வியாழன், 13 நவம்பர், 2008


பல்வேறு காரணங்களால் ரொம்ப நாட்களாக ”இந்தப் பக்கம்’ பக்கம் வரவே முடியவில்லை. ஆரம்பித்ததை முடிக்க வேண்டாமா என்ற சிந்தனையைத் தூண்டிய அன்பில் சௌம்யநாராயணன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமிக்கு அடியேனது உளமார்ந்த நன்றி. இனி நாளை முதல் தொடர்வோமா !

தொடர்வதற்கு முன் ..... அடியேனது மரியாதைக்குரிய ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமி எழுதி வரும் தொடரில் சத்யாகாலம் சென்ற ஸ்வாமி தேசிகன் அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்பிய பிறகு வரவேயில்லை என எழுதியதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அரங்கன் மறுபடியும் திருவரங்கம் வந்த பின் ஸ்வாமி அங்கு எழுந்தருளி தமிழ் வேதம் கூடாது என்றவரை திருத்தி இன்றளவும் அரங்கன் தமிழில் ஆழ வழி கண்ட வரலாறு பொய்யா? "With his heart fixed on the Lord of his heart, with his lips uttering His praises, .........................the great teacher passed away from the humble and unpretentious house in the northern street of the holy city (Srirangam) to the world of eternal sleep" என புகழ் பெற்ற சரித்திர ஆராய்ச்சியாளர் ஸ்ரீ ரங்காச்சாரி எழுதியதும் தவறா? (The article was published in the Bombay Branch Edition of Journal of Royal Asiatic Society Vol XXIV .... courtesy 'Sri Vedantha Desika Vidya") யாராவது பதில் சொல்லுங்களேன்.