சனி, 13 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்


பாசுர‌ம் 5

भवन्तमिह य: स्वधीनियतचेतनाचेतनं
       पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा |
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितु:
       कदाचन कुतश्चन क्वचन तस्य न स्यात् भयम् || 
5  

வந்தமிஹ : ஸ்வதீநியதசேதநாசேதநம்
        
பநாயதி நமஸ்யதி ஸ்ம‌ரதி வக்தி பர்யேதி வா |
குணம் கமபி வேத்தி வா தவ குணேஶ கோபாயிது:
        
கதாசந குதஶ்சந க்வசந தஸ்ய ஸ்யாத் யம் ||  5  

குணேஶ -- குண‌ங்க‌ளுக்கு ஈச‌னே (உடைய‌வ‌னே), ஸ்வ‌தீ நிய‌த‌ சேத‌நாசேத‌ந‌ம் --த‌ன்னுடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தாலே நிய‌மிக்க‌ப்ப‌டும் சேத‌நா சேத‌நாத்ம‌க‌மான‌ உல‌க‌த்தை உடைய‌, ப‌வ‌ந்த‌ம் -- தேவ‌ரீரை, ய‌: -- எவ‌ன், ப‌நாய‌தி -- துதிக்கிறானோ, ந‌ம‌ஸ்ய‌தி -- ந‌ம‌ஸ்க‌ரிக்கிறானோ, ஸ்ம‌ர‌தி -- ஸ்ம‌ரிக்கிறானோ, வ‌க்தி -- பேர் சொல்லுகிறானோ, ப‌ர்யேதிவா -- ப்ர‌த‌க்ஷிண‌ம் செய்கிறானோ, கோபாயிது: -- ர‌க்ஷ‌க‌ரான‌, த‌வ‌ -- தேவ‌ரீருடைய‌, க‌மபி -- ஒரு, குண‌ம் -- குண‌த்தையாவ‌து, வேத்தி -- அறிகிறானோ (உபாஸிக்கிறானோ), த‌ஸ்ய‌ -- அவ‌னுக்கு, க‌தாச‌ந‌ -- எக்கால‌த்திலும், குத‌ஶ்ச‌ந‌ -- எங்கேயிருந்தும் (எக்கார‌ண‌த்தையிட்டும்), க்வ‌ச‌ந‌ -- எவ்விட‌த்திலும், ப‌ய‌ம் -- ப‌ய‌மென்ப‌து, ந‌ ஸ்யாத் -- உண்டாக‌ மாட்டாது.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அருங்குணங்கள் நிறைந்ததிரு அரங்கம்வாழ் பெருமானே !
அறிவுடைய உயிரெல்லாம் அறிவற்ற பொருள்யாவும்
பெருமதியால் ஆள்கின்ற பெருமைதனை நீயுடையாய்!
பருவுலகில் எவனேலும் புகழ்ந்துன்னைத் துதித்தாலும்
சிறுவணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினைவலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒருகுணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன்தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம்தானே! 5.  

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         உம்மைத் துதி செய்ப‌வ‌னுக்கு எல்லா ப‌ய‌மும் போய்விடும். நீர் நிர‌பாய‌ராக‌ எழுந்த‌ருளியிருக்க‌ உம்மைத் துதி செய்ய‌க்கூட‌ வேண்டிய‌ தில்லை. ந‌ம‌ஸ்கார‌ம் செய்தால் போதும். ஸ்ம‌ரித்தாலும் திருநாம‌த்தை உச்ச‌ரித்தாலும் ஒரு ப்ர‌த‌க்ஷிண‌த்தைச் செய்தாலும் கூட‌ப் போதும். உம்முடைய‌ திருமேனி குஶ‌ல‌மாய் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ ஆசையையும் "ப‌வ‌ந்"நாக‌ இருக்கும்ப‌டியான‌ உம்மை என்று பொருள் கொள்ளுவ‌தையும் உத்தேசிக்கிறார். நீர் "ப‌வ‌ந்"நாக‌ (இருப்ப‌வ‌ராக‌) இருக்க‌ வேண்டும். ராம‌கிருஷ்ணாதி விப‌வ‌ங்க‌ள் போலே பூதத‌சையாகாம‌ல் நித்ய‌ -- ப‌வ‌ந்நாய் எழுந்த‌ருளியிருக்கும் பாக்கிய‌த்தை உல‌க‌ம் பெற‌வேணும். இஹ‌ப‌வ‌ந்த‌ம் -- இங்கேயே இருக்கிற‌ உம்மை. வைகுண்ட‌த்திலிருக்கிறோமே போதாதோ என்ன‌வொண்ணாது., இப்பூலோக‌ வைகுண்ட‌த்தில் இருக்க‌ வேண்டும். "வீற்றிருந்து ஏழுல‌கும் த‌னிக்கோல் செல்ல‌" என்ற‌ப‌டி இங்கே இருந்துகொண்டே சேத‌னாசேத‌னாத்ம‌க‌மான‌ உல‌க‌ங்க‌ளை எல்லாம் உம்முடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தால் நிய‌மிப்ப‌வ‌ர‌ல்ல‌வோ? இந்த‌ சுபாஶ்ர‌ய‌த் திருமேனியோடு கூடிய‌ உம்மை, "விப‌ந்ய‌வ‌:" என்று ப‌ர‌மப‌த‌ப் பெருமாளைத் துதிப்ப‌து போல‌ எவ‌ன் ப‌நாய‌தி துதிக்கிறானோ? பாட‌த் தெரியாதாயினும், துதிபாடும‌த்த‌னை சிர‌மப்ப‌ட‌ ஸௌக‌ர்ய‌மில்லையாயினும், (ந‌ம‌ஸ்யதி) ந‌ம‌ஸ்கார‌ம் செய்தாலும் போதுமே. ஸ்ம‌ர‌தி -- தூர‌த்திலிருந்து ஸ்ம‌ரித்தாலும் போதும், வ‌க்தி -- ஸ்ம‌ரிக்கும் புத்தி சிர‌மம் கூட‌ வேண்டாம். "ர‌ங்க‌ம்" என்று வாக்கினால் உச்ச‌ரித்தாலும் போதும். ப‌ர்யேதி வா -- கோவிலையோ, திருவீதிக‌ளையோ சுற்றி வ‌ந்தால் போதுமே. அப்ப‌டிச் சுற்றி வ‌ருவ‌து स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाण:"  (ஸ‌ தத்ர‌ ப‌ர்யேதி ஜ‌க்ஷ‌த் க்ரீட‌ந் ர‌மமாண‌:) என்ப‌து போல் ஆநந்தாநுப‌வ‌ மாயிருக்குமே.
         குண‌ங்க‌ளோடு கூடிய‌ உம்மை இவ்வ‌ள‌வு செய்ய‌வேண்டு மென்ப‌தும் இல்லை. உம்முடைய‌ ஒரு குண‌த்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும். "க‌ம் அபி" என்ப‌தால் "வாய் ம‌ன‌திற்கு எட்டாத‌" என்று கொண்டு, "ஆநந்த‌: குண‌த்தை வாங்குவ‌து உசித‌ம். அந்த‌ குண‌த்தை உபாஸிப்ப‌வ‌ரைப் ப‌ற்றி ஸாக்ஷாத்தாக‌ आनन्दं ब्रह्मणो विद्वान् न पिभेयति कुतश्चन", न पिभेति कदाचन"  ("ஆநந்த‌ம் ப்ர‌ஹ்ம‌ணோ வித்வான் ந‌ பிபேதி குத‌ஶ்ச‌ந‌", "ந பிபேதி க‌தாச‌ந‌") என்று சுருதி பேசிற்று. "க‌தாச‌ந‌" "குத‌ஶ்ச‌ந‌" என்ப‌தோடு "க்வ‌ச‌ந‌" என்று சேர்த்து இங்கே ப‌ல‌த்தைப் ப‌டிக்கிறார்.  (5)     

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

ச்லோக‌ம் 4

मरुत्तरणिपावकत्रिदशनाथकालादय:
स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यत: |
महत् किमपि वज्रमुध्यतमिवेति यत् श्रूयते
ततत्यनघ तद्भयं य इह तावक: स्तावक: ||
4.

மருத் - தரணி - பாவக -த்ரிதஶநாத - காலாத:
        
ஸ்வக்ரு̆த்யமதிகுர்வதே த்வதபராததோ பிப்யத: |
மஹத்கிமபி வஜ்ரம் உத்யதமிவேதி யத் ஶ்ரூயதே
        
ததத்யநக தத்யம் இஹ தாவக: ஸ்தாவக: || 4.


அந‌க‌ -- மாச‌ற்ற‌ பிர‌புவே!, ம‌ருத், த‌ர‌ணி, பாவ‌க‌, த்ரித‌ஶ‌நாத‌, காலாத‌ய‌: --- வாயு, சூர்ய‌ன், அக்னி, இந்திர‌ன், ய‌ம‌ன் முத‌லிய‌வ‌ர்க‌ள், த்வ‌ர‌ப‌ராதத‌: -- உம‌க்கு அப‌ராதிக‌ள் ஆகிவிடுவோமோ என்று, பிப்ய‌த‌ -- ப‌ய‌ந்து, ஸ்வ‌க்ருத்ய‌ம் -- த‌ங்க‌ள் வ்யாபார‌த்தை, அதிகுர்வ‌தே -- ந‌ட‌த்துகிறார்க‌ள், உத்ய‌த‌ம் -- ஓங்கின‌, ம‌ஹ‌த் -- பெரிய‌, கிமபி வ‌ஜ்ர‌மிவ‌ -- வ‌ர்ணிக்க‌ முடியாத‌ அத்த‌னை கொடிய‌ வ‌ஜ்ராயுத‌ம் போன்ற‌, ப‌ய‌ம் இதி -- ப‌ய‌ம் என்று, ய‌த்ஶ்ரூய‌தே -- எது சுருதியில் கேட்க‌ப் ப‌டுகிற‌தோ, தத் ப‌ய‌ம் -- அந்த‌ ப‌ய‌த்தை, ய‌: - எவ‌ன், இஹ‌ -- இங்கே, தாவ‌க‌: -- உன்னைத் துதிப்ப‌வ‌னோ, தாதி -- (அவ‌ன்) தாண்டுகிறான்.
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமியின் த‌மிழாக்க‌ம்
ஓங்கியதோர் வச்சிரம்போல் உயர்ந்தவுன்றன் தண்டனைக்கு
உறுமென்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வன்காலன் முதலாய
தேவரெலாம் தம்பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்ப்
பாங்குடனே மறைமுடிகள் பகர்கின்ற அச்சமதை,
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கிலாத அரங்கனுனைத் துதிசெய்து வழிபட்டால்
தாண்டியராய் நற்கதியைத் தாமடைவர் உறுதியன்றோ? 4.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
ப‌ய‌ம், ப‌ய‌ம் என்றும், ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌ம் என்றும், வ‌ஜ்ர‌ம் என்றும், இடி மேல் விழுவ‌தாக‌ ப‌ய‌முறுத்துவ‌து போல‌வும், மிக்க‌ ப‌ய‌த்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வ‌ருகிறார். "என் விக்ர‌ஹ‌த்திற்கு வ‌ரும் அபாய‌த்தை வில‌க்கிக் கொள்ள‌ வேறு யாரையாவ‌து ப்ரார்த்திக்க‌லாகாதா?" "ஸாத்ய‌மில்லை. நானும் ம‌ற்றொருவ‌ரை யாசிக்க‌ மாட்டேன். உம்மைத்த‌விர‌ வேறு ப‌ய‌நிவ‌ர்த்த‌க‌ருமில்லை. உல‌க‌மே உம்மிட‌மிருந்து ப‌ய‌ந்து ந‌ட‌க்கிற‌து. ப‌ய‌த்தைக் கொடுக்கக்கூடிய‌ வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ளும் ம்ருத்யு வென்னும் தேவ‌னும் உம‌க்கு ந‌டுங்கி ந‌ட‌க்கிறார்க‌ள்." தைத்திரீய‌ சுருதியில் ஆநந்த‌ம‌ய‌ப் பொருளின் ஆநந்தத்தைப் ப‌ற்றி ஆநந்த‌மீமாம்ஸை செய்ய‌ப் போகும் அவ‌ஸ‌ர‌த்தில், அத‌ற்கு அடுத்த‌ முன்வாக்ய‌ம் "இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் வாயு வீசுகிறான். (உல‌க‌த்தைப் ப‌ரிசுத்த‌மாக்குகிறான்.) இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் சூரிய‌ன் உதிக்கிறான். இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் அக்நியும் இந்திர‌னும் ம்ருத்யுவும் (நால்வ‌ரோடு) ஐந்தாவ‌தாக‌ ஓடுகிறார்க‌ள் " என்ற‌து.
பெருமாள் ர‌ங்க‌த்தில் "ர‌திம்க‌த‌:" "ஆநந்த‌பூர்ண‌ர்" என்ப‌தால் ர‌ங்க‌த்திற்கு "ர‌ங்க‌ம்" என்று பெய‌ர். ब्रह्मण कोशोऽसि (ப்ர‌ஹ்ம‌ண‌ கோஶோஸி) என்று ப்ர‌ண‌வ‌ம் ப்ர‌ஹ்ம‌த்திற்குக் கோச‌ம் (பெட்டி) என்ற‌து சுருதி. ப்ர‌ண‌வ‌ - விமாந‌ - கோச‌த்தில் காண‌ப்ப‌டும் ப்ர‌ஹ்மம் இப்பெருமாள். ப‌ய‌விஷ‌ய‌மான‌ தைத்திரீய‌ சுருதியை இப்பெருமாள் விஷ‌ய‌மாகக் கொள்கிறார். க‌ட‌சுருதியில் "எந்த‌ ஜ‌க‌த்ப்ராணனிட‌மிருந்து இவ்வுல‌க‌மெல்லாம் ஓங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ வ‌ஜ்ர‌த்தினிட‌மிருந்து ப‌ய‌ப்ப‌டுவ‌துபோல் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌தோ, அந்த‌ இப்பிராண‌னை அறிந்த‌வ‌ர் அமிருத‌ராவர். இவ‌ர் ப‌ய‌த்தால் அக்நி த‌ன் வ்யாபார‌மான‌ த‌ப‌நத்தைச் செய்கிறான். ப‌ய‌த்தால் சூரிய‌ன் ஜ்வ‌லிக்கிறான். ப‌ய‌த்தால் இந்திர‌னும், வாயுவும், நால்வ‌ரோடு ஐந்தாம‌வ‌னாக‌ ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்க‌ள்." என்று உள்ள‌து. இந்த‌ சுலோக‌த்தில் முன் பாதியில் தைத்திரீய‌ சுருதியையும், பின்பாதியில் க‌ட‌சுருதியின் பின்வாக்ய‌த்தையும், முன்பாதியில் க‌ட‌சுருதியின் முன்வாக்ய‌த்தையும் ஸ்வ‌ல்ப‌ வேறுபாட்டோடு அமைக்கிறார். சுருதியில் ப‌ய‌ம் ப‌ய‌ம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவ‌து போல‌, இத்துதியிலும் இம்ம‌ஹ‌த்தான‌ ப‌யாவ‌ஸ‌ர‌த்தில் பேசுகிறார். "க‌ம்ப‌நாத்" என்னும் சூத்திர‌த்தில் "அங்குஷ்ட‌மாத்ர‌மாக‌ ஹ்ருத‌ய‌ குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உல‌க‌ மெல்லாம் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌து" என்று அழ‌காக‌ ஸூசிப்பித்தார். அப்ப‌டி உல‌க‌ம் ந‌டுங்கி ந‌ட‌ப்ப‌து ப்ர‌ஹ்ம‌த்திற்கு நிச்ச‌ய‌மான‌ அடையாள‌ம் (லிங்க‌ம்) என்றார். "என‌க்க‌ல்ல‌வோ அது அடையாள‌ம்" என்று ப்ர‌ஹ்லாதாழ்வானை ஹிர‌ண்ய‌ன் வெருட்டினான். "எவ‌ன் கோபிக்கும்போது மூன்று லோக‌ங்க‌ளும் அவ‌ற்றின் ஈச்வ‌ரர்க‌ளும் ந‌டுங்குகிறார்க‌ளோ (க‌ம்ப‌ந்தே) அந்த‌ என்னுடைய‌ ஆஜ்ஞையை எந்த‌ ப‌ல‌த்தைக்கொண்டு நீ மீறினாய்?" என்று கோப‌த்தோடு கேட்டான். அம்ம‌த‌யானைக்கு நீர் ஸிம்ஹ‌மானீர்." சுருதியின் பேச்சுத்தான் ஸ‌த்ய‌ம். அஸுர‌ன் பேச்சு ஸ‌த்ய‌மாகுமோ? சுருதி ஸூத்ர‌ங்க‌ளின் பேச்சை ந்ருஸிம்ஹ‌ப் பெருமாள் ஸ‌த்ய‌மாக்கினார். எம‌க்கு வ‌ந்திடும் ப‌ய‌த்தை நீர்தானே நிவ‌ர்த்திக்க‌ வேணும்!
காற்றைப்ப‌ற்றி சுருதி எடுத்த‌ "வாத‌:", "வாயு" என்ற‌ ச‌ப்த‌ங்க‌ளை எடுக்காம‌ல் "ம‌ருத்" என்று முத‌லில் வைத்ததில் ர‌ஸ‌முண்டு. "ம‌ருத்" என்ப‌து தேவ‌ர்க‌ளைப் பொதுவில் சொல்லும். "தேவ‌ர்" என்று பொதுப் பொருளையும் கொள்ள‌ வேணும். தேவ‌ர்க‌ளான‌ இவ‌ர்க‌ளும், நீர் யுத்தத்தில் ஜாத‌ரோஷ‌ரான‌ போது ந‌டுங்குவாரே; விரோதிக‌ளான‌ அஸுரர்க‌ள் ந‌டுங்க‌ வேண்டாவோ ? (ராமாய‌ண‌ ஸ‌ங்க்ஷேப‌ச் சுலோக‌த்தை நினைக்க‌ வேண்டும்)
ஸூர்ய‌னை "த‌ர‌ணி" என்பார். ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்ட‌ அவ‌ருக்கு வேறு த‌ர‌ணி ( = ஓட‌ம்) வேண்டும். த‌ன் ப‌ய‌த்திற்குத் தான் த‌ர‌ணியாகார். நீர்தான் எல்லோருக்கும் ப‌ய‌த‌ர‌ண‌த்திற்கு (ப‌ய‌த்தைத் தாண்ட‌) த‌ர‌ணி. உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌த்தைத் த‌ர‌ண‌ம் செய்வான் என்று இங்கே க‌டைசி அடியில் பேசுகிறார்.
"பாவ‌க‌ன்" என்றால் ப‌ரிசுத்தி செய்ப‌வ‌ன். "பாவ‌ந‌ம்:" ப‌ரிசுத்தி செய்வ‌து. இவ‌னையும் பெருமாள் பாவ‌ந‌ம் செய்து அப‌ஹ‌த‌பாப்மாவாக்க‌ வேணும். இந்த‌ ர‌ஸ‌ங்க‌ளை வ்ய‌ஞ்ஜிப்பிக்க‌ச் சுருதி ப‌த‌ங்க‌ளை மாற்றின‌து. "இந்திர‌ன்" என்று சுருதி ப‌த‌ம். எல்லோருக்கும் மேற்ப‌ட்ட‌ ஈச்வ‌ர‌னைச் சொல்லும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்து ஒடித்து அவ‌னுக்கு அப்பெய‌ர். பெருமாளுக்குத்தான் அப்பெய‌ர் த‌கும். அதுபோல‌வே, இங்கே அவ‌ன் விஷ‌ய‌த்தில் "த்ரித‌ஶ‌நாத‌ன்" என்று பேசுகிறார். இதுவும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்துப் பேச்சு. "கால‌ன்" என்ப‌தால் "கால‌னுக்கும் கால‌னாகிய‌ கால‌கால‌ன் நீர்" என்ப‌து வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். தாங்க‌ள் செய்ய‌வேண்டிய‌ த‌ங்க‌ள் அதிகார‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள். எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அப‌ராத‌ம் வ‌ருமோ என்று ந‌டுங்கிச் செய்கிறார்க‌ள்.
இதில் மிக்க‌ ர‌ஸ‌முண்டு. அத்வைதாசிரிய‌ராகிய‌ ஸுரேச்வ‌ரர் இந்த‌ ர‌ஸ‌த்தை தைத்திரீயோப‌நிஷ‌த்தில் ஸூசிப்பித்தார். ஸூரேச்வ‌ரருடைய‌ நைஷ்க‌ர்ம்ய‌ஸித்தியை ஸ்வாமி தத்வ‌டீகையில் உதாஹ‌ரித்தார். ஆநந்த‌ம‌ய‌னுடைய‌ எல்லைய‌ற்ற‌ ஆநந்தத்தைப் பேசுவ‌த‌ற்குமுன் க்ஷ‌ண‌த்தில் வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கி ஸ்வ‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள் என்று சொல்லி ஆநந்த‌ம‌ய‌னுடைய‌ ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த‌ ப்ர‌ஹ்ம‌த்தின் எல்லைய‌ற்ற‌ ஆநந்தத் த‌ன்மையை அறிந்த‌வ‌ர் ஒன்றுக்கும் ப‌ய‌ப்ப‌டார்க‌ள் என்று முடித்தது. இப்ப‌டி ஆநந்த‌ம‌ய‌மான‌து ப்ர‌ஹ்மம் என்று அறிந்த‌வ‌ர் ப‌ய‌ப்ப‌டாம‌ல் ஸ‌ந்தோஷ‌மாய், ஆநந்த‌மாய், ஸ்வ‌ய‌ம்ப்ர‌யோஜ‌ந‌மாய், த‌ம் கைங்க‌ர்ய‌ங்க‌ளைச் செய்ய‌லாமே என்று சுருதியின் உட்க‌ருத்து. இதை ஸுரேச்வ‌ரர் ஸூசிப்பித்தார். ஸ்வாமிக்கும் இந்த‌ ர‌ஸ‌ம் திருவுள்ள‌ம். "ஸ்வ‌க்ருத்ய‌த்தை அதிக‌ரிப்ப‌தை ப‌ய‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்கிறார்க‌ள். ஆநந்த‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்ய‌லாமே! ப‌ய‌நிவ‌ர்த்த‌மும் ஆநந்த‌ம‌ய‌முமான‌ ப்ர‌ஹ்ம‌த்தினிட‌மிருந்து ஏன் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும்?" என்று பா(भा)வ‌ம். அடுத்த‌ சுலோக‌த்திலும் உம்முடைய‌ ஆநந்தத் த‌ன்மை என்னும் ஓர் வ‌ர்ணிக்க‌முடியாத‌ குண‌த்தை அறிந்த‌வ‌னுக்கு ஒரு ப‌ய‌மும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். "கிமபி" என்ப‌தை ம‌ட்டும் இங்கே மூன்றாம‌டியால் சேர்த்தார். இப்போது நேர்ந்திருக்கும் ப‌ய‌ம் வாக்குக்கும் நினைப்புக்கும் ச‌க்ய‌ம‌ல்லாதது என்கிறார். எம் த‌லையில் இடி விழுந்தாலென்ன‌? அதனால் எம‌க்குத்தானே அபாய‌ம் வ‌ரும்; எம்முயிரான‌ உம‌க்க‌ல்ல‌வோ அபாய‌ம் இப்போது ப்ர‌ஸ‌க்த‌ம். எம்மை நீர் ர‌க்ஷிப்பீர். எம‌க்கு எம் ர‌க்ஷ‌ண‌விஷ‌ய‌மான‌ ப‌ய‌மில்லை. உம் திருமேனியை ர‌க்ஷிப்பாரார்? உம்மைத் த‌விர‌ வேறு ர‌க்ஷ‌க‌ர் இக்காசினியில் இல்லையே? "சுருதி ந‌ம் காதில் ஓதும் ப‌ய‌ம்" என்கிறார். சுருதி ஓத‌க் கேட்டிருக்கிறோம். இப்போது ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌த்தை நேரில் அனுப‌விக்கிறோம். உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌ங்க‌ளைத் தாண்டுவான். கோர‌ ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்டுவான் என்று வேத‌ம் ஓதுகிற‌து. "த‌ர‌தி ஶோக‌ம் ஆத்ம‌வித்" "அத‌ ஸோऽப‌ய‌ம் க‌தோ ப‌வ‌தி" --तरति शोकमात्मवित्, अथ सोऽभयं गतो भवति | - நானும் உம்மைத் துதித்து இப்பெரும் ப‌ய‌த்தைத் தாண்ட‌ விரும்புகிறேன். அந‌க‌ -- மாச‌று சோதியே! துதிக்கும் நான் தேஹ‌வானாயிருந்தால் என்ன‌? என் துதி குற்ற‌முடைய‌தானாலென்ன‌? உன் அந‌க‌த்வ‌ம் போதாதோ? என்று திருவுள்ள‌ம் (4)











வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அபீதிஸ்த‌வ‌ம்


அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 3

यदध्य मितबुद्धिना बहुलमोहभाज मया
गुणग्रथितकायवाङ्मनसवृत्तिवैचित्र्यत: ||
अतर्कितहिताहितक्रमविशेषमारभ्यते
तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर || 3

யதத் மிதபுத்திநா ஹுள‌மோஹபா மயா
        
குணக்ரதித காயவாங்மநஸ வ்ரு̆த்தி வைசித்ர்யத: ||
அதர்கித ஹிதாஹித க்ரமவிஶேஷம் ஆரப்யதே
        
ததப்யுசிதம் அர்ச்சநம் பரிக்ரு̆ஹாண ரங்கேஶ்வர || 3

ர‌ங்கேஶ்வ‌ர‌ -- ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ரே! , அத்ய‌ -- இன்று, குண‌ -- முக்குண‌ங்க‌ளால், க்ர‌தித‌ --வ‌ரிந்து க‌ட்ட‌ப் ப‌ட்டிருக்கும், காய‌ வாங் ம‌ன‌ஸ‌ -- தேஹ‌ம், வாக்கு, ம‌ன‌சு, வ்ருத்தி -- இவ‌ற்றின் போக்குக‌ளின், வைசித்ர்ய‌த‌: -- வைசித்ர்ய‌த்தால், ப‌ஹுள‌ ரோஹ‌ பாஜா -- எத்த‌னையோ மோஹ‌த்தை அடைந்த‌, மித‌புத்திநா -- சிறிய‌ புத்தியையுடைய‌, ம‌யா -- என்னால், அத‌ர்க்கித‌ ஹிதாஹித‌ க்ர‌ம‌ விசேஷ‌ம் -- எது ந‌ல்ல‌ வ‌ழி எது த‌வ‌றான‌து என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாம‌ல், ய‌த் -- எது (எந்த‌ இந்தத் துதி), ஆர‌ப்ய‌தே -- ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌தோ, தத் அபி -- அதையும், உசித‌ம் -- த‌குதியான‌, அர்ச்ச‌ன‌ம் --பூஜையாக‌, ப‌ரிக்ருஹாண‌ .. ஏற்றுக்கொள்ள‌ வேணும்.
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமியின் த‌மிழாக்க‌ம்

அறிவுதனில் குறையுடையேன்! அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குணமாம் வன்கயிற்றால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச்சொல்லும் மனந்தனையும் உடையவனாய்
புரிகின்ற செயலெல்லாம் பலபலவாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இதுநன்று இதுதீது
என்றறியா அடியேனே இத்துதியைத் தொடங்குகிறேன்!
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழிபாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடிகொண்ட பெருந்தேவே! 3.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி விரிவுரை:

   ச‌ர‌ணாக‌தி பூர்ண‌மாயின் ப‌லிக்குமென்ப‌து திண்ண‌ம். பெருமாள் திருமேனியின் க்ஷேம‌த்திற்காக‌ச் செய்யும் ச‌ர‌ணாக‌தி ரூப‌மான‌ அர்ச்ச‌னை ஸ்துதி குறைவில்லாம‌ல் பூர்ண‌மாயிருக்க‌வேண்டுமே என்று அபார‌மான‌ க‌வ‌லை. எங்கே குறைவு வ‌ந்து ச‌ர‌ணாக‌தி அபூர்ண‌மாகி, கோரிய‌ ப‌ல‌ம் த‌வ‌றிவிடுமோ என்று ப‌ய‌ம். பெருமாளுடைய‌ த‌யாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ளைப் பூர்ண‌மாய் நெஞ்சில் த‌ரிக்க‌ வேணும். என் அல்ப‌ விஷ‌ய‌மான‌ ம‌தி எங்கே? பெருமாளின் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளெங்கே? பெருமாளுடைய‌ த‌யை என்னும் குண‌ம் என் புத்தியில் நிர‌ம்பியிருக்க‌ வேண்டும் என்கிறார். அவ‌ர் த‌யை எல்லைய‌ற்ற‌து. என் புத்தி ப‌ரிமித‌மான‌து. அதுதான் சூந்ய‌மாக‌ இருக்கிற‌தோ? அவ்வித‌மிருந்தால் அதில் பெருமாள் த‌யை கொஞ்ச‌மேனும் புகுர‌லாம். புத்தி மித‌ம்; அதில் மோஹ‌த்திற்குக் க‌ண‌க்கில்லை என்கிறார். மிக்க‌ மோஹ‌த்தால் நிர‌ம்பின‌ சிறு புத்தியில் பெருமாள் அள‌வ‌ற்ற‌ பெரும் குண‌ம் புகுந்து நிற்க‌ இட‌மில்லையே. நிர‌ந்த‌ர‌மாக‌ப் பெருமாளைப் ப‌ஜிக்க‌ப் பெற‌வில்லை. மோஹ‌ ப‌ஜ‌நத்திற்குக் குறைவில்லை. அதிக‌ம் மோஹ‌த்தால் மூட‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌? குண‌ம். என்ன‌ குண‌ம்? ந‌ல்ல‌ குண‌மாயின் பெருமாள் குண‌ம் குடியேற‌ விரோத‌மில்லை. அவ‌ர் குண‌த்திற்கும் என் குண‌த்திற்கும் நாமம் ம‌ட்டும்தான் ஒன்று. என் தோஷ‌த்திற்கே என் குண‌ம் என்று பெய‌ர். முக்குண‌ப் பிர‌கிருதி என் குண‌ம். "தோஷ‌க்ருஹீத‌குணாம்" ( दोषगृहीतगुणाम् ) என்று ச்ருதி கீதை தொட‌க்க‌த்தில் சுக‌ர் "அஜை" என்னும் பிர‌கிருதிக்குத் த்ரிகுண‌ம் என்று பெய‌ர் ம‌ட்டுமே; தோஷ‌த்திற்கே குண‌ம் என்று பெய‌ர் க்ர‌ஹிக்க‌ப்ப‌டுகிற‌து என்று வேடிக்கையாய்க் காட்டினார். குண‌த்தால் என் உட‌ல‌ம், வாக்கு, ம‌ன‌ஸ் எல்லாம் விசித்திர‌மாய்க் க‌ட்ட‌ப்ப‌ட்டு, ஒன்றோடொன்று விசித்திர‌மாய்க் காடுபாய்கிற‌து. முன் ச்லோக‌த்தில் ப்ரார்த்தித்த‌ப‌டி பெருமாள் சுப‌விக்ர‌ஹ‌குணாதிக‌ள் புத்தியில் எப்ப‌டிப் புகுந்து நிர‌ம்பும்? இத்த‌னை விக்ந‌ங்க‌ள் உள‌வே. செய்யும் ச‌ர‌ணாக‌தியை ஓர் பாமாலையால் ஸ‌ம‌ர்ப்பிக்க‌ உத்தேச‌ம். பூமாலை போன்ற‌தான‌ பாமாலையாயிருப்ப‌து உசித‌ம். குண‌மென்னும் நாரில் விசித்திர‌மாய்த் தொடுக்க‌ப்ப‌ட்ட‌ புஷ்ப‌ மாலை போன்ற‌ ச‌ப்த‌ குண‌ங்க‌ளாலும் அர்த்த‌ குண‌ங்க‌ளாலும் *வைசித்ர்ய‌ம் என்னும் அல‌ங்கார‌ங்க‌ளாலும் ப‌ல‌ சித்ர‌ங்க‌ளாலும் க்ர‌தித‌மான‌ பாமாலையைக் கொண்டு தேவ‌ரீரை அர்ச்சிப்ப‌து உசித‌ம். "குண‌க்ர‌தித‌" என்ப‌தாலும், "வாங் ம‌நோவ்ருத்தி வைசித்ர்ய‌த‌:" என்ற‌தாலும் அர்ச்ச‌ந‌ம் இப்ப‌டி இருப்ப‌த‌ல்ல‌வோ உசித‌ம் என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார். அத‌ற்கு விரோத‌மாக‌ என் ச‌ரீர‌ம், வாக்கு, ம‌ன‌ம் எல்லாம் முக்குண‌ங்க‌ளாலும் விந்தையாகக் க‌ட்ட‌ப்ப‌ட்டு என‌க்கு ஸ்வாதீன‌மேயில்லாம‌ல் இருக்கிற‌தே என்கிறார். தேஹ‌மும் அசுசி, வாக்கும் ம‌ன‌மும் சுத்த‌மல்ல‌, இப்ப‌டி இருந்தும் "எது ஹித‌ம் உசித‌ம், எது அஹித‌ம், அநுசித‌ம்" என்று ஆலோசிக்காம‌லே ப‌ய‌ஸ‌ம்ப்ர‌ம‌த்தினாலே க்ர‌ம‌ விசேஷ‌மெல்லாம் த‌டுமாறி ஏதோ ப்ரார்த்த‌நாஸ்துதி பித‌ற்ற‌ ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து. அதை உசித‌மான‌ அர்ச்ச‌ன‌மாகக் கொள்ள‌வேணும். "ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து" என்ப‌தால் ப‌ய‌பார‌வ‌ஶ்ய‌த்தால் ப‌லாத்க‌ரிக்க‌ப்ப‌ட்டு அதிஸ‌ம்ப்ர‌ம‌த்துட‌ன் ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுவ‌தை வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார். "ர‌ங்கேஶ்வ‌ர‌" என்ப‌தாலும், "உசித‌ம் அர்ச்ச‌ந‌ம்" என்ப‌தாலும் "அர்ச்ச‌க‌ -- ப‌ராதீந‌ராக‌"க் கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும் க‌ருணையை அத்துதி விஷ‌ய‌த்திலும் ஆவிஷ்க‌ரிக்க‌ வேண்டும் என்று வ்ய‌ஞ்ஜ‌ன‌ம்.
      இங்கே காவ்ய‌க்ர‌த‌நத்திற்கும் ஒட்டும்ப‌டி, "குண‌, க்ர‌தித‌, காய‌, வாக், வ்ருத்தி, வைசித்ர்ய‌ம், உசித‌" ச‌ப்த‌ங்க‌ளின் பிர‌யோக‌த்தின் அழ‌கை காவ்ய‌ர‌ஸிக‌ர் ர‌ஸிக்க‌வேணும். "ரீதிராத்மா காவ்ய‌ஸ்ய‌" -- காய‌ம் என்ப‌து ரீதி. வ்ருத்தி என்ப‌து "வ்ருத்திபிர் ப‌ஹுவிதாபிராஶ்ரிதா" என்ப‌துபோல‌ காவ்ய‌ வ்ருத்தி.
    "எவ‌ன், எவ‌ன், அவ‌ன், அவ‌ன்" என்று பெரிய‌ பெருமாளின் ஏற்ற‌த்திற்கேற்ற‌ ல‌க்ஷ‌ண‌ங்க‌ளைக் காட்டி, த‌ன் ஸ்தோத்ர‌த்திற்கும், "எது, அது" என்று ப‌ரிஹாஸ‌மாய்த் தாழ்மையைக் காட்ட‌, ல‌க்ஷ‌ண‌ம் அமைக்கிறார். அப்பெருமானுக்கு இத்துதி. "ர‌ங்கேஶ்வ‌ர‌" -- எத்த‌னையோ அரும்பெரும் காவ்ய‌ங்க‌ள் உம் முன்னிலையில் அர‌ங்கேற்ற‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இது ஒரு த்ருஷ்டி ப‌ரிஹார‌ம். (3)






புதன், 10 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:


அபீதிஸ்த‌வ‌ம்
சுலோக‌ம் 2
दयासिसिरिताशया मनसि मे सदा जागृयु:
श्रिया ध्युषितवक्षस: श्रित्मरुद्वृधासैकता: |
जगद्दुरितघस्मरा जलधि डिम्भडम्भस्पृश:
सकृत्प्रणतरक्षण प्रथितसंविद: संविद: ||

யாஸிஸிரிதாஶயா மநஸி மே ஸதாஜாக்ருயு:
ஶ்ரியா த்யுஷிதவக்ஷஸ: ஶ்ரித்மருத்வ்ருதாஸைகதா: |
ஜகத்துரிதகஸ்மரா ஜலதிடிம்பம்பஸ்ப்ருஶ:
ஸக்ருத்ப்ரணதரக்ஷண ப்ரதிதஸம்வித₃: ஸம்வித₃: ||   2

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி:

கருணைதனின் பெருக்கெடுப்பால் குளிர்ந்திருக்கும் உளத்துடனும்
திருமகளே அகலாது திகழ்ந்துறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவிரியின் மணல்திட்டில் வீற்றிருந்து,
பார்வாழும் மக்கள்தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒருமுறையே அடிபணிய உற்றவரைக் காப்பதென
உலகறிய வாக்குதனை உறுதிசெய்யும் அரங்கன்தன்
திருமேனித் தோற்றங்கள் திரளாக எழுந்தெழுந்து
நிறைந்தெனது நெஞ்சினுளே நிலைத்திடட்டும் நித்தியமே! 2.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
த‌யா – க்ருபையால், ஶிஶிரித‌ – குளிர்ந்த‌, ஆஶ‌யா – திருவுள்ள‌த்தையுடைய‌வ‌ர் ம‌ய‌மாயும், ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித‌ – வாஸ‌ம் செய்ய‌ப்ப‌டும், வ‌க்ஷ‌ஸ‌: – திருமார்பு ம‌ய‌மாயும், ஶ்ரித‌ ம்ருத்வ்ருதாஸைக‌தா – காவேரி ம‌ண‌லில் ச‌ய‌னித்திருப்ப‌வ‌ர்ம‌ய‌மாயும், ஜ‌க‌த் – உல‌க‌த்தின், துரித‌ – பாப‌த்தையெல்லாம், க‌ஸ்ம‌ரா: – விழுங்கிவிடுப‌வ‌ர் ம‌ய‌மாயும், ஜ‌ல‌திடிம்ப‌ ட‌ம்ப‌ ஸ்ப்ருஶ‌: – குட்டி ஸ‌முத்ர‌ம் போன்ற‌வ‌ர் ம‌ய‌மாயும், ஸ‌க்ருத் – ஒரு த‌ட‌வை, ப்ர‌ண‌த‌ – ச‌ர‌ண‌ம‌டைந்த‌வ‌ரையும், ர‌க்ஷ‌ண‌ ப்ர‌தித‌ஸ‌ம்வித‌: – ர‌க்ஷிப்ப‌தாக‌ப் பிர‌ஸித்த‌மாக‌ ப்ர‌திக்ஞை செய்த‌வ‌ர் விஷ‌ய‌மாயும், ஸ‌ம்வித‌: – புத்திவ்ருத்திக‌ள், மே ம‌ந‌ஸி – என்னுடைய‌ ம‌ன‌தில், ஸ‌தா – எப்பொழுதும், ஜாக்ருயு: – ஜாக‌ரூக‌மாகக் குடி கொண்டிருக்க‌ வேண்டும்.

இந்த‌ ச‌ர‌ணாக‌தியை மிக‌வும் கெட்டியாய்ச் செய்ய‌வேணும். இந்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌ம் உட‌னே த‌ப்பாம‌ல் கிடைக்க‌வேணும். ஸ‌முத்ர‌க்க‌ரையில் புளிநத்தில் (ம‌ண‌லில்) ந‌ட‌ந்த‌ விபீஷ‌ண‌ ச‌ர‌ணாக‌தி அவ‌ஸ‌ர‌த்தை நினைத்து, அத்தொடொக்க‌ப் பெருமாளுடைய‌ ர‌ங்க‌ச‌ய‌நத்திலுள்ள‌ அம்ச‌ங்க‌ளை ம‌ன‌தில் பாவ‌னை செய்கிறார். அங்கே க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல், இங்கே ஸ‌முத்ர‌ ப‌த்நியாகிய‌ காவேரியின் ம‌ண‌லில் ச‌ய‌ந‌ம். ப‌தியாகிய‌ ஸ‌முத்ர‌த்தைக் காட்டிலும் ப‌த்நிக‌ளான‌ ய‌முனை போன்ற‌ புண்ய‌நதிக‌ளுக்கு சுத்தி அதிக‌ம். “தூய‌பெருநீர் ய‌முனைத் துறைவ‌னை" "மருத் வ்ருதா" என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம். வேத‌ப் பிர‌ஸித்த‌மான‌ புண்ய‌நதி என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். ப்ர‌ண‌வ‌ப் பெருமாள் வேத‌ப் பிர‌ஸித்த‌ நதியில் ச‌ய‌னித்தார். க‌ட‌ற்க‌ரையில் நீர்க்க‌ட‌லுக்கு எதிரில் ஓர் நீல‌ தேஜோ வெள்ள‌மாய் பெருமாள் ப்ர‌திஶ‌ய‌ன‌ம் செய்ததை நினைக்கிறார். இங்கே அர‌ங்க‌ன் ஓர் குட்டிக் க‌ட‌லாக‌ப் பிர‌காசிக்கிறார். “ப‌ச்சைமா க‌ட‌ல்போல் மேனி" என்று இங்கே ஒருவாறு அனுப‌வ‌ம். अर्णवतर्णकम् (அர்ண‌வ‌த‌ர்ண‌க‌ம்) என்றார் ஸ்ரீ ப‌ட்ட‌ர். ஆச்ரித‌ர்க‌ளின் பாப‌க்க‌ட‌லை அப்ப‌டியே உறிஞ்சி விடுவ‌தாக‌ ஸ‌ங்க‌ல்ப‌ம். உல‌க‌த்தின் பாப‌க்க‌ட‌லுக்கு எதிரியாக‌ இக்குட்டிக் க‌ட‌லின் ச‌ய‌ன‌ம். सकृदेव प्रपन्नाय ….. अभयं सर्वभूतेभ्यो ददामि एतद्व्रतं मम (ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌ ………… அப‌ய‌ம் ஸ‌ர்வ‌பூத‌ப்யோததாமி ஏதத் வ்ர‌த‌ம் மம) என்று ப்ர‌திக்ஞை செய்த‌ அவ‌ஸ‌ர‌த்தையும் காட்டுகிறார். க‌ட‌ற்க‌ரையில் எல்லோரும் பார்க்கும்ப‌டி பிராட்டியின் ஸ‌ந்நிதாந‌ம் இல்லை. பிராட்டி அக்க‌ரையிலும் பெருமாள் இக்க‌ரையிலுமாக‌ இருந்த‌ அவ‌ஸ‌ர‌ம். ஆனால‌ பிரிந்திருந்த‌ பிராட்டியைச் சேர்த்து வைப்ப‌த‌ற்காக‌வே த‌ம்மை அங்கீக‌ரிக்கும்ப‌டி விபீஷ‌ண‌ன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம். இருவ‌ரையும் சேர்த்துவைத்து இருவ‌ருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க‌ அங்கே ஆஶ்ர‌ய‌ண‌ம். “ப்ர‌தீய‌தாம் தாஶ‌ர‌தாய‌ மைதிலீ" என்று த‌ம்ப‌திக‌ளைக் கூட்ட‌வே அவ‌ர் ம‌நோர‌த‌ம். இங்கு இருவ‌ர் திருமேனியையும் காப்பாற்ற‌ ச‌ர‌ணாக‌தி. அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடைய‌வ‌ர். “பூம‌ன்னும் மாது உறை மார்ப‌ன்". பிராட்டி திருமார்பை ஆஶ்ர‌யித்திருப்ப‌தால்தான் ஹ்ருத‌ய‌ம் த‌யையினால் குளிர்ந்திருக்கிற‌து. பெருமாள் திருவுள்ள‌ம் சீத‌ள‌மான‌துதான். நாம்தான் அத‌ன் பிர‌யோஜ‌னத்தை அடையாம‌ல், அந்த்த் த‌யையைத் த‌கைகிறோம். “ஸ‌ம்வித்" என்னும் புத்திக‌ள் என் ம‌ன‌தில் தூங்காம‌ல் விழித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என்று பிரார்த்த‌னை. பெருமாள் தூங்குவ‌து போலிருந்தாலும் அவ‌ர் விஷ‌ய‌மான‌ என்னுடைய‌ பாவ‌னைக‌ள் தூங்காம‌ல் ஸ‌தா விழித்திருக்க‌ வேண்டும். பெருமாளுக்கு விசேஷ‌ண‌ங்க‌ளாகக் கூற‌ப்ப‌ட்ட‌தெல்லாம், ந‌ம்முடைய‌ பாவ‌னையில் ஆகார‌ங்க‌ளாகக் கூடி, ஸ‌மாநாதிக‌ர‌ண‌மாகின்ற‌ன‌. விஶிஷ்ட‌மான‌ ஸ‌ம்வித்துக‌ளே. நிர்விஶேஷ‌ நிராகார‌ புத்தி ய‌ல்ல‌. இந்த‌ விசேஷ‌ண‌ங்க‌ளையுடைய‌ பெருமாளால் உப‌ர‌க்த‌மான‌ புத்திக‌ள். திருக்காவேரியில் ப‌ள்ளிகொண்ட‌ பெருமாள் விஷ‌ய‌மான‌ பாவ‌னை என‌க்கு எப்போதும் இருக்க‌ வேண்டும் என்று ப்ரார்த்திப்ப‌தால், பாவ‌னைக்கு விஷ‌ய‌மான‌ பெருமாள் திருமேனியும் விசேஷ‌ண‌ங்க‌ளும் நித்ய‌மாய் நிர‌பாய‌மாயிருக்க‌ வேண்டும் என்று முக்கிய‌க் க‌ருத்து ஸூசித‌மாகிற‌து. இந்த‌ ம‌நோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ பெருமாள் க்ருபை செய்ய‌வேண்டும் என்று ஆசையை விள‌க்குகிறார். காய‌த்ரியில் சுப‌மான‌ புத்தி வ்ருத்திக‌ளின் ப்ர‌சோதநத்தின் ப்ரார்த்த‌னை போல் இங்கும் முன் ச்லோக‌த்தில் "அதீம‌ஹே" என்று பேசி, அடுத்தாற்போல் அங்கு போல‌ இங்கே **தீக‌ளாகிய‌ ஸ‌ம்வித்துக்க‌ளின் ஜாக‌ர‌ண‌த்தையும் பிரார்த்திக்கிறார். காய‌த்ரீ ஜ‌ப‌ம் எப்ப‌டி நித்ய‌மோ, அப்ப‌டியே ஸ்ரீர‌ங்க‌ஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்த‌னையும் நித்ய‌ம். அத‌ற்கு லோப‌ம் வ‌ருவ‌தை ஸ‌ஹிக்க‌ மாட்டோம‌ல்ல‌வா?

(** நூலில் அச்சாகியிருப்ப‌து থীக‌ளாகிய‌ என்று. தீ என்ப‌த‌ற்கான‌ கிர‌ந்த‌ எழுத்து থী இது அச்சுப்பிழையா என்ப‌து விள‌ங்க‌வில்லை. )







செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

अभीति स्तव:

|| श्री:||

अभीतिस्तव:

श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किक केसरि |
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ||

अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं
भयाभय विधायिनो जगति यन्निदेशे स्थिता: |
तदेतदतिलङ्घित द्रुहिणशम्भु शक्रादिकं
रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं मह: ||

|| ஸ்ரீ: ||

அபீதிஸ்த‌வ‌ம்

ஸ்ரீமான் வேங்க‌ட‌நாதார்ய‌ க‌விதார்க்கிக‌ கேச‌ரி |
வேதாந்தாசார்ய‌ வ‌ர்யோ மே ச‌ந்நிதத்தாம் ச‌தா ஹ்ருதி ||

சுலோக‌ம் 1.

அபீதிரிஹ யஜ்ஜுஷாம் யதவதீரிதாநாம் யம்
யாப விதாயிநோ ஜகதி யந்நிதேஶே ஸ்திதா: |
ததேதத்திலங்கி த்ருஹிண ம்பு க்ராதிகம்

ரமாஸகம் அதீமஹே கிமபி ரங்கதுர்யம் மஹ: || (1)

ய‌ஜ்ஜுஷாம் -- எவ‌ருடைய‌ ப்ரீத்ய‌நுக்ர‌ஹ‌ருடைய‌வ‌ர்க்கு, இஹ‌ -- இங்கேயே, அபீதி -- ப‌ய‌மில்லாமையும், ய‌த‌வ‌தீரிதாநாம் -- எவ‌ரால் உபேக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு, ப‌ய‌ம் -- ப‌ய‌மும் (உண்டோ), ஜ‌க‌தி -- உல‌க‌த்தில், ப‌யாப‌ய‌ விதாயிந‌: -- ப‌ய‌த்தையும் அப‌ய‌த்தையும் கொடுப்ப‌வ‌ர்க‌ள், ய‌ந்நிதேஶே -- எவ‌ருடைய‌ ஆக்ஞையில், ஸ்திதா -- இருக்கின்றார்க‌ளோ, அதில‌ங்கித‌ த்ருஹிண‌ ஶ‌ம்பு ஶ‌க்ராதிக‌ம் --- ப்ர‌ஹ்மா, ஈச்வ‌ர‌ன், இந்திர‌ன் முத‌லிய‌வ‌ர்க‌ளைத் தாண்டிய‌தும், ர‌மாஸ‌க‌ம் -- பெரிய‌பிராட்டியாருடைய‌ தோழ‌மை கொண்ட‌தும், தத் -- அந்த‌, ஏதத் -- இந்த‌, கிமபி -- சொல்லுக்கு அட‌ங்காததையும், ர‌ங்க‌துர்ய‌ம் -- ர‌ங்க‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும், ம‌ஹ‌: -- தேஜ‌ஸ்ஸை, அதீம‌ஹே -- அத்யய‌ந‌ம் செய்கிறோம் (அநுஸ‌ந்திக்கிறோம்)

ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமியின் த‌மிழாக்க‌ம்

" அச்ச‌ம் அக‌ற்றும் துதி"

தஞ்சமென வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை !
தனைச்சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை!
அஞ்சுதலைத் தந்துநமை அலைக்கழிப்போர் எல்லோரும்
அஞ்சாமை நமக்களிக்கும் அன்பர்களும் அவனடிமை!
செஞ்சடையோன் நான்முகத்தான் தேவர்கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திருமகளார் உடன்சேர
விஞ்சுகிற ஒளியாக விரிபுகழ்சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே! (1)

அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி

பெரிய‌தோர் ப‌ய‌த்திலிருந்து விமோச‌ந‌மாகும்ப‌டி அப‌ய‌ ப்ரார்த்த‌னை செய்வ‌தால் பெருமாளுடைய‌ ர‌க்ஷ‌ண‌த்தை "ஸ்வாஶ்ரிதாப‌ய‌ப்ர‌த‌ம்" என்று துவ‌க்குகிறார். அந்வ‌ய‌வ்ய‌ திரேக‌ங்க‌ளாக‌ முத‌ல‌டியில் ல‌க்ஷ‌ண‌ங்க‌ள் ஸாதிக்கிறார். எங்க‌ளுக்கு அப‌ய‌மே தான் நியாய்ய‌ம். ப‌ய‌த்திற்கு ப்ர‌ஶ‌க்தியே இல்லை. பெருமாள் க்ருபைக்குப் பாத்திர‌மான‌ எங்க‌ளுக்கு அபீதி நிய‌த‌மாயிருக்க‌ வேண்டுமே. பெருமாளுடைய‌ உபேக்ஷைக்கு (அவ‌தீர‌ண‌த்திற்கு, திர‌ஸ்கார‌த்திற்கு) விஷ‌ய‌மானோருக்க‌ல்ல‌வா ப‌ய‌ம் வ‌ர‌லாம். நாம் அவ‌ரால் அவ‌தீரித‌ர‌ல்ல‌வே. ப‌ய‌ம் வ‌ந்த‌ கார‌ண‌ம் அறிகிலோம். வ‌ந்திருக்கும் ப‌ய‌த்தை உட‌னே போக்க‌வேணும். यदनुग्रहतस्सन्ति न सन्ति यदुपेक्षया (ய‌த‌நுக்ர‌ஹ‌த‌: ஸ‌ந்தி ந‌ ஸ‌ந்தி ய‌துபேக்ஷ‌யா) என்று நித்மான‌ பொருள்க‌ள்கூட‌ எவ‌ர் அனுக்ர‌ஹ‌த்தால் இருக்கின்ற‌ன‌வோ, எவ‌ர் உபேக்ஷித்தால் இல்லாம‌ற்போமோ என்று சுக‌ர் ஸாதித்ததை அநுஸ‌ரித்த‌து இந்த‌ முத‌ல‌டி ல‌க்ஷ‌ண‌ம். இந்த‌ ல‌க்ஷ‌ண‌த்தை ம‌ன‌திற் கொண்டே இவ‌ரை நாம் ப்ரீதியோடு ஸேவித்தால், ந‌ம்மிட‌ம் இவ‌ருக்கு அநுக்ர‌ஹ‌ம் உண்டாகி ந‌ம் ப‌ய‌ம் தீரும் என்று தீர்மானித்து, இவ‌ரை ஸேவித்து ம‌ல்லுக்க‌ட்டி அப‌ய‌ம் பெறுவோம் என்று முத‌லிலேயே தேற்றிக் கொள்ளுகிறார்.

அப‌ய‌ஸித்தி என்னும் ப்ர‌யோஜ‌ன‌த்திற்காக‌ அவ‌னை ஸேவித்து, அவ‌னை ஜுஷ்ட‌னாக‌ (ப்ரீத‌னாக‌)ச் செய்வோம். பெருமாளுடைய‌ ப்ரீதியுமிருக்க‌ட்டும், அவ‌ர்பேக்ஷையும் இல்லாம‌லிருக்க‌ட்டும். உல‌க‌த்தில் ப‌ய‌முண்டாக்கக்கூடிய‌ அதிகாரிக‌ளான‌ வாயு, ஸூர்ய‌ன் முத‌லிய‌வ‌ர் ப‌ய‌முண்டாக்கினால், என் செய்வோம் என்று கேட்பீரோ? அவ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌ய‌த்திற்கு பிர‌ஸ‌க்தி இல்லை. உல‌க‌த்தில் ப‌யாப‌ய‌ கார‌ண‌ர்க‌ளான‌ அவ‌ர்க‌ள் இவ‌ருடைய‌ ஆக்ஞையில் (ப்ர‌ஶாஸ‌நத்தில்) நிற்ப‌வ‌ர். இதுவும் ஒரு ல‌க்ஷ‌ண‌மாக‌ப் ப‌ணிக்க‌ப்ப‌டுகிற‌து. இர‌ண்டாம‌டியைத் திருப்பி மாற்றி அந்வ‌யிப்ப‌தில் மிக‌ ர‌ஸ‌முண்டு. எவ‌ருடைய‌ க‌ட்ட‌ளைப்ப‌டி ந‌ட‌க்கும் ப‌க்த‌ர்க‌ள் உல‌க‌த்திற்கு ப‌ய‌த்தையும் அப‌ய‌த்தையும் கொடுக்க‌வ‌ல்ல‌ரோ, ப‌க‌வ‌தாஶ்ரித‌ராய், அவ‌ர் க‌ட்ட‌ளையில் நிற்ப‌வ‌ர் இட்ட‌து ச‌ட்ட‌ம் உல‌க‌த்தில் ப‌யாப‌ய‌ங்க‌ள். ப்ர‌ஹ்ம‌நிஷ்ட‌ருக்கு தேவ‌ர்க‌ளும் கெடுத‌ல் செய்ய‌முடியாது. தேவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜை செய்கிறார்க‌ள் என்று உப‌நிஷ‌த்துக் கூறுகிற‌து. இத‌னால் வாயு, ஸூர்ய‌ன் முத‌லிய‌ தேவ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌ய‌ம் வ‌ராதென்று கைமுத்ய‌த்தால் ஸித்த‌ம்.. "எவ‌னுடைய‌, எவ‌னுடைய‌, எவ‌னுடைய‌" என்று மும்முறை ப‌டித்துவிட்டு "அந்த‌ இச்சுட‌ர்" என்கிறார். "அதை இதைப்போல் பார்த்தார் ரிஷிவாம‌தேவ‌ர்" என்று உப‌நிஷ‌த்து மூன்று ல‌க்ஷ‌ண‌ங்க‌ளால் குறித்து, "அது ப்ர‌ஹ்மம்" என்ற‌து போல‌, இங்கு "அது இந்த‌ ர‌ங்க‌ ஜ்யோதிஸ்" என்கிறார். ப்ர‌ஹ்மா, ருத்ர‌ன், இந்திர‌ன் முத‌லான‌வ‌ர்க‌ளால் ப‌ய‌ம் வ‌ந்தாலென்ன‌ செய்கிற‌து என்றும் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம், அது இதையெல்லாம் மீறிய‌ ம‌ஹ‌ஸ். இது அப்ரமேய‌மான‌ தேஜ‌ஸ். "கிமபி" என்ப‌த‌ற்கு "மாநாதீத‌ம்", "அப்ர‌மேய‌ம்" என்று க‌ருத்து. அந்த‌ தேஜ‌ஸ் (ராம‌ன்) அப்ர‌மேய‌மே, ஏனென்றால் ஜான‌கி அத‌னுடைய‌வ‌ள‌ல்ல‌வோ" என்ற‌ மாரீச‌ன் வார்த்தையை நினைத்து, ர‌மாஸ‌க‌மான‌ ஏதோ ஒரு அப்ர‌மேய‌மான‌ தேஜ‌ஸ் என்கிறார். ச‌ர‌ணாக‌தியான‌ இந்த‌ ஸ்த‌வ‌த்தில் ப்ர‌ண‌வாந்த‌ஸ் ஸ்தித‌மான‌ ப்ர‌ஹ்ம‌ தேஜ‌ஸ்ஸிட‌ம் ப‌ர‌த்தை ஸ‌ம‌ர்ப்பிக்கையில், ல‌க்ஷ்மீ ஸ‌ஹாய‌மான‌ தேஜ‌ஸ் என்கிறார். ச‌ர‌ணாக‌தியைப் ப‌ண்ணின‌தாக‌ச் சொல்லும் இருப‌த்தோராவ‌து சுலோக‌த்திலும் ஸ்ரீகாந்த‌னிட‌ம் ப‌ர‌த்தை ஸ‌ம‌ர்ப்பித்தோம் என்கிறார். मकारस्तु तयोर्दास: (ம‌கார‌ஸ்து த‌யோர்தாஸ‌:) என்ற‌ ப்ர‌ண‌வ‌ சுருதியை நினைக்கிறார். எந்த‌ ம‌ஹ‌ஸ் என்றால், ர‌ங்க‌ துர‌த்தை (ர‌ங்க‌ பார‌த்தை) வ‌ஹிக்கும் தேஜ‌ஸ், ர‌ங்க‌மென்ப‌து ப்ர‌ண‌வ‌ம். ப்ர‌ண‌வ‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும் தேஜ‌ஸ். ப்ர‌ண‌வ‌த்திலுள்ள‌ தேஜ‌ஸ்ஸைப் ப‌ணிக்கையில், "அதீம‌ஹே" என்கிறார். ப்ர‌ண‌வ‌ தேஜ‌ஸ்்ஸான‌ ர‌ங்க‌ தேஜ‌ஸ் அத்யய‌ன‌ம் செய்ய‌ யோக்ய‌மான‌து. வேத‌ம் முழுவ‌தும் ப்ர‌ண‌வ‌த்திற்குள் உள்ள‌து. ர‌ங்க‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும் தேஜ‌ஸ் என்ப‌தில் வேறு ர‌ஸ‌முண்டு. ர‌ங்க‌த்தை ர‌க்ஷித்து அத‌ற்கு அபாய‌மில்லாம‌ல் நிர்வ‌ஹிக்க‌ வேண்டும் என்ப‌துதான் இந்த‌ ஸ்த‌வ‌த்திற்குப் ப‌ய‌ன். ர‌ங்க‌த்தின் பாரத்தை அவ‌ரை வ‌ஹிக்க‌ ப்ரார்த்திக்கிறோம் என்றும் ஸூச‌க‌ம். ம‌ற்றொன்றும் வேண்டாம். ர‌ங்க‌ துர‌ந்த‌ர‌ன் என்னும் திருநாமம் அந்வ‌ர்த்த‌மாக‌ இருக்க‌ வேணும். "துர்ய‌" என்ப‌து அச்வ‌த்தையும் சொல்லும். "ஹ‌ய‌ம‌ஹ‌ஸ்" என்று த‌ம‌க்குப் பிரிய‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ தேஜ‌ஸ்ஸையும் சேர்த்து அபிந்ந‌மாக‌ நினைக்கிறார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இராம‌ நாட‌க‌ம் பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்

ஐந்தாங் களம்

இடம்: அயோத்தி அரண்மனையில் ஒரு தனியிடம்
காலம்: காலை
பாத்திரங்கள்: வசிஷ்டர், வாமதேவர், சுமந்திரர்

வசிஷ்டர்:-- (தமக்குள்ளாக) லக்கினம் நெருங்கிவிட்டது. சக்கரவர்த்தியைக் காணோம். மந்திரி போனவரும் வரவில்லை. ஒன்றுந் தெரியவில்லையே! (வாமதேவர் வருகிறார். வசிஷ்டர் அவரைப் பார்த்து) வாமதேவரே! சுமந்திரர் இன்னும் வரவில்லையா?

வாமதேவர்:-- சக்கரவர்த்தி கைகேயியின் அந்தப்புரத்தில் இருப்பதாகத் தெரிந்து சுமந்திரர் அங்கு சென்றார். அங்கே அவர் சக்கரவர்த்தியைப் பார்க்கவில்லையாம். இராமரை அழைத்து வரும்படி கைகேயியார் கட்டளையிட்டாராம். அதன்மேல் இராமரை அழைத்துக்கொண்டு சென்றார். சென்று வெகு நேரமாயிற்று. யாது காரணமோ இன்னும் வரவில்லை.

வசிஷ்டர்:-- இராமனும் இன்னும் திரும்பி வரவில்லையோ?

வாமதேவர்:-- இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை. கைகேயி அம்மை இராமரை எதற்காக அழைத்திருக்கக் கூடும்?

வசிஷ்டர்:-- எதற்காயிருக்குமோ? மகுடாபிஷேக விஷயமாயிருக்கலாம். அவளுக்கு இராமனிடத்தில் மிகவும் பிரியம். கோசலைக்குக்கூட அவன்மீது அவ்வளவு அன்பு இராதென்று நினைக்கிறேன். கைகேயி தன் மகன் பரதனிடத்திலுங்கூட அவ்வளவு பிரியம் உள்ளவளல்ல.

வாமதேவர்:-- இருக்கலாம். என்ன இருந்தாலும் தன் மகனிருக்க, சக்களத்தி மகனுக்குப் பட்டமாவதென்றால் அவளுக்குக் கொஞ்சம் வருத்தமாய்த்தானிருக்கும். சக்களத்திப் போராட்டம் சகஜந்தானே!

வசிஷ்டர்:-- உண்மைதான். ஆனால் கைகேயி அப்படிச் சக்களத்தி த்வேஷம் கொள்பவளல்ல. ஒருகால் காலவித்தியாசத்தால் அவளை அண்டிச் சீவனம் செய்யும் கீழ்மக்கள் அவள் மனதைக் கலைத்தால் உண்டு.

வாமதேவர்:-- பட்டாபிஷேக முகூர்த்தம் நெருங்கிவிட்டது. சக்கரவர்த்தி இவ்வளவு தாமதமாயிருக்கக் காரணம் என்ன?

வாமதேவர்:-- எல்லாம் சுமந்திரர் வந்தால் தெரியும். இதோ அவரும் வந்துவிட்டார். (சுமந்திரர் வருகிறார். வசிஷ்டர் அவரைப் பார்த்து) சுமந்திரரே! என்ன காலதாமதம்? சக்கரவர்த்தி எங்கே? நீர் ஏன் முகம் தளர்ந்திருக்கிறீர்?

சுமந்திரர்:-- பட்டாபிஷேகத்திற்கு விக்கினம் வந்துவட்டது.

வாமதேவர்:-- விக்கினமா? என்ன அது? யாரால், எப்படி நேரிட்டது?

சுமந்திரர்:-- சக்கரவர்த்தி நேற்றிரவு கைகேயி அரண்மனைக்குச் சென்றார். அதற்குமுன் அங்கே என்ன சதியாலோசனை நடந்ததோ தெரியவில்லை. சக்கரவர்த்திக்கும் தெரியாதாம். சம்பராசுர யுத்தத்தில் கைகேயி அம்மை சாரதியாகச் சென்றபொழுது சக்கரவர்த்திக்கு ஏதோ உதவி செய்தார்களாம். அதற்காக சக்கரவர்த்தி அவருக்கு இரண்டு வரங்கள் கொடுத்தாராம். அவ்வரங்களை கைகேயி அம்மை இதுவரை கேட்கவில்லையாம்; அவைகளை இப்பொழுது கேட்டுப் பெற்றுக் கொண்டார்களாம். வரங்களிரண்டில் ஒன்றால் ஸ்ரீராமர் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்யவேண்டியதாம்; மற்றொன்றால் பரதருக்குப் பட்டமாக வேண்டியதாம்.

வாமதேவர்:-- என்ன அது? என்ன அது? பட்டாபிஷேகம் பரதனுக்கா? இராமன் காட்டுக்குச் செல்வதா? என்ன விபரீதம்! யாருடைய சதியாலோசனை இது?

சுமந்திரர்:-- யாருடைய சதியாலோசனையோ தெரியவில்லை. சக்கரவர்த்தி அந்தப்புரம் செல்வதற்குச் சற்றுமுன்னம் மந்தரைதான் கைகேயியோடு பேசிக்கொண்டிருந்தாள் என்று புலம் வெளியாகிறது.

வசிஷ்டர்:-- கைகேயி இராமனை அழைத்துவரச் சொன்னதெதற்காக?

சுமந்திரர்:-- ஆசீர்வதிப்பதற்காக இருக்குமென்று நான் எண்ணினேன். பிறகு பார்த்தால் இராமரைக் காட்டுக்குப் போகும்படி உத்தரவு செய்வதற்காக இருந்தது. உத்தரவும் ஆய்விட்டது. இராமருஞ் சம்மதித்து விடைபெற்றுக்கொண்டு கோசலை அரண்மனைக்குப் போயிருக்கிறார்.

வாமதேவர்:-- சக்கரவர்த்தியா வனம் போகும்படி இராமருக்குக் கட்டளையிட்டார்?

சுமந்திரர்:-- சக்கரவர்த்தி மூர்ச்சையாய்க் கிடக்கிறார். ஆதலால் கைகேயி அம்மையே இராமருக்குக் கட்டளை யிட்டிருக்க வேண்டும்.

வாமதேவர்:-- ஆ, என்ன கொடுந்தொழில் செய்தாள்?

வசிஷ்டர்:-- வாமதேவரே!

வெவ்வினை யவள்தர விளைந்த தேயுமன்
றிவ்வினை யிவன்வயி னெய்தற் பாற்றுமன்
றெவ்வினை நிகழ்ந்ததோ வேவ ரெண்ணமோ
செவ்விதி னொருமுறை தெரியும் பின்னரே.

இந்தக் கொடுஞ்செயல் அவளால் நிகழ்ந்ததுமல்ல. நற்குண நாயகனாகிய நம் இராமனுக்கு இவ்விதி வரத்தக்கதுமல்ல. இது விளைந்ததெவ்வாறோ? எவருடைய எண்ணத்தாலோ? எதற்காகவோ? எல்லாம் பிறகு செவ்வையாய்த் தெரியும். நல்லது, சுமந்திரரே! வாரும். இராமனைப் பார்த்துவிட்டுப் பிறகு சக்கரவர்த்தியைப் போய்ப் பார்ப்போம். கைகேயிக்கும் புத்திமதியைச் சொல்லி அவள் மனத்தைத் திருப்ப முயலலாம்.

சுமந்திரர்:-- ஆம். நம்மாற் கூடிய முயற்சியைச் செய்வோம்.

(எல்லோரும் போகின்றனர்)

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

அபீதிஸ்த‌வ‌ம்

கிட்ட‌த்த‌ட்ட‌ நூறு ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்துகொண்டிருந்த‌ “வேதாந்த‌ தீபிகை” மாத‌ இத‌ழில் , ஸ்ரீ வேதாந்த‌ தேசிக‌ன் அருளிய‌  “அபீதிஸ்த‌வ‌ம்” என்ற‌ ஸ்தோத்திர‌த்திற்கு ஸ்ரீ உப‌.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் ஸ்வாமி த‌மிழில் வ்யாக்யான‌ம் எழுதியுள்ளார். அன்று ஸ்ரீ தேசிக‌ன் மாலிக்காபூர் ப‌டையெடுப்பால் அர‌ங்க‌னே ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டுப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் வெளியேறியிருந்த‌ நிலையில் ப‌ய‌ம் நீங்கி ந‌ம்பெருமாள் மீண்டும் அர‌ங்க‌மாந‌க‌ர் வ‌ர‌வேண்டுமென்று ப்ரார்த்தித்துப் பாடிய‌ அந்த‌ சூழ்நிலை இப்போதும் நில‌வ‌ ஆர‌ம்பித்திருக்கிற‌து. அன்று ப‌டையெடுத்த‌ முஸ்லீம்க‌ள்தான் எதிரிக‌ள். இன்று ந‌ம் ச‌னாத‌ன‌ தர்ம‌த்திலேயே பிற‌ந்தும் அத‌ற்கு எதிராக‌ச் செய‌ல்ப‌டும் விரோதிக‌ளும் துரோகிக‌ளும் அன்றைய‌ மாலிக்காபூர் கால‌த்தை விட‌ அபாய‌க‌ர‌மான‌தாக‌ மாற்றிவ‌ரும் நிலையில் இந்த‌ ஸ்தோத்திர‌த்தைக் கூட்டு ப்ரார்த்த‌னையாக‌ செய்வ‌து ப‌ல‌ன‌ளிக்கும். அந்த‌ ஆசையாலே ஸ்தோத்திர‌ம், அத‌ற்கு ஸ்ரீ ஏ.வி.கோபாலாசாரியார் உரை இவ‌ற்றுட‌ன், ஒரு த‌மிழாக்க‌மும் சேர்த்து இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன். த‌மிழாக்க‌ம் இன்னொரு அன்பில்காரர் செய்தது. இவ‌ர் ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி. த‌ற்ச‌ம‌ய‌ம் சென்னைவாசி.

       இந்த‌ உரையைப் பின்னாளில் நூலாக‌ வெளியிடும்போது அத‌ற்கு முன்னுரையாக‌ அந்நாளில் பேர‌றிஞ‌ராக‌ விள‌ங்கிய‌ புதுக்கோட்டை ஸ்ரீ ஸ்ரீனிவாச‌ராக‌வ‌ன் ஸ்வாமி வ‌ழ‌ங்கிய‌ முன்னுரை இங்கே.

||ஸ்ரீ:||

முக‌வுரை

ஸ்ரீ ராமானுஜ‌ருடைய‌ கால‌த்திற்குப் பிற‌கு விசிஷ்டாத்வைத‌ ஸித்தாந்தத்திற்கு உள்ளும் புற‌ம்பும் தோன்றிய‌ விரோதிக‌ளைப் போக்கி அதை நிலை நிறுத்த‌ திருவேங்க‌ட‌முடையான் த‌ன் திரும‌ணியை இவ்வுல‌கில் அவ‌த‌ரிப்பித்தான். அதுவே தூப்புலில் ஸ்ரீ வேங்க‌ட‌ நாத‌னாக‌ அவ‌த‌ரித்தது. இந்த‌ க‌விதார்க்கிக‌ சிம்மம் ப‌ல‌ வாத‌க்கிர‌ந்த‌ங்க‌ளைச் செய்ததுபோல‌வே த‌மிழிலும் ஸ‌ம்ஸ்க்ருதத்திலும் ப‌ல‌ ஸ்தோத்ர‌ங்க‌ளையும் செய்த‌ருளினார். ஸ்ரீ தேசிக‌ன் இந்த‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில் ம‌ந்த்ர‌ங்க‌ளையும் ம‌ந்த்ராக்ஷ‌ர‌ங்க‌ளையும் இசைத்து வைத்திருக்கிற‌ப‌டியால், ம‌ந்திர‌த்தை அறியாத‌ ந‌ம்போலிய‌ரும் இந்த‌ ஸ்தோத்திர‌த்தைச் சொல்வ‌தினாலேயே ம‌ந்திர‌ம் கைவ‌ந்தார் பெறும் ப‌ல‌னைய‌டைய‌லாம். அத‌னாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் "இதைப் ப‌டிப்போர் பெறும் ப‌ய‌ன் இது" என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார். எல்லாம் ப‌க‌வ‌த் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் ப‌ல‌மும் கிடைக்கும்.

இவ‌ற்றுள் "அபீதிஸ்த‌வ‌ம்" என்ற‌ ஸ்தோத்ர‌ம் த‌ன் பெய‌ருக்கேற்ப‌ ஸ‌க‌ல‌ ப‌ய‌த்தையும் போக்கி ப‌க‌வ‌த‌னுக்ர‌ஹ‌த்தால் ஸ‌க‌ல‌ ஹிதத்தையும் அளிப்ப‌தோடு, ப‌ய‌ன் கிடைப்ப‌தாக‌ச் சொன்ன‌து பொய்ய‌ன்று என்ப‌தையும் ருஜுப்ப‌டுத்துகிற‌தாயும் இருக்கிற‌து. ஸ்ரீதேசிக‌ன் ஸ்ரீர‌ங்க‌த்தில் எழுந்த‌ருளியிருந்த‌ கால‌த்தில் மாலிக்காபூர் என்ற‌ ம‌ஹ‌ம்ம‌திய‌த் த‌லைவ‌னின் ஸைன்ய‌ம் ஸ்ரீர‌ங்க‌த்தின்மீது ப‌டையெடுத்து வ‌ந்தது. அதைக்க‌ண்டு ப‌ய‌ந்த‌ கோவில‌திகாரிக‌ள் க‌த‌வைமூடி ஸ‌ந்நிதிக்கு முன் வேறொரு விக்ர‌ஹ‌த்தைப் பூஜிப்ப‌தாகக் காட்டிவிட்டு, ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌நாச்சிமார்க‌ளையும் ப‌ல்ல‌க்கில் எழுந்த‌ருளுவித்துக்கொண்டு ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டு வெளியேறினார்க‌ள். வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ரான‌ ஸுத‌ர்ச‌னாசார்ய‌ர் என்னும் ஆசார்ய‌ர் தான் செய்த‌ சுருத‌ப்ர‌காசிகையையும் த‌ன் ம‌க்க‌ள் இருவ‌ரையும் ஸ்ரீ தேசிக‌னிட‌ம் ஒப்பித்து, "உம்மால் ந‌ம் த‌ர்ச‌நத்திற்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌ப் போகிற‌து, ஆத‌லால் நீர் த‌ப்பிச் செல்லும் " என்று கூறி அவ‌ரை அனுப்பினார். பிற‌கு த‌ங்க‌ள் உயிருள்ள‌வ‌ரையும் விரோதிக‌ள் உட்புகாமைக்காக‌வும் பெருமாளை எடுத்துச் செல்வோரை அவ‌ர்க‌ள் பின்தொட‌ராமைக்காக‌வும் ம‌ஹ‌ம்ம‌திய‌ ஸைன்ய‌த்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்த‌ர்க‌ள் உயிர் நீத்த‌ன‌ர்.

ஸ்ரீதேசிக‌னும் ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌து முத‌ல் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கி, க‌டைசியாக‌ திருநாராய‌ண‌புர‌ம் வ‌ந்து சேர்ந்தார். வ‌ந்ததுமுத‌ல் ஆச்ரித‌ ர‌க்ஷ‌ண‌த்தின் பொருட்டுவ‌ந்த‌ ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னுக்கும் ஸூர்ய‌னும் பார்த்த‌றியாத‌ நாச்சிமார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் வாஸஸ்த‌ல‌த்தை விட்டு இட‌ம் தேடித்திரிய‌ வேண்டியிருந்த‌ நிலைமையையும் ராம‌னைப் பிரிந்த‌ அயோத்யைபோல‌ அர‌ங்க‌ம் த‌ன் நாத‌னைப் பிரிந்து பொலிவ‌ற்று நிற்ப‌தையும், த‌ன‌க்கும் த‌ன்னைப்போன‌ற‌ ப‌ர‌மைகாந்திக‌ளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ வாஸ‌மும் ப‌க‌வ‌த் ஸேவையும் இல்லாததால் உயிரேய‌ற்ற‌து போல் இருக்கும் நிலைமையையும் எண்ணி எண்ணி ம‌ன‌ம் நொந்து ஏங்கினார். முடிவில் த‌ன்னைக் காத்துத் த‌ன்ன‌டியார்க‌ளுக்கு அளிக்கும் பொருட்டு அவ‌னையே துதித்துச் ச‌ர‌ண‌ம‌டைய‌ வேண்டுமே யொழிய‌ வேறு க‌தியில்லை என்று நிச்ச‌யித்து "துருஷ்க‌ய‌வ‌நாதிக‌ளால் அர‌ங்க‌த்திற்கும் அர‌ங்க‌னுக்கும் அர‌ங்க‌ன‌டியார்க‌ளுக்கும் ஏற்ப‌ட்ட‌ ப‌ய‌த்தைப் போக்கி, ம‌றுப‌டியும் த‌ன்னையும் த‌ங்க‌ளையும் ஸ்ரீர‌ங்க‌த்தில் பிர‌திஷ்டித‌மாக்கி அப‌ய‌ம‌ளிக்க‌ வேண்டும்" என்று "அபீதிஸ்த‌வ‌ம்" என‌ற‌ இந்த‌ ஸ்தோத்ர‌த்தைச் செய்து, பெருமாள் திருவ‌டிக‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைந்தார்.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌வே கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன் துருஷ்க‌ர்க‌ளை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில் கொஞ்ச‌ நாள் எழுந்த‌ருளுவித்து ஆராதித்து ம‌றுப‌டியும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான். மானிட‌த்தைக் க‌வி பாடாத‌ தேசிக‌ன் இந்த‌ப் பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்து வைத்த‌ கொப்ப‌ணார்ய‌னைக் கொண்டாடி எழுதின‌ சுலோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌பெருமாள் ஸ‌ந்நிதியின் கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.

स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)

i.
आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .

चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।

लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथं

सम्यग्वर्या सपर्या पुनरकृत यशोदर्पणो गोप्पणार्यः ||

ـ
2.

ــــه حविश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो

नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।

कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां

संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||

முத‌ல் வ‌ரி இந்த‌ ச்லோக‌ங்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ருஷ‌மான‌ ச‌காப்த‌ம் 1293 (கி.பி. 1371)ஐக் காட்டுகிற‌து. ஸ்வ‌ஸ்தி ஸ்ரீ:-- (முகில் வ‌ண்ண‌ன் இருப்ப‌) முகில்க‌ள் த‌வ‌ழ‌ க‌றுத்துத் தோன்றும் த‌ன் சிக‌ர‌ங்க‌ளால் உல‌க‌த்தையே ம‌கிழ்வூட்டும் அஞ்ஜ‌னாத்ரியிலிருந்து ல‌க்ஷ்மி பூமி இருவ‌ருட‌ன் கூடிய‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை செஞ்சிக்கு எழுந்த‌ருளுவித்துக் கொண்டுவ‌ந்து அங்கு சில‌ கால‌ம் ஆராதித்து, பிற‌கு வில்லாளிக‌ளான‌ துருஷ்க‌ர்க‌ளை வென்று, பெருமாளையும் பிராட்டிமார்க‌ளையும் அவ‌ர்க‌ளுடைய‌ ந‌க‌ர‌மான‌ ஸ்ரீர‌ங்க‌த்திலேயே பிர‌திஷ்டை செய்து, கீர்த்திக்கோர் க‌ண்ணாடியான‌ கொப்ப‌ணார்ய‌ன் ம‌றுப‌டியும் சிற‌ப்பாக‌த் திருவாராத‌ன‌த்தைச் செய்தான்.

விருஷ‌ப‌கிரியிலிருந்து ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை த‌ன் ராஜ‌தானிக்குக் கொண்டு சென்று, க‌ர்விக‌ளான‌ துருஷ்க‌ ஸேனா வீரர்க‌ளை த‌ன் ஸைன்ய‌த்தால் கொல்லுவித்து, அத‌ன்பின் ஸ்ரீர‌ங்க‌த்தை கிருத‌யுக‌த்தோடு கூடிய‌தாக‌ச் செய்து, ஸ்ரீ பூமிக‌ளோடுகூட‌ பெருமாளையும் அதில் ம‌றுப‌டி பிர‌திஷ்டை செய்வித்து அம்புய‌த்தோனான‌ ச‌துர்முக‌ன்போல‌ ந‌ல்லோர் கொண்டாடும் முறையில் கொப்ப‌ணார்ய‌ன் என்ற‌ பிராம‌ண‌ன் ந‌ம்பெருமாளை ஆராதித்து வ‌ருகிறான்.

இந்த‌ சுலோக‌ங்க‌ளிலிருந்து திருநாராய‌ண‌புர‌த்திலிருந்து தாயைப் பிரிந்த‌ க‌ன்றைப்போல‌க் க‌த‌றி அநுஸ‌ந்தித்த‌ அபீதிஸ்த‌வ‌த்தின் ப‌ய‌னாக‌ ம‌னோர‌த‌ம் நிறைவேறிவிட்ட‌து என்ப‌தை அறிகிறோம்.

ப‌ய‌நிவிருத்தியைப் பிரார்த்திக்க‌ப் பிற‌ந்த‌ இந்த‌ச் சிறிய‌ ஸ்தோத்ர‌த்திலும் தேசிக‌னுடைய‌ ம‌ற்ற‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில்போல‌ தத்வ‌ஹித‌ புருஷார்த்த‌ விஷ‌ய‌மான‌ ஸூக்ஷ்மமான‌ வேதாந்தார்த்த‌ங்க‌ள் பொதிந்து கொண்டிருப்ப‌தைக் காண‌லாம். கோல‌த்திருமாம‌க‌ளோடு கூடிய‌ நாராய‌ண‌னோ ஸ‌க‌ல‌ ஜ‌க‌த்கார‌ண‌மான‌ ப‌ர‌தத்வ‌ம் என்ப‌தும் (சுலோக‌ம் 1) ப்ர‌ஹ்மாதி ஸ‌க‌ல‌ தேவ‌தைக‌ளும் அவ‌னுக்குப் ப‌ய‌ந்து த‌ங்க‌ள் தொழில்க‌ளைச் செய்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌தும் (சுலோக‌ங்க‌ள் 4, 26), ஸ‌ர்வேச்வ‌ர‌ன் ஒருவ‌னை ர‌க்ஷிக்க‌ விரும்பினால் ம‌ற்ற‌ எந்த‌ப் புதுத் தெய்வ‌மும் எதிராக‌ ஒன்றும் செய்ய‌ முடியாதென்ப‌தும் (7), பிராட்டியைப் புருஷ‌கார‌மாகக் கொண்டு ப‌ர‌தத்வ‌மான‌ இவ்விருவ‌ரிட‌முமே ச‌ர‌ணாக‌தியை அநுஷ்டிக்க‌ வேண்டுமென்ப‌தும் (2), ஒரே த‌ட‌வை அனுஷ்டிக்க‌வேண்டிய‌து முத‌லான‌ ச‌ர‌ணாக‌தியின் பெருமைக‌ளும் (2,5,15,21), நாம‌ஸ‌ங்கீர்த்த‌ன‌த்தின் பெருமைக‌ளும் சுருக்க‌மாக‌வும் அழ‌காக‌வும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இருப‌த்தோராவ‌து சுலோக‌த்தில் பிர‌ப‌த்தி அனுஷ்டிக்க‌ப்ப‌டுகிற‌து. 20, 22, 24 முத‌லான‌ சுலோக‌ங்க‌ளில் இந்த‌ ஸ்தோத்திர‌த்திற்குக் கார‌ண‌மான‌ ச‌த்ரு ப‌ய‌த்தைப் போக்க‌ வேண்டுமென்ப‌து ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் "ஶ‌ம‌ய‌" "ப்ர‌ஶ‌ம‌ய‌" என்று ப்ரார்த்திக்க‌ப்ப‌டுகிற‌து. பிர‌ப‌த்தி ஸ‌க‌ல‌ப‌ல‌ ஸாத‌ந‌ம் என்ப‌து விபீஷ‌ண‌ன் பிர‌ஹ்லாத‌ன் காக‌ம் முத‌லான‌ ப‌ல‌ருடைய‌ அனுஷ்டான‌த்தை எடுப்ப‌தால் குறிப்பிட‌ப் ப‌டுகிற‌து.

இத்துட‌ன் பிர‌ப‌த்தியை அனுஷ்டிப்ப‌த‌ற்கு ப‌ர‌ம் வ்யூஹ‌ம் விப‌வ‌ம் என்று ஒரு இட‌ நிய‌மமில்லை. அர்ச்சாவ‌தார‌த்திலேயே ச‌ர‌ணாக‌தி செய்ய‌லாம் என்ப‌து ஸ்ரீர‌ங்க‌நாத‌னிட‌த்தில் ச‌ர‌ண‌ம் புகுவ‌தால் காட்ட்ப்ப‌டுகிற‌து. அர்ச்சாவ‌தார‌த்தில் ஸௌல‌ப்ய‌ம் அதிக‌ம் என்ற‌ ஏற்ற‌மே உண்டு. ம‌ற்ற‌ப்ப‌டி ஸ‌ர்வ‌ஜ்ஞ‌த்வ‌ ஸ‌ர்வ‌ச‌க்தித்வாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ள் எங்கும் துல்ய‌ம் என்ப‌தும் அறிய‌த் த‌க்க‌து. ஆனால் அர்ச்சாவ‌தார‌த்தில் ச‌க்திக்கு ஏற்ற‌த் தாழ்வு இருப்ப‌தாக‌த் தோன்றுவ‌த‌ற்கு ஆச்ரித‌ர்க‌ளின் புண்ய‌ பாப‌ங்க‌ளே கார‌ண‌ம். ஆகையால் ஸ்ரீவைகுண்ட‌த்தில் பூம‌க‌ளும் ம‌ண்ம‌க‌ளும் இருபாலும் திக‌ழ‌ வீற்றிருக்கும் ப‌ர‌ந்தாம‌னிட‌த்தில் செய்யும் ப‌க்தியை ந‌ம‌க்காக‌ ந‌ம் நாட்டிலும் இல்ல‌த்திலும் தோன்றி நாம் இட்ட‌தை ஏற்று ம‌கிழும் அர்ச்சையிட‌ம் செய்வ‌தே விவேக‌முடையார் செய்ய‌த் த‌க்க‌து. அர்ச்சாவ‌தார‌ ஸேவையே ந‌ம‌க்குச் சிற‌ந்த‌ உபாய‌ம். ஆல‌ய‌ங்க‌ளுக்கும் எம்பெருமான்க‌ளுக்கும் ம‌ற்றும் தேச‌த்திற்கும் த‌ன‌க்கும் ஏற்ப‌ட்ட‌போது இந்த‌ அபீதிஸ்த‌வ‌த்தை அநுஸ‌ந்தித்தால், ஆப‌த்து நீங்கி இது அப‌ய‌த்தை நிச்ச‌ய‌மாய் அளிக்கும் என்ப‌து ஸ்ரீ தேசிக‌ன் ச‌ரித்ர‌த்தால் ப்ர‌த்ய‌க்ஷ‌ஸித்த‌ம்.

இப்ப‌டி ஸ‌க‌ல‌ப‌ய‌ நிவ‌ர்த்த‌க‌மான‌ இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் தாத்ப‌ர்யார்த்த‌ங்க‌ளை எளிய‌ த‌மிழில் எல்லோரும் உண‌ரும்ப‌டி த‌க்க‌ ப்ர‌மாண‌ங்க‌ளைக் கொண்டு அநுப‌வ‌ரூப‌மாகக் காட்டி ஸ்ரீ உ.வே. கோபாலாசார்ய‌ ஸ்வாமி செய்த‌ ப‌ர‌மோப‌கார‌த்திற்கு நாம் அவ‌ருக்கு மிக‌வும் க‌ட‌மைப் ப‌ட்டிருக்கிறோம். இதை யாவ‌ரும் ப‌டித்து அநுஸ‌ந்தித்து திவ்ய‌ த‌ம்ப‌திக‌ளிட‌மிருந்து அப‌ய‌த்தையும் அருளையும் பெற்று கிருதார்த்த‌ர்க‌ளாவார்க‌ளாக‌.

ஸ்ரீநிவாஸ‌ராக‌வ‌ன்.

புதுக்கோட்டை
25 – 12 -- 1938