஆச்ரம (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த போன்ற ஆச்ரம) ஸம்ஸ்காரங்களை மந்த்ர பூர்வமாக அடைந்துள்ளவன், நிக்ரஹ அநுக்ரஹ சக்தியுள்ள ஸித்தபுருஷனே.

ஹேவிலம்பி --- ச்ராவணம் நே.ஈ. வேங்கடேச சர்மா