வெள்ளி, 8 மே, 2009



தேர் இழுக்கப் போப்போறேன்


வடம் பிடிக்கலாமா !



திவான் மரியாதையை ஏற்றுக் கொண்டு வடம் பிடிக்கப் போகிறார்.






தேரை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டோம்!
பெருமாள் தீர்த்தம் தெளியுங்க சாமி!!





திருத் தேரில் சீதா லக்ஷ்மணருடன் இராமன்


திருப்புல்லா
ணியில் இன்று திருத்தேர்.

ஒருகாலத்தில்

" ஊரெலாம் வாசல்தோறும் வெண்ணீறு தீட்டியே
யுவந்து சந்தனக் கோலமிட்
டுறுமலர்க்காவணத் தோரணப் பந்தரி
லும்பருட னம்புவியன் மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
வாரேறு கும்பமுலை மாதர் பூரணகும்ப
வாழை கன்னல் நிரைப்ப
வானவர்கள் தானவர்கள் மலரயன் சிவன்
முதல் வணங்கியே வடம்பிடிப்பத்
தேரேறி வீதிவலம் வந்து ........"


என ஆரவாரமாக
கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் இப்போது நடப்பது மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி

அதாவது
ததியாராதனை மட்டுமே. பெருங்காயச் செப்பாக உத்ஸவங்கள் இங்கு நடந்தாலும், பக்கத்து கிராம மக்கள் எவ்வளவு உற்சாகமாக வந்து தேர் இழுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டும். அங்கங்கே வரும் "பறைக் கொட்டை" யும் ரசியுங்கள். மேள வாத்தியங்கள் இருந்தாலும், இந்த பறைக்கொட்டு வந்தால்தான் தேர் நிலை விட்டு நகரும். சமுதாயத்தின் அனைத்து மக்களையும் அணைத்துச் சென்ற பண்டைய நாள் ஏற்பாடு.
சுட்டெரிக்கும் வெய்யிலை "கோவிந்தா" கோஷங்களுடன் சமாளித்து தேரை இரண்டு மணி நேரத்துக்குள் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த எளிய மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் மீது பெருமாள் தீர்த்தம் தெளிக்கப் படவேண்டும் என்பது மட்டுமே! வீடியோவில் அதையும் கவனியுங்கள்.


வியாழன், 7 மே, 2009

திருப்புல்லாணி குதிரை வாகனப் புறப்பாடு.

திருப்புல்லாணி  சித்திரை ஸ்ரீ இராமன் ப்ரும்மோத்ஸவத்தில்  8ம் நாள் இரவு குதிரை வாகன  புறப்பாட்டில் சில காட்சிகள்.  சென்னை திருவல்லிக்கேணியை ஞாபகப்படுத்தும்  அளவு  வாணவேடிக்கைகளுடன் நடந்த  திருவீதிப் புறப்பாட்டின்போது திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்வதும்  இங்கே காணலாம்..

ragu 021

குதிரை  வாகனத்தில்  கிளம்ப தயார்!

ragu 022

அழகன்  ஆராவமுதன் 

ragu 027

கோவில்  குடவரை வாயிலில்

ragu 028

திருவீதிப் புறப்பாடு  துவக்கம்

ragu 030

திருமங்கை என்னும் கள்வனைத் தேடுகிறார்கள்

ragu 031

கள்வனைப் பிடித்தாயிற்று!

ragu 033

கள்வனுக்கு  மரியாதை!!

ragu 035

கட்டுப் பட்டயம்  (கணக்கு)  வாசிக்கிறார்.

ragu 038

ஆழ்வாருக்கு அனுக்ரஹம்.

ragu 041

தேர் கடாக்ஷம்.

ragu 043

தேரடிக் கருப்பருக்கு  மரியாதை!!

திருப்புல்லாணி – சித்திரை 8ம் நாள்

ragu 001

திருப்புல்லாணி திருப்புல்லாணி சித்திரைத் திருநாளின்8ம்நாளாகிய

இன்று மாலை ஸ்ரீராமன் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கு உள்ளன.






ஒரு பாக்யசாலிக் குடும்பம்

அந்த நாளில் மன்னராட்சி காலத்தில் கிராமங்களில் முனுசுப் பிள்ளை என அழைக்கப்பட்ட கிராம ஹெட்மேன்களுக்கு மன்னருக்கு அடுத்தபடியாக எல்லா அதிகாரங்களும் இருந்து வந்தன. திருப்புல்லாணியில் இருந்த முனுசுப் பிள்ளையை கௌரவிக்க அந்த நாளில் செய்த ஏற்பாடு இன்றுமுனுசுகள் இல்லாவிட்டாலும் தொடர்வது அந்தக் குடும்பத்தார் செய்த பெரும் பாக்யம். மற்ற நாட்களில் எல்லாம் வீதிப் புறப்பாட்டின் போது அவரவர்கள் வீட்டு வாயிலில் ஓரிரு நிமிடங்கள் நின்று உபகாரங்களை ஏற்கு

ம் பெருமாளும், இராமனும் 8ம் திருநாள் வேட்டைக்கு ஏளும்போது வேட்டையாடிய பிறகு வழக்கமான பெரிய திருவீதிப் புறப்பாடு தவிர்த்து மாட வீதிக்குள் நுழைந்து அங்கு முதலில் இருக்கும் முனுசுப் பிள்ளை வீட்டு வாயிலில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்து அங்கு திருக்கண் கண்டருளி அனுக்ரஹம் செய்யும் அந்த மரியாதை இன்றும் பதவிகள் எதுவும் இல்லையாயினும் அவர்கள் வம்சத்தவருக்கு அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு அந்தக் காட்சிகள் சில உள்ளன.



திருப்புல்லாணி வாகனமாலையிலிருந்து

திருப்புல்லாணியில் சித்திரை 7ம் நாள் உத்ஸவம்.

சூர்ணோத்ஸவத்துக்கு சீதை, லக்ஷ்மணனுடன் புறப்படும் ஸ்ரீராமன்.



திருமஞ்சனம் ஆரம்பிக்கப் போகிறது.



திருமஞ்சனம் -- பால்




மதுவர்க்கம் --

புதன், 6 மே, 2009

சித்திரை உத்ஸவம்-- 4ம் திருநாள் திருமஞ்சனம்

திருப்புல்லாணி சித்திரை உத்ஸவ நான்காம் நாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த திருமஞ்சன வைவத்தை இங்கு காணலாம்.

செவ்வாய், 5 மே, 2009

திருப்புல்லாணியில் சீதா ராம கல்யாணம்



இராமநாதபுரம் இராணி திருமதி ப்ரும்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார்



இராமன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சீதையும் இலக்ஷ்மணனும்





தேசிகன் சந்நிதி வாயிலில்




வலது பக்கம் ---
திருவீதிப் புறப்பாடு முடித்து கோவிலுக்குள் வருகை


திருவீதிப் புறப்பாட்டில்



இன்று எங்கள் ஊரில் பட்டாபிராமனுக்கும் சீதைக்கும் திருக்கல்யாண உத்ஸவம். இராமநாதபுரம் சமஸ்தானம் இராணி திருமதி ப்ரும்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாரும், தேவஸ்தான திவான் திரு மகேந்திரனும் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி மிக மிக பழைமையானது என்பதற்கு இந்த திருக்கல்யாணம் ஒரு ஆதாரம் என அடியேன் சொல்வேன். மாலைமாற்றலுடன் திருமணம் முடிந்து விடும். அதுதானே பண்டைய தமிழரின் திருமண முறையாக இருந்துள்ளது ! இந்த திருமண வைபவத்தை இங்கு பார்க்கலாம்.




திங்கள், 4 மே, 2009

araciyalAr ammAnai -அரசியலார் அம்மானைப் பதிகம் - rajamragu@gmail.com - Gmail

 

இந்தியாவில் தேர்தல் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,
முன்பு நான் எழுதி இங்கிட்டிருந்த “அரசியலார் அம்மானை’யின் இறுதி 2
பாடல்களை இன்று எழுதி, அதைப் பதிகமாக 10-பாடல்) முழுமையாக்கினேன். முன்
பகுதியை ஏற்கனவே படித்தவர்கள், கடைசி இரண்டைப் படித்துக் கருத்து
சொல்லவும்.
அனந்த்  4-5-2009
பி.கு. அம்மானை இலக்கணம் பற்றிய என் கட்டுரை, சந்தவசந்தம் யாஹூக் குழுத்
தளக் கோப்புப் பகுதியில் உள்ளது.
====================
<> அரசியலார் அம்மானைப் பதிகம் <>
..அனந்த்
நாட்டுக் குழைக்குமொரு நல்லெண்ணம் கொண்டிவர்தம்
பாட்டிற்கு நன்றாய்ப் பணம்சேர்ப்பார் அம்மானை
பாட்டிற்கு நன்றாய்ப் பணம்சேர்ப்பார் ஆமாகில்
நாட்டுளர்முன் எங்ஙன் நடமாடும் அம்மானை?
ஓட்டாண்டி யாக உருவெடுப்பார் அம்மானை! (1)
வேளைஒரு கட்சிஎன வெவ்வேறாய் மாறியிவர்
நாளுக் கொருவேடம் நாடுவர்காண் அம்மானை
நாளுக் கொருவேடம் நாடுவரே ஆமாகில்
ஆளை அடையாளம் ஆர்காண்பார் அம்மானை?
ஆளுகின்ற கட்சிஅடை யாளம்காண் அம்மானை! (2)
பேச்சாற்றல் பெற்றுத்தன் தாய்நாட்டுப் பற்றைஇவர்
மூச்சுக்கு மூச்சு முழங்குவர்காண் அம்மானை
மூச்சுக்கு மூச்சு முழங்குவரே ஆமாகில்
ஏச்சிவர்தம் பேச்சில் இருப்பதென் அம்மானை?
ஏச்சிவரை வாழ்விக்கும் மூச்சாகும் அம்மானை!  (3)
அண்டை மாநிலத்தில் ஆள்பவரின் ஆட்சிதனைக்
கண்டபடித் தூற்றிவெயில் காய்வார்காண் அம்மானை
கண்டபடித் தூற்றிவெயில் காய்வாரே ஆமாகில்
மண்டையிலே சூடேறி வாடாரோ அம்மானை?
துண்டுபோ டும்கலையில் சூரர்காண் அம்மானை! (4)
கொடும்புயல் தாக்கிக் குடும்பம் இழந்தோர்
படும்துயரம் கண்டு பணம்சேர்ப்பார் அம்மானை
படும்துயரம் கண்டு பணம்சேர்ப்பார் ஆமாகில்
இடும்பை படுவோர்க்கு இரங்குவரோ அம்மானை?
*இடும்பையில் செல்வம் இவரேகாண் அம்மானை! (5)
(*பையில் செல்வம் இடும்)
ஆளுமன்றம் தன்னில் அடுக்கடுக்காய் மக்களுக்காய்க்
கேள்வி பலதொடுக்கும் கீர்த்தியர்காண் அம்மானை
கேள்வி பலதொடுக்கும் கீர்த்தியரே ஆமாயின்
கேள்வரிவர் ஆவாரோ கீழ்ப்பட்டோர்க் கம்மானை?
*கேள்வியே செல்வமெனும் கொள்கைகொண்டார் அம்மானை! (6)
(*பாரளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காகக் கேட்கும் கேள்விகளுக்குக்
கையூடு வாங்கிய செய்தி அண்மையில் வெளிவந்தது; செல்வத்துட் செல்வம்
செவிச்செல்வம் என்று கொண்டவர் அல்ல இவர்!)
அடித்தளத்து ஏழைகளின் அன்பரைப்போல் நன்றாக
நடித்(து)அவரை ஏமாற்றும் நாயகர்காண் அம்மானை
நடித்தவரை ஏமாற்றும் நாயகரே ஆமாகில்
அடித்தளத்தார் பிடித்தொருநாள் அடியாரோ அம்மானை?
*அடியார் அவர்க்குண்டாம் ஆயிரமாய் அம்மானை!  (7)
(அடியார்= மக்கள் அவரை அடிக்க மாட்டார்கள், ஏனெனில் அந்த
அரசியல்வாதிக்கு ஆயிரம் அடியார்கள் உண்டு, அல்லது ஆயிரமாய்ப் பண வசதி
உண்டு).
அன்பரைப் பேணும் அழகிலிவர் அம்பலத்து
மன்றாடும் மாதேவன் போலாவார் அம்மானை
மன்றாடும் மாதேவன் போலாவார் ஆமாகில்
சென்றங்குத் தாம்ஆடிச் செயிப்பவரோ அம்மானை?
நன்றாகத் தானிவரும் நடித்திடுவார் அம்மானை!  (8)
(நடித்தல் = நடனமாடுதல்; பாவனை செய்தல்)
அடுத்துவரும் தேர்தலிலே ஆட்சிசெய ஏற்றுங்கால்
படிக்கரிசி ஓர்ரூபாய் பாரென்பார் அம்மானை
படிக்கரிசி ஓர்ரூபாய் பாரென்பார் ஆமாகில்
படியின்விலை உயர்ந்திடிலென் பகர்ந்திடுவார் அம்மானை?
படியுங்கால் பகுதியெனப் படியவைப்பார் அம்மானை! (9)
தேர்தலிலே நின்றுஅதனில் தேறாமல் போனபின்பும்
சோர்தலெனும் வார்த்தையைத்தாம் சொல்லார்காண் அம்மானை
சோர்தலெனும் வார்த்தையைத்தாம் சொல்லாரே ஆமாகில்
ஆர்தமைத்தாம் தேடுவரோ ஆறுதலுக்கு அம்மானை?
ஆர்தலையும் வாங்கிமனம் ஆறுவர்காண் அம்மானை!  (10)
--------------------------------------------
விளக்கம்:
(பாடல் 9, அடி 1-2: ஒருபொருள்: 'ஏற்றுங்கால் படிக்கரிசி' - (ஆட்சிசெய்ய )
ஏற்றும் வேளையில் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்; இன்னொரு பொருள்: ஆட்சிசெய
ஏற்றும் (ஏற்றுங்கள்), கால்படி அரிசி ஒரு ரூபாய்.
ஈற்றடி: ‘படியுங்கால் பகுதியெனப் படிய வைப்பார்' - ஒரு பொருள்: நான்
சொன்னதில் 'கால் படிக்கு' ஒரு ரூபாய்' என்ற பகுதியை/பொருளைக்
கவனியுங்கள், ('நா இன்னா ஒரு படி அரிசியா ஓர் ரூபான்னு சொன்னேன்?)
இன்னொரு பொருள்: என்னுடைய கால்களில் படியுங்கள்/பணியுங்கள் (”நா எப்வோ
சொன்னதைப் போய்ப் பெரீசு பண்ணிப் பெனாத்தாமே,  இப்போ பேசாமல் ‘வுளுந்து
கும்பிட்டுப் போய்க்கினே இரு!”)
பாடல் 10: ஈற்றடி- ஆர் தலையும் வாங்கி..: தான் தோற்றதற்குக் காரணம்
இந்தாளு தான்/(இவுங்க தான்) என்று குற்றம்
சாட்டி அவர்களைத் ‘தூக்கிவிடு'வார் (இது பழங்காலத் தூக்கிலிடுவதற்கு
இக்கால ஒப்புச் சொல்லாட்சி!)

araciyalAr ammAnai -அரசியலார் அம்மானைப் பதிகம் - rajamragu@gmail.com - Gmail