சனி, 1 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

பாம்பாட்டியின் கருவமழித்தல்

                  விருத்தம்

தாம்பாண்டிநாடுமலைநாடுஞ்சோழ
         தரணியிலுளமுளதிவியதேசமேயெல்
லாம்பாண்டித்தியஞ்சிறந்தபிள்ளைதாமுல்
         லாசமதாய்த்தொழுதுகொண்டுகாஞ்சிசேர்ந்தார்
வீம்பாண்டிறமைசொல்லும்வாதிமாரை
         வென்றடக்கிவேதாந்தம்விளக்குநாளில்
பாம்பாண்டியொருவன்வந்துவாதுசொல்லப்
         பார்க்கின்றார்ஜயவிருதையேற்கின்றாரே.

தரு- இராகம்- புன்னாகவராளி- தாளம்-ஆதி
                       பல்லவி

வேண்டிமந்திரம்கற்றாரே - வாதியானபாம்
பாண்டிதனைச்            செயித்தாரே.

                  அனுபல்லவி

பாண்டவர்க்குத்தூதாகத் தாண்டிநடந்த பாத
நீண்டவரதரருள் பூண்டவேதாந்த குரு.              (வே)

                   சரணங்கள்

          சோளிகை  நரேந்திரனே - இவர்தந்திரு
           மாளிகைவாசன்முனே

நாளொன்றுபவாசத்தால் மீளுங்கோபத்தாற்சொல்வான்
கேளுமென்னைச்செயித்தானீளுங்கீர்த்தியென்றானே.(வே)

            சர்வதந்த்ர   சுவதந்த்ரம் -- விருதுபெற்ற
            நிர்வாகர்பாம்பு   மந்திரம்
அறிவிராகிற்பிடாரன்நெறிகண்டுநாகங்களைக்
குறிகண்டுதடைகட்டிமறியும் பார்ப்போமென்றானே.  (வே)

        இவனோடென்ன    விவாத -- மென்றிருந்தாலும்
        அவனோபுசியான்           சாதம்.
எவர்தாமாகிலும்வந்தொ ருவர்வாசல்காத்திருந்தாற்
கவலையைவிசாரிப்பார் குவலயத்தில்வழக்கம்.            (வே)

         பார்த்துவாவென்று  கூறிக் -- கோயின்முன்னெழு
         கீற்றையிவர்தாங்        கீறி
ஏற்றவுன்னிடத்திலே வாய்த்தபாம்புகளெல்லாஞ்
சேர்த்துவிடுவாயென்றே சாற்றினாரெங்கள்குரு.          (வே)

          மிடுக்குடன்பாம்    பாட்டி -- மாநாகங்கள்
          விடுக்குந்திறமை           காட்டித்
தொடுக்குந்தருணங்கீற்றைக் கடக்கமாட்டாததுகள்
முடக்கங்கொடுத்ததுகண் டெடுக்குங்கோபமிஞ்சவே.

           வாசுகிதட்சக        சமான - நாகங்களை
           வீசியேவவு        மங்கான
பேசியொன்றிரண்டான ராசிரேகையிற்சென்று
கூசிநின்றதுகண்டு    மேசிவப்பானான்கண்கள்.        (வே)

         அங்குரேகையைத் தாவச் -- சர்வபூத
         சங்குபாவனை      யேவப்
புங்கமாயேழுகீற்றை  யுங்கடந்ததுமிவ
ரங்கந்தொடவரக்கண்டுங்  கருடனையெண்ண           (வே)

            இவ்விதங்கருடன்      வந்தே -- சங்கபாலனைக்
            கவ்விக்கொண்டு     பறந்தே
செவ்வையெழுந்தருள  அவ்விஷவயித்ய
னெவ்வயணமறிவான் றிவ்யபாதந்தொண்டென்றான்.(வே)

           உந்தமதடிமை    காணுன்ஞ் -- சங்கபாலனைத்
           தந்துரக்ஷிக்க       வேணும்
எந்தங்குருவேயென்று  வந்தான்கருடதண்ட
கந்தன்னாற்சங்கபால னும்திரும்பிடத்தந்தார்.          (வே)

                      விருத்தம்

புண்ணியகோடிகட்கெல்லாமிடமாங்காஞ்சி
        புரந்தனிலே சிலகாலமிருந்துபின்னு
மெண்ணியதெல்லாங்கொடுக்கும்வேங்கடத்தி
        லேகியேமங்களாசாசனந்தான்
நண்ணியபின்றிருவரங்கப்பதியைநெஞ்சி
          னாடியேயெழுந்தருளிவந்தாரெங்கள்
பண்ணியமிக்கானதபோபலன்கைவந்த
          பலத்தினார் தூப்புலென்னுந்தலத்தினாரே.

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்-சவுராஷ்ட்ரம்-தாளம்-- ஆதி

பல்லவி

பிள்ளையென்றாலிவரே       பிள்ளை
ப்ரபலங்கொண்டதூப்புற்     பிள்ளை                 (பிள்)

அநுபல்லவி

வெள்ளைப்பரிமுகங்    கொண்டார்
  மிகுந்துலாலாமுத      முண்டார்                         (பிள்)

சரணங்கள்

ஏற்குங்கோயிலுக்கே      நண்ண
   எழுந்தருளியோர்நா     ளுண்ண
மார்க்கத்திற்றளிகை       பண்ண
    வாய்க்காமலரியை     யெண்ண

வழியிலங்கடியிலுள்ள   அவரைது
   வரைகோதுமைகொள்ளுமுதலாகியவற்றைப்
பழுதில்லாதவேதம்பரவுமெங்கள்வெள்ளைப்
   பரிமுகரமுதுசெய்திடவைத்தாரே.                       (பிள்)

கோமுட்டிகள்கண்டு       வெள்ளைக்
    குதிரையாரதிந்தக்      கொள்ளை
தாமிட்டுத்தின்பதும்         சள்ளை
   தானென்றோட்டிவிடப்  பிள்ளை
திரைவர்ணிகராகும்வைஷ்ணவர்க்ருஹத்தில்
   தங்கவங்கணுமப்படிக்கேசெய்தருள
இவ்வண்ணஞ்செய்ததிதாரதெனவேவேங்க
  டேசதேசிகரதென்றறியவைத்த                              (பிள்)

இம்மஹிமையுள்ள               வரிங்
   கிவரைவந்தேயெல்லாந்    தெரி
யும்முடையவெள்ளைப்        பரி
   யோங்கியெங்கடலைப்    பொரி
உள்ளவையெல்லாந்தின்றதிருகால்முக்கால்நாற்கா
    லோட்டிவிடப்போகவில்லைநீர்கட்டுமென்றார்
பிள்ளைவெள்ளைப்பரிமுகரேபட்டினி
   பொறாதமுதுசெய்தகிருபையறிந்தனரே                  (பிள்)

பரமாத்துமசமாரா          தனம்
  பண்ணாதிருந்தவ        யனம்
தெரிவார்பாலமுத          சனஞ்
  செய்யும்விதிகண்ட       தினந்
திருக்கண்வளரப்பிள்ளையக்ரீவருஞ்
     சிறந்துபூரணராயெழுந்தருளினாரே
பெருக்கமிகுமிதைத்திரைவர்ணிகர்கண்டு
     பிரபலவதிசயந்தனைக்கொண்டாடினாரே              (பிள்)

விருத்தம்

வித்தியாவைபவரானவிவர்தாமுஞ்சீர்
      வெள்ளறைப்பங்கயச்செல்விபுருஷகார
சத்தியானுசரிதமாய்க்கொண்டுமேசெந்
      தாமரைக்கண்ணரைத்தொழுதுதிருக்காவேரி
மத்தியராமரங்கரடிபணிவாரங்கே
      வந்துதொண்டுசெய்தவைஷ்ணவர்க்காக
நித்தியானுஸந்தேயரகஸ்யார்த்தங்கள்
     நிலையிட்டார்மகிமையுள்ளகலையிட்டாரே.