வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 11

26. ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” (திருமாலை) என்ற இவருடைய பாசுரத்திற்கு பாகவதர்களுடைய சேஷம் (உச்சிஷ்டம்) உண்ணத்தக்கது என்று வ்யாக்யானம் செய்துள்ளனர். இதற்கு ப்ரமாண பூர்வகமான ஸமாதாநம்
என்றதும் குரு விஷயமாமித்தனை. பொதுவானாலும் பகவத் ஸங்கீர்த்தநபரர் தேஶ காலாதி வைகுண்யத்தாலே ஊவ்ருத்திகளுமாய் ஊநகாரர்களுமாய் இருந்தார்கள் யாகிலும் தாங்கள் அது செய்த சேடம் தருவராகில் புனிதமாமென்றதித்தனை, இதில் ஶேஷ ஶப்தம்” (ரஹஸ்யத்ரய ஸாரம்)  अन्नशेषं किं क्रियताम् इष्टे: सह भुज्यताम् (ச்ராத்த ப்ரயோகம்) இத்யாதிகளில் ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை. ஶ்ருத்யாதிகளிலே புக்தஶிஷ்டமாய் பாகபாத்ரஸ்தமானதிலும் ப்ரயுக்தம் என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இதற்கு “ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை”யில் ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து அருளியுள்ளார். மேலும் பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்று இவர் ப்ரபாவத்தையும் வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.

27  ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார். தமக்கு ‘வேதாந்தாசார்யர்’ என்று திருநாமம் இட்ட ஸ்ரீரங்கநாதனாலேயே ‘முநிவாஹநர்’ என்கிற திருநாமம் சூட்டப்பெற்றவராகையாலே தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

28. ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தைக் கூறும்போது ஸ்வாமி இம்மந்த்ரத்தைத் திருமங்கையாழ்வாருக்கு ஸர்வேஶ்வரன் தானே உபதேஶித்தான் (ரஹஸ்யத்ரயஸாரம்) ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், ஈஶ்வரன் தனக்கும் போக்யதமமான நித்ய விக்ரஹாநுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கையாழ்வார் தம்மை ஈஶ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வர் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், இவருடைய ப்ரபந்தங்களின் பெருமையை அறிவுதரும் பெரிய திருமொழி (ப்ரபந்தஸாரம்)என்றும், இவர் அவதார காலத்தில் பாகவத ததீயாராதநத்திற்காக செய்த ஸ்தேயம் (திருட்டு) ஶாஸ்த்ரீயமானது என்பதை ஸ்ரீஸ்தேயாவிரோதம் என்னும் ஸ்ரீஸூக்தியில் விஸ்தாரமாகவும், ஸ்ரீபரமதபங்கத்தில் ‘ஸ்தேய ஶாஸ்த்ரமும்’ आसाधुभ्योऽर्थमादाय साधुभ्य्: सम्प्रयच्छति प्रसह्य वित्ताहरणं न कल्क:  என்கிறபடியே க்ஷத்ரியாதிகளுக்கு பரகாலாதி ந்யாயத்தாலே தர்மோபயுக்தமாக ப்ரவ்ருத்தம் என்று அருளிச் செய்ததைக் கருத்தில் கொண்டு கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே (வாழித்திருநாமம்) என்று பின்புள்ளோர் அநுஸந்தித்தார்கள்.  

ஸம்ஸார பந்தம் மிகவும் (துக்கமானது) கஷ்டமானது என்பதை ‘மாற்றமுளவாகிலும்’ என்ற திருமொழியில் நிரூபித்துள்ளாரோ, அதே விஷயத்தை “ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதய”த்தில் மூன்றாவது அங்கத்தில்  यद्येवं त्वया दत्तहस्त: संसारसागरमतिलङ्घते पुरुष: तत् कथं दवदहनप्रज्वलित पाशर्वयुगळ दारूदरगत इव कीट:, सारमेयगण परिगत इव सारङ्ग: समीरणान्दोळन डोलायमान पोतोदरगत इव साम्यात्रिकसार्थ:, महप्रवाहमध्य निरोध सम्भ्रान्त नयन इव जम्बुक:, विषदरपरिगृहीत गृहघूर्णमान् हृदय इव कुटुम्बिजन: विकटतरभङ्ग: सम्भ्रमसंक्षुभितगङ्गातट वेपमान संहनन इव शाखिमण्डल: साध्वसगृहीतो भवति என்றருளிச் செய்து இருபாடெரிகொள்ளியின் உள்ளெரும்பே போல, காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல பாம்பொடொரு கூறையில் பயின்றாப்போலே, ஆற்றங்கரை வாழ்மரம்போல (பெரியதிருமொழி) போன்றவைகளால் சொல்லப்பட்டுள்ளன.

29. ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது. இவர்கள் அருளிச் செய்திருக்கும் “மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்து ஓடி, ஓடி, வாடினேன் வாடி” போன்ற பாசுரங்களைப் பார்த்து இவர்களும் நம் போன்று ஸம்ஸாரிகள் என்கிறார்கள் சிலர். இதற்கு ஸமாதாநமாக आत्मानं मानुषं मन्ये (ஸ்ரீமத் ராமாயணம்) अहं वै बान्धवो जात: (ஸ்ரீமத் பாகவதம்) போன்று ராமக்ருஷ்ணர்கள் சொல்லிய துல்ய ந்யாயத்தால் ஸம்ஸாரிகள் என்பதையே மறந்தார்கள் என்று பாசுரங்களின் கருத்தை இவ்வாறாக அருளிச் செய்துள்ளார். தனக்கு அநுஸந்தேயமாக உதாஹரித்த (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும் 

अन्येषु तु विशेषं बोधयामि भयाभयस्थानविशेषवेदिन:
प्रमादमुक्तस्य परीक्ष्यकारिण:
परानुभूति प्रतिबन्धशङ्कया
भयानुभावो (बन्धो) प्यभयाय कल्पते!
(ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயம்)
(அதாவது பயத்திற்கும் அபயத்திற்கும் காரணங்களானவற்றின் விஶேஷத்தை அறிந்தவர்களாயும், அஜாக்ரதையினால் விடப்பட்டவர்களாயும், யோசித்துக் கர்மங்களை அனுஷ்டிக்கக் கூடியவர்களாயும் இருக்கிறவர்களுக்குப் பகவானுடைய அநுபவத்திற்குத் தடங்கல் வரும் என்கிற ஸந்தேஹத்தினால் பயம் உண்டாவதும், மற்றவர்களுடைய அபயத்திற்குக் காரணமாகிறது) என்றும், இவர்களுடைய ஏற்றத்தை ‘ப்ரபந்த ஸார’த்திலும், பராங்குஶ பரகாலாதிகளுடைய ப்ரபந்தங்களிலே கண்டு கொள்வது (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 10

22. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” விஷயமாய் “ஸ்ரீமதுரகவி ஹ்ருதயம்” என்ற க்ரந்தமும், இவர் விஷமாகவும் இவருடைய அநுஷ்டானத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆசார்ய நிஷ்டையை சொல்லக்கூடியதான விஷயத்தை ‘இன்பத்தில்’ என்கிற பாசுரத்தில் விசேஷித்து நிரூபித்து, இவருடைய ஞாநமே நமக்கு உபஜீவ்யமானது என்பதை “ப்ரபந்தஸார”த்தில் ‘தேறியமாஞானமுடன்’ என்றும் அருளிச் செய்வார்.

23. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது. இவர் விஷயமாக ஸ்வாமி “துய்ய குலசேகரன்” என்று அருளிச் செய்துள்ளார். இவருடைய மற்றைய ப்ரபாவங்களை “அநுஷங்க ஸித்தைஶ்வர்யரான ஸ்ரீகுலசேகரப் பெருமாளும்” என்றும், பஞ்சகால ப்ரக்ரியையாக ஆராதநம் செய்வதற்குப் ப்ரமாணம் இவருடைய “இருமுப்பொழுதேத்தி” (பெருமாள் திருமொழி –7)என்று அநுஸந்திப்பதை அருளிச் செய்து, இவர் ஊனேறு செல்வத்து என்று திருமொழியில் அநுபவித்த அம்ஶங்களையெல்லாம் “ஸ்ரீதயாஶதக”த்தில் ஸங்க்ரஹமாக நிரூபித்தருளி உள்ளார். 

24. ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார். மேலும் பல்லாண்டு என்று தொடங்கி “சாயை போலப் பாடவல்லார்” என்றும் இவருடைய திருமொழி “ ஏக” ப்ரபந்தமாய் அமைந்திருப்பதை ஏரணி பல்லாண்டு முதற்பாட்டு நானூற்று எழுபத்தொன்றிரண்டும் (ப்ரபந்தஸாரம்) என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இவர் பாடிய திருப்பல்லாண்டு நம்மை பரமபதத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை “ஸ்ரீபரமபத ஸோபாந”த்தில் ப்ராப்தி பர்வத்தில் “தமிழ் பல்லாண்டிசையுடன் பாடுவமே” என்று அருளிச் செய்துள்ளார்.

என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்” (பெரிய. திரு. 4-10-2)என்ற பாசுரத்திற்கு பாவம் செய்தால் அது நல்லதுதான் அதற்காக ப்ராயஶ்சித்தாதிகள் செய்யவேண்டாம் என்று சிலர் வ்யாக்யாநம் செய்துள்ளனர். ப்ரமாதிகமாகப் புகுந்தால் நாமே க்ஷமிப்புதோம், புத்தி பூர்வமாகப் புகுந்தால் அவர்கள் க்ஷமை கொள்ளாத அளவிலும் ஶிக்ஷா விசேஷங்களாலே நாம் க்ஷமிப்புதோம் ஒருபடிக்கும் கைவிடோம் என்று தாத்பர்யம் நன்று செய்தார் என்பர் போலும் என்று சொல்லுகையாலே இது வஸ்து வ்ருத்தியில் நன்று அன்று என்னுமிடம் ஸூசிதம் ( ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்) என்று எந்த ப்ரமாணங்களுடனும் முரண்பாடு ஏற்படாமல் அர்த்தத்தை நிரூபித்துள்ளார்.

25. ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார். இவள் பகவானை அநுபவித்த விதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தியினாலும் ப்ரபத்தியினாலும் ஆசார்ய நிஷ்டையாலும் எம்பெருமானை அடையலாம் என்று அநுஷ்டித்துக் காண்பித்துக் கொடுத்தவள் கோதை.
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
                            
(நாச்சியார் திருமொழி)
என்ற இவள் வாக்கே சான்று. மேலும், நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை) என்றும், அநுஸந்தித்த நாச்சியார், கிருஷ்ணனைப் பெறுகைக்காகப் பண்ணின காம தேவார்ச்சநம் ஶ்ருங்கார ஸமாத்யநுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம் (ஸ்ரீபரமதபங்கம்) என்பது இவளுடைய பரமைகாந்தித்வத்தை வெளிக்காட்டுகிறது என்று அருளியுள்ளார் ஸ்வாமி.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

siRiya thirumadal tele-upanyasam (04-08-2014)

The eleventh tele-upanyasam on “siRiya thirumadal”by Natteri Sri Rajagopalacharyar swamin (delivered on 04-08-2014) can be downloaded or directly listened to from

http://www.mediafire.com/listen/3bh93zug1rcv5xi/011_madal_(04-08-2014).mp3