சனி, 9 செப்டம்பர், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

பஹுபஜநபதம்”, “ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தியோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”, “அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது "உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

"அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச்செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது விசதம் என்பதுடன் சேராது. விசதம்' என்பதற்கு விரோதமில்லாமல் ஸங்க்ஷேபா " என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத்விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக்குருகைப்பிரான்பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்' எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்தச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபய வேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் யுக்தமாக இது வரையில் வெளியிடப்படவில்லை. ஸ்ரீ தேசிகன் திருவுள்ளக் கருத்தையே முற்றிலும் வெளியிடவேண்டும் என்கிற ஒரே அபிலாஷத்துடன் வெளியாகும் இப்பதிப்பை நிர்வஹித்தருளும் பண்டிதாக்ரேஸரர்களின் உதவியால் மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் கூறப்படுகிறது. இத்தைக் கேவலம் ஒரு தூண்டுகோலாகக் கருதி மற்றுமுள்ள பண்டிதாக்ரேஸரர்கள் தங்களுடைய யோஜனகளைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். அவை கிடைத்ததும் அந்தந்த ஸ்வாமிகளின் திருநாமங்களுடனே அவை வெளியிடப்படும்.