திங்கள், 20 நவம்பர், 2006

திருமுடியடைவு
தரு-இராகம்-மோகனம்-தாளம்-ஆதி
பல்லவி
வாயே நம்மாழ்வாரைச்சொல்வாயே
அனுபல்லவி
வாயேநீயேவேதந்தமிழ்செய்த
மாறன்சடகோப னேயென்றேயிரு. (வாயே)
சரணங்கள்
அம்போதிநீரை மேகம்வாங்கி
கம்பீரமாகவே யுமிழவேதாங்கி
அம்புவியெங்கும் விளைவுகளோங்கி
யதுபோலவேயிவர் வேதங்கணான்கி
ணுண்பொருள்கண்டு சொரிந்தாரே
நுவலடியார்கள் வலிந்தாரே
நம்புவாய்நம்புவாய் குருகூர்வள்ளலை
நாதமுனிகளே யோதுங்குருவென்று (வாயே)
கலியுகமாதியிற் பிரவர்த்திநாடினார்
கண்ணனடியிணை கண்டுகூடினார்
நலிவதில்லாமலே யன்புசூடினார்
ஞானானந்த மடுவினிலாடினார்
நலமதுரகவியில் வல்லோரே
ஞாலம்புகழு நல்லோரே
சொலுவாய்சொலுவா யவர்சீரடியினைத்
துதித்துநெஞ்சினிற் பதித்துஅனுதினம் (வாயே)
சகலர்க்குமதி காரமதான
தமிழதினாலே வேதநிதான
மிகவேசொல்லு முறுதிமெய்ஞ்ஞான
விளைவாய்வந்து தரிசனரான
தகைமைபொருந்திய ஆழ்வாரே
தண்குருகூரினில் வாழ்வாரே
மிகவேமிகவே பரவுகபரவுக
வீடுபெறும்படி கூடிவந்திரு (வாயே)
விருத்தம்

நம்மாழ்வார் தமக்குப்பின்ப்ரவர்த்தரானார்
நாதமுனியுயக்கொண்டார்மணக்கானம்பி
இம்மாநிலம்புகழவந்தாரான
யாமுனரோடெதிபதியும்ப்ரவர்த்தரானார்
எம்மான் வியாஸபோதாயனாதி
யிடம்விரையாழ்வார்களிடமங்குரிக்க
உம்மாங்குயாமுனாதிகளிடத்தி
லோங்குதரிசனந்தளிராய்ச் செழித்ததன்றே.

விருத்தம்
வணிதமாந்தரிசனந்தான் பாஷ்யகாரர்
மகிமையான்மரமாகிகனைகண்மீற
அணிபெரும்பூதூரில்வந்தேயவதரித்தார்
யாதவப்பிரகாசரிட நூல்கள்கற்றார்
அணிபெரியநம்பி திருவடியைச் சார்ந்தங்
காளவந்தாரவர்க்கருளுஞ்சம்ப்ரதாயம்
பணிவிடையாலவர்பக்கலெல்லாங்கேட்ட
பாங்கினார் வரவரவு மோங்கினாரே.